என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shubman Gill"

    • இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்கள் இருப்பார்கள்.
    • எப்போதெல்லாம் வெற்றிடம் வருகிறதோ அப்போதெல்லாம் வீரர்கள் வந்து அதை நிரப்புவார்கள்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.

    இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடினார். நான்கு இன்னிங்சில் ஒரு இரட்டை சதத்துடன் மூன்று சதங்கள் அடித்தார். எட்ஜ்பாஸ்டனில் (269+161) ரன்கள் அடித்து அபார சாதனைப் படைத்தார்.

    இந்த நிலையில் சுப்மன் கில் குறித்து கங்குலி கூறியதாவது:-

    சுப்மன் கில்லிடம் நான் பார்த்ததில் இதுதான சிறந்த ஆட்டம். இதனால் நான் ஆச்சர்யம் படவில்லை. இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்கள் இருப்பார்கள். எப்போதெல்லாம் வெற்றிடம் வருகிறதோ அப்போதெல்லாம் வீரர்கள் வந்து அதை நிரப்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட்டில் திறமையான ஏராளமான வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு தலைமுறையிலும் வீரர்களை கண்டு பிடிக்கலாம். சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை புதிய திசைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை நான் நம்புகிறேன். தற்போதுதான் அவர் கேப்டனாகியுள்ளார். இது அவருடைய ஹனிமூன் காலம். ஆனால், காலப்போக்கில் அவருக்கு அதிக நெருக்கடி ஏற்படும். அடுத்த மூன்று போட்டிகளில் அதிக நெருக்கடி ஏற்படும்.

    லார்ட்ஸ் போட்டிக்கான ஆடுகளத்தின் மேற்பகுதி பிரவுன் நிறத்தில் இருந்தால், குல்தீப் யாதவ் 100 சதவீதம் விளையாடனும். அவரது தேர்வு ஆடுகளத்தின் மேற்பகுதியை சார்ந்தது. ஆடுகளத்தின் மேற்பகுதி க்ரீனாக இருந்தால், 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல முடியும். குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டால் நிதிஷ் ரெட்டில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஒருவர் வெளியில் இருக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • இதற்கு முன்னதாக எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி வெற்றி பெற்றதே கிடையாது.
    • சுப்மன் கில் தலைமையில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மன் கில் (269, 161) இரண்டு சதங்கள் அடிக்க முகமது சிராஜ் (7), ஆகாஷ் தீப் (10) அபாரமாக பந்து வீசினார்.

    இந்திய டெஸ்ட் அணி இதற்கு முன்னதாக எட்ஜ்பாஸ்டனில் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிளில் வெற்றி பெற்றதே கிடையாது. இதுதான் முதல் வெற்றி.

    இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் செய்தியாளர் ஒருவர் சுப்மன் கில்லிடம் எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணி வெற்றி பெற்றதே இல்லையே? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்றைய வெற்றிக்குப்பின் சுப்மன் கில் பத்திரியைாளர்களை சந்தித்தார். அப்போது, என்னுடைய பிடித்தமான பத்திரிகையாளரை பார்க்க முடியவில்லையே? அவர் எங்கே?. எனக் கூறியதுடன், பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இடத்தை சிறிது நேரம் உற்றுப்பார்த்தார்.

    பின்னர் எட்ஜ்பாஸ்டன் வெற்றி குறித்து கூறுகையில் "இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், நான் உண்மையிலேயே வரலாறு மற்றும் புள்ளி விவரங்களை பார்ப்பதில்லை எனத் தெரிவித்திருந்தேன். கடந்த 56 வருடங்களில் நாங்கள் இங்கே மாறுபட்ட அணிகளுடன் 9 போட்டிகளில் விளையாடியுள்ளோம்.

    இங்கிலாந்திற்கு தற்போது சிறந்த அணியாக வந்துள்ளோம் என நம்புகிறோம். இங்கிலாந்தில் மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் திறன் எங்களிடம் உள்ளது. தொடரையும் வெல்லக்கூடிய திறன் உள்ளது. சரியான முடிவை எடுத்து போராட முடியும் என்றால், இது எங்களுக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய ஒரு போட்டியாக இருக்கும்" என்றார்.

    • நான் எப்போதும் பேட்ஸ்மேனாக விளையாடி முடிவுகளை எடுக்க விரும்புகிறேன்.
    • கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது.

    பர்மிங்காம்:

    இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் இங்கு விளையாடிய 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது.

    இந்நிலையில் எங்களுடைய பவுலிங் மற்றும் பீல்டிங் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதல் போட்டிக்கு பின் நாங்கள் பேசிய விஷயங்களில் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். எங்களுடைய பவுலிங் மற்றும் பீல்டிங் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. இது போன்ற பிட்ச்சில் 400 - 500 ரன்கள் அடித்தால் எங்களால் வெற்றியின் அருகே இருக்க முடியும் என்பது தெரியும்.

    ஒவ்வொரு முறையும் நாங்கள் நிறைய கேட்ச்களை மிஸ் செய்ய மாட்டோம். ஆகாஷ் தீப் தம்முடைய இதயத்திலிருந்து பவுலிங் செய்தார். அவர் வீசிய லென்த், இடங்கள் பந்தை இருபுறமும் நகர்த்திய விதம் அற்புதமானது. இது போன்ற பிட்ச்சில் அதை செய்வது கடினமானது. எங்களுடைய பவுலர்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டரை ஆட்டிப் பார்த்தது அற்புதமானது.

    நான் எப்போதும் பேட்ஸ்மேனாக விளையாடி முடிவுகளை எடுக்க விரும்புகிறேன்.கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது. அடுத்த போட்டியில் பும்ரா கண்டிப்பாக விளையாட வருவார். லார்ட்ஸ் போன்ற மைதானத்தில் உங்களுடைய நாட்டின் கேப்டனாக செயல்படுவதை விட வேறு கவுரவம் இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது.
    • முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மழை வெளுத்து வாங்கி வருவதால், இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றதும் மீண்டும் போட்டி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார்.
    • 52 பந்தில் அதிவேக சதம் அடித்து சூர்யவன்ஷி அசத்தினார்.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் 13 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். 52 பந்தில் சூர்யவன்ஷி சதம் விளாசினார்.

    இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    மேலும், 10 சிக்சர்கள் அடித்து ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 35 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்திருந்தார்.

    அதிவேக சதம் விளாசி 143 ரன்கள் குவித்த பின்பு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "சுப்மன் கில் 100 மற்றும் 200 ரன்கள் எடுத்தபோது அவரிடமிருந்து எனக்கு நிறைய உத்வேகம் கிடைத்தது. அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன். 50 ஓவர்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாட முயல்வேன். எவ்வளவு அதிக ரன்கள் குவிக்கிறேனோ, அணிக்கு அவ்வளவு சாதகம் தான்" என்று தெரிவித்தார்.

    • இப்போட்டியில் கில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார்.
    • ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை ஆடிய இந்தியா 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்த கில் 2 ஆவது இன்னிங்சில் 161 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்தார்.

    மேலும், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தை சுப்மன் கில் பிடித்தார். முதலிடத்தில் இங்கிலாந்தின் கிரஹாம் கூச் உள்ளார் (456 VS IND, 1990)

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 430 ரன்கள் குவித்த கேப்டன் கில்க்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    கோலி தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "அருமை Star Boy. வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம் மேலும் மேலும் வளரட்டும். எல்லா பாராட்டுகளுக்கும் நீ தகுதியானவன்" என்று தெரிவித்துள்ளார். 

    • சுப்மன் கில் 161 ரன்கள் விளாசினார்.
    • கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா அரைசதம் அடித்தனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 78 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அருக்கு இணையாக சுப்மன் கில்லும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    இந்த ஜோடி 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் விளையாடியது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 41 (35 பந்துகள்) ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரிஷப் பண்ட் 48 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 57 பந்தில் அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார்.

    அரைசதம் அடித்த கில் அதை சதமாக மாற்றினார். அவர் 129 பந்தில் சதம் அடித்தார். மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சுப்மன் கில் மற்றும் ஜடேஜா வாணவேடிக்கை நிகழ்த்தினர். ஜடேஜா 94 பந்தில் அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 156 பந்தில் 150 ரன்னைத் தொட்டார். 27 பந்தில் 100-ல் இருந்து 150 ரன்னைத் தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 162 பந்தில் 161 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 411 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்தியா 427 ரன்கள் எடுத்திருக்கும்போது 2ஆவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 69 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

    • 2ஆவது இன்னிங்சில் 57 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • 129 பந்தில் சதம் விளாசினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார்.

    அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. கருண் நாயர் 2ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததும் சுப்மன் கில் களம் இறங்கினார்.

    இவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 57 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 பந்தில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் சதம் விளாசினார். இதன்மூலம் முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2ஆவது இன்னிங்சில் சதமும் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    • எட்ஜ்பாஸ்டனில் சுப்மன் கில் 269 ரன்கள் விளாசினார்.
    • நான் பார்த்ததில் இங்கிலாந்தில் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்- கங்குலி.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்தார். இது அவரின் முதல் இரட்டை சதமாகும். மேலும், இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்டரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    முதல் டெஸ்டில் சதம் அடித்த சுப்மன் கில் 2ஆவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியது தொடர்பாக சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    சுப்மன் கில்லின் இரட்டை சதம் குறைபாடு அற்ற, முற்றிலும் மாஸ்டர்கிளாஸ். எந்தவொரு காலக்கட்டத்திலும் இங்கிலாந்து மண்ணில் நான் பார்த்ததிலேயே சிறந்த இன்னிங்ஸ். கடந்த சில மாதங்களாக அவரிடம் மிக அதிகமான முன்னேற்றம். டெஸ்டிலவ் தொடக்க வீரர என்பதை அவரது இடம் இல்லை. இந்தியா வெற்றி பெறுவதற்கான டெஸ்ட் இது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • இந்தியா- இங்கிலாந்து தொடர் தொடங்கும்போது, சுப்மன் கில்லின் தரம், சராசரி 35க்கு போதுமானதாக இல்லை.
    • அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் சராசரி 45ஆக இருக்கும் எனத் தெரிவித்திருந்தேன்.

    சுப்மன் கில் தலைமையிலான இந்தியாவின் இளம் டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து பந்து வீச்சை இந்திய வீரர்கள் தாக்குப்பிடிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்தது.

    மேலும், சமீபகாலமாக சரியாக பேட்டிங் செய்யாத சுப்மன் கில்லால் சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். கேப்டன் சுப்மன் கில் முதல் டெஸ்டில் சதமும், 2ஆவது டெஸ்டில் இரட்டை சதமும் விளாசியுள்ளார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் "இந்தியா- இங்கிலாந்து தொடர் தொடங்கும்போது, சுப்மன் கில்லின் தரம், சராசரி 35க்கு போதுமானதாக இல்லை. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் சராசரி 45ஆக இருக்கும் எனத் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்த தொடரிலேயெ அவரது சராசரி 45 ஆக இருக்கும் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    சுப்மன் கில் 2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்துள்ளார். முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 147 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 8 ரன்களும் அடித்திருந்தார். 3 இன்னிங்சில் 424 ரன்கள் குவித்துள்ளார். இன்னிங்சில் சராசரி 141.3 ஆகும். டெஸ்ட் சராசரி என்றால் 212 ஆகும்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
    • கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடித்து 269 ரன்கள் எடுத்தார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்னும், ஜடேஜா 41 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 41 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் 269 ரன்களில் வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் ஆகாஷ் தீப் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

    பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோரை அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றினார். சிராஜ் கிராலியை அவுட்டாக்கினார். 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.

    இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.
    • இங்கிலாந்தில் தனி நபராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை சுப்மன் கில் படைத்துள்ளார்.

    அதன்படி SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.


    இதன்மூலம் முன்னாள் இந்திய ஜாம்பவான்களை சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    23 வயது 39 நாட்கள் - எம்.ஏ.கே. பட்டோடி vs இங்கிலாந்து, டெல்லி, 1964

    25 வயது 298 நாட்கள் - சுப்மன் கில் vs இங்கிலாந்து, எட்ஜ்பாஸ்டன், 2025

    26 வயது 189 நாட்கள் - சச்சின் டெண்டுல்கர் vs நியூசிலாந்து, அகமதாபாத், 1999

    27 வயது 260 நாட்கள் - விராட் கோலி vs மேற்கு ஆப்பிரிக்கா, நார்த் சவுண்ட், 2016

    இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் தனி நபராக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

    இங்கிலாந்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்:-

    சுப்மன் கில் 222 பர்மிங்காம் 2025

    சுனில் கவாஸ்கர் 221 ஓவல் 1979

    ராகுல் டிராவிட் 219 ஓவல் 2002

    சச்சின் டெண்டுல்கர் 193 லீட்ஸ் 2002

    ரவி சாஸ்திரி 187 ஓவல் 1990

    மினூ மங்காட் 184 லார்ட்ஸ் 1952

    ×