என் மலர்
நீங்கள் தேடியது "Gujarat Titans"
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக குஜராத் அணியிடம் இருந்து ரூ.2.6 கோடிக்கு அதிரடி வீரர் ஷெர்பான் ரூதர்போர்ட்-ஐ மும்பை அணி TRADE செய்துள்ளது.
முன்னதாக லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்துள்ளார்.
- வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.
இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயார் செய்து வருகிறது. அதோடு அதற்கு முன்னதாக வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதனால் சில நட்சத்திர வீரர்கள் அதன் வாயிலாக அணிமாற்றம் செய்வார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு பெரியளவில் பேசப்பட்ட டிரேடிங்காக வாஷிங்டன் சுந்தரின் டிரேடிங் செய்தி அமைந்தது. ஏனெனில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறி ஓய்வை அறிவித்த வேளையில் அவரது இடத்திற்கு சரியான மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்து சிஎஸ்கே அணி தங்களது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே இது குறித்த தகவல் அதிகளவு வைரலாகி வருகிறது.
ஆனால் இது குறித்து குஜராத் அணியின் நிர்வாகமும் சரி, சென்னை அணியின் நிர்வாகமும் சரி உறுதியான அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணி மறுத்துவிட்டது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்பட்டு வருகிறது.
- இந்த ஐபிஎல் தொடரில் சிராஜ் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், அதிக டாட் பந்துகள் வீசிய பந்துவீச்சாளர் விருதை குஜராத் வீரர் முகமது சிராஜ் வென்றார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்படும் என்று பிசிசிஐ புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் தான் அதிக மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடப்பு ஐபிஎல் சீசனில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை சாய் சுதர்சன் கைப்பற்றினார்.
- வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதை சாய் சுதர்சன் வென்றார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், குஜராத் அணியை சேர்ந்த சாய் சுதர்சன் 4 விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் 759 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கோப்பையை கைப்பற்றிய சாய் சுதர்சன், 88 பவுண்டரிகள் அடித்து அதிக போர் அடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ரூபே ஆன் தி போர்ஸ் ஆப் தி சீசன் விருதையும் வென்றார்.
மேலும், வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதை வென்ற அவர், 1495 பேண்டசி புள்ளிகள் பெற்று பேண்டசி கிங் விருதையும் வென்றார்.
- அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு.
- இதுபோக அவர்களுடைய பீல்டிங் துறையும் சொல்லும்படி இல்லை.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் குஜராத் அணியின் இந்த தோல்விக்கு அந்த அணியின் கேப்டனே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் உத்தப்பா விளக்கத்துடன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் அணியின் உத்தி சிறப்பாக செயல்படுவதை விட அவர்களுக்கே எதிர்வினையாற்றுவதாக இருந்தது. இந்த வருடம் மிடில் ஓவர்களில்தான் பிரசித் கிருஷ்ணா வெற்றிகரமாக செயல்பட்டார். அப்படிப்பட்ட அவரை பவர் பிளேயில் பயன்படுத்தியது சுப்மன் கில்லின் தவறான முடிவு. முதல் ஓவரில் பிரசித் கிருஷ்ணா நிறைய ரன்களை வழங்கினார். எனவே அவருக்கு 2வது ஓவரை வழங்காமல் தவிர்த்திருக்க வேண்டும். அதனையும் கில் செய்யவில்லை.
அவர்கள் சரியான திசையில் செல்லத் தவறிவிட்டனர். அவருடைய 2 ஓவர்களில் மும்பை முறையே 26, 22 ரன்கள் அடித்தது குஜராத்துக்கு தோல்வியைக் கொடுத்தது. இதுபோக அவர்களுடைய பீல்டிங் துறை குஜராத்தை தலை குனிய வைத்தது. இவ்வளவு கேட்சுகளை தவற விட்ட நீங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்று எதிர்பார்க்க கூடாது.
என்று உத்தப்பா கூறினார்.
- மும்பை தரப்பில் ரோகித் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்றில் மும்பை - குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. 47 ரன்கள் எடுத்த போது பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரோகித் - சூர்யகுமார் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் அரை சதம் அடித்து அசத்தினார். 20 பந்தில் 33 ரன்கள் எடுத்திருந்த போது சூர்யகுமார் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து ரோகித்துடன் திலக் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் 81 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த திலக் 11 பந்தில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் நமன் மற்றும் பாண்ட்யா ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் தோல்வியடைந்ததே இல்லை. அந்த வகையில் மும்பையின் சாதனை இலக்கை குஜராத் அணி தகர்த்து குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
- இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 'கிளைமாக்சை' நெருங்கி விட்டது. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்சை சந்திக்கிறது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 14 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று 3-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் லக்னோ, சென்னையிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 679 ரன்), கேப்டன் சுப்மன் கில் (649), ரூதர்போர்டு, ஷாருக்கான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 5 அரைசதம் உள்பட 538 ரன்கள் எடுத்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் மேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் தேசிய அணிக்காக விளையாட வேண்டியதிருப்பதால் லீக் சுற்றுடன் வெளியேறினார். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள குசல் மென்டிஸ் (இலங்கை) அவரது இடத்தை எப்படி நிரப்புவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (23 விக்கெட்), சாய் கிஷோர் (17), முகமது சிராஜ் (15) அசத்துகின்றனர். இதுவரை 9 விக்கெட்டுகள் (14 ஆட்டம்) வீழ்த்தி இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானிடம் இருந்து எதிர்பார்த்த மயாஜாலம் இன்னும் வெளிப்படவில்லை.
5 முறை சாம்பியனான மும்பை அணி 14 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் எடுத்து 11-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்ற அந்த அணி அடுத்த 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி எழுச்சி கண்டது. ஆனால் கடைசி 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வி கண்டு சற்று சறுக்கியது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (5 அரைசதம் உள்பட 640 ரன்), ரோகித் சர்மா, திலக் வர்மா, நமன் திர் நல்ல நிலையில் உள்ளனர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தென் ஆப்பிரிக்காவின் ரையான் ரிக்கெல்டன் (388 ரன்), இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் (233 ரன், 6 விக்கெட்) ஆகியோர் லீக் சுற்றுடன் விலகி இருப்பது அந்த அணிக்கு பலவீனமாகும். ரிக்கெல்டனுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடுகிறார். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (19 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (17), ஹர்திக் பாண்ட்யா, கரண் ஷர்மா வலுசேர்க்கின்றனர்.
நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து இருக்கின்றன. அதில் முறையே குஜராத் அணி 36 ரன் மற்றும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 5 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், குசல் மென்டிஸ், ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், ஜெரால்டு கோட்ஜீ, அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
மும்பை: ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சரித் அசலங்கா அல்லது பெவன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- 5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் 11 முறையாக பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது.
- தனது நாட்டுக்காக விளையாடுவதால் ஜாஸ் பட்லர் பிளே ஆப் சுற்றில் விலகியுள்ளார்.
நியூ சண்டிகர்:
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பிளே ஆப் சுற்று நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பஞ்சாப் கிங்ஸ்-இரண்டாம் இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன் னேறும்.
நாளை (30-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு நடை பெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த குஜராத் டைட் டன்ஸ்-4ம் இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி பஞ்சாப்-பெங்களூரு இடையேயான ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் குவாலிபையர் 2' போட்டியில் விளையாடும்.இதில் வெல்லும் அணி 2-வதாக இறுதிப் போட் டிக்கு தகுதிபெறும்.
குவாலிபையர்-2 ஆட்டத்துக்கு முன்னேறப் போவது குஜராத்தா? மும்பையா? என்று ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 ஆட்டத்திலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் 36 ரன் வித்தியாசத்திலும், மும்பை வான்கடே மைதானத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது. இதனால் குஜராத் மிகுந்த நம்பிக்கையுடன் மும்பை இந்தியன்சை எதிர் கொள் ளும். அதே நேரத்தில் அந்த அணி கடந்த 2 ஆட்டத்தில் லக்னோ, சென்னையிடம் தோற்று இருந்தது.
மேலும் 538 ரன்கள் குவித்த முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) தனது நாட்டுக்காக விளையாடுவதால் பிளே ஆப் சுற்றில் விலகியுள்ளார். இது குஜராத்துக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த குஷால் மெண்டீஸ் இடம் பெற்றுள்ளார். கேப்டன் சுப்மன் கில் (649 ரன்) , சாய் சுதர்சன்( 679 ) , ரூதர்போர்டு, ஷாருக்கான், ராகுல் திவே தியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் , பிரசித் கிருஷ்ணா (23 விக்கெட்) சாய்கிஷோர் (17 ), முகமது சிராஜ் (15) ரஷீத்கான் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.
5 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் 11 முறையாக பிளே ஆப் சுற்றில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அந்த அணி குஜராத்தை தோற்கடித்து 'குவாலிபையர்-2' ஆட்டத்துக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
தொடக்கத்தில் தடுமாறிய அந்த அணி பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ரிக்கல்டன், வில்ஜேக்ஸ் ஆடாதது அந்த அணிக்கு சற்று பாதிப்பே. அவர்களுக்கு பதில் பேர்ஸ்டோவ், அசலெங்கா ஒப்பந்தாகி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (640 ரன்) கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, திலக் வர்மா, நமன்தீர் ஜஸ்பிரித் பும்ரா (17 விக்கெட்), போல்ட் (19 விக்கெட்), தீபக் சாஹர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருஅணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது.
- குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது.
புள்ளிப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்த குஜராத், 4 ஆம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.
குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது. குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
முல்லான்பூரில் நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1ல் தோல்வி அடையும் அணியுடன் ஜூன் 1 ஆம் தேதி விளையாடும்
- குஜராத் எதிரான போட்டியில் சென்னை அணி 230 ரன்கள் குவித்தது.
- 83 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினாலும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களை சென்னை அணி சந்தோசப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, "அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்" என்று சுரேஷ் ரெய்னா கூறினார். அதற்கு அவர் பெயர் S-ல் தொடங்குமா?
என்று சக வர்ணனையாளர் சோப்ரா, கிரிக்கெட் கேட்க, அவர் இந்த அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சுரேஷ் ரெய்னா சிரித்தபடியே பதில் கூறினார்.
- எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன.
- ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கு பின்பு ஓய்வு குறித்து பேசிய கேப்டன் தோனி, "எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்டி மகிழ்ந்துவிட்டு பிறகு முடிவு செய்வேன். ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை. கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "வைபவ் சூர்யவன்ஷி உங்கள் காலைத் தொட்டு வணங்கியபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த தோனி, "வயதாகிவிட்டதைப் போல உணர்ந்தேன். எங்கள் அணி வீரர் ஆண்ரே சித்தார்த்திடம், உனக்கு என்ன வயது? எனக் கேட்டேன். அவர் என்னை விட 25 வயது இளையவராம். இதைக் கேட்டபோதுதான் 'ஆம் நமக்கு நிஜமாகவே வயதாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது" என்று கூறினார்.






