search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Netaji Subhas Chandra Bose"

    • நேதாஜி கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்க அனுமதிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
    • மதம், சாதி மற்றும் பிரிவு என்ற பாகுபாடுகள் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்பட்டது.

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைமை போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

    இது குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு சந்திர குமார் போஸ் எழுதிய கடிதத்தில், "பா.ஜ.க. கட்சியில் சேரும் போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சரத் சந்திர போஸ் ஆகியோரின் கருத்துக்களையும் மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க அனுமதிப்பதாக எனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதுபோன்ற விஷயம் எதுவும் நடக்கவே இல்லை."

    "அப்போது, பா.ஜ.க.-வுடன் நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில், போஸ் சகோதரர்களின் கருத்துக்களை பா.ஜ.க. மூலம் நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் வகையில் தான் இருந்து வந்தது. இதன் பிறகு, நேதாஜியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஆசாத் இந்து மோர்ச்சா பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதில் மதம், சாதி மற்றும் பிரிவு என்ற பாகுபாடுகள் இன்றி அனைவரையும் பாரதியாக்களாக ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்பட்டது."

    "இதுபோன்ற திட்டங்களுக்கு பா.ஜ.க.-விடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கப் பெறவில்லை. மத்திய மற்றும் மாநில அளவிலும் இந்த மகத்தான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நான் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் திட்டமிடல்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    2016-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தின் பா.ஜ.க. கட்சியின் துணை தலைவராக சந்திர குமார் போஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். பிறகு 2020 வாக்கில் இவரது பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இடையில் 2019 ஆண்டு சி.ஏ.ஏ.-வை கடுமையாக எதிர்த்த சந்திர குமார் போஸ் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • எனது தந்தையின் பாரம்பரியத்தை சுரண்டுவதற்காக அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.
    • அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற நேதாஜியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை,

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நாளை மறுநாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஆர்எஸ்எஸ் ஏற்பாடுகளை செய்துள்ளது. சாகித் மினார் மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.

    ஆனால் நேதாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஆர்எஸ்எஸ் திட்டத்திற்கு நேதாஜியின் மகள் அனிதா போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் இதுபற்றி கூறியதாவது:-

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தமும், தேசியவாதத் தலைவரான நேதாஜியின் மதச்சார்பின்மை மற்றும் உள்ளடக்கிய கருத்துக்களும் எதிரெதிர் துருவங்களே தவிர, அவை ஒத்துப்போவதில்லை. என் தந்தையின் பெருமையை சுரண்டுவதற்காக அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.

    அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற நேதாஜியின் கருத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரதிபலிக்கவில்லை, நேதாஜி ஒரு பக்தியுள்ள இந்துவாக இருந்தார், ஆனால் மற்ற மதங்களை மதிக்க வேண்டும் என்றார். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்கு அவர் ஆதரவாக இருந்தார்.

    இந்த அணுகுமுறையை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. எளிதாக சொல்லவேண்டுமானால் அவர்கள் வலதுசாரிகள், நேதாஜி ஒரு இடதுசாரி.

    நேதாஜியை கவுரவிக்க பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், முதலில் அவர்களின் ஆர்வத்தைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். நேதாஜி இன்று உயிருடன் இருந்து, அரசாங்கத்தின் பார்வையில் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால், பாஜக அவரைக் கவுரவித்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை அவரது மகள் அனிதா போஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். #Netaji #Netajidaughter
    புதுடெல்லி:

    இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

    இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

    1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக அந்த விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக கருதப்படுகிறது.

    நேதாஜியின் அஸ்தி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ரென்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது நேதாஜியின் அஸ்தி தானா? என்பதை இந்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத நிலையில் நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு அவரது மகள் அனிதா போஸ் பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

    நேதாஜி, கணவருடன் அனிதா போஸ்.

    இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்ததாக நம்பப்படும் நேதாஜியின் 73-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேதாஜியின் மகள் அனிதா போஸ், ‘தாய்நாடான இந்தியாவுக்குவர வேண்டும் என என்னுடைய தந்தை மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது ஆசை நிறைவேறாமல் போனது.

    எனினும், சுதந்திர இந்தியாவை அவரது அஸ்தியாவது தொட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது ஆசை பூர்த்தி அடையும். மிக தீவிரமான இந்து பக்தராக இருந்த அவரது உடலின் மிச்சத்தை கங்கை ஆற்றில் கரைக்க வேண்டியது அவசியம்.

    எனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்ற எனது பழைய கோரிக்கையை அவரது 73-வது நினைவு தினமான இன்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என குறிப்பிட்டார். #Netaji #Netajidaughter #Netajimortalremains
    ×