என் மலர்
நீங்கள் தேடியது "Shubman Gill"
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வருகிற 6-ந் தேதியுடன் முடிவடைகிறது.
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடர் டிசம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் டி20 தொடர் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், காயம் காரணமாக தன் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து கில் விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரவது ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வர வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. அண்மைய காலங்களில் பண்ட் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் கேப்டன் வாய்ப்பு கேஎல் ராகுளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு அதிகப்பமுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக பிசிசிஐ நாளை மும்பையில் தேர்வுக் குழு கூட்டத்தை நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார்.
கவுகாத்தி:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
- முதல் டெஸ்டில் இடம் பெற்ற அக்ஷர் படேல் 2-வது டெஸ்டில் கழற்றி விடப்பட உள்ளார்
கவுகாத்தி:
தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
கழுத்து வலியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அணிக்கு திரும்பியிருக்கும் இந்திய கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் உடனடியாக களம் கண்டால், கழுத்து வலி பிரச்சினை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் 2-வது டெஸ்டில் விளையாடமாட்டார் என்றும், துணை கேப்டன் ரிஷப் பண்ட் அணியை வழிநடத்துவார் என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கில்லுக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம் பெற வாய்ப்புள்ளது.
அதேபோல அக்ஷர் படேலுக்கு பதிலாக நிதிஷ் குமார் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
- கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாதியில் வெளியேறிய அவர் 2-வது இன்னிங்சில் ஆடவில்லை.
சென்னை:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அவரால் உடனடியாக விமானத்தில் பயணம் செய்ய முடியாது. ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் கவுகாத்தியில் நடைபெறும் 2-வது டெஸ்டில் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமே. கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாதியில் வெளியேறிய அவர் 2-வது இன்னிங்சில் ஆடவில்லை.
இந்நிலையில் அவருக்கான இடத்தில் யார் இடம் பெறுவார் என்பது மிக ஆவலை எதிர்நோக்கி உள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அணியின் பயிற்சியின் போது படிக்கல், சாய் சுதர்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனால் இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தனர்.
- முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் தொடர் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கவுதாத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
- முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார்.
- சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியது. 15 வருடத்திற்குப் பிறகு இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் சுப்மன் கில், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்மன் கில் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சுப்மன் கில் வீடு திரும்பினாலும் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.
- முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார்.
- சுப்மன் கில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில் 3 பந்துகள் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக retd hurt ஆகி வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால் 2 ஆவது இன்னிங்சில் சுப்மன் கில் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், கழுத்து வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முதல் டெஸ்டில் இனி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் கொல்கத்தாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இதில் பேட்டிங் செய்த சுப்மன் கில் 3 பந்துகளில் காயம் காரணமாக வெளியேறினார்.
கொல்கத்தா:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 29 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும் 39 ரன்னில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தர். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளை சந்தித்த நிலையில் கழுத்து வலி காரணமாக retired hurt ஆகி வெளியேறினார்.
நவம்பர் மாதத்தில் இதே (15-ந் தேதி) தேதியில் கடந்த 2023-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் எடுத்து retired hurt ஆனார்.
அதேபோல 2 ஆண்டு கழித்து அதே நாளான நவம்பர் 15-ந் தேதி இன்றும் அவர் retired hurt ஆகி வெளியேறி உள்ளார். இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது.
- வாஷிங்டன் சுந்தர் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார். ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார். கே.எல். ராகுல் 13 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். 26.1 ஓவரில் இந்திய அணி 50 ரன்னை தொட்டது.
29 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் 3 பந்தை ஸ்விப் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தார். அப்போது அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டது. அணி மருத்துவர் வந்து சோதனை செய்த போதும் அவரால் வலி தாங்க முடியவில்லை. இதனால் அவர் retd hurt ஆகி வெளியேறினார். இதனையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார்.
- இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.
- இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
கொல்கத்தா:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தையும் சேர்த்து இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள சுப்மன் கில் ஒரே ஒரு முறை மட்டுமே டாஸில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸை இழந்த பின் சுப்மன் கில் அளித்த பேட்டியில், "நான் வெல்லப் போகும் ஒரே டாஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்தான் என்று நம்புகிறேன்" என சிரித்துக்கொண்டே கூறினார்.
- தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமானவர்கள்.
- ஆசிய கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற அணியை எதிர்கொள்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம்.
கொல்கத்தா:
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்த கில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
இந்த இரண்டு போட்டிகளும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நாங்கள் விளையாட வேண்டும் என்றால் இந்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்கள். எனவே அவர்களை வீழ்த்துவது என்பது எளிதான காரியமாக இருக்காது.
இந்த டெஸ்ட் போட்டியில் பல சவால்கள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் ஒரே அணியாக நாங்கள் இந்த சூழலை பெரிதாக கையாளும் என்று நம்புகிறேன். ஆசிய கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற அணியை எதிர்கொள்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம். ஆனால் இந்த சவாலை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.
என்று சுப்மன் கில் கூறினார்.






