search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSK"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐபிஎல் 2025 சீசனில் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிகளை வெளியிட்டது பிசிசிஐ
    • uncapped வீரராக எம்.எஸ்.டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம், எத்தனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது.

    அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

    வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம். இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம்.

    ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் uncapped வீரராக அறிவிக்கப்படுவார்.

    வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அணியில் தக்க வைக்கப்படும் முதல் 3 வீரர்களுக்கு முறையே ரூ.18 கோடி, ரூ.14 கோடி மற்றும் ரூ.11 கோடிசம்பளமாக வழங்கப்படும்.

    அணியில் தக்கவைக்கப்படும் அடுத்த 2 வீரர்களுக்கு முறையே ரூ.18 கோடி, ரூ.14 கோடி சம்பளமாக வழங்கப்படும். அணியில் தக்கவைக்கப்படும் uncapped வீரருக்கு 4 கோடி சம்பளமாக வழங்கப்படும்.

    ஒரு அணி 5 சர்வதேச வீரர்கள் மற்றும் 1 uncapped வீரரை தக்க வைக்கிறது எனில் இதற்கே 79 கோடியை செலவு செய்யவேண்டும். அதன்படி 120 கோடியில் 79 கோடி போக மீதமுள்ள 41 கோடியை தான் ஏலத்தில் அந்த அணியால் செலவு செய்யமுடியும்.

    வரும் ஐபிஎல் தொடரில் uncapped வீரராக எம்.எஸ்.டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு தக்கவைக்கப்பட்டால் டோனிக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். தற்போது 12 கோடி ரூபாய் சம்பளம் பெறும் டோனி இதனால் தனது சம்பளத்தில் 8 கோடியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் 2025 சீசனில் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிகளை வெளியிட்டது பிசிசிஐ.
    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம்.

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம், எத்தனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது.

    அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

    வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம். இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம்.

    ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் uncapped வீரராக அறிவிக்கப்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இதன்மூலம் uncapped வீரராக எம்.எஸ்.டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கலாம். எம்.எஸ்.டோனிக்காகவே இந்த விதிமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை IPLல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மகள்கள் தினத்தை முன்னிட்டு சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் இன்று தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

    இந்திய குடும்பங்களில் மகன்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் நிலையில், மகள்களை கொண்டாடும் விதமாக செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மகள்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தங்கள் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    அந்த பதிவில், நம் வாழ்க்கையை மகிழ்ச்சி மற்றும் அன்பினால் நிரப்பும் மகள்களை கொண்டாடும் மகள்கள் தினத்திற்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது. 

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி சட்டையுடன் ஓணம் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    • ஜடேஜாவிபதிவில் ரசிகர்கள் தளபதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
    • இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

    அந்த பதிவில், "ஹலோ மை சென்னை ஃபேமிலி எல்லாரும் எப்படி இருக்கீங்க" என்று பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில் ரசிகர்கள் தளபதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    • டோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' என சிஎஸ்கே அணி பதிவிட்டுள்ளது.
    • இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.

    அதே சமயம், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், டோனியின் நெம்பர் 7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' எனப் பதிவிட்டுள்ளனர்.

    இந்த எக்ஸ் பதிவு டோனி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் டோனி ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும் மறு தரப்பினர் சிஎஸ்கே ஜெர்ஸி மாறப்போகிறது அதனால் தான் இப்படி பதிவிட்டுள்ளார்கள் என்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை இதுகுறித்து எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் வரவுள்ளார் என்று கூறப்படும் நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் டோனியின் ஓய்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்றே கூறப்படுகிறது.

    • ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
    • இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், ஜடேஜா எடுத்த செல்பியில் டோனி இருப்பதைப் போல எடிட் செய்த புகைப்படத்தை பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், "தல தளபதி வயலில் இருந்தால் எப்படி இருக்கும், சும்மா ஒரு கற்பனைக்கு" என்று சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

    • அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.

    இந்நிலையில், எம்.எஸ்.டோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் Uncapped Playerஆக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்பட்டது.

    இந்நிலையில் அப்படி எந்த கோரிக்கையும் நாங்கள் வைக்கவில்லை என்றும் அதே சமயம் அன் கேப்ட் பிளேயர் விதி மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை அன் கேப்ட் பிளேயர் ஆக அணியில் தக்க வைக்கலாம் என்ற விதிமுறை 2021 வரை IPLல் இருந்து வந்தது. எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தை ஒட்டி, அந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வர, ஐபிஎல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    • ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
    • விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கடந்த புதன் கிழமை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கடந்த இரு நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக ஐபிஎல் விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

     


    அதன்படி ஐபிஎல் முதல் சீசன் தொடங்கிய 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவர சிஎஸ்கே அணி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவரும் போது சென்னை அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படலாம்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி வந்தால், அவரை அன்கேப்டு வீரர் (அதாவது தேசிய அணிக்காக விளையாடாத வீரர்) ஆக கருத்தில் கொள்ளப்படுவார் என்ற விதிமுறை ஐபிஎல் தொடரின் முதலாவது சீசன் துவங்கியதில் இருந்தே அமலில் இருந்து வந்தது. இதனை மீண்டும் அமலுக்கு கொண்டுவரவே சிஎஸ்கே ஆர்வம் காட்டுகிறது. எனினும், இதற்கு பல அணிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் 15, 2020 ஆம் ஆண்டு எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது ரவீந்திரா ஜடேஜாவுக்கு அடுத்தப்படியாக சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரராக டோனி இருந்தார். அன்கேப்டு வீரருக்காக ஒரு அணி ரூ. 4 கோடி வரை செலவிடும்.

    இதேபோன்ற விதிமுறை 2025 ஏலத்திற்கு முன் அமலுக்கு வரும் பட்சத்தில், இதை கொண்டே சிஎஸ்கே அணியில் டோனி தக்கவைக்கப்படுவார் என்று தெரிகிறது. எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்டகாலம் விளையாடி வரும் வீரர்களுக்கு அன்கேப்டு அந்தஸ்தை வழங்குவதற்கு மற்ற ஐபிஎல் அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    • முதல் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய பதிரனா 19 விக்கெட் எடுத்தார்.
    • சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு என்றார் பதிரனா.

    கொழும்பு:

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியும், ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரனா இடம்பெற்றுள்ளார்.

    பதிரனா 2022-ம் ஆண்டில் அறிமுகமான முதல் ஐ.பி.எல். தொடரில் சிஎஸ்கே அணிக்காக 19 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார்.

    இந்நிலையில், இலங்கை பந்துவீச்சாளர் பதிரனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    என் 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு. சி.எஸ்.கே. அணிக்காக விளையாடும் வரை பலருக்கு என்னை தெரியாது. ஓய்வறையில் டோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.

    நான் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே. அணியில் இருப்பேனா என தெரியாது. ஆனால் 2025 ஐ.பி.எல். தொடரை சி.எஸ்.கே. அணி நிச்சயம் வெல்லும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி அணிக்கு அதிக ரன்கள் அடித்தவராக ரிஷப் பண்ட் உள்ளார்.
    • சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனத் தகவல்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும், அதிக ரன்கள் அடித்தவராகவும் ரிஷப் பண்ட் உள்ளார்.

    2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்-ஐ விடுவிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டைரக்டர் சவுரவ் கங்குலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவாக உள்ளார். இருந்த போதிலும் டெல்லி அணி இதற்கு தயாராகி வருகிறது.

    ஒருவேளை டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ விடுவித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மெகா ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சிஎஸ்கே அணியில் இருந்து எம்.எஸ். டோனி ஓய்வு பெற இருக்கிறார். இதனால் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி அடுத்ததாக தயார் செய்ய வேண்டும். இதனால் ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.
    • இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

    நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை ஒட்டி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு வெளியானது.

    அந்த வீடியோவில், பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை தாண்டியுள்ளது.

    இந்நிலையில் அந்த பைக் காட்சியின் புகைப்படத்தில் விஜய்க்கு பதிலாக எம்.எஸ்.டோனி மற்றும் ருதுராஜ் முகத்தை எடிட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவை விஜய் ரசிகர்கள் மற்றும் டோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    ×