என் மலர்
நீங்கள் தேடியது "CSK"
- சில நாட்களுக்கு முன்னதாக டோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கோல்ஃப் விளையாடுவதைக் காண முடிந்தது.
- ஆட்டோகிராப் போட்ட டோனி ரசிகர் கையில் இருந்த சாக்லெட்டை வாங்கினார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி. இவர் சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் காணச் சென்றுள்ளார். நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையேயான ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தை டோனி நேரில் பார்த்து ரசித்தார். இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலானது.
டோனி ரசிகர்களிடம் ஜாலியாக பேசுவது விளையாடுவது போன்று இருப்பதால் அவர் தொடர்பான வீடியோ அதிக அளவில் வைரலாகும்.
இந்நிலையில் தற்போது அது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டோனி ஒரு ரசிகர்கருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அப்போது ஆட்டோகிராப் போட்ட டோனி ரசிகர் கையில் இருந்த சாக்லெட்டை வாங்கினார். இது எனக்கு தானே எடுத்து வந்தாய் என வேடிக்கையாக பேசினார். உடனே அவரும் சாக்லேட்டை கொடுத்து சிரித்து கொண்டே நகர்ந்தார்.
முன்னதாக டோனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கோல்ஃப் விளையாடுவதைக் காண முடிந்தது. இருவரின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.
2022-ம் ஆண்டு முதன் முறையாக குஜராத அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 16-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் குஜராத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.
இதன்மூலம் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதனை சிஎஸ்கே வீரர்கள் டோனிக்கு அர்பணிப்பதாக தெரிவித்தனர். இந்த போட்டி முடிந்த பிறகு டோனி குறித்து சில சுவாரஸ்மான வீடியோக்கள் அவ்வபோது வைரலாகி வந்தது.
இந்நிலையில் 5-வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில், ராஞ்சியில் உள்ள JSCA ஜிம்மில், தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.
- ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடிய வீரர்கள் சிலர் தான். அந்த வகையில் பிராவோ, ஹர்பஜன் சிங், அம்பாதி ராயுடு உள்ளிட்டோர் மும்பை அணியில் இருந்து வந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள்.
நடந்து முடிந்த ஐபிஎல் கோப்பையையே கேப்டன் டோனி, ராயுடுவை அழைத்து சென்று வாங்கினார். இதன் பின் ஓய்வை அறிவித்த அம்பாதி ராயுடு சர்வதேச அளவிலான லீக் தொடர்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். ஏற்கனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மற்றும் எஸ்ஏலீக் டி20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரிலும் விளையாட அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதிலும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2017ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் மும்பை அணி நிர்வாகத்துடன் அம்பாதி ராயுடு கைகோர்த்துள்ளார். அந்த அணியில் பொல்லார்ட், டுவைன் பிராவோ உள்ளிட்டோர் ஏற்கனவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும்.
- அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து ஐபிஎல் போட்டி மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5-வது முறை கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது டோனி என்டர்டெயின்மென்ட் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் படத்தை தமிழில் எடுத்தும் முடித்துள்ளார்.
அந்த வகையில் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து "எல் ஜி எம்" என்கிற படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் டோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவின் போது சென்னை அணியில் ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக யோகி பாபுவிற்கு சி.எஸ்.கே அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதா? என்று ஆங்கர் பாவனா கேள்வி எழுப்பினார்.
அதற்கு டோனி கூறியதாவது:-
யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும். அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான். யோகி பாபு சரியான முறையில் கால்சீட் கொடுக்க வேண்டும்.
எல்லா போட்டிகளிலும் அவர் விளையாடும் அளவிற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதோடு பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தால் நிர்வாகத்திடம் நான் பேசத் தயார்.
பந்துவீச்சாளர்கள் ஸ்டம்பை நோக்கி பந்து வீசமாட்டார்கள். பேட்ஸ்மேனை நோக்கியே பந்து வீசுவார்கள் அதையும் அவர் கையாள முடியுமா? அதற்கான திறன் இருக்கிறதா என்று யோகி பாபுவே முடிவு செய்யட்டும்.
என டோனி பதிலளித்து இருந்தார்.
- அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம்.
- அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நினைப்போம்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. சென்னை அணி கோப்பையை கைப்பற்ற தீபக் சாஹரும் ஒரு காரணமாக திகழ்ந்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் தீபக் சாஹரிடம் நிறைய முறை டோனி வம்பிழுப்பது போன்ற வீடியோக்களை காண முடிந்தது. இந்நிலையில் தீபக் சாஹரை போதை மருந்துடன் டோனி ஒப்பிட்டுள்ளார்.
தீபக் சாஹர் குறித்து டோனி கூறியதாவது:-
தீபக் சாஹர் ஒரு போதை மருந்து போன்றவர். அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம். அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
வயதுக்கேத்த மெச்சூரிட்டி அவரிடம் இல்லை. அதற்கு நீண்டகாலம் ஆகும். எனது மகள் 8 வயதில் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தை தீபக் 50 வயதில் பெற்று விடுவார். ஓயின் எப்படி நாளாக நாளாக சிறப்பு பெறும் என கூறுவார்களோ, அப்படித்தான் தீபக் சாஹரும். ஆனால் அந்த ஒயினை நான் குடிக்க முடியாது. தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல்வருடன் நடந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவில்லை.
- பொதுப்பணி சேவைக்கு செல்லும் முன் மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்கிறேன்.
திருமலை:
ஆந்திர மாநிலம் குண்டூரில் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு கூறியதாவது:-
முதல்வருடன் நடந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவில்லை. கிரிக்கெட் மற்றும் விளையாட்டு துறை குறித்து மட்டும் ஆலோசிக்கப்பட்டது.
எனது அரசியல் பயணம் விரைவில் இருக்கும். அதற்கு முன்பு மக்கள் மனநிலை அறிந்து, என்னால் என்ன செய்ய முடியும் என்று முடிவு செய்த பிறகே அரசியலுக்கு வருவேன்.
பொதுப்பணி சேவைக்கு செல்லும் முன் மக்களின் மனநிலையை அறிய தற்போது கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்கிறேன்.
இந்நிலையில், நான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவது உறுதி என்ற பிரசாரம் பெரிய அளவில் நடந்து வருகிறது.
அடுத்த தேர்தலில் எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் 2 அல்லது 3 மாதங்களில் எனது அரசியல் களம் நுழைவு குறித்த செயல் திட்டத்தை அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன்.
- ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று மும்பையின் சாதனையை சமன் செய்தது.
சி.எஸ்.கே. கோப்பையை வெல்ல ஜடேஜா முக்கிய பங்கு வகித்தார். அவர் கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்தார்.
15-வது ஐ.பி.எல். சீச னில் ஜடேஜா கேப்டனாக இருக்க டோனி தானாகவே வழிவிட்டார். நடுவில் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். இதுதொடர்பாக ஜடேஜாவுக்கும், சி.எஸ்.கே. நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த சீசனில் டோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் டோனிக்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோஷமிட்டதால் அவர் வருத்தம் அடைந்தார். டுவிட்டர் பக்கத்தில் இதை அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்து உள்ளார். டோனி மீது ஜடேஜா எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜடேஜாவை பொறுத்தவரை அவர் மிக சிறப்பாக பந்துவீசினார். பேட்டிங்கில் முன்னனி பேட்ஸ்மேன்கள் விளையாடி முடிக்கும்போது அவருக்கு குறைந்த பந்துகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருந்தது.
ஜடேஜாவுக்கு அடுத்து டோனி வருவார் என்று அவருக்கு தெரியும். ரசிகர்கள் டோனி மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகை வைத்து இருக்கலாம். இது ஜடேஜாவை புண்படுத்தி இருக்கலாம். இதுகுறித்து அவர் டுவிட் செய்து இருந்தாலும் கூட எங்களிடம் எதையும் புகாராக தெரிவிக்கவில்லை.
டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன். வழக்கமான விஷயங்கள் தான் பேசினோம். தனிப்பட்ட முறையில் அங்கு எதுவும் பேசவில்லை.
ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். ஐ.பி.எல். கோப்பை வெற்றியை டோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறியதில் இருந்தே நாம் இதை புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பேஸ்புக் தளத்தில் டாப் 5 விளையாட்டுகளில் ஒரே ஒரு விளையாட்டு (கிரிக்கெட்) அணியாக சிஎஸ்கே இடம் பெற்றுள்ளது.
- சமூக ஊடகங்களில் சிறந்த 10 பிரபலமான விளையாட்டு அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் சிறந்த 10 பிரபலமான விளையாட்டு அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமான கால்பந்து கிளப்புகளை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன.
பேஸ்புக் தளத்தில் டாப் 5 விளையாட்டுகளில் ஒரே ஒரு விளையாட்டு (கிரிக்கெட்) அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் பெற்றுள்ளது.
கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் (31,6 மில்லியன்) நம்பர் 1 விளையாட்டு அணியாக உள்ளது. கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (30,2 மில்லியன்) இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து கால்பந்து அணிகளான மான்செஸ்டர் சிட்டி (27,9 மில்லியன்), பார்சிலோனா (24,2 மில்லியன்), லிவர்பூல் (14,9 மில்லியன்) ஆகிய அணிகள் உள்ளன.
இதேபோல இன்ஸ்டாகிராமில் அனைத்து விளையாட்டு அணிகளிலும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அதிக பாலோவர்களை கொண்ட அணிகளாக உள்ளது. முதல் இடத்தில் ஆர்சிபி (285 மில்லியன்), 2-வது இடத்தில் சிஎஸ்கே (276 மில்லியன்), 3, 4, 5 ஆகிய இடங்கள் முறையே ரியல் மாட்ரிட் (259 மில்லியன்) மும்பை இந்தியன்ஸ் (196 மில்லியன்), பார்சிலோனா (162 மில்லியன்) பாலோவர்களை கொண்டுள்ளது.
உலக அளவில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆர்சிபி முதல் இடத்திலும் சிஎஸ்கே 2-வது இடத்திலும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.
- தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை.
- ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது என சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர் கான்வே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை வீரர் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி இருக்க இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது.
தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
- இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜூன் 8-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜூன் 8-ம் தேதி நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த இரண்டு ஐபிஎல் இளம் வீரர்களை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலரான துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது பள்ளி தோழி நாபா கட்டம்வார் என்பவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார். இவர்களது திருமணம் மும்பையில் ஜூன் 12-ம் தேதி நடைபெற்றுள்ளது.
திருமண நிகழ்வின் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த தேஷ்பாண்டே, "எனது பள்ளி கால க்ரஷாக இருந்தவர் வருங்கால மனைவியாக புரொமோட் ஆகியுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார். இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

28 வயதாகும் துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் 2022 சீசனில் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியினரால் வாங்கப்பட்டார். அந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
இதைத்தொடர்ந்து நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலராக ஜொலித்த தேஷ்பாண்டே அனைத்து போட்டிகளிலும் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் சிஎஸ்கே அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்துள்ளார்.