என் மலர்
நீங்கள் தேடியது "mohammed shami"
- 2025 மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இவரை வாங்க இரு அணிகளுக்கும் இடையில் வர்த்தகம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந்தேதி நடக்கிறது. நாளைக்குள் 10 அணிகளும் எந்தெந்த வீரர்களைகள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார்கள் மற்றும் வெளியேற்றப்பட்டார், வர்த்தகம் நடைபெற்றது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.
அதன்வகையில் ஒரு அணியில் இருந்து மற்றொரு வீரர்கள் வர்த்தகம் ஆவது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் 2025 மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்கிறது.
இரு அணிகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சராசரி 56.16 ஆகும், எகானமி ரேட் 11.23 ஆகும்.
உடற்தகுதி விவகாரம் தொடர்பாக ஷமி இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்கிறார். கடைசியாக மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடினார்.
- வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2014-ம் ஆண்டு ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.
- நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.
2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் 2018 இல் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் தனக்கும் தனது மகளுக்கும் ஜீவனாம்ச தொகையை அதிகரிக்கக் கோரி ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
முகமது ஷமியின் வருமானம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று அவர் ஹசின் ஜஹான் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவைத் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.
தொடர்ந்து முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து தொடரின்போது உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அணியில் இடம் பிடித்திருப்பார்.
- ரஞ்சி டிராபியில் எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடருக்கான ஒயிட்பால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ரஞ்சி டிராபியில் விளையாடும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது?. உடற்தகுதிக்கா இந்திய அணி என்னை அழைக்கவில்லை என முகமது ஷமி இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வியின் உலக மாநாடு 2025-ல் அஜித் அகர்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது முகமது ஷமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அவர் என்னிடம் சொல்லியிருந்தால், நான் பதில் அளித்திருப்பேன். அவர் இங்கு இருந்திருந்தால், அவருக்கு பதில் கூறியிருப்பேன். அவர் சமூக ஊடகத்தில் என்ன சொன்னார் என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. நான் படித்திருந்தால், அவருக்கு போன் செய்திருக்கலாம். இருந்தபோதிலும், பெரும்பாலான வீரர்களுக்கு எனது போன் எப்போதும் தயாராக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவருடன் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், இங்கே அதை தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை.
அவர் இந்தியாவுக்கான அற்புதமான வீரர். அவர் சொன்னதை, என்னிடம் சொல்லியிருக்கலாம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கூட, அவர் உடற்தகுதியின் இருந்தால், இங்கிலாந்துக்குச் செல்வார் என நாங்கள் கூறியிருந்தோம். துரதிருஷ்டவசமாக அவர் உடற்தகுதி பெறவில்லை.
தற்போது உள்ளூர் தொடர் தொடங்கியுள்ளது. அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க இருக்கிறோம். தற்போது முதல்சுற்று போட்டி நடைபெறுகிறது. இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளை பார்க்க வேண்டும். அவர் சிறப்பாக பந்து வீசினால், ஷமியை போன்றவர்களை ஏன் விரும்பாமல் இருக்க வேண்டும். இந்த வருடம் 8 மாதங்களுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா தொடரில் கூட, அவர் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், அவர் உடதற்குதியுடன் இல்லை. அடுத்த சில மாதங்களாக அவருடைய உடற்தகுதியை நிலைத்து வைத்திருந்தால், கதை மாறியிருக்கலாம். இந்த கணக்கில், எனக்குத் தெரிந்தவரை, அவர் அந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு போதுமான அளவு பொருத்தமாக இல்லை.
இவ்வாறு அஜித் அகர்கர் தெரிவித்தார்.
- உடற்தகுதிக்காக என்னை இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை.
- நான் வலியில் விளையாடவோ அல்லது அணியை துன்பப்படுத்தவோ விரும்பவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
இந்த இரு தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணியில் சீனியர் வீரர்கள் ரோகித், விராட் கோலி மட்டுமே இடம்பெற்றனர். மற்ற சீனியர் வீரர்களான ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இந்த அணி இடம் பிடிக்கவில்லை.
2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஷமி, அதன்பிறகு காயத்தில் இருந்து மீண்டார். 35 வயதான அவர் சிறிது காலமாக 3 வடிவிலான எந்த அணியிலும் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. கடைசியாக ஜூன் 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஷமி விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட முடியாது என தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் முன்பே சொல்லிருக்கேன். தேர்வு என்பது என் கையில் இல்லை. உடற்தகுதி பிரச்சினை இருந்தால், நான் இங்கே பெங்கால் அணிக்காக விளையாடக்கூடாது.
உடற்தகுதிக்காக என்னை இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட முடியாது.
நான் வலியில் விளையாடவோ அல்லது அணியை துன்பப்படுத்தவோ விரும்பவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்து வலுவான மறுபிரவேசம் செய்ய விரும்பினேன். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.
அவர்கள் (தேர்வுக்குழுக்கள்) என்னை எப்போது தேர்வு செய்ய விரும்புகிறார்களோ அப்போது நான் செல்ல தயாராக இருக்கிறேன்.
என முகமது ஷமி கூறினார்.
இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.
- தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறவில்லை.
இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை.
காயம் காரணமாக சில தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து காயத்தில் இருந்த மீண்ட அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனாலும் இந்திய அணிக்கான தேர்வில் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அணியில் இடம்பெறாதது என் கையில் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள். தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை. தேர்வு செய்வது தேர்வு குழு, பயிற்சியாளர், கேப்டனின் வேலை.
நான் அங்கு இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அல்லது இன்னும் சிறிது நேரம் தேவை என்று அவர்கள் உணர்ந்தால், அது அவர்களின் கைகளில் உள்ளது.
இவ்வாறு முகமது ஷமி கூறினார்.
கிட்டதட்ட முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணியில் விளையாடாமல் உள்ளார்.
- ஆகாஷ் தீப் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரக்கெட் சங்கம் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியை அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர் அபிஷேக் பொரேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுஸ்டப் மஜும்தார், சுதீப் சட்டர்ஜி போன்ற மூத்த வீரர்களும், சுதீப் குமார் கராமி, ராகுல் பிரசாத், சவுரப் குமார் சிங், விஷால் பாட்டி போன்ற இளைஞர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
பெங்கால் அணி எலைட் குரூப் சி-யில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் குஜராத், அரியானா, சர்வீசஸ், ரெயில்வேஸ், திரிபுரா, உத்தரகாண்ட், அசாம் அணிகள் இடம் பிடித்துள்ளன. ஈடன் கார்டனில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை பெங்கால் எதிர்கொள்கிறது.
ரஞ்சி டிராபில் 38 அணிகள் விளையாடுகின்றன. 32 அணிகள் எலைட் டிவிசனில் நான்கு குரூப்புகளாக பிரிக்கப்படும். 8 அணிகள் பிளேட் டிவிசனில் இடம் பெறும். எலைட் குரூப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் டிவிசனில் இருந்து நான்கு அணிகள் நாக்அவுட் போட்டிக்கு முன்னேறும்.
- ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது.
- பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார். 2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் ஷமிக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜகான் மீண்டும் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆர்யாவின் நலன்களைப் புறக்கணித்து, காதலியின் மகளுக்கும் குடும்பத்திற்கும் முகமது ஷமி முன்னுரிமை அளித்தார். ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது. இதைத் தடுக்க சில எதிரிகள் முயற்சித்தனர். காதலி மற்றும் அவரது மகளுக்காக ஏராளமாகச் செலவு செய்யும் ஷமி, தனது சொந்த மகளைப் பற்றி கவலைப்படவில்லை.
எனது மகளின் தந்தை ஒரு கோடீஸ்வரராக இருந்த போதிலும் எனது வாழ்க்கையில் விளையாடுகிறார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. பெண்களை ஏமாற்றுபவர்.
இவ்வாறு ஹசின் ஜகான் கூறியுள்ளார்.
- முகமது சமி மீது அவரது முன்னாள் மனைவி பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
- முகமது சமியின் முன்னாள் மனைவி ஜீவனாம்சமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
இந்த புகார்கள் அனைத்திற்கும் சமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இதையடுத்து, கொல்கத்தா நீதிமன்றம் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்று ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதில், ஜஹானின் தனிப்பட்ட செலவிற்கு என்று ரூ.50 ஆயிரமும், மீதமுள்ள ரூ.80 ஆயிரம் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முகமது சமி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில், ஜஹானின் தனிப்பட்ட பராமரிப்புக்காக மாதம் ரூ.1.5 லட்சமும், அவர்களின் மகளின் பராமரிப்பு மற்றும் செலவுகளுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று சமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை ரகானே பதிவிட்டு வருகிறார்.
- குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதில் கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் யூடியூப் சேனல் தொடங்கி கிரிக்கெட் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முகமது சமி போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
- ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி நிலையில் யார் இந்திய அணியின் புதிய கேப்டன் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அஜித் அகார்கர் கூறியதாவது:-
இந்தத் தொடரிலிருந்து சமி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் எங்களிடம் கூறியுள்ளனர். அவர் தொடருக்குத் தகுதி பெற முயற்சித்து வருகிறார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு சில எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் தொடரின் சில போட்டிகளில் அவர் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் தற்போது அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால், காத்திருப்பது மிகவும் கடினம். அது துரதிர்ஷ்டவசமானது. அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டு தொடரிலும் அவர் அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் அவர்களுக்கு இடம் இல்லை.
என்று அஜித் அகார்கர் கூறினார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
- முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, முகமது சமிக்கு ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் உங்களை கொன்றுவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக முகமது சமி உடனடியாக தனது சகோதரர் முகமது ஹசீப் அம்ரோஹா மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் ஓவரை வீசிய முகமது ஷமி தனது முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார்.
- ஜாக் காலிஸ், கேஎல் ராகுல், பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி அவுட் செய்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியஐதராபாத் அணி 18.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதல் ஓவரை வீசிய முகமது ஷமி தனது முதல் பந்திலேயே ஷேக் ரஷீத் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். இதுவரை அவர் 4 விக்கெட்டுகளை முதல் பந்திலேயே பந்தில் எடுத்துள்ளார்.
இதற்கு முன்பாக ஜாக் காலிஸ், கேஎல் ராகுல் மற்றும் பில் சால்ட் ஆகியோரை முதல் பந்திலேயே முகமது ஷமி அவுட் செய்துள்ளார்.
முகமது ஷமிக்கு அடுத்தபடியாக லசித் மலிங்கா, அசோக் திண்டா, பிரவீன் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், டிரென்ட் போல்ட் ஆகியோர் ஒரு இன்னிங்சின் முதல் பந்திலேயே 3 முறை விக்கெட் எடுத்துள்ளனர்.






