என் மலர்
நீங்கள் தேடியது "அஜித் அகர்கர்"
- இங்கிலாந்து தொடரின்போது உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அணியில் இடம் பிடித்திருப்பார்.
- ரஞ்சி டிராபியில் எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடருக்கான ஒயிட்பால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ரஞ்சி டிராபியில் விளையாடும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது?. உடற்தகுதிக்கா இந்திய அணி என்னை அழைக்கவில்லை என முகமது ஷமி இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வியின் உலக மாநாடு 2025-ல் அஜித் அகர்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது முகமது ஷமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அவர் என்னிடம் சொல்லியிருந்தால், நான் பதில் அளித்திருப்பேன். அவர் இங்கு இருந்திருந்தால், அவருக்கு பதில் கூறியிருப்பேன். அவர் சமூக ஊடகத்தில் என்ன சொன்னார் என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. நான் படித்திருந்தால், அவருக்கு போன் செய்திருக்கலாம். இருந்தபோதிலும், பெரும்பாலான வீரர்களுக்கு எனது போன் எப்போதும் தயாராக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவருடன் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், இங்கே அதை தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை.
அவர் இந்தியாவுக்கான அற்புதமான வீரர். அவர் சொன்னதை, என்னிடம் சொல்லியிருக்கலாம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கூட, அவர் உடற்தகுதியின் இருந்தால், இங்கிலாந்துக்குச் செல்வார் என நாங்கள் கூறியிருந்தோம். துரதிருஷ்டவசமாக அவர் உடற்தகுதி பெறவில்லை.
தற்போது உள்ளூர் தொடர் தொடங்கியுள்ளது. அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க இருக்கிறோம். தற்போது முதல்சுற்று போட்டி நடைபெறுகிறது. இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளை பார்க்க வேண்டும். அவர் சிறப்பாக பந்து வீசினால், ஷமியை போன்றவர்களை ஏன் விரும்பாமல் இருக்க வேண்டும். இந்த வருடம் 8 மாதங்களுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா தொடரில் கூட, அவர் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், அவர் உடதற்குதியுடன் இல்லை. அடுத்த சில மாதங்களாக அவருடைய உடற்தகுதியை நிலைத்து வைத்திருந்தால், கதை மாறியிருக்கலாம். இந்த கணக்கில், எனக்குத் தெரிந்தவரை, அவர் அந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு போதுமான அளவு பொருத்தமாக இல்லை.
இவ்வாறு அஜித் அகர்கர் தெரிவித்தார்.
- 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோகித், கோலி முனைப்பு காட்டவில்லை.
- 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்ததுக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோஹித், கோலி முனைப்பு காட்டவில்லை. 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒருநாள் போட்டிகள் குறைவாகவே விளையாடுகிறோம். இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக் கோப்பைக்கு தயாராக முடியும்.
என கில் கூறினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
- இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியது.
அந்த கருத்துக்கு இந்திய அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை என கூறினார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தேர்வை நான் எதிர்பார்த்தேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆமாம், நான் இந்த தேர்வை எதிர்பார்த்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் இல்லை. எனக்கு அதிக கருத்துகள் எதுவும் இல்லை. பதில் சொல்வது எனக்கு மிகவும் கடினம்.
தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஒரே விஷயம் என்னவென்றால், கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் வேறு யாரும் ரன் அடிக்காதபோது நான் அரை சதம் அடித்தேன். குறிப்பாக நாங்கள் வென்ற கடைசி ஆட்டத்தில் அணிக்காக நான் பங்களித்ததாக நினைத்தேன்.
என கருண் நாயர் கூறினார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.
- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என அகர்கர் கூறினார்.
மும்பை:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில், சீனியர் வீரரான கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் நீக்கப்பட்டிருப்பது பேசும்பொருளாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம் என்றும் அதை அவர் பூர்த்தி செய்யவில்லை எனவும் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரிடம் இருந்து நாங்கள் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தோம். அதனை அவர் பூர்த்தி செய்யவில்லை. அதனால் மிடில் ஆர்டரில் தேவ்தத் படிக்கலால் கூடுதலாக பங்களிக்க முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு வீரருக்கும் 15 முதல் 20 டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசையாக உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.
தேவ்தத் படிக்கல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். அதேபோல் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடி அரைசதம் விளாசி இருந்தார். இந்திய ஏ அணிக்காக ஆடிய போட்டிகளிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
என்று அகர்கர் கூறினார்.
- இந்திய ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் பணியாற்றி வருகிறார்.
- 2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
அஜித் அகர்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றி வருகிறார்.
2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் வரை இருந்தது.
இந்நிலையில் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
- ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
- ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம்.
மும்பை:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது குறித்து அஜித் அகர்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அஜித் அகர்கர் கூறியதாவது:-
ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் யாருக்கு பதிலாக அவரை அணியில் எடுப்பது? அது அவருடைய தவறும் அல்ல, எங்களுடைய தவறும் அல்ல.
அதேபோல் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யாததும் துரதிஷ்டவசமானது. அபிஷேக் தற்போது நன்றாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருவதாலேயே அவரை அணியில் சேர்த்தோம்.
என கூறினார்.
- அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் சேத்தன் ஷர்மா பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் சேத்தனுக்கு பதிலாக அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் அகர்கர் இந்திய அணிக்காக 191 ஒருநாள் மற்றும் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் தலைமை தேர்வாளருக்கான போட்டியில் முன்னணியில் இருந்தவர்.
ஒரு தேர்வாளராக, அகர்கருக்கு அத்தகைய அனுபவம் இல்லை என்றாலும் அவருக்கு கிரிக்கெட் பற்றி நிறைய அறிவு உள்ளது. தலைமை தேர்வாளர் ஆன பிறகு அஜித் அகர்கர் கூறுகையில், "ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது" என்றார்.
- அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர்.
- ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும்.
மும்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் உள்ளன. இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு அணியும், சுழற்பந்து வீச்சாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருப்பார் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
குல்தீப் யாதவுடன் ஐ.பி.எல். போட்டியில் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும். அதை இந்திய அணி நிர்வாகம் செய்திருக்கிறது.
குல்தீப் யாதவ் எங்களுக்கு (இந்திய அணி) ஒரு துருப்பு சீட்டாக இருப்பார். அவரை பெரும்பாலான அணிகள் சவாலாக கருதுகின்றன.
இவ்வாறு அவர் கூறினர்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 5 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதல் 2 ஆட்டங்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரோகித் சர்மா கூறும்போது, "குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாங்கள் நிறைய விஷயங்களை யோசித்தே குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை எடுத்தோம்.
உலகக்கோப்பைக்கு முன்னதாக குல்தீப் யாதவை அதிகம் வெளிப்படுத்த விரும்பாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக அவரை பார்த்து கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் அவரை அதிகம் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் இரண்டு ஆட்டங்களுக்கு வெளியே அமர்ந்து 3-வது ஆட்டத்தில் விளையாடுவது எங்களுக்கு சிறந்த முடிவாகும்" என்றார்.
- கோலி களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
- கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும்.
மும்பை:
20 ஒவர் உலகக்கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்படமாட்டார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் இது குறித்துதேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-
விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர். 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த உடற்தகுதியை தொடர்ச்சியாக அவர் பராமரித்து வருகிறார். அவர் களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும். அணிக்குள் உடற்தகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் கோலியின் பங்கு முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலியை அகர்கர் பாராட்டி இருப்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.
- கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.
- சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
டி20 உலகக் கோப்பைக்கு இடையே நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் இருவரும் மரியாதை செலுத்தினர்.
ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பாராளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த சிலைகள் தற்போது அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் அஞ்சலி செலுத்தி இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
- ஹர்திக் பாண்ட்யா விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.
- காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். We want someone who can play a lot without injury.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
டி20-யில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுமையான பிட்னஸ் கொண்டிருக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனாலயே சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமித்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
ஹர்திக் பாண்ட்யா இப்போதும் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இருப்பினும் பிட்னஸ் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது அவரை தேர்வு செய்ய பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழுவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவரது விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.
ஏனெனில் நாங்கள் அடிக்கடி காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். அந்த வகையில் சூர்யகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான தகுதிகளைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.
அதே சமயம் ஹர்திக் பாண்ட்யாவை நாங்கள் சிறப்பாக கையாள்வோம் என்று கருதுகிறோம். டி20 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். கேப்டன்ஷிப் பற்றி ஹர்திக் பாண்ட்யாவிடமும் நாங்கள் பேசியுள்ளோம்.
சூர்யகுமார் யாதவ் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர். நீங்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடக்கூடிய ஒரு கேப்டனை விரும்புவது முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.
இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.






