என் மலர்
நீங்கள் தேடியது "Sir"
- 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்காட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் SIR நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 78.09% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 5 கோடி SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
- தடை விதிக்க மறுத்ததோடு மட்டுமன்றி SIR பணிகளைத் தொடரவும் அனுமதியளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
- மக்களின் வாக்குரிமையைக் காக்கும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட SIR-க்கு முழு அனுமதியளித்து நீதியை நிலைநாட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், வாய்க்கு வந்த காரணங்களைக் கூறி தமிழகத்தின் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளுக்குத் தடை விதிக்குமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில், தடை விதிக்க மறுத்ததோடு மட்டுமன்றி SIR பணிகளைத் தொடரவும் அனுமதியளித்துள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
போலி வாக்காளர்களைக் கண்டறிந்து பொதுமக்களின் ஜனநாயக உரிமையைக் காக்கும் SIR-ஐ திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதற்காகக் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றன என்பதும், நேர்மையான முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் திமுக எதற்காக பதறுகிறது என்பதும் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.
இருப்பினும் தேசத்தின் நலனுக்காகவும் தேச மக்களின் வாக்குரிமையைக் காக்கும் நோக்கிலும் கொண்டு வரப்பட்ட SIR-க்கு முழு அனுமதியளித்து நீதியை நிலைநாட்டியுள்ளது மாண்பமை உச்சநீதிமன்றம்.
எனவே, இனியாவது எவ்வித குளறுபடிகளுமின்றி வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணிகளை நேர்மையான வழியில் செய்து முடிக்க திமுக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பதை சார்பாக வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்தார் .
- SIR-க்கு எதிராக வழக்கில் இடைக்கால மனுவாக சேர்த்துக்கொள்ள அதிமுக சார்பில் வாதம்.
- ரிட் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து.
வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன. அதேவேளையில் தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் நாங்கள் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளோம். இதனால் விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிமன்றம் "எதற்கு தாக்கல் செய்தீர்கள். இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய ஒன்று" என தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் "ஆளும் அரசே தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியமில்லை என சொல்வதை ஏற்க முடியாது. இதனால் மனுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிமன்றம் "தாக்கல் செய்யப்பட்டு இருக்கக்கூடிய மனுக்களின் கோரிக்கை வேறு உங்களது கோரிக்கை வேறு இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரித்தால் குழப்பம்தான் ஏற்படும். உங்களது மனுவை விசாரிக்க வேண்டுமென்றால் ரிட் மனுவாக தாக்கல் செய்யுங்கள். நீங்கள் விரும்பும் மாடலில் SIR நடைபெற வேண்டும் நினைக்கிறீர்களா?" எனத் தெரிவித்தது.
- தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் SIR பணியை மேற்கொள்ள தடையில்லை.
- வழக்கு விசாரணையை அடுத்த 26-ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்காட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுபோன்று பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக சார்பில் "SIR நடத்தப்படும் காலம் பருவமழைக் காலம். அப்போது அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த நேரத்தில் SIR பணி மேற்கொள்ள முடியாது. வருவாய்த்துறை அதிகாரிகள், வேறு மாநில அதிகாரிகள் பருவமழை வெள்ளம் தொடர்பான பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் அறுவடை திருவிழாவான பொங்கல் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அந்த நேரத்தில் SIR பணி மேற்கொள்வது சிக்கலை ஏற்படுத்தும்" என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இதற்கான அனைத்து விளக்கங்களையும் கொடுப்பார்கள் என பதில் அளித்தது.
அதன்பின், மலைக்கிராமங்கள் போன்ற இடங்களில் இணையதள வசதி கிடைப்பது சிரமம். சரியாக ஒருமாதம் இருப்பதால் வாக்காளர்களுக்கு போதிய கால அவகாசம் இருக்காது என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
என்றாலும், உச்சநீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து மனுக்களின் நகல்களையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்தல் ஆணையம் அதற்கு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது. அத்துடன் SIR தொடர்ந்த நடைபெறலாம் என உத்தரவிட்டது.
- பாஜக கூட பீகாரில் நடந்த வழக்கில் SIR-க்கு ஆதரவாக நீதிமன்றம் செல்லத் தயங்கியது.
- அதிமுக மட்டும் தான் SIR-க்கு ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்தியாவிலேயே SIRக்கு ஆதரவாக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ஒரே கட்சி என குடிமக்கள் அனைவரும் தலையில் அடித்து கொண்டு வியந்து பார்க்கும் அற்புதமான பெயரை அதிமுக பெற்றுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய திருநாட்டில், நமது மக்களின் மிக முக்கிய உரிமையான வாக்குரிமை யை உறுதி செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR) எதிர்க்கும் நிலையில், ஒரே ஒரு கருப்பு ஆடு இந்த மக்கள் விரோத கொடூர செயலை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது !
அது வேறு யாரும் அல்ல, ஒன்றியத்தை ஆளும் பாசிச கூட்டத்தின் பிரதான அடிமை கட்சி அதிமுக தான் !
இதன் மூலம் "இந்தியாவிலேயே SIR-க்கு ஆதரவாக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஒரே கட்சி" என்று குடிமக்கள் அனைவரும் தலையில் அடித்துகொண்டு வியந்து பார்க்கும் அற்புதமான பெயரை அதிமுக பெற்றுள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால் பாஜக கூட பீகாரில் நடந்த வழக்கில் SIR-க்கு ஆதரவாக நீதிமன்றம் செல்லத் தயங்கியது !
ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒன்றிய அரசின் கூட்டணி கட்சியாக இருந்தும், SIR குறித்து தங்களது கவலைகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளது !
தெலுங்கு தேசம் கட்சியும் (TDP) இந்த சட்டம் சிறுபான்மையினரின் குடியுரிமையை சந்தேகிக்கப் பயன்படுத்தப்படக் கூடாது எனத் தெளிவாக கருத்து தெரிவித்து ஒரு "க்" வைத்துள்ளது.
ஆனால் இத்தகைய சூழ்நிலையில் கூட பாஜக வின் கைப்பாவையாக திகழும் அதிமுக மட்டும் தான் நாட்டிலேயே SIR-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, நேரடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது.
எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் அவர்கள் குறைந்தது மௌனமாகக்கூட இருந்திடாமல், முன்பு 2016-2021 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடமானம் வைத்ததுபோல முழுமையான அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துள்ளனர் !
தமிழ்நாடு மக்களுக்கு அதிமுக செய்திருக்கும் மிக நீண்ட துரோகப் பட்டியலில் இது இனி முதல் 3 இடங்களை பிடிக்கும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய ஜனநாயக விரோத செயலை செய்துள்ளது அதிமுக.
ஆனால் நமக்கு கவலை வேண்டாம் ! எது வந்தாலும் தமிழ்நாட்டின் நலனையும் இங்கு வாழும் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து நிற்கும் மகத்தான தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத திட்டத்தின் கொடூர உள்நோக்கத்தை முறியடித்து, தமிழ் மக்களின், குறிப்பாக நமது சிறுபான்மை மக்களின், ஜனநாயக உரிமைகளை நிச்சயம் பாதுகாப்பார் !
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணையோடு, அனைத்து மக்களின் வாக்குரிமைகளை பாதுகாப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் பட்டியலின் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
- அந்த படிவத்தில் 3 கட்டங்களாக விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதால் சந்தேகங்களும், சிரமங்களும் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக வீடு வீடாக வாக்காளர் பட்டியலின் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த படிவத்தில் 3 கட்டங்களாக விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதால் அதை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு நிறைய சந்தேகங்களும், சிரமங்களும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி கொடுக்கும் தேர்தல் அதிகாரி இந்த விண்ணப்பங்களை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்று விளக்கி சொல்லும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறியதாவது:-
கணக்கீட்டு படிவத்தை எப்படி நிரப்புவது என்று எல்லோரும் சந்தேகம் கேட்கிறீர்கள். அதை விரிவாக சொல்கிறேன்.
2025 வாக்காளர் பட்டியலில் இருப்பவர்களின் போட்டோ விவரம் இதில் அடங்கி உள்ளது. முதல் கட்டத்தில் விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, வயதை அவர்களது ஆதார் கார்டில் உள்ளதை பார்த்து எழுத வேண்டும்.
அதன் பிறகு ஆதார் எண்களை எழுத வேண்டும். செல்போன் எண் தந்தை அல்லது பாதுகாவலரின் பெயரை குறிப்பிட வேண்டும். தந்தைக்கு வாக்காளர் அட்டை இருந்தால் அந்த அடையாள அட்டை எண்ணை எழுத வேண்டும். அதன் பிறகு அம்மா பெயரையும் அம்மாவின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை நம்பரை எழுத வேண்டும்.
இதற்கு பிறகு துணைவரின் பெயர் கேட்கப்பட்டு உள்ளதால் ஆணாக இருந்தால் மனைவி பெயரையும், பெண்ணாக இருந்தால் கணவர் பெயரையும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் எழுத வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்தும் 2025 வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள் என்பதற்கான விவரங்கள் ஆகும். 2002-ல் இவர்களுக்கு ஓட்டு இல்லை என்றால் இதை மட்டும் பூர்த்தி செய்து கையெழுத்து போட்டு கொடுத்தால் போதும்.
2-வது கட்டம்
2002 வாக்காளர் பட்டியலில் இவர்களுக்கு ஓட்டு இருந்தால் ஏற்கனவே அந்த விவரங்கள் தேர்தல் கமிஷனின் பி.எல்.ஓ. செயலியில் உள்ளது. அதை பச்சை நிறத்தில் அடையாளம் செய்து வைத்துள்ளோம். அந்த சீரியல் நம்பரை பதிவு செய்து பார்த்தால் அனைத்து விவரங்களும் செயலியில் வந்துவிடும்.
அதில் 2002-ல் உள்ள அவர்களது பெயர், அடையாள அட்டை எண், அதில் உள்ள உறவு முறை, மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதி பெயர், அப்போது உள்ள பாகம் எண், வரிசை எண் அனைத்தும் வந்துவிடும்.
அதை வைத்து தேர்தல் ஊழியர்கள் பூர்த்தி செய்து விடலாம்.
3-வது கட்டம்
2002-ல் இவர்களுக்கு ஓட்டு இல்லை என்றால், விண்ணப்பதாரரின் உறவினர் யாராவது அதாவது அப்பா, அம்மா ஆகியோரின் விவரங்கள் இருந்தால் அதை எழுத வேண்டும். 2002-ல் அப்பா, அம்மாவுக்கும் ஓட்டு இல்லை என்றால் இல்லை என்று எழுதலாம்.
அதாவது 2 மற்றும் 3 கட்டங்களில் விவரம் இருந்தால் எழுதுங்கள். அல்லது இல்லை என்று எழுதுங்கள் அவ்வளவுதான்.
இவ்வாறு அந்த அதிகாரி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
- வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்த பணி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
- தற்போது விண்ணம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியினை எஸ்.ஐ.ஆர். பணிகளில் குளறுபடிகள் தொடர்வதாக பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 87-வது வார்டில் வாக்குச்சாவடி அதிகாரியாக ஜூஸ் கடையில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளி நியமிக்கப்பட்டு இருப்பதாக பா.ஜனதா புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பா.ஜனதா மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனிடம் அளித்து உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
வாக்களர்களுக்கு விண்ணப்பங்களை வழங்குவதற்காக பி.எல்.ஓ. (பூத் லெவல் ஆபிசர்ஸ்) அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பூத் எண் 87-க்கு பி.எல்.ஓ.வாக நியமிக்கப்பட்டவர் சுபாஷினி. இந்த பூத் அடங்கிய பகுதியில் விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை என வந்த புகாரையடுத்து சுபாஷினியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, எனக்கு பல் வலி ஏற்பட்டதால் என் மகனை வைத்துதான் விண்ணப்பங்களை கொடுக்கச் சொன்னேன்.
அவன்தான் கொடுத்தான். இது வரைக்கும் 50 பார்ம் கொடுத்திருப்பான். வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்றார். அவரிடம் மேலும் விசாரித்தபோது, ஒரு ஜூஸ் கடையில் வேலைப் பார்த்து வருவதாகவும் கொரோனா காலத்தில் இருந்தே மாநகராட்சியில் ஏதேனும் இப்படி வேலைன்னா கூப்பிடுவாங்க. போவேன். அதே மாதிரிதான் இப்போது இந்த வேலைக்கு கூப்பிட்டாங்க என்றும் கூறினார்.
இப்படி ஜூஸ் கடையில வேலை பார்க்கிறவங்க, சத்துணவு ஆயாக்கள், கொசு மருந்து அடிப்பவர்கள் பலரையும் இந்த திருத்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த பணிகள் குறித்த எந்த அடிப்படை விவரமும் தெரியவில்லை.
இப்படி இருந்தால், வாக்காளர் திருத்தப்பணிகள் எப்படி நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும்? அதனால் குளறுபடிகள் இல்லாமல், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நேர்மையாகவும் உண்மையாகவும் நடப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து, 100 சதவீதம் தவறில்லாத உண்மையான வாக்காளர் கள் பட்டியலை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வாக்காளரிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மாநில அளவில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு-வீடாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மத்திய தேர்தல் துணை கமிஷனர் கே.கே.திவாரி, மாநில தலைமை தேர்தல் கமிஷனர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் தலைமையில்கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று மாலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதற்கு முன்பாக கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து நேரடியாக களஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் கமிஷனர்கள், அதன்பிறகு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி எவ்வாறு நடைபெறுகிறது? அடுத்து செய்ய வேண்டிய பணிகள் என்ன, இந்த பணியில் உள்ள தொய்வுகள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை சிறப்பாக செயல்படுத்துவது, வாக்காளர் நீக்கம், சேர்த்தல் ஆகியவற்றில் சரியான, உண்மையான விவரங்களை கேட்டு பெற்று செயல்படுத்துவது ஆகியவை குறித்தும் தேர்தல் கமிஷனர்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.
அதுவும் தவிர தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெறுவதால் இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் என்ன நிலவரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதில் உள்ள நிறை குறைகள் என்ன மற்றும் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
- அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்.
- திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 11ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
- பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது.
- ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.
தமிழ்நாடு, மேற்குவங்க உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் இன்று 16 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி "SIR 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமைதியான, கண்ணுக்குத் தெரியாத மோசடிக்கான அரசியல் கருவி" என விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் (EC) நடத்திய SIR இன் போது, ஒரு உண்மையான வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், பாஜக அரசு அடியோடு ஆட்டம் காணும். இந்த அரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.
பாஜக கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் SIR நடத்துகிறது. ஆனால் பாஜக ஆளும் அசாம், திரிபுரா அல்லது பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை.
அடுத்த வருடம் அசாமிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் இந்த பாரபட்சம்?. இது தெளிவான பாகுபாடு. மத்தியில் ஆளும் கட்சிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.
- தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கொல்கத்தா:
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள மந்திரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பா.ஜ.க. கண்டிப்பாக யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.
- SIR நடைமுறை நாளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது.
- தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
SIR நடைமுறை நாளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது.
SIR நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், பீகார் SIR தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் SIR நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






