என் மலர்
நீங்கள் தேடியது "TMC"
- மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வங்கதேச இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ண தாஸ்-இன் வழக்கறிஞர் ரபிந்திரா கோஷ்-ஐ திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷ் நேரில் சந்தித்தார். மேற்கு வங்க மாநிலத்தின் பரக்னாஸ் மாவட்டத்தில் வசித்து வரும் ரபிந்திர கோஷ் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இந்தியா வந்தார்.
தற்போது இவர் பராக்பூரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். இந்தியா வந்துள்ள ரிந்திர கோஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் பராக்பூரில் வசித்து வருகிறார். வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள வழக்கறிஞர் ரபிந்திர கோஷ் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குனால் கோஷிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரபிந்திர கோஷ்-இன் விருப்பம் பற்றி முதல்வர் அலுவலகத்தில் தகவல் தெரிவிப்பதாக குனால் கோஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர மத்தியில் உள்ள அரசு அதன் அலுவலகங்களை பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டு குடும்பம். முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.
- மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும்.
மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். இவரது உறவினர் (nephew) அக்கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அக்கட்சியில் மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைவர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மீடியா ஒன்று மம்தா பானர்ஜியிடம், உங்களுடைய அரசியல் வாரிசு யார்? எனக் கேள்வி எழுப்பியது.
இதற்கு மம்தா பானர்ஜி பதில் அளித்து கூறியதாவது:-
மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும். நாங்கள் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், பூத் பணியாளர்களை கொண்டுள்ளோம். இது ஒரு கூட்டு முயற்சியாகும். கட்சியில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். இன்று புதிதாக வருபவர்கள் நாளை மூத்த தலைவர்கள் ஆவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு ஒழுக்கமான கட்சி. எந்தவொரு தனிநபரும் விதிமுறைகளை வகுக்க உத்தரவிட முடியாது.
நான் என்பது கட்சியல்ல. நாங்கள்தான் கட்சி. இது ஒரு கூட்டு குடும்பம், மற்றும் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.
- இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.
- மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது.
சென்னை:
த.மா.கா. தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்து 11-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) நவம்பர் 28, 2014 ல் துவக்கப்பட்டு 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இயக்கத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்து வருவது இயக்கத்திற்கு பலம் சேர்க்கிறது.
குறிப்பாக இயக்கத்தினர் இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப் பணிகள் மேற்கொண்டதும், இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.
பொது மக்களின் அவசர, அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் பணிகள் செய்வதும், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் பெருமைக்குரியது. மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், எஸ்.சி.எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது
இப்போது 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு காரணம் இயக்கத்தின் ஒவ்வொருவரின் கடின உழைப்பே. இந்நிலையில் த.மா.கா.வினர் தொடர்ந்து இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக உறுப்பினர் சேர்ப்பு பணியில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருவதும் பாராட்டுக்குரியது.
ஒவ்வொருவருக்கும் பெருந்தலைவர், மக்கள் தலைவர் ஆசியோடு எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்கத்திற்கும், இயக்கத்தினருக்கும் வருங்காலம் வசந்தகாலமாக அமையும் என்ற உறுதியோடு உங்களில் ஒருவராக நானும் தொடர்ந்து கடினமாக உழைத்து வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்குவோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நான் ஒரு மாதமாக பொறுமையுடன் காத்திருந்தேன்.
- மம்தா பானர்ஜி போராடும் ஜூனியர் டாக்டர்களிடம் நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல்சபை எம்.பி. ஜவர் சிர்கார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் 'பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நான் ஒரு மாதமாக பொறுமையுடன் காத்திருந்தேன். மம்தா பானர்ஜி போராடும் ஜூனியர் டாக்டர்களிடம் நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. நீதி வழங்க வேண்டும். நான் எனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- அசாம் மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ரிபுன் போரா விலகினார்.
- அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கவுகாத்தி:
அசாம் மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ரிபுன் போரா திடீரென விலகி உள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், அசாமில் திரிணாமுல் கட்சி பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. திரிணாமுல் கட்சியை மேற்கு வங்கத்தின் பிராந்தியக் கட்சியாகக் கருதுவது உள்பட தொடர்ச்சியான பல சிக்கல்கள் எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. இந்த கருத்தை எதிர்க்க நாங்கள் பல பரிந்துரைகளை வழங்கினோம்.
இந்தச் சிக்கல்களை நீக்க உங்களை மற்றும் முதல் மந்திரி மம்தா தீதி ஆகியோரை சந்திக்க கடந்த ஒன்றரை ஆண்டாக பலமுறை முயற்சித்த போதிலும் நான் வெற்றி பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
ரிபுன் போரா திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
- வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்திய வீராங்கனை ப்ரித்தி பால் 100 மீ. டி35 ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், 10 மீ. ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கமும் வென்றிருப்பது பெருமைக்குரியது.
கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மழைக்கால கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
- இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான ஜூலை 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 21ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பாராளுமன்ற கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையே, இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் தியாகிகள் தினம் என்ற பெயரில் ஜூலை 21-ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. இதனால் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
- இடைத்தேர்தலில் இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
- அவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் பிடிவாதம்.
மேற்கு வங்காளத்தில் சயந்திகா பந்தியோபாத்யாய் மற்றம் ரயத் ஹொசைன் சர்கார் ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவர்னர் பரிந்துரை அல்லது ஒப்புதலுடன் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொள்வார்கள். இதுதான் நடைமுறை வழக்கம்.
ஆனால் மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்த போஸ் சட்டமன்றத்தில் அவர்கள் இருவரும் பதவி ஏற்பதை மறுத்து விட்டார். கவர்னர் மாளிகையில் பதவி ஏற்க வேண்டும் என்றார்.
ஆனால் சட்டசபையில்தான் பதவி ஏற்போம். நீங்கள் சட்டமன்றத்திற்கு வந்து பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி கடிதம் எழுதினர்.
இன்று பதவி ஏற்பதற்கான கடைசி நாள். இருவரும் சட்மன்ற வளாகத்தில் அமர்ந்திருந்தனர். மாலை 4 மணி நேரம் வரை காத்திருந்த நிலையில், திடீரென கவர்னர் சிவி ஆனந்த போஸ் டெல்லி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது.
இதனால் இரண்டு பேரும் ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பந்த்யோபாத்யாய் கூறுகையில் "கவர்னர் டெல்லிக்கு சென்று விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நாங்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். நாங்கள் மக்களுக்கு பதில் கூற வேண்டியவர்கள். சட்டசபையில் பதவி பிரமாணம் எடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
மேற்கு வங்காள சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி கூறுகையில் "கவர்னர் சட்டமன்றத்திற்கு வருவார் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. இதுபோன்ற தடை ஏற்படுத்துவதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் ஈகோ பிரச்சனைக்குள் திரும்பியுள்ளார். அவருடைய அதிகாரித்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறார். என்னுடைய அதிகாரிகம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துவேன்" என்றார்.
மேலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்ததாக எந்தவிதமான சம்பவத்தையும் நாங்கள் கேட்டதில்லை.
- காங்கிரஸ் கட்சி எம்.பி. கே சுரேஷ் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
- இது தொடர்பாக எங்களிடம் ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துள்ள காரணத்தினால் காங்கிரஸ் கட்சி கே. சுரேஷை சபாநாயகர் போட்டிக்கு நிறுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய என்டிஏ விரும்புகிறது. துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்தால்தான் ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய சம்மதிப்போம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை போட்டி ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கேட்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் உள்ளது. இதனால் அந்த கட்சியின் ஆதரவும் முக்கியது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து எங்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தப்படவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறுகையில் "இது தொடர்பாக எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. துரதிருஷ்டவசமாக ஒருதலைபட்சமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி சபாநாயகர் தேர்தல் தொடர்பாக முடிவு செய்வார்" என்றார்.
மக்களவையில் எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டிருந்தபோது அபிஷேக் பார்னஜி உடன் ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்றது.
- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என திரிணாமுல் கூறியது.
கொல்கத்தா:
பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க. 12 இடங்களில் வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி,
வங்காளத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எங்களுடன் இணைவார்களா இல்லையா என்பது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பான்ர்ஜி இன்று கூச் பெஹார் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அங்குள்ள மதன் மோகன் கோவிலில் மம்தா பானர்ஜி சாமி தரிசனம் செய்தார்.
கிரேட்டர் கூச் பெஹார் மக்கள் இயக்க தலைவர் மற்றும் பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யான அனந்த மகாராஜை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்தார். அப்போது அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee meets Greater Cooch Behar People's Association leader and BJP MP Nagendra Ray alias Anant Maharaj.
— ANI (@ANI) June 18, 2024
The West Bengal CM also offered prayers at Madan Mohan Temple, in Cooch Behar. pic.twitter.com/dFQkK4W8cY
- கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள்.
- ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பிரதமராக மோடி பதவியேற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்ததாக அக்கட்சியின் எம்பி சகரிகா கோஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சகரிகா கோஸ் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார் என்று மம்தா பானர்ஜி அதிருப்தியில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி பதவியேற்ற போது, நாட்டின் ஒரே ஒரு பெண் முதல்வர் மம்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. மோடியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பா.ஜனதா தனியாக 240 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஜே.பி. நட்டா அமித் ஷாவுடன் ஆலோசனை.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான 272 என தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா வீட்டிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah arrives at the residence of BJP chief JP Nadda. pic.twitter.com/GK7get69uR
— ANI (@ANI) June 4, 2024
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பு ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
#WATCH | Delhi: Defence Minister and BJP leader Rajnath Singh arrives at the residence of party chief JP Nadda. pic.twitter.com/3uL2cUkzUs
— ANI (@ANI) June 4, 2024
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 தேர்தலில் பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 240 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.