என் மலர்
நீங்கள் தேடியது "Chandra Kumar Bose"
- வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
- பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடந்து வருகிறது.
இந்நிலையில் SIR ஒரு குறைபாடுள்ள ஒரு செயல்முறை என்றும், இது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அவதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் தனது பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன் ஆஜரான பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார். அவருக்கு முன்னதாக விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
விசாரணைக்கு பின் அவர் கூறுகையில், இந்தத் திருத்தப் பணி மிகவும் அவசரமாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும் செயல்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்குச் சரியான பயிற்சி அளிக்கப்படாததால், இது ஒரு குழப்பமான நிலையை உருவாக்கியுள்ளது.
என்னை விசாரணைக்கு அழைத்ததில் எனக்குப் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், வயதான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று உடல்நலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இது மேற்கு வங்க மக்களுக்குக் கடும் இன்னல்களைத் தருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தானும் ஆதரிப்பதாகச் சந்திர குமார் போஸ் தெரிவித்துள்ளார்.
சந்திர குமார் போஸ் மட்டுமல்லாது, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், நடிகர் தேவ், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தொழிலதிபர் ஸ்வபன் சாதன் பாசு மற்றும் எழுத்தாளர் ஜாய் கோஸ்வாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறிது காலம் பாஜகவோடு பயணித்த சந்திர குமார் போஸ், கடந்த 2023 இல் அக்கட்சியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.
- நேதாஜி கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்க அனுமதிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
- மதம், சாதி மற்றும் பிரிவு என்ற பாகுபாடுகள் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைமை போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு சந்திர குமார் போஸ் எழுதிய கடிதத்தில், "பா.ஜ.க. கட்சியில் சேரும் போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சரத் சந்திர போஸ் ஆகியோரின் கருத்துக்களையும் மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க அனுமதிப்பதாக எனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதுபோன்ற விஷயம் எதுவும் நடக்கவே இல்லை."
"அப்போது, பா.ஜ.க.-வுடன் நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில், போஸ் சகோதரர்களின் கருத்துக்களை பா.ஜ.க. மூலம் நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் வகையில் தான் இருந்து வந்தது. இதன் பிறகு, நேதாஜியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஆசாத் இந்து மோர்ச்சா பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதில் மதம், சாதி மற்றும் பிரிவு என்ற பாகுபாடுகள் இன்றி அனைவரையும் பாரதியாக்களாக ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்பட்டது."
"இதுபோன்ற திட்டங்களுக்கு பா.ஜ.க.-விடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கப் பெறவில்லை. மத்திய மற்றும் மாநில அளவிலும் இந்த மகத்தான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நான் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் திட்டமிடல்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
2016-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தின் பா.ஜ.க. கட்சியின் துணை தலைவராக சந்திர குமார் போஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். பிறகு 2020 வாக்கில் இவரது பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இடையில் 2019 ஆண்டு சி.ஏ.ஏ.-வை கடுமையாக எதிர்த்த சந்திர குமார் போஸ் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






