என் மலர்
நீங்கள் தேடியது "CSK"
- 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்தில் உள்ளது.
- 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.
இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி படைத்துள்ளது.
அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும், 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
- நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருப்பது வெளிப்படையாகப் பிடிக்கவில்லை.
- நாங்கள் கடைசி இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும்.
ஐபிஎல் 2025 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதன்பின் ஐந்து தொடர் தோல்வியை சந்தித்தது. பின்னர் லக்னோவை வீழ்த்தியது. அதன்பின் தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்தது. 12ஆவது போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. வருகிற 25ஆம் தேதி கடைசி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் நாங்கள் விளையாடிய விளையாட்டிற்கு கடைசி இடம் பொருத்தமானது என சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிளமிங் கூறுகையில் "நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசியாக இருப்பது வெளிப்படையாகப் பிடிக்கவில்லை. நாங்கள் சிறந்த ஆட்டத்தை மட்டுமே விரும்பினோம். சில வீரர்களின் ஆட்டங்களை ஒன்றாக இணைத்து வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். அடுத்த இரண்டு போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.
நாங்கள் கடைசி இடத்தில் இருப்பது பொருத்தமாக இருக்கும். நாங்கள் அந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம், எனவே அதிலிருந்து மறைந்து செல்ல முடியாது" என்றார்.
- உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.
ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.
இந்த வெற்றியின்மூலம் 2019ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக 180+ என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தியுள்ளது
கடந்த 6 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட முயன்று 12 முறை தோல்வியை தழுவிய நிலையில், நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.
- ரகானே 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நூர் அகமது 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். 2ஆவது ஓவரை கம்போஜ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் குர்பாஸ் 9 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. 8ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் சுனில் நரைன் (17 பந்தில் 26) ரன், ரகுவன்ஷி (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் விளையாடிய ரகானே 33 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரகானே ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் அந்த்ரே ரசல் ஜோடி சேர்ந்தார். அந்தரே ரசல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரசல் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். கொல்கத்தாவுக்கு 18ஆவது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. 19ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். மொத்தமாக 4 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 19 ஓவர் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க கொல்கத்தா 179 ரன்கள் குவித்துள்ளது. மணிஷ் பாண்டே 28 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்தில் உள்ளது.
- சிஎஸ்கே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வெங்கடேஷ் அய்யர் இடம் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும்.
இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவில்லை. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இன்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது.
கொல்கத்தா அணி நடப்பு தொடரில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகள் எடுத்து 6-வது இடம் வகிக்கிறது. முந்தைய 2 ஆட்டங்களில் டெல்லி, ராஜஸ்தானை அடுத்தடுத்து வீழ்த்தியதால் அவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்களும் முக்கியமானதாகும். மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டையும் வலுப்படுத்தி மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அந்த அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாயில் கதவு திறக்கும். ஒன்றில் தோற்றாலும் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே (327 ரன்கள்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல் நம்பிக்கை அளிக்கின்றனர். வெங்கடேஷ் அய்யர், ரமனுல்லா குர்பாசும் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் வலுவடையும். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரின் மிரட்டுகிறார்கள்.
சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக இந்த சீசனில் தகிடுதத்தம் போடுகிறது. 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (மும்பை, லக்னோவுக்கு எதிராக), 9 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டது.
கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்ட சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக 214 ரன் இலக்கை விரட்டுகையில் 211 ரன்களே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே (94 ரன்), ரவீந்திர ஜடேஜா (77 ரன்) அதிரடி காட்டி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். ஆனால் கடைசி ஓவரில் 15 ரன் தேவையாக இருந்த போது டோனி ஆட்டமிழந்தது தோல்விக்கு வழிவகுத்தது.
இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி செயல்பட்டு ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க சென்னை அணி தீவிரம் காட்டும். அத்துடன் கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 103 ரன்னில் அடங்கி 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முயற்சிக்கும். அதே நேரத்தில் 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி வரிந்து கட்டும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மற்றொரு வகையிலும் இந்த ஆட்டம் கவனத்தை ஈர்க்கிறது. டோனிக்கு பிடித்தமான மைதானங்களில் ஈடன் கார்டனும் ஒன்று. இங்கு தான் முதல் தர கிரிக்கெட்டில் தனது 'கன்னி' சதத்தை பதிவு செய்தார், இரண்டு டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 43 வயதான டோனி கொல்கத்தா ஈடன்கார்டனில் விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கலாம் என்று கருதப்படுவதால், மஞ்சள் படையினரின் படையெடுப்பும், ஆரவாரமும் மைதானத்தில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், ரஹானே (கேப்டன்), ரகுவன்ஷி, ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர், ரமன்தீப் சிங், மொயீன் அலி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
சென்னை: ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத் அல்லது உர்வில் பட்டேல், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷூல் கம்போஜ், பதிரானா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும்.
- பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.
10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரில் நேற்றுடன் 55 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதுவரை எந்த அணியும் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இன்னும் 15 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தன. தற்போது பிளே ஆப் சுற்றின் 4 இடங்களுக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன.
இதில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும். பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி ஆகிய அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆர்.சி.பி.க்கு இன்னும் 3 போட்டிகள் (லக்னோ, ஐதராபாத், கொல்கத்தா) உள்ளது. இதில் 2 ஆட்டம் சொந்த மண்ணில் நடக்கிறது. இதில் ஒன்றில் வென்றாலே தகுதி பெற்று விடும். முதல் 2 இடத்தை பிடிப்பதை அந்த அணியின் இலக்காக உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்: 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளுடன் விளையாட வேண்டும். 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும். ஒன்றில் வென்றால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து பிளே ஆப் வாய்ப்பு அமையும்.
மும்பை இந்தியன்ஸ்: 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் (குஜராத், பஞ்சாப், டெல்லி) எஞ்சியுள்ளது. இதில் 2 ஆட்டம் உள்ளூரில் இருக்கிறது. ரன் ரேட்டில் வலுவாக உள்ள அந்த அணி தொடர்ச்சியாக 6 போட்டி யில் வெற்றி பெற்றது. 2 வெற்றி பெற்றால் தகுதி பெற்றுவிடும். முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.
குஜராத் டைட்ன்ஸ்: குஜராத் அணிக்கு 4 ஆட்டம் உள்ளது. மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை அணிகளிடம் மோத வேண்டும். இதில் 2 போட்டிகள் உள்ளூ ரில் நடக்கிறது. 14 புள்ளிகளு டன் 4-வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக ரன்ரேட்டில் நன்றாக இருக்கிறது. 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெறும். முதல் 2 இடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.4 போட்டிகளில் தோற்றதால் வெளியேறும்.
டெல்லி கேபிடல்ஸ்: 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப், குஜராத், மும்பை அணிகளுடன் மோத வேண்டும். தொடக்கத்தில் முன்னேறி இருந்த அந்த அணிக்கு தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்துடன் தோற்க வேண்டிய நேற்றைய ஆட்டத்தில் அதிர்ஷ்ட வசமாக ஒரு புள்ளி கிடைத்தது. கடைசி 5 ஆட்டத்தில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றது. எஞ்சிய ஆட்டங்களில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அணி உள்ளது. 17 புள்ளிகள் வரை பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் இருக்கிறது. மூன்றிலும் வெற்றியை பெற்றால் மட்டுமே வாய்ப்பில் இருக்க இயலும். அதே சமயம் மற்ற முடிவுகள், ரன் ரேட்டை பொறுத்தே இருக்கிறது. முன்னறுவதற்கான வாய்ப்பு குறைவே.
லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்: 10 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ள பெங்களூரு குஜராத், ஐதராபாத் அணிகளுடன் மோத வேண்டும். 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் அந்த அணியின் ரன்ரேட் மோசமாக இருக்கிறது ஒரு ஆட்டத்தில் தோற்றால் வெளியேறி விடும்.
- சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
- உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடர் கிட்டதட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் இடத்தில் ஆர்சிபி அணியும் கடைசி இடத்தில் சென்னை அணியும் உள்ளது.
கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது.
சென்னை அணி அடுத்த போட்டியில் நாளை மறுநாள் கொல்கத்தா அணியுடன் மோதுகிறது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது .
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் வான்ஷ் பேடி ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். இடது கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக விலகியுள்ள வான்ஷ் பேடிக்கு பதிலாக உர்வில் படேலை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

உர்வில் படேல்- வான்ஷ் பேடி
உர்வில் படேல், சையத் முஷ்டாக் அலி டிராபியில் திரிபுராவுக்கு எதிராக வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியரின் வேகமான டி20 சதத்தை குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்டர் உர்வில் பதிவு செய்தார்.
அவர் 47 டி20 போட்டிகளில் விளையாடி 1162 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் இணைவார்.
- விராட் கோலி, பெத்தேல் அரைசதம் விளாசினர்.
- மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆர்சிபி அணியால் 200 ரன்களை தொட முடியவில்லை.
ஐபிஎல் தொடரின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆர்சிபி அணியின் ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இவரும் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.
பெத்தேல் 28 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 9.5 ஓவரில் 97 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் விளையாடிய விராட் கோலி 29 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 62 ரன்கள் அடித்தார். இவரது ஸ்கோரில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.
விராட் கோலி ஆட்டமிழக்கும்போது ஆர்சிபி 11.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆர்சிபி-யின் ஸ்கோர் வேகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது.
தேவ்தத் படிக்கல் ஒரு பக்கம் நிற்க மறுமுனையில் படிகல் 17 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது விக்கெட்டுக்கு படிதார் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். 18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
19ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். ஷெப்பர்டு சந்தித்தார். முதல் இரண்டு பந்துகளை சிக்சருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். அதோடு அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார். 5ஆவது பந்து நோ-பால் ஆகும். அதற்கு பதிலாக வீசிய பந்தில் ரன் கிடைக்கவில்லை. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, 4 சிக்ஸ் உடன் ஆர்சிபி-க்கு 33 ரன்கள் கிடைத்தது. இதனால் ஆர்சிபி 19 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்கள் அடிக்க ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்துள்ளது. ரொமாரியோ ஷெப்பர்டு 14 பந்தில் அரைசதம் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும்.
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
- சிஎஸ்கே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.
ஐபிஎல் தொடரின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி:-
ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, படிக்கல், படிதர், ஷெப்பர்டு, ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவி, லுங்கி நிகிடி, யாஷ் தயாள்.
சிஎஸ்கே அணி:-
ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ஜடேஜா, பிரேவிஸ், தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.
- 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
- பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி கடும் போராட்டத்திற்கு பிறகே தோற்றது.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் முதல் அணியாக லீக் சுற்றோடு வெளியேறியது.
10 போட்டியில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 8 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே. 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது வெற்றிக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.
பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி கடும் போராட்டத்திற்கு பிறகே தோற்றது. இதனால் இனி வரும் போட்டிகளில் சி.எஸ்.கே. வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்சை மீண்டும் வீழ்த்தி 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க ஜோடி அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்துள்ளது.
- சிஎஸ்கே 5 போட்டிகளில் கடைசி 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடி கடைசி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் எதிரணி தொடக்க வீரர்கள் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அடித்த 46 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். ஒரு அணியின் தொடக்க ஜோடி கூட 50 ரன்களை தாண்டவில்லை.
இதில் சென்னை அணி மிகவும் மோசம். இன்றைய தொடக்க ஜோடியான ரஷீத்- மாத்ரா ஜேதடி 21 ரன்கள் அடித்தது. 6 இன்னிங்சில் இதுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.