என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்தா போஸ்"

    • பாஜக குற்றவாளிகளுக்கு ஆளுநர் அடைக்கலம் கொடுப்பதாக குற்றச்சாட்டு.
    • குற்றவாளிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தா போஸ், பாஜக குற்றவாளிகளுக்கு ராஜ் பவனில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர்களுடன் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் மிகப்பெரிய அளவில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மதியம் அந்த சோதனை நடத்தப்படுகிறது.

    இதற்காக வடக்கு பெங்கால் சென்றிருந்த ஆளுநர், தனது பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகை திரும்புகிறார்.

    ஆளுநர் மாளிகை முன்பு கொல்கத்தா போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வீரர்கள் ஒன்றிணைந்து ஆளுநர் ஆனந்தா போஸ் தலைமையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளதா? என ஆளுநர் மாளிகை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.

    • உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை.
    • ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.

    மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் அண்மையில் ஆதரித்து பேசியிருந்தார்.

    இது முறைகேடுகளை நீக்கி, தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பீகார் தேர்தல்கள் SIR-க்கு பரந்த அளவிலான மக்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆனந்தா போஸை விமர்சித்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற எம்.பி கல்யாண் பானர்ஜி, "முதலில், ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் குற்றவாளிகளை அங்கேயே வைத்திருக்கிறார்.

    அவர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வழங்குகிறார். திரிணாமுல் தொண்டர்களை தாக்கச் சொல்கிறார். முதலில் இதை அவர் நிறுத்தட்டும். உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை" என்று கூறினார்.

    ராஜ்பவனில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதாக கூறும் எம்.பி மாநில காவல்துறை மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாரா, கல்யாண் பானர்ஜி, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு ராஜ்பவன் திறந்திருக்கும். அனைவரும் வந்து பார்க்க வரவேற்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஆளுநர் மாளிகையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் இருப்பதாக கல்யாண் பேனர்ஜி கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுநர் மாளிகையான ராஜபவன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    • மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது.
    • வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன்.

    மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் "வன்முறை மற்றும் ஊழல் ஆகிய இரண்டு விசயங்களை நான் முதன்மையாக பார்க்கிறேன். தேர்தலில் இந்த இரண்டிற்கும் முடிவு கட்ட வேண்டும். நான் மக்களுக்கான இருக்கிறேன். மேற்கு வங்காளத்தில் இனிமேல் மனித ரத்தத்துடன் அரசியல் ஹோலி அனுமதிக்கப்பட மாட்டாது" என்றார்.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு விவகாரங்களில் அம்மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ்க்கும், மாநில அரசுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. துணைவேந்தர் நியமனம் விவகாரத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    சந்தேஷ்காளி விவகாரித்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் சிவி ஆனந்தா போஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×