என் மலர்
நீங்கள் தேடியது "Sir"
- மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
- SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-
* ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி.
* மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
* தேர்தல் வரும் நிலையில் சோனார் பங்க்ளா (Sonar Bangla) வாக்குறுதியை கொடுத்தார்கள். ஆனால், பெங்காலி பேசும் மக்கள் மற்ற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
* SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
- தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது.
- தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளனர்.
சென்னை:
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.
முதல் நாளில் 17 ஆயிரத்து 42 வாக்காளர்கள் மனுக்கள் அளித்தனர். நேற்று நடந்த முகாமில் 23 ஆயிரத்து 523 வாக்காளர்கள் மனு அளித்தனர். இதில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 19 ஆயிரத்து 63 மனுக்களும், பெயர் நீக்கத்துக்கு 343 மனுக்களும், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், மாற்று புகைப்பட அடையாள அட்டை போன்ற இனங்களுக்காக 4 ஆயிரத்து 117 மனுக்களும் பெறப்பட்டன. பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 251, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 281, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 587 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் ஆறு படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.
சிறப்பு தீவிர முகாமின் முதல் நாளான நேற்று முன்தினம் 18 வயது நிரம்பிய தகுதியுடைய 1 லட்சத்து 85 ஆயிரத்து 277 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2-வது நாளாக நேற்றும் முகாம் நடந்தது.
2 நாட்கள் நடந்த முகாமில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 4 ஆயிரத்து 741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7ஐ அளித்தனர்.
தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்காக வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- முகாம்கள் மூலம் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
லக்னோ:
நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் படிவங்கள் திரும்ப பெறப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாராகி உள்ளது. வரும் 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், உத்தர பிரதேசத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 12.55 கோடி வாக்காளர்கள் இடம் பெறுகிறார்கள், 2.89 கோடி பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 1 கோடிக்கு அதிகமானோர் தேர்தல் ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட 12 ஆவணங்களைக் காட்டி பெயர் சேர்க்க முறையிட தகுதியானவர்கள்.
ஜனவரி 1 முதல் அவர்கள் இதுகுறித்து முறையிட படிவம் 6-ஐ பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
- தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- முகாம்கள் மூலம் பெயர் சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
புதுடெல்லி:
நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி, மத்திய பிரதேசம், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இம்மாநிலங்களில் இந்தப் பணி முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். தற்போது முகாம்கள் மூலம் பெயர் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களில், 2,54,42,352 வாக்காளர்கள் அதனை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
நீக்கப்பட்ட 22 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,49,885 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 14,61,769, இரட்டை பதிவுகள்: 1,36,029 என தெரியவந்துள்ளது.
இதேபோல், சத்தீஸ்கரில் 27 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளனர். விநியோகம் யெ்யப்பட்டதில் 1,84,95,920 விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
நீக்கப்பட்ட 27 லட்சம் பேரில் இறந்தவர்கள்: 6,42,234 பேர், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 1,79,043 பேர், இரட்டை பதிவுகள்: 1,79,043 என தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் அதிக அளவாக 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த 5,31,31,983 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 42,74,160 ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்டவர்களில் இடம்மாறியவர்கள்: 31.51 லட்சம், இறந்தவர்கள்: 8.46 லட்சம், இரட்டை பதிவுகள்: 2.77 லட்சம் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ம.பி.யில் 42 லட்சம், கேரளாவில் 22 லட்சம், சத்தீஸ்கரில் 27 லட்சம் என 3 மாநிலங்களில் சேர்த்து 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும்.
- வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அப்போது மாவட்டக்கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவையில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.அதன் முழுவிவரம் குறித்து பார்க்கலாம்..
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை- 14,25,018 வாக்காளர்கள் நீக்கம்
திருவள்ளூர்- 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
காஞ்சிபுரம்- 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
செங்கல்பட்டு- 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்
தஞ்சாவூர்- 2.06 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
நெல்லை - 2.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
திருச்சி- 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
கரூர்- 79.690 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
நாமக்கல்- 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தென்காசி- 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தேனி- 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
விழுப்புரம்- 1.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அரியலூர்- 24,368 வாக்காளர்கள் நீக்கம்
ஈரோடு- 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்
திருப்பூர்- 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்
கோவை- 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்
கன்னியாகுமரி- 1,53,373 வாக்காளர்கள் நீக்கம்
சிவகங்கை- 1,50,828 வாக்காளர்கள் நீக்கம்
விருதுநகர்- 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்
பெரம்பலூர்- 49,548 வாக்காளர்கள் நீக்கம்
தூத்துக்குடி- 1,62,527 வாக்காளர்கள் நீக்கம்
கடலூர்- 2,46,818 வாக்கார்கள் நீக்கம்
நாகை- 57,338 வாக்காளர்கள் நீக்கம்
மதுரை- 3,80,474 வாக்காளர்கள் நீக்கம்
தருமபுரி- 81,515 வாக்காளர்கள் நீக்கம்
ராமநாதபுரம்- 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்
திண்டுக்கல்- 3,24,894 வாக்காளர்கள் நீக்கம்
கிருஷ்ணகிரி- 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்
திருவாரூர்- 1,29,480 வாக்காளர்கள் நீக்கம்
சேலம்- 3,62,429 வாக்காளர்கள் நீக்கம்
திருப்பத்தூர்- 1,16,739 வாக்காளர்கள் நீக்கம்
நீலகிரி- 56,091 வாக்காளர்கள் நீக்கம்
திருவண்ணாமலை- 2,51,162 வாக்காளர்கள் நீக்கம்
மயிலாடுதுறை- 75,378 வாக்காளர்கள் நீக்கம்
ராணிப்பேட்டை- 1,45,157 வாக்காளர்கள் நீக்கம்
புதுக்கோட்டை- 1,39,587 வாக்காளர்கள் நீக்கம்
கள்ளக்குறிச்சி- 84,329 வாக்காளர்கள் நீக்கம்
வேலூர்- 2,15,025 வாக்காளர்கள் நீக்கம்
மொத்தம்- 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
- சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.
- காற்று மாசு குறித்து விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது/
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 3-ந் தேதி முதல் கூட்டத் தொடரின் அலுவல்கள் நடந்தன.
இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அணுசக்தித் துறையில் தனி யாரை அனுமதிப்பது உள்பட முக்கிய மசோதாக்கள் இரு அவையிலும் நிறை வேற்றப்பட்டன.
மக்களவையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகாமிஷன் (விபி-ஜி ராம் ஜி) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடிய தும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது இந்தக் கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதமாக இருந்தது என்று ஓம் பிர்லா கூறினார்.
மேல்சபை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட மியற்றும் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார்.
பின்னர் மேல்-சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதையடுத்து மேல் சபையிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. இரு அவைகளின் நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இன்று டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் அது குறித்து விவாதிக்கப்படாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது.
- மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
- உங்கள் பெயரை நீக்கினால் சமையலறைப் பொருட்களுடன் தயாராக இருக்கும்படி பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
SIR என்ற பெயரில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகளைப் பறிப்பீர்களா?
தேர்தலின் போது டெல்லியில் இருந்து காவல்துறையினரை வரவழைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் அச்சுறுத்துவார்கள்.
தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் இருக்கின்றன அல்லவா?
உங்களிடம் சக்தி இருக்கிறது அல்லவா? உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால், அதை நீங்கள் சும்மா விடமாட்டீர்கள் அல்லவா?
அப்போது பெண்கள் முன்னணியில் நின்று போராடுவார்கள், ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.
பெண்களா அல்லது பாஜகவா, யார் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன்.
நான் மதவாதத்தை நம்புவதில்லை. நான் மதச்சார்பின்மையை நம்புகிறேன். தேர்தல் வரும்போதெல்லாம், பாஜக பணத்தைப் பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்துவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர முயற்சிக்கிறது என தெரிவித்தார்.
- மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
- தலைமை நீதிபதி அமர்வு எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும்.
எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் இதற்குமேல் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
எஸ்ஐஆர் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அமித் ஷா மேலும் கூறியதாவது:-
இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளிடம் இதைப் பற்றி இரண்டு அமர்வுகளுக்குப் பிறகு விவாதிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் ஒப்புக்கொண்டோம்... ஏன் 'இல்லை' என்று சொன்னோம்? 'இல்லை' என்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, அவர்கள் SIR பற்றிய விவாதத்தை விரும்பினர். இந்த சபையில் SIR பற்றிய விவாதம் இருக்க முடியாது என்பதை நான் தெளிவாக அறிவேன். SIR தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.
இந்தியாவின் EC மற்றும் CEC அரசாங்கத்தின் கீழ் செயல்படவில்லை. விவாதம் நடத்தப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதிலளிப்பார்கள்? தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் சொன்னபோது, உடனடியாக ஒப்புக்கொண்டோம்.
இந்த விஷயத்தில் விவாதம் தொடர்பாக முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடை ஏற்பட்டது. இது மக்களுக்கு இதைப் பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்ற தவறான தகவல் பரவியது. இந்த நாட்டில் விவாதங்களுக்கு நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் விவாதங்களிலிருந்து விலகிச் செல்லாது. எந்த விஷயமாக இருந்தாலும், நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
இந்திய வாக்காளர் மட்டுமே இந்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்பதை எஸ்ஐஆர் உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின.
- வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது.
தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், இறந்த மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் 45 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இம்மாதம் 4-ந்தேதி முடிய இருந்த நிலையில் டிசம்பர் 11-ந்தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனால் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.ஐ.ஆருக்கான கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை திரும்பப் பெற்று பதிவேற்றம் செய்யும் பணிகள் வரும் 11-ந்தேதியுடன் அதாவது நாளையுடன் முடிகிறது.
வருகிற 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 15-ந்தேதிவரை பெயர் சேர்க்க மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த ஒரு மாத காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா? என்பதை விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும். இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வரும் பிப்ரவரி 14-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் நேற்று வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
அதில், '9-ந்தேதி(நேற்று)வரை 6 கோடியே 40 லட்சத்து 84 ஆயிரத்து 624 படிவங்கள்( 99.95 சதவீதம்) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
அவற்றில் 6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877 படிவங்கள் அதாவது 99.55 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன' என கூறப்பட்டுள்ளது.






