என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் ஏலம்"

    • ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன்.
    • என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள்.

    ஐபிஎல் தொடரின் 19-வது சீசனுக்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.

    கார்த்திக் சர்மாவை வாங்க ஆரம்பத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் ஆர்வம் காட்டின. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிரமாகப் களமிறங்கியது. கொல்கத்தா அவரை வாங்கிவிடும் என்று நினைத்த நேரத்தில், சிஎஸ்கே உள்ளே புகுந்து விலையை எகிற வைத்தது. 10 கோடியைத் தாண்டியதும் ஐதராபாத் (SRH) அணி போட்டிக்கு வந்தது. ஆனால், விடாப்பிடியாக நின்ற சிஎஸ்கே, இறுதியில் ரூ.14.2 கோடிக்கு கார்த்திக் சர்மாவைத் தட்டித் தூக்கியது.

    ஏலத்தை கார்த்திக் சர்மா, நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கான ஏலம் தொடங்கிய விதம் குறித்தும், அது முடிந்த பிறகு தனது மனநிலை குறித்தும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால் அந்தத் தருணத்தில் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ஏலம் தொடங்கியபோது, 'என்னை யாரும் எடுக்க மாட்டார்களோ?' என்று பயந்தேன். ஆனால் ஏலம் சூடுபிடித்துத் தொகை எகிறத் தொடங்கியதும், என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

    ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். ஆனால் நானோ அழுதுகொண்டிருந்தேன். அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    முதல்முறையாக நான் மஹி பாய் (தோனி) உடன் விளையாடப் போகிறேன். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதன்முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டதே இவ்வளவு பெரிய தொகைக்கு என்பது நம்பமுடியாத ஒன்று என கார்த்திக் கூறினார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி.
    • பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடுவது எளிதல்ல.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் பிரசாந்த் வீர் என்ற (அன்கேப்ட் வீரர்) ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரின் ஆரம்ப விலை ரூ.30 லட்சம் ஆகும். ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது.

    இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 அன்கேப்ட் வீரர் வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி என பிரசாந்த் வீர் கூறியுள்ளார். இது குறித்து பிரஷாந்த் வீர் கூறுகையில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி. ஏனெனில் அங்கு டோனி இருக்கிறார். பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடுவது எளிதல்ல. அதை சிறப்பாக செய்வது தான் அவரது ஸ்பெஷல். அவரிடம் இருந்து முடிந்த வரை நிறைய கற்றுக்கொள்வேன். அவரிடம் இருந்து 4-5 சதவீதம் கற்றுக்கொண்டாலும் கூட எனக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

    • சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
    • கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில், 77 வீரர்களை அணிகள் வாங்கின. அதில் சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

    இந்நிலையில், மினி ஏலத்தில் தன்னை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சர்பராஸ் கான் சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் எனக்கு புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவரது ஸ்டோரியில் நடிகர் நானி நடித்த ஜெர்சி படத்தில் உள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரயில் நிலையத்திற்குச் சென்று, வரும் ரயிலின் சத்தத்திற்கு இணையாக தனது சந்தோஷத்தை கத்தி நானி வெளிப்படுத்துவார்.

    ஐபிஎல் தொடரில் 2015 முதல் 2023 வரை பல்வேறு அணிகளுக்காக சர்ப்ராஸ் கான் விளையாடியுள்ளார். கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    • அகீல் ஹொசைன் சிஎஸ்கேவால் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    2026 உலகக்கோப்பைக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று மதியம் அபுதாபியில் நடைபெற்றது. ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தன.

    இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    அதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைன் சிஎஸ்கேவால் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    மேலும் சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி மற்றும் மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    • இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்
    • இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்

    உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கிரிக்கெட் லீக் என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்தான். அடுத்தாண்டு இதன் 19வது சீசன் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் தொடங்கியது. 

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஐபிஎல் ஏலம் தொடர்ந்து ஏன் வெளிநாட்டில் நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய பிரியங்கா கார்க்,

    ''ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? என்ன கட்டாயம்?  இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா? ஐபிஎல் தேசிய பெருமையின் அடையாளமாக இருந்தால், இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும் இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் பிசிசிஐ என்ன செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காகத்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கொல்கத்தா அணி ரூ.64 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது
    • சென்னை அணி ரூ.43 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்

    சென்னை அணி ரூ.43 கோடியில் 9 வீரர்களையும் ஐதராபாத் அணி ரூ.25 கோடியில் 10 வீரர்களையும் லக்னோ அணி ரூ.22 கோடியில் 6 வீரர்களையும் டெல்லி அணி ரூ.21 கோடியில் 8 வீரர்களையும் பெங்களூரு அணி ரூ.16 கோடியில் 8 வீரர்களையும் ராஜஸ்தான் அணி ரூ.16 கோடியில் 9 வீரர்களையும் குஜராத் அணி ரூ.12 கோடியில் 5 வீரர்களையும் பஞ்சாப் அணி ரூ.11 கோடியில் 4 வீரர்களையும் எடுக்கவேண்டும்.

    ×