என் மலர்
நீங்கள் தேடியது "TMC"
- தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கொல்கத்தா:
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள மந்திரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பா.ஜ.க. கண்டிப்பாக யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.
- டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்ட கர்ப்பிணி பெண், நாடு கடத்தப்பட்டார்.
- நாடு கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என டிஎம்சி தெரிவித்துள்ளது.
நாடு கடுத்தப்பட்ட கர்ப்பிணி சோனாலி பிபி-யின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என திரணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கூறுகையில் "சோனாலி பிபியை இந்தியாவுக்கு அழைத்துவர, கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கர்ப்பிணி பெண் சோனாலி நாடு கடத்தப்பட்டது, வெறும் அதிகாரத்துவ கொடுமை மட்டுமல்ல, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியையும் அம்பலப்படுத்துகிறது.
பெங்கால் மற்றும் அதன் மக்களின் கருத்து மீதான தாக்குதல்தான் SIR பணியின் நோக்கம். இது பயத்தை ஆயுதமாக்க முயல்கிறது. சொந்தத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் குடிமக்களை அவமானப்படுத்துகிறது. மேலும் இந்த மாநிலத்தை வரையறுக்கும் சமூக கட்டமைப்பை உடைக்கிறது.
மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பாஜக-வின் கட்டளைப்படி இது நடைபெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம செய்திருந்தது. ஆனால், இது வழக்கமான சரிபார்ப்பு பணிதான் என தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.
சோனாலி பிபி மற்றும் அவரது கணவர், 5 வயது குழந்தை டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து சோனாலி பிபி-யின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிர்பம் மாவட்டைச் சேர்ந்த முராராய் பகுதியில் இருந்து டெல்லி சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனால், உயர்நீதிமன்றம் அவர்களை திரும்ப அழைத்து வர உத்தரவிட்டிருந்தது.
- எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்திய பாராளுமன்ற மக்களவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக கல்யாண் பானர்ஜி எம்.பி. இருந்து வந்தார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
"எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது. தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது. சில எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு அரிதாகவே வருகை தருகின்றனர். இதனால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்" என கல்யாண் பானர்ஜி எம்.பி. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஸ்ரீராம்பூரிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மூத்த வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி, கட்சி ஒழுக்கமின்மை மற்றும் மோசமான வருகைக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைக்காமல், தன்னை வீழ்ச்சியடையச் செய்ததற்காக அவமானப்படுவதாகவும் கூறியுள்ளார்.
- சட்டக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவியை இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, "மாணவி அந்த இடத்திற்கு சென்றிருக்காவிட்டால், இந்த குற்றம் நடந்திருக்காது. அப்பெண் அங்கு செல்வதற்கு முன்பு யாரிடமாவது தெரிவித்திருந்தால் அல்லது தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தால், இது நடந்திருக்காது" தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் தனது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் எம்.எல்.ஏ. மதன் மித்ராவின் கருத்துக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
- 50 வயதான மஹுவா மொய்த்ரா பினாகி மிஸ்ராவை மே 3 அன்று திருமணம் செய்து கொண்டார்.
- பினாகி மிஸ்ரா புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா.
இவர் கடந்த 3-ந் தேதி, பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யான பினாகி மிஸ்ராவை(வயது 65) ஜெர்மனியில் ரகசிய திருமணம் செய்தார். முதலில் டென்மார்க் நாட்டை சேர்ந்த பைனான்சியரான லார்ஸ் பிரார்சனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா ஜெர்மனியில் வைத்து ரகசியமாக 2-வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் மஹுவா மொய்த்ரா - பினாகி மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
பினாகியை கரம் பிடித்த மகுவா மொய்த்ரா இதுகுறித்து புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இருவரும் சேர்ந்து கேக் வெட்டுவது போல காட்சி இருந்தது. அதனுடன், மஹுவாவின் பதிவில், அன்பு மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் புதுமண தம்பதிகளான மஹுவா மொய்த்ரா-பினாகி மிஸ்ரா ஆகியோர் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 1967-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ஆன் ஈவினிங் இன் பாரிஸ் படத்தில் இடம் பெற்ற காதல் பாடலான ராத் கே ஹம்சபர் பாடலுக்கு இருவரும் நடனமாடினர். வீடியோவை பார்த்த பலரும், புதுமண தம்பதியை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.
- பிஜேடி தலைவர் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர்.
- உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞராக உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. இவருக்கு 50 வயதாகிறது. 50 வயதான மஹுவா மொய்த்ரா 65 வயதான பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரும், மூத்த வழக்கறிஞருமான மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஜெர்மனியில் நடைபெற்றதாக தெரிகிறது.
ஆனால், இருவரும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. மஹுவா மொய்த்ரா ஏற்கனவே டென்மார்க்கை சேர்ந்த லார்ஸ் பிரோர்சன்னை திருமணம் செய்திருந்தார். கட்சித் தலைவர்களுடன் இவர்களுடைய திருமணத்தை உறுதி செய்யவில்லை.
பிஜு ஜனதா தளம் கட்சி தலைவரான பினாகி மிஸ்ரா, உச்சநீதிமன்றம் மூத்த வழக்கறிஞராக உள்ளார். புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
- உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.
- வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்றிருந்தார். அலிபூர்துவாரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது "இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மக்கள் கொடூரமான அரசை (Nirmam sarkar) விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமையையும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி ஐந்து சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் உண்மை குறித்து பேசுவோம்.
பெண்களுடைய பாதுகாப்பு?
உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை. பாஜக-வின் கடந்த கால சாதனைகள் மவுனத்திலும், அவமானத்திலும் மூழ்கியுள்ளன.
இளைஞர்கள் நம்பிக்கையின்மை?
வினாத்தாள் கசிவு, நீட் முறைகேடு, 45 சதவிதம் வேலைவாய்ப்பின்மை. இவைகள் மாணவர்களுக்கு பாஜக-வின் தேசிய பரிசு.
ஊழல்?
உங்கயுடைய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமினில் உள்ளனர். நீதி மெல்ல மெல்லி செத்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் கால்ப்புணர்ச்சியால் உங்களுடைய அரசாங்கம் மேற்கு வங்க அரசுக்கு 100 நாள் வேலைக்கான ஊதியம், அவாஸ் யோஜனா நிதிகளை தர மறுக்கிறது.
கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குழப்பத்தை முதலில் சரி செய்யுங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்புகிறார் எனக் குற்றம்சாட்டியுள்ளது.
- விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர்.
- விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது.
ஸ்ரீநகர்:
தலைநகர் டெல்லியில் புழுதிப் புயல் வீசிய நிலையில் பல இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து, அந்த விமானம் ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது. முன்பகுதியில் சேதமடைந்த விமானம் பத்திரமாக ஸ்ரீநகரை அடைந்ததால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், நடிமுல் ஹக், மம்தா தாக்குர், சகரிகா கோஷ் மற்றும் மனஸ் புனியா ஆகியோரும் பயணம் செய்திருந்தனர். அவர்கள் காஷ்மீரில் பயங்கர்வாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளனர்.
இந்நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியது தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் சகரிகா கோஷ் கூறியதாவது:
அது ஒரு மரண அனுபவமாக இருந்தது. என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். மக்கள் அலறிக் கொண்டிருந்தார்கள், பிரார்த்தனை செய்தார்கள், பீதி அடைந்தார்கள்.
அந்த வழியாக எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு பாராட்டுகள். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் மூக்கு உடைந்திருப்பதைக் கண்டோம் என தெரிவித்தார்.
- கடந்த 11 வருடத்தில் அமலாக்கத்துறையால் 5,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- அவைகளில் எத்தனை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன?. வெறும் 47 வழக்குகள்.
அரசியல்வாதிகள் மீதான அமலாக்கத்துறையின் வழக்குகளில் 98 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானது. மீதமுள்ள 2 சதவீதம் இங்கிருந்து வெளியேறி, பாஜக-வின் வாஷிங் மெஷினில் இணைந்தவர்கள் என சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
நேற்று அமலாக்கத்துறை டைரக்டர், பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 11 வருடத்தில் அமலாக்கத்துறையால் 5,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகளில் எத்தனை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன?. வெறும் 47 வழக்குகள்.
அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் 0.7 சதவீதம். இதன் அர்த்தம் ஒவ்வொரு 1000 வழக்குப் பதிவுகளுக்கு வெறும் 7 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆகவே, ஒவ்வொரு 1000 வழக்குகளிலும், 993 வழக்குகள் ஒருவரை சிறையில் வைத்திருப்பதற்காகவே அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில் கடுமையான பணம் மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமின் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.
- ஜம்மு- காஷ்மீருக்கான எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற கதை போதும்.
- நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷா நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்த வந்த போதிலும், பாதுகாப்பு குறைபாடு, உளவுத்துறை தோல்வி இதற்கு முக்கிய காரணம் என விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஸ் கூறும்போது "நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷா நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எது மிகப்பெரிய மற்றும் மன்னிக்க முடியாத பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வி ஆகும். அவர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மவுமா மொய்த்ரி "ஜம்மு- காஷ்மீருக்கான எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற கதை போதும். போலி கதைகளை பரப்புவதை நிறுத்திவிட்டு இனிமேல் அப்பாவி மக்கள் உயிரிழக்காதபடி உறுதியான நடவடிக்கை எடுங்கள்" என தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாஸ் கூறுகையில் "பயங்கரவாதிகள் ஏன் பஹல்காமை அடைய அனுமதிக்கப்பட்டனர்? இந்த அர்த்தமற்ற படுகொலையைத் தடுக்க படைகள் ஏன் தலையிடவில்லை?. இது மீண்டும் புல்வாமா. அமித் ஷா ராஜினாமா செய்வதன் மூலம் தேசத்திற்கு ஒரு நன்மை செய்வார்" எனத் தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இறந்த உடல்கள் மீது தனது மலிவான அரசியலை செய்ய திரிணாமுல் காங்கிரஸ்க்கு போதுமான நேரம் இருக்கும். ஆனால் இது சரியான நேரம் இல்லை. குற்றவாளிகளை பிடிக்க மத்திய அரசும் பாதுகாப்பு அமைப்புகளும் எல்லாவற்றையும் செய்கின்றன. பயங்கரவாதிகள் தப்பிவிட முடியாது" என்றார்.
- மேற்கு வங்க வாக்காளர் அட்டையில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் அட்டையில் இடம் பெற்றுள்ளது.
- இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு, போலி வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதுடன், வெளிநடப்பு செய்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை {EPIC (Electoral Photo Identity Card)} தொடர்பாக குறுகிய கால விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் உங்களுடைய பரிந்துரை மிகவும் சிறந்த பரிந்துரை. இது தொடர்பாக நான் பரிசீலனை செய்வேன் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுவேந்து சேகர் ராய் "மாநிலங்களவையில் 267 விதியின் கீழ் வழங்கப்படும் நோட்டீஸ் 176 ஆவது விதியின் கீழ் மாற்றப்படுவதற்கான முன் நிகழ்வுகள் நடந்தள்ளது. இதனால் 267 விதியின் கீழ் உள்ள நோட்டீஸை 176 விதியின் கீழ் உங்களுடைய விருப்ப அதிகாரத்தை பயன்படுத்தி குறுகிய கால விவாத்திற்கு அனுமிக்க வேண்டுகோள் வைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு ஜெகதீப் தன்கர் "எம்.பி.யின் திறமையை பாராட்டுகிறேன். சிறந்த பரிந்துரையை வழங்கியுள்ளார். இதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பேன்" என்றார்.
மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள எபிக் நம்பர், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் இடம் பிடித்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான எபிக் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம். இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து தி.காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்- சுவேந்து அதிகாரி
- இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது.
மேற்கு வங்கமாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி பேசும்போது "பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க சட்டமன்றத்தில் இருந்து திரணாமுல் காங்கிரஸ் முஸ்லிம் எம்.எல்.ஏ.-க்கள் வெளியேற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு ம்தா பானர்ஜி கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி பேசியதாவது:-
நீங்கள் (பாஜக) இறக்குமதி செயத இந்து தர்மத்தை வேதங்கள் மற்றும் எங்களுடைய ஞானிகள் ஆதரிக்கவில்லை. முஸ்லிம்கள் குடியுரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்?. இது மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை. நீங்கள் போலி இந்துத்துவத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்து தர்மத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களுடைய பாணியில் பாதுகாக்க முடியாது. தயவுசெய்து இந்து என்ற கார்டை வைத்து விளையாட வேண்டாம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.






