என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TMC"

    • ஊடுரு​வல் நடக்​கும் விதம், ஒட்​டுமொத்த நாட்​டுக்கே பாது​காப்​புப் பிரச்சினை​யாக மாறி​யுள்​ளது.
    • ஊடுரு​வல்​காரர்​களை அவர்​கள் தங்​கள் வாக்கு வங்கியாக கருது​வது​தான் இதற்​குக் காரணம்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:

    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு புகலிடம் தருகிறது.

    ஊடுருவல் நடக்கும் விதம், ஒட்டுமொத்த நாட்டுக்கே பாதுகாப்புப் பிரச்சினையாக மாறியுள்ளது.

    நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் எல்லை வேலி அமைப்பதற்காக பிஎஸ்எப் படைகளுக்கு திரிணாமுல் அரசு நிலம் வழங்க மறுக்கிறது.

    ஊடுருவல்காரர்களை அவர்கள் தங்கள் வாக்கு வங்கியாகக் கருதுவதுதான் இதற்குக் காரணம்.

    மாநில காவல்துறை சட்டவிரோதக் குடியேறிகளைத் தடுப்பதில்லை. அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் நாடு முழுவதும்

    அனுப்பப்படுகின்றனர்.

    திரிணாமுல் ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு தேசபக்தர்கள் மற்றும் தேசியவாதிகளின் அரசை நிறுவ வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அரசு அமைவது மாநிலத்துக்கு மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்புக்கும் முக்கியமானது என தெரிவித்தார்.

    • கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
    • இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது

    புதுடெல்லி:

    மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

    ஆட்சேபணைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் மற்றும் துணைத்தலைவர் எம்.பி.

    சகரிகா கோஸ் ஆகியோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    திரிணாமுல் காங்கிரஸ் (TMC), மேற்கு வங்காளத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) குறித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகளை நீக்க, நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்று, இதை

    நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

    இந்த SIR நடவடிக்கை மென்பொருள் சார்ந்த முறைகேடு (Software Intensive Rigging) ஆகும். வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறது. இது பாஜகவின் சதி என குற்றம் சாட்டினர்.

    • மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற மம்தா பானர்ஜி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரசார பாடலை வெளியிட்டுள்ளது.

    "அனைத்து எதிர்ப்புகளையும் மீறி பெங்கால் வெற்றி பெறும்" என்பது முக்கிய பல்லவியாக இந்த பாடலில் அமைந்துள்ளது.

    மேலும், "புதிய திசையுடன் ஒரு புதிய பாதையில் நாம் பயணிக்கிறோம். உங்கள் இருள் புதிய விடியலுக்கு முன்னால் தோற்றுவிடும். நாங்கள் சிஏஏ அல்லது என்ஆர்சி-க்கு அஞ்ச மாட்டோம். தாய் வங்காளத்தின் வலிமையை நீங்கள் உணர்ந்துகொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. இந்த பூமியில் அனைவருக்கும் இடமுண்டு. அன்பு மிரட்டலுக்குப் பணியாது போன்ற வரிகள் இடம் பிடித்துள்ளன" போன்ற வரிகளும் இடம் பிடித்துள்ளன.

    நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் நிறுவனமான I-PAC மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் தொடர்பான முக்கியமான தரவுகளை திருட அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது என குற்றம்சாட்டினார்.

    • SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர்.
    • மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுடெல்லி:

    மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.

    SIR அச்சம், துன்புறுத்தல் மற்றும் நிர்வாகத் தன்னிச்சையான செயல்களைத் தூண்டிவிட்டு, உயிரிழப்புகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது என குற்றம்சாட்டும் மம்தா பானர்ஜி, இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் தன்னிச்சையான தன்மை மற்றும் நடைமுறை முறைகேடுகள் இருக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ'பிரையன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடங்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் முறையான எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்குவதற்குப் பதிலாக, "முறைசாரா மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சேனல்கள்" மூலம், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் வீடியோ மாநாடுகளின்போது தெரிவிக்கப்படும் வாய்மொழி வழிமுறைகள் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக, கேலிக்குரிய முறையில் செயல்படவோ அல்லது சட்டத்தை மீறவோ முடியாது. சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட மற்றும் தற்காலிக அல்லது முறைசாரா வழிமுறைகளுடன் நடைமுறைகளை அமைக்கவோ முடியாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • 2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
    • தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் மவுசம் நூர், இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவருடைய மாநிலங்களை எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. விரைவில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை மால்டா தக்ஷின் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.

    கட்சியில் இணைந்த மவுசம் நூர் "மேற்கு வங்கத்திற்கு மாற்றம் தேவை. அது என்னிடம் இருந்து தொடங்கட்டும். எந்தவொரு நிபந்தனையின்றி கட்சியில் இணைந்துள்ளேன். மம்தா பானர்ஜிக்கு என்னுடையா ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய ரெடியாக இருக்கிறேன். திங்கட்கிழமை ஒப்படைப்பேன்" என்றார்.

    • மீன் வளர்ப்புக்காக நீர்நிலைகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு.
    • போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது, கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.

    மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தபோது, கும்பல் ஒன்று போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.

    வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியைச் சேர்ந்த போயர்மாரி கிராமத்தில், நேற்றிரவு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மூசா மொல்லாவை கைது செய்ய போலீசார் சென்றனர். போலீசார் கைது செய்து செய்து முசாவை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

    அப்போது, ஒரு கும்பல் திடீரென போலீசார் மீதும், போலீஸ் வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் படை வரவழைக்கப்பட்டு, நிர்வாகியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மீன் வளர்ப்புக்காக அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை வலுக்கட்டாயமாக அபகரித்த குற்றச்சாட்டின் பேரில் போலீசார் மூசா மொல்லாவை கைது செய்துள்ளனர். கும்பல் தாக்குதலை தூண்டியதற்கான பஞ்சாயத்து தலைவர் உள்பட மேலும், இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 2024-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷாஜகான் வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றபோது மர்மக்கும்பல் ஒன்று அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திரிணாமுல் காங்கிரஸ் 2021-ல் 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
    • வரும் தேர்தலில் பாஜக 3-ல் 2 பகுதி இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் அமித் ஷா மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-

    தேர்தல் ஆணையம் போன்ற சக்திகளுக்கு எதிராக என்னுடைய சண்டை இன்றிலிருந்து தொடங்குகிறது. என்னுடைய வார்த்தைக்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கடந்த 2021 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வென்றதோ, அதைவிட தற்போது குறைந்தபட்சம் கூடுதலாக ஒரு இடத்திலாவது வெற்றி பெறும்.

    இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

    2021 தேர்தல் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டு 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    • வாக்காளர் பட்டியலில் சந்தேகம் உள்ளவர்களை நேரில் வந்து ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
    • முகாம்களுக்கு முதியோர்கள் வர சிரமமாக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனடிப்படையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    தற்போது உயிரோடு இருப்பவர்கள் பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் முகாம்களுக்கு செல்வதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பார்தா பவ்மிக் கூறியதாவது:-

    இது சித்ரவதைக்கு சற்றும் குறைவானது அல்ல. தேர்தல் நேரத்தின்போது வயதானவர்கள் வாக்களிக்க வர முடியாது என்பதால், அதிகாரிகளை வாக்குப்பதிவிற்கான வீடுகளுக்கு அனுப்புகிறது. அதே நடைமுறையை இதற்கு ஏன் பயன்படுத்தவில்லை?.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், வேண்டுமென்றே அவர்கள் இந்த கோரிக்கையை நிராகரிக்கின்றனர்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சஷி பஞ்சா "வயது மூத்த நபர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள் அவர்களுக்கு வழங்கப்ப்ட நாள், நேரத்தில் முகாமுக்கு செல்ல மிகப்பெரிய கஷ்டத்தை எதிர்கொள்கிறனர். 85 வயது போன்றவர்களை அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆவணங்கள் குறித்து விசாரிகக் தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
    • மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

    கொல்கத்தா:

    இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள மந்திரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.

    அப்போது, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பா.ஜ.க. கண்டிப்பாக யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.

    • டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்ட கர்ப்பிணி பெண், நாடு கடத்தப்பட்டார்.
    • நாடு கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என டிஎம்சி தெரிவித்துள்ளது.

    நாடு கடுத்தப்பட்ட கர்ப்பிணி சோனாலி பிபி-யின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என திரணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கூறுகையில் "சோனாலி பிபியை இந்தியாவுக்கு அழைத்துவர, கடந்த செப்டம்பர் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    கர்ப்பிணி பெண் சோனாலி நாடு கடத்தப்பட்டது, வெறும் அதிகாரத்துவ கொடுமை மட்டுமல்ல, திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியையும் அம்பலப்படுத்துகிறது.

    பெங்கால் மற்றும் அதன் மக்களின் கருத்து மீதான தாக்குதல்தான் SIR பணியின் நோக்கம். இது பயத்தை ஆயுதமாக்க முயல்கிறது. சொந்தத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் குடிமக்களை அவமானப்படுத்துகிறது. மேலும் இந்த மாநிலத்தை வரையறுக்கும் சமூக கட்டமைப்பை உடைக்கிறது.

    மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்த பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. பாஜக-வின் கட்டளைப்படி இது நடைபெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம செய்திருந்தது. ஆனால், இது வழக்கமான சரிபார்ப்பு பணிதான் என தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.

    சோனாலி பிபி மற்றும் அவரது கணவர், 5 வயது குழந்தை டெல்லியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து சோனாலி பிபி-யின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிர்பம் மாவட்டைச் சேர்ந்த முராராய் பகுதியில் இருந்து டெல்லி சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனால், உயர்நீதிமன்றம் அவர்களை திரும்ப அழைத்து வர உத்தரவிட்டிருந்தது.

    • எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக கல்யாண் பானர்ஜி எம்.பி. இருந்து வந்தார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    "எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது. தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது. சில எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு அரிதாகவே வருகை தருகின்றனர். இதனால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்" என கல்யாண் பானர்ஜி எம்.பி. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    மேலும், ஸ்ரீராம்பூரிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மூத்த வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி, கட்சி ஒழுக்கமின்மை மற்றும் மோசமான வருகைக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைக்காமல், தன்னை வீழ்ச்சியடையச் செய்ததற்காக அவமானப்படுவதாகவும் கூறியுள்ளார்.

    • சட்டக் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
    • இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவியை இரண்டு மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும், படம் பிடித்து மிரட்டியதாகவும், கொடூரமாக கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனிடையே நண்பர்களே நண்பரை (பெண் தோழி) பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, "மாணவி அந்த இடத்திற்கு சென்றிருக்காவிட்டால், இந்த குற்றம் நடந்திருக்காது. அப்பெண் அங்கு செல்வதற்கு முன்பு யாரிடமாவது தெரிவித்திருந்தால் அல்லது தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தால், இது நடந்திருக்காது" தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதே சமயம் தனது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் எம்.எல்.ஏ. மதன் மித்ராவின் கருத்துக்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    ×