search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joe Root"

    • கேன் வில்லியம்சனை விட ஏழு புள்ளிகள் குறைவாக உள்ளார் ஜோ ரூட்.
    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 2-வது இன்னிங்சில் சதம் விளாசினார். மேலும், அந்த அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக்கும் சதம் அடித்தார்.

    இதனால் இருவரும் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஜோ ரூட் 12 ரேட்டிங் புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் நீடிக்கிறார். கேன் வில்லியம்சன் ஏழு புள்ளிகள் முன்னிலையுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    நாளை மறுதினம் தொடங்கும் 3-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடினால் ஜோ ரூட் முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    தற்போது கேன் வில்லியம்சன் 859 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 852 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஹாரி ப்ரூக் 771 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தில் உள்ளார்.

    பாபர் அசாம் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இந்தியாவின் ரோகித் சர்மா 7-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 20-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார்.
    • அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் விரும்புவேன்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 241 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதனால் 2- 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை இங்கிலாந்து வென்றுள்ளது.

    இந்த வெற்றிக்கு இங்கிலாந்தின் ஜோ ரூட் பேட்டிங்கில் 14, 122 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினார். இதையும் சேர்த்து அவர் 142 டெஸ்ட் போட்டிகளில் 11940* ரன்கள் குவித்துள்ளார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சந்தர்பாலை (11867) முந்தியுள்ள அவர் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்நிலையில் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைப்பார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறியவதாவது:-


    இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார். அப்படியே சச்சின் டெண்டுல்கரையும் அவர் முந்தப்போவது ஸ்பெஷலாக இருக்கும். பேட்டிங்கில் தற்போதைய இங்கிலாந்து அணி கடந்த காலத்தை போல் பொறுப்பற்றவர்களாக தெரியவில்லை. அவர்கள் விரைவாக ஸ்கோர் செய்கின்றனர்.

    அவர்கள் ஈகோவை எடுத்துக் கொள்வதாகவும் தெரியவில்லை. அவர்கள் நன்றாக விளையாடுகின்றனர். அதற்கு ரூட் பாறையைப் போல் நின்று பேட்டிங்கில் முக்கிய பங்காற்றுகிறார். அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் விரும்புவேன்.

    என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    ஜாம்பவான் சச்சின் 24 வருட டெஸ்ட் கிரிக்கெட் 200 போட்டிகளில் 15921 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரூட் 32-வது சதத்தைப் பதிவுசெய்தார்.
    • இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 136 ரன்களை ரூட் சேர்த்துள்ளார்.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒல்லி போப், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 416 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது கேவம் ஹாட்ஜின் சதத்தின் மூலமும் அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா ஆகியோரது அரைசதத்தின் மூலமாக முதல் இன்னிங்சில் 457 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 425 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தனது 32-வது சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன், ஸ்டிவ் ஸ்மித் ஆகியோரது சத சாதனையை சமன்செய்ததுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய 11-வது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 136 ரன்களை ரூட் சேர்த்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னே, வெஸ்ட் இண்டீஸின் சந்தர்பால் ஆகியோரது வாழ்நாள் சாதனையை முறியடித்து 8-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி இதுவரை 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 32 சதங்கள் மற்றும் 62 அரைசதங்கள் என 11,940 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

    • 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 425 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஹாரி புரூக், ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கவெம் ஹாட்ஜ் சதமடித்து 120 ரன்னில் அவுட் ஆனார். ஜோஷ்வா டா சில்வா 82 ரன்னும், அலிக் அத்தானாஸ் 82 ரன்னும், பிராத்வைட் 48 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 76 ரன்னும், ஒல்லி போப் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஹாரி புருக் சதமடித்து 109 ரன்னும், ஜோ ரூட் சதமடித்து 122 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 425 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீலஸ் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது.
    • ஜோ ரூட் மொத்தம் 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,817 ரன்கள் குவித்துள்ளார்.

    நாட்டிங்காம்:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளார். இங்கிலாந்து வீரரான அலெஸ்டர் குக் 5-வது இடத்தில் உள்ளார்.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து வருகிறது. ஒல்லி போப் சதமடித்து 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் ஜோ ரூ 14 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட், இலங்கை வீரர் ஜெயவர்தனேவை முந்தினார்.

    ஜோ ரூட் மொத்தம் 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,817 ரன்கள் குவித்துள்ளார். இதில் 31 சதங்கள் அடங்கும்.

    • இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கோலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் திகழ்கிறார்கள்.
    • அம்ப்ரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கர்ட்லி அம்ப்ரோஸ். 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அம்ப்ரோஸ் பந்து வீசுவதற்கு ஓடி வந்தால் பேட்ஸ்மேன்கள் தானாகவே நடுங்குவார்கள். இவர் சச்சின், ஸ்டீவ் வாக் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கூட திணற வைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஸ்பெல்லில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் சாய்த்ததை யாராலும் மறக்க முடியாது. 1990-களில் கொடிகட்டி பறந்தார். தற்போது டி20, லீக் போட்டிகள் கிரிக்கெட் விரிவடைந்துள்ளது. மாடர்ன் கிரிக்கெட்டாகி விட்டது.

    இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோருக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்ப்ரோஸ் கூறுகையில் "நான் விளையாடும்போது சவால்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அணியிலும் சில சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தனர். புகழ் பெற்றவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். என்னை பொறுத்தவரையில், நான் விளையாடும்போது என்னிடம் இருந்து சிறந்த பந்து வீச்சை வெளியில் கொண்டு வர உதவினார்கள்.

    கடைநிலை பேட்ஸ்மேன்களை விட அவர்களை அவுட்டாக்குவது எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.

    தற்போதைய வீரர்கள் பற்றி பேசும்போது, விராட் கோலி, ரூட், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ஆனால், என்னுடைய காலத்தில் சில சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன்" என்றார்.

    அம்ப்ரோஸ் 1988 முதல் 2000 வரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
    • டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார்.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
    • 4-வது டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302 ரன்கள் குவித்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்களில் ரூட் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக அவர் 10 சதங்களை விளாசியுள்ளார்.

    இந்திய அணிக்கு எதிராக அதிக விளாசி வீரர்களில் 2 முதல் 5 இடங்கள் முறையே ஸ்டீவ் ஸ்மித் (9 சதம்), கேரி சோபர்ஸ் (8 சதம்), வில் ரிச்சார்ட் (8 சதம்), ரிக்கி பாண்டிங் (8 சதம்) ஆகியோர் உள்ளார்.

    • இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 6-வது விக்கெட்டுக்கு ரூட்- போக்ஸ் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் களம் இறங்கினர். டக்கெட் 11 ரன்கள் எடுத்த போது ஆகாஷ் தீப் பந்து வீச்சில ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார்.

    இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமலும் அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்களிலும் ஆகாஷ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து கெளவுரமான ஸ்கோரை எட்டியது. சிறப்பாக ஆடிய போக்ஸ் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்ட்லி 13 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    இதனை தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் ராபின்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் அவ்வபோது பவுண்டரி சிக்சர்களை படைக்கவிட்டார்.

    இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.

    ஐதராபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். ஜோ ரூட் இதுவரை 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2,535 ரன்னும், சுனில் கவாஸ்கர் 2,483 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • 17-வது ஐ.பி.எல். தொடர் 2024, மார்ச் 23-ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டது. 17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்கு முன்னதாக இன்றுக்குள் இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

    மேலும் டிரேடிங் முறையில் வீரர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (ரூ.15 கோடி), மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் ஆவேஷ் கான் (ரூ.10 கோடி), ராஜஸ்தான் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேவ்தத் படிக்கல் (ரூ.7.75 கோடி) லக்னோ அணிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சபாஷ் அகமது ரூ.2.4 கோடிக்கு ஐதராபாத் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார்.

    முன்னாள் கேப்டனான அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில்தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஜோ ரூட்டின் இந்த முடிவை மரியாதையுடன் வரவேற்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும் 2-வது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆவார். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோ ரூட் இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார்.
    • டெஸ்டில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் (19 முறை) சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும் எடுத்தன.

    இதனால் 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3ம் நாள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

    இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (18 முறை), பிரையன் லாரா (18), ரிக்கி பாண்டிங் (17), அலெஸ்டர் குக் : 17 முறை

    ×