என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joe Root"

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
    • ஹேடனின் மகள், எங்கள் கண்கள் தப்பித்தது என பதிவிட்டார்.

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்றுநடந்தது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்து. தொடர்ந்து 3ம் நாள் முடிவில் நியூசிலாந்து 417/4 என்ற அளவில் உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்தார்.

    முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.

    இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு தற்போது வர்ணனையாளராக உள்ள ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி எக்ஸ்-இல் பகிர்ந்த வீடியோவில், ஹேடன் நிம்மதியை வெளிப்படுத்தினார்.

    ரூட்டின் முயற்சியைப் பாராட்டிய அவர், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

    முன்னதாக ஹேடனின் மகள், "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க வீரரான டக்கெட் மற்றும் அடுத்து வந்த ஒலி போப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

    ஜாக் கிராலி - ரூட் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கிராலி 76 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ப்ரூக் அதிரடியாக விளையாட முயற்சித்து 31 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (19) தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 0, வில் ஜக்ஸ் 19 அட்கின்சன் 4 என வெளியேறினர். இதனால் ரூட் சதம் அடிப்பாரா இல்லையா என்பது கேள்வி குறியானது. அந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை ரூட் பதிவு செய்தார்.

    இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூட் - ஆர்ச்சர் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நாலாபுறமும் சிதரடித்தனர். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோரூட் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
    • ஆஸ்திரேலியாவில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

    இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்துள்ளார்.

    முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.

    இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடல் போன்ற மஞ்சள் படை தோனியின் பெயரை உச்சரிக்கும்.
    • எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக் கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று மாலை வெளியிட்டது.

    அவ்வ்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் சென்னை மைதானத்தில் தோனி நுழைந்தால் மைதானமே அதிரும் என்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    நேர்காணல் ஒன்றில் பேசிய ஜோ ரூட், "ஐபிஎல் போட்டியின் போது, சென்னையில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வரும்போது, மைதானம் குலுங்குவது போலவும், அதிர்வது போலவும் உணர்வீர்கள். அரங்கமே அதிர்வுறும். கடல் போன்ற மஞ்சள் படை அவரது பெயரை உச்சரிக்கும். எதிரணி வீரர்கள் மீது அவர் ஏற்படுத்தும் தாக்கம் நம்பமுடியாதது. என்ன ஒரு அனுபவம் அது" என்று தெரிவித்தார்.

    • ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதுக்கு, சுப்மன் கில்- ஜோ ரூட், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
    • இந்த விருதை இதுவரை 5 இந்தியர்கள் வென்றுள்ளனர்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் ஐசிசி ஆஸ்கார்கள் வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. மிக முக்கியமான விருதுகளான இந்த விழா இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளன. இதில் மிகவும் புகழ்பெற்ற சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் டிராஃபி (Sir Garfield Sobers Trophy) என்ற ஐசிசி ஆண்கள் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதுக்கு, இந்தியாவின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் பேட்டர் ஜோ ரூட், ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

    இந்த விருது, ஒரு ஆண்டில் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படுகிறது.

    இந்த விருதை இதுவரை 5 இந்தியர்கள் வென்றுள்ளனர். அதில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி (இருமுறை), பும்ரா ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர். சுப்மன் கில் வென்றால், 6-வது இந்திய வீரராவார்.

    இந்திய அணியின் தலைவராக, 2025-ல் அனைத்து வடிவங்களிலும் அசாதாரணமான பேட்டிங் செயல்திறனை காட்டியுள்ளார். குறிப்பாக ஒருநாள் தொடர்களில் அதிக ரன்கள் அடித்து, அணியை வழிநடத்தியது அவரது பலம். அவர் இந்த விருதுக்கு இந்தியர்களில் முதல் தேர்வாக உள்ளார்.

    இங்கிலாந்தின் மூத்த பேட்ஸ்மேனாக ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் (குறிப்பாக ஆஷஸ் தொடர்) சதங்களைத் தொடர்ந்து அடித்து, அணியின் முதுகெலும்பாக இருந்தார். அவரது நிலையான செயல்திறன் அவரை இரண்டாவது முன்னிலை வீரராக்குகிறது. ஆஷஸ் தொடரில் மேலும் ரன்கள் சேர்த்தால், அவரது வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    தற்போதைய நிலவரப்படி, சுப்மன் கில் இந்த விருதை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவரது அணி தலைமைப் பொறுப்பும், பல்வேறு வடிவங்களில் சமநிலை காட்டியதும் காரணம். ஜோ ரூட், டெஸ்ட் அளவில் சிறப்பாக இருந்தாலும், ஒருநாள், டி20-யில் குறைந்த பங்களிப்பு அவருக்கு சவாலாக இருக்கும்.

    விருது வழங்கல் விழா, 2025 டிசம்பர் அல்லது 2026 ஜனவரியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.
    • இந்த முறை ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் மேத்யூ ஹைடன் நிர்வாணமாக நடப்பதாக கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 39 சதங்கள் அடித்த போதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

    இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    அவரது கருத்து வைரலானதை தொடர்ந்து, ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
    • ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

    சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதுடன், பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.

    அவர் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் இதுநாள் வரையிலும் சதமடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டின் அதிகபட்ச ஸ்கோர் 89 ரன்களாகும்.

    இந்நிலையில் இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதுதவிர, பந்துவீச்சில் அவர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை ஜோ ரூட் ஒருநாள் நிச்சயம் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜோ ரூட்டின் டெஸ்ட் சாதனைகள் குறித்து முதல்முறையாக சச்சின் மனம் திறந்துள்ளார்.

    ரெடிட்டில் நடந்த Ask Me Anything அமர்வின் போது, சச்சினிடம், "ஜோ ரூட் பற்றிய உங்கள் முதல் அபிப்ராயம் என்ன? அவர் இப்போது 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்துள்ளார், உங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் அவர் உங்களுக்கு எதிராக தான் தனது முதல் போட்டியை விளையாடினார்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த சச்சின், "டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்களைக் கடந்தது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அவர் இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டு நாக்பூரில் அவரது முதல் டெஸ்டின் போது தான் நான் அவரை முதன்முறையாகப் பார்த்தேன். அப்போதே எனது அணியினரிடம் அவர் இங்கிலாந்தின் எதிர்கால கேப்டனாக மாறுவார் என்று கூறினேன். அவர் விக்கெட்டை மதிப்பிடும் விதமும், அவர் விளையாடிய விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒரு பெரிய வீரராக வருவார் என்று அந்த தருணத்திலேயே எனக்குத் தெரிந்தது" என்று தெரிவித்தார்.

    ஜோ ரூட்டை சச்சின்பாராட்டுவது இது முதல் முறையல்ல. 2021-ல் இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது, லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பேட்டிங் சரிவை சந்தித்தது. அப்போது வர்ணனை செய்த சச்சின், 'இந்த இங்கிலாந்து அணியை தனி ஆளாகத் தாங்கிப் பிடிக்கும் திறமை ஜோ ரூட்டிடம் மட்டுமே உள்ளது' என்று குறிப்பிட்டார். அவரது திறமை மீது சச்சின் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.

    சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜோரூட் 3 சதங்களுடன் 537 ரன்கள் குவித்து தனது அசாத்தியமான பேட்டிங் நிலையை தொடர்ந்தார். அவரது அடுத்த பெரிய சவால் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடராகும். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் சதம்கூட அடிக்கவில்லை என்ற குறையை இந்த முறை அவர் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் முதலிடம்.
    • இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்தார்.

    லண்டன்:

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (200 டெஸ்–டில் 15,921 ரன்) முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,378 ரன் பின்தங்கியுள்ள இங்கிலாந்தின் ஜோ ரூட் இதுவரை 158 டெஸ்டுகளில் விளையாடி 39 சதம் உள்பட 13,543 ரன்கள் சேர்த்துள்ளார்.

    இந்நிலையில், ஜோ ரூட், தெண்டுல்கரை சீக்கிரம் முந்தி விடுவார் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ரூட், தெண்டுல்கரின் சாதனையை நிச்சயம் முறியடிப்பது மட்டுமின்றி, அதையும் தாண்டி நிறைய ரன்கள் குவிப்பார். இப்போது அவருக்கு 34 வயதாகிறது. எப்படியும் இன்னும் 6 ஆண்டு விளையாடுவார். அனேகமாக மேலும் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரன்கள் எடுப்பார். 40 வயது வரை ஜோ ரூட் விளையாடும் போது டெஸ்டில் 18 ஆயிரம் ரன்கள் எடுத்து இருப்பார் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நம்மை நினைக்க வைப்பவர்.
    • இந்திய அணிக்காக தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து விளையாடுகிறார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாள் இன்று நடக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவை. இந்திய அணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் முகமது சிராஜ் போர் வீரரைப் போன்றவர் என இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முகமது சிராஜ் போர் வீரரைப் போன்றவர். அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நம்மை நினைக்க வைப்பவர். இந்திய அணிக்காக தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து விளையாடுகிறார். சில சமயங்களில் போலியான கோவத்தை வெளிப்படுத்துவார்.

    ஆனால், அதைப் பார்க்கும்போதே போலி என நமக்குத் தெரிந்துவிடும். உண்மையிலேயே அவர் நல்ல மனிதர். மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவருக்கு எதிராக விளையாடுவதை நான் மிகவும் விரும்புவேன்.

    என கூறினார்.

    • நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் 3 விக்கெட்டை 106 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர்.
    • ஜோ ரூட்-ஹேரி புரூக் ஜோடி ரன்களை குவித்து ஆட்டத்தை மாற்றி விட்டது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்னும் , இங்கிலாந்து 247 ரன்னும் எடுத்தன. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் 396 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 374 ரன் இலக்காக இருந்தது. 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை விளை யாடியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்து இருந்தது.

    ஹேரி புரூக் ( 111), ஜோ ரூட் (105) ஆகியோர் சதம் அடித்தனர். டக்கெட் 54 ரன் எடுத்தார். ஜேமி சுமித் 2 ரன்னுடனும் , ஓவர்டன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட் டும், ஆகாஷ் தீப் 1 விக்கெட் டும் கைப்பற்றினார்கள்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 35 ரன்னே தேவை. கைவசம் 4 விக்கெட் உள்ளது.

    எஞ்சிய 4 விக்கெட்டை வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். இந்திய பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    80-வது ஓவருக்கு பிறகு இந்திய அணி புதிய பந்தை எடுக்கும். அதற்கு முன்பு இங்கிலாந்து 35 ரன்னை எடுக்க முயற்சிக்கும். அந்த அணி 76.2 ஓவர்கள் ஆடியுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. மேலும் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடிய போது பந்தும் வீசவில்லை.

    2-வது இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்ய வருவது சந்தேகம் என கருதப்பட்டது. ஆனால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்யலாம் என்று அந்த அணி வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, 'தேவைப் பட்டால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய தயார். அவரால் பேட்டிங் செய்ய முடியும்' என்றார்.

    நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தின் 3 விக்கெட்டை 106 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினர். 4-வது விக்கெட்டான ஜோ ரூட்-ஹேரி புரூக் ஜோடி ரன்களை குவித்து ஆட்டத்தை மாற்றி விட்டது.

    ஹேரி புரூக்கின் கேட்சை சிராஜ் தவற விட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கேட்ச் பிடித்து விட்டு அவர் எல்லை கோட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அப்போது புரூக் 19 ரன்னில் இருந்தார்.

    இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

    இந்தியா வெற்றி பெற்றால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடியும். இங்கிலாந்து வென்றால் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகள் தேவை

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    23 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.

    இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 35 ரன்கள் தேவை. இந்தியா வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்பதால் நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இப்போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அடுத்த 3 நாட்களும் அவர் விளையாடவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி நாள் ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஜோ ரூட், "தேவை ஏற்பட்டால் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்வார்" என்று தெரிவித்தார். 

    ×