என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalyan Banerjee"

    • பாஜக குற்றவாளிகளுக்கு ஆளுநர் அடைக்கலம் கொடுப்பதாக குற்றச்சாட்டு.
    • குற்றவாளிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தா போஸ், பாஜக குற்றவாளிகளுக்கு ராஜ் பவனில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர்களுடன் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் மிகப்பெரிய அளவில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மதியம் அந்த சோதனை நடத்தப்படுகிறது.

    இதற்காக வடக்கு பெங்கால் சென்றிருந்த ஆளுநர், தனது பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகை திரும்புகிறார்.

    ஆளுநர் மாளிகை முன்பு கொல்கத்தா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வீரர்கள் ஒன்றிணைந்து ஆளுநர் ஆனந்தா போஸ் தலைமையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளதா? என ஆளுநர் மாளிகை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.

    • மேற்கு வங்கத்தில் SIR பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டம்.
    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி SIR-ஐ கடுமையாக விமர்சித்து வருகிறது.

    மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையில் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

    மத்திய அமைச்சரும், மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவருமான சுகந்தா மஜும்தார் "மேற்கு வங்கத்தில் SIR பணியின்போது மத்திய படைகள் குவிக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு மம்தா கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். ஸ்ரீராம்பூர் மக்களவை தொகுதி திரிணாமுல் கட்சி எம்.பி. கல்யாண் சிங், "மந்திரியான சுகந்தா மஜும்தாரிடம், CISF தோட்டாக்கள் அவர்களை தாக்கும் எனச் சொல்லுங்கள். உங்களுக்கு தையரிம் இருந்தால் ஸ்ரீராம்பூருக்கு வாரங்கள். வந்த பின்னர் எப்படி வீடு திரும்புவீரக்ள் பார்ப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சுகந்தா மஜும்தார் சவாலை ஏற்று, பாஜக தொண்டர்களுடன் மோட்டார் சைக்கிளில் பேரணி சென்றார். பின்னர் தொண்டர்களிடம் பேசும்போது "பாஜக வன்முறை அரசியலை நம்புவதில்லை. ஆனால், கல்யாண் பானர்ஜி அரசியல் விளையாட்டு விளையாட விரும்பினா், நான் நம்முடைய தொண்டர்களை அதே விளையாட்டை விளையாட கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

    • எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்திய பாராளுமன்ற மக்களவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக கல்யாண் பானர்ஜி எம்.பி. இருந்து வந்தார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    "எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது. தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது. சில எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு அரிதாகவே வருகை தருகின்றனர். இதனால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்" என கல்யாண் பானர்ஜி எம்.பி. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    மேலும், ஸ்ரீராம்பூரிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மூத்த வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி, கட்சி ஒழுக்கமின்மை மற்றும் மோசமான வருகைக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைக்காமல், தன்னை வீழ்ச்சியடையச் செய்ததற்காக அவமானப்படுவதாகவும் கூறியுள்ளார்.

    • தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இவ்வளவு திறமையற்ற ஒரு பிரதமரை இந்த நாடு ஒருபோதும் பார்த்ததில்லை.
    • ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது.

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் இன்று முதல் விவாதத்தை தொடங்க இருப்பதாக ஆளும் கட்சி தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன.

    அதன்படி மக்களவையில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில், நேற்று ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, "பஹல்காம் படுகொலைக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். 4 பயங்கரவாதிகள் இந்தியாவில் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றுவிட்டு எவ்வித பயமும் இல்லாமல் அங்கிருந்து வெளியேறினர். அப்போது CISF, PSF மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு எந்திரம் எங்கே இருந்தது?

    தேசிய பாதுகாப்பு விஷயங்களில் இவ்வளவு திறமையற்ற ஒரு பிரதமரை இந்த நாடு ஒருபோதும் பார்த்ததில்லை. இப்போது, தனது தோல்வியை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அவர் தன்னைப் புகழ்ந்து பேசுவதில் மும்முரமாக இருக்கிறார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய மக்கள் அனைவரும் உங்களுடன் ஒற்றுமையுடன் நின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இறுதியாக மீட்கப்படும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், நீங்கள் பாதியிலேயே சண்டையை நிறுத்திவிட்டீர்கள்.

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது தவறான தகவல் என்று X தளத்தில் பதிவிடக்கூட பிரதமர் மோடியால் ஏன் முடியவில்லை?

    ட்ரம்ப் முன்பு நின்றதும் பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு 36 இன்ச்சாக சுருங்கி விடுகிறது. உயரம் 5 அடியாக குறைந்து விடுகிறது. ஏன் இவ்வளவு பயம்?" என்று தெரிவித்தார்.

    • மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்!
    • ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்!

    கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த சமீபத்திய கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    ஜூன் 25 அன்று 24 வயது சட்ட மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்யாண் பானர்ஜி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார்.

    "ஒரு சில ஆண்கள் இந்த வகையான குற்றங்களைச் செய்கிறார்கள்.. ஆனால் ஒரு நண்பன் தன் தோழியையே பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பணியில் இருக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

    கல்யாண் பானர்ஜியின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்துகள் என்றும், கட்சிக்கு எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறி, திருணாமுல் காங்கிரஸ் கட்சி உடனடியாக தனது சமூக ஊடகப் பதிவில் விளக்கம் அளித்தது.

    இந்த சூழலில் கல்யாண் பானர்ஜியின் கருத்துக்களை மஹுவா மொய்த்ரா கடுமையாகக் கண்டித்தார். தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆணாதிக்கம் கட்சிகளைக் கடந்து பரவி வருகிறது.

    யாராக இருந்தாலும் இந்த அருவருப்பான கருத்துகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுதான் எங்களை வேறுபடுத்துகிறது" என்று பதிவிட்டார்.

    மஹுவா மொய்த்ராவின் இந்தக் கண்டனத்திற்குப் பிறகு, கல்யாண் பானர்ஜி அவரை தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கினார்.

    "மஹுவா தனது தேனிலவிலிருந்து திரும்பி வந்து உடனடியாக என்னுடன் சண்டையிடத் தொடங்கிவிட்டார்! அவர் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுகிறார் - ஆனால் அவர் யார்? அவர் 40 வருட திருமணத்தை முறித்துக் கொண்டு 65 வயது மனிதரை மணந்தார். அந்தப் பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், "ஒழுக்க மீறல்களுக்காக பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. இப்போது எனக்கு போதிக்கிறார்! அவர் மிகவும் பெண்களுக்கு எதிரானவர்.

    அவர் தனது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே தெரிந்தவர்" என்று கடுமையாக விமர்சித்தார். இந்த வார்த்தை போர் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இதுவரை இரு அவைகளிலிருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
    • எம்.பி.க்கள் வெளியேற்றம் ஏன் என மக்கள் புரிந்து கொள்வார்கள் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளேயும், பாராளுமன்ற வளாகத்திலும் நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, அவையில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 141 பேர் இதுவரை "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு வெளியே வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய பாராளுமன்றத்தின் "மகர் த்வார்" வாயிலில் உள்ள படிக்கட்டுகளில் அவர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது மேற்கு வங்க செரம்போரே (Serampore) தொகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (TMC) மக்களவை உறுப்பினர் கல்யாண் பேனர்ஜி (Kalyan Banerjee) மாநிங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் (Vice president Jagdeep Dhankhar) பேசுவதை போல் மிமிக்ரி செய்து நடித்து காண்பித்தார். அத்துடன் அவர், "எனது முதுகெலும்பு நேராக உள்ளது. நான் மிக உயர்ந்து இருக்கிறேன்" என கூறினார். உடலசைவகளையும் துணை ஜனாதிபதியை போலவே செய்து காட்டினார்.

    நகைச்சுவையாக அவர் மிமிக்ரி செய்ததை பல எம்.பி.க்கள் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவும் செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியும் இதனை தனது போனில் பதிவு செய்தார்.

    இச்சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

    மீண்டும் பாராளுமன்றம் மதியம் கூடிய போது ராகுலின் இந்த நடவடிக்கை குறித்து, "மாநிலங்களவை தலைவர் பதவியும் சபாநாயகர் பதவியும் வெவ்வேறானவை. அரசியல் கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், உங்கள் கட்சியின் (காங்கிரஸ்) மூத்த தலைவர் மற்றொரு கட்சியின் உறுப்பினரின் நடத்தையை வீடியோ எடுக்கிறார். மக்களவை தலைவரை மிமிக்ரி செய்வது எவ்வளவு அபத்தமானது? எவ்வளவு வெட்கக்கேடானது? இதை ஒருக்காலும் ஒப்பு கொள்ள முடியாது" என ஜக்தீப் தங்கர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் நடவடிக்கையையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்து, "எம்.பி.க்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என நாட்டு மக்கள் இப்போது புரிந்து கொள்வார்கள்" என பதிவிட்டுள்ளது.


    • வக்பு வாரிய திருத்த சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

    இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கல்யாண் பேனர்ஜி தனது அருகிலுள்ள கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததாகவும், அதில் உடைந்த கண்ணாடி துண்டு கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அருகிலுள்ள எம்.பி.க்கள் கல்யாண் பேனர்ஜிக்கு முதலுதவி செய்தனர். அதன்பின், அவருக்கு கையில் 4 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    பாராளுமன்ற கூட்டுக் குழுவில் சலசலப்பு ஏற்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×