என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brand ambassador"

    • புகழ்பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில்முனைவோர்.
    • ஆடம்பரம் மற்றும் இயற்கை அழகின் உச்சம் மாலத்தீவு

    மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.

    "உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம், புகழ்பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில்முனைவோர்" என்று மாலத்தீவு சுற்றுலாத்துறை கத்ரீனாவைப் பாராட்டியுள்ளது.

    இந்த அறிவிப்பு குறித்து கத்ரீனா கூறுகையில், "ஆடம்பரம் மற்றும் இயற்கை அழகின் உச்சம் மாலத்தீவு - அங்கு நேர்த்தி அமைதியுடன் இணைகிறது" என்றார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது.

    முன்னதாக, பிரதமர் மோடி மாலத்தீவை புறக்கணித்து லட்சத்தீவுக்கு செல்வதை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் படங்களை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரராக திகழ்ந்த சாதனையாளர் டைகர் உட்ஸ்
    • நைக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார் உட்ஸ்

    "பணக்காரர்களுக்கான விளையாட்டு" என கருதப்படும் கோல்ஃப் விளையாட்டில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர், அமெரிக்காவை சேர்ந்த டைகர் உட்ஸ் (48). இவரது இயற்பெயர் எல்ட்ரிக் டான்ட் உட்ஸ் (Eldrick Tont Woods).

    1999 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2004 செப்டம்பர் வரை தொடர்ச்சியாக 264 வாரங்களும், மீண்டும் 2005 ஜூன் மாதம் முதல் 2010 அக்டோபர் வரை தொடர்ச்சியாக 281 வாரங்களும், உலகின் நம்பர் 1 கோல்ஃப் வீரர் எனும் முதலிடத்திலேயே திகழ்ந்தவர் உட்ஸ்.

    இக்கால கட்டங்களில் உட்ஸ், 13 முக்கிய கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.

    தொழில்முறை கோல்ஃப் விளையாட்டில் தனது 20-வது வயதிலேயே பங்கு பெற தொடங்கிய உட்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு உயர்ரக காலணிகள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான "நைக்" (Nike) உடன் அதன் பிராண்ட் தூதராக (brand ambassador) 1996ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    27 வருடங்களாக தொடர்ந்த "உட்ஸ்-நைக்" கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் உட்ஸ் தெரிவித்திருப்பதாவது:

    27 வருடங்களுக்கு முன் உலகின் தலைசிறந்த ஒரு பிராண்டுடன் அதிர்ஷ்டவசமாக இணைந்தேன். அந்த இணைப்பினால், அன்றிலிருந்து இன்று வரை சிறந்த தருணங்களால் என் நினைவுகள் நிரம்புகிறது. நான் அவற்றை கூற தொடங்கினால், அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    இதற்கு காரணமாக இருந்த ஃபில் நைட் (Phil Knight) எனது நன்றிக்குரியவர்.

    நைக் நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் என் நன்றி.

    இந்த இணைப்பின் வழியாக பல பிரமிப்பூட்டும் தடகள விளையாட்டு வீரர்களுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

    மக்கள், இது போல் மீண்டும் ஒரு அத்தியாயம் உருவாகுமா என கேட்பார்கள். நிச்சயமாக மற்றொரு அத்தியாயம் உருவாகும்.

    இவ்வாறு டைகர் உட்ஸ் பதிவிட்டுள்ளார்.

    இந்த பிரிவை குறித்து நைக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "27 வருடங்களாக, உலகின் ஒப்பற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரான டைகருடன் இணையும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. அவர் கோல்ஃப் விளையாட்டை மாற்றியது மட்டுமில்லாமல், அதில் இருந்த பல தடைகற்களை தகர்த்து எறிந்தார். அவர் எதிர்காலம் சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளது.

    2016லிருந்தே நைக் நிறுவனம், கோல்ஃப் விளையாட்டிற்கான உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலிலிருந்து விலகி கொண்டது குறிப்பிடத்தக்கது.

    சிக்கிம் மாநிலத்தின் நல்லெண்ண தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை நியமித்து அம்மாநில கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #ARRehman
    காங்டோக் :

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை சிக்கிம் மாநில நல்லெண்ண தூதராக நியமனம் செய்துள்ளதாக அம்மாநில கவர்னர் ஸ்ரீனிவாஸ் பாட்டில் அறிவித்துள்ளார்.

    இந்தியாவின் முதல் முழுமையன இயற்கை விவசாய மாநிலமான சிக்கிம், அதன் சமூக பொருளாதார வளர்ச்சிகளில் நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனைகளையும், மேம்பாட்டு திட்டங்களையும் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுளார். இதற்கு ஊதியமாக பணம் ஏதும் அவர் பெறவில்லை என அம்மாநில கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த 18-ம் தேதி முதல் சிக்கிம்மில் தங்கியபடி அம்மாநிலத்தின் இயற்கை அழகினை பிரதிபலிக்கும் வகையில் ஆவணப்படம் ஒன்றையும் ரஹ்மான் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.  #ARRehman
    ×