

காங்டோக் :
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை சிக்கிம் மாநில நல்லெண்ண தூதராக நியமனம் செய்துள்ளதாக அம்மாநில கவர்னர் ஸ்ரீனிவாஸ் பாட்டில் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் முழுமையன இயற்கை விவசாய மாநிலமான சிக்கிம், அதன் சமூக பொருளாதார வளர்ச்சிகளில் நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனைகளையும், மேம்பாட்டு திட்டங்களையும் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுளார். இதற்கு ஊதியமாக பணம் ஏதும் அவர் பெறவில்லை என அம்மாநில கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 18-ம் தேதி முதல் சிக்கிம்மில் தங்கியபடி அம்மாநிலத்தின் இயற்கை அழகினை பிரதிபலிக்கும் வகையில் ஆவணப்படம் ஒன்றையும் ரஹ்மான் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது. #ARRehman