என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joe Root"

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அந்த அணியின் கீசி கார்டி சதமத்து அசத்தினார்.

    கார்டிப்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 47.4 ஓவரில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீசி கார்டி சிறப்பாக அடி சதமடித்து 103 ரன்கள் எடுத்தார். ஷாய் ஹோப் 78 ரன்கள் எடுத்தார். பிராண்டன் கிங் 59 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் அதில் ரஷீத் 4 விக்கெட்டும், சாகிப் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடினார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட்-வில் ஜாக்ஸ் ஜோடி 143 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜாக்ஸ் 49 ரன்னில் அவுட்டானார்.

    தனியாகப் போராடிய ஜோ ரூட் சதமடித்து, 166 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 48.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    • ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது பேட்ஸ்மேன் ஆவார்.
    • ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை நிறைவு செய்த 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்டின் முதல் நாளில் 28-வது ரன்னை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.

    ஜோ ரூட் தனது 153-வது போட்டியில் (279 இன்னிங்ஸ்) 13,000 ரன்களை கடந்துள்ளார். 36 சதங்கள் மற்றும் 65 அரை சதங்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களை வேகமாக எட்டிய சாதனை படைத்துள்ளார் ஜோ ரூட். இவர் 153 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 159 போட்டிகளிலும், இந்தியாவின் ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 162 போட்டிகளிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளிலும் எடுத்துள்ளனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 போட்டிகளில் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் 13,378 ரன்னும், ஜாக் காலிஸ் 166 போட்டிகளில் 13,289 ரன்னும், ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • இந்தியா இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • ஜூன் 20ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது.

    2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக தொடங்குகிறது. இந்திய அணி வருகிற ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த தொடர் குறித்து ஜோ ரூட் கூறியதாவது:-

    எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆனால், இந்தியா போன்ற அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வரும்போது அப்படி சொல்வதற்கு ஏதும் இல்லை. இது நீண்ட் நாட்கள் கொண்ட தொடர். தொடர்ந்து நிலையான பார்ஃம் பெற்றிருப்பது அவசியம். நேரத்திற்கு நேரம் மீண்டும் மீண்டும் போட்டி வெற்றிக்கான செயல்பாட்டை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்தார்.

    ஜோ ரூட் இங்கிலாந்தின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். கடந்த வரும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் குக்கை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

    இவரது தலைமையில் இங்கலாந்து அணி 2017 முதல் 2022 வரை 64 போட்டிகளில் 27 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2021 அவருக்கு கடினமானதாக இருந்தது, 17 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை இழந்தது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
    • இதையடுத்து, ஜோஸ் பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை ஏற்க தனக்கு ஆர்வம் இல்லை என நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதையடுத்து, ஜோஸ் பட்லர் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணி கேப்டன் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளீர்களா என ஜோ ரூட்டிடம் கேட்கப்பட்டது.

    இங்கிலாந்தில் ஒரு கேப்டனாக எனது நேரத்தைச் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அதைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் எவரும் மிகவும் பெருமைப்படுவார்கள், சிறந்த வேலையைச் செய்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

    ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் இந்தியாவை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    நாங்கள் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். முதலில் நாங்கள் சொந்த மண்ணில் விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

    5 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா வருகிறது. போட்டியை வெல்லும் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • 56 ரன்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.
    • இளம் வயதில் 10,000 அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஏற்கனவே ரூட் முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது.

    அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 524 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

    ஜேக் கிராவ்லி 56 (45) ரன்களும் பென் டன்கட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்சருடன் 182 (178) ரன்களை விளாசினார். ஓலி போப் இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்ஸருடன் 205 (208) ரன்கள் விளாசினார். ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 (59) ரன்கள்

    அதைத்தொடர்ந்து 352 ரன்கள் பின் தங்கிய நிலமையில் களமிறங்கிய அயர்லாந்து 2-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 எடுத்திருந்தது.

    இப்போட்டியில் 56 ரன்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த 2-வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.

    அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2-வது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் முறியடித்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

    அந்த பட்டியலில் அலஸ்டர் குக் முதல் இடத்திலும் (31 வருடம் 357 நாட்கள்), ஜோ ரூட் 2-வது இடத்திலும் (32 வருடம் 154 நாட்கள்), 3, 4, 5 இடங்கள் முறையே, சச்சின் டெண்டுல்கர் (34 வருடம் 95 நாட்கள்), ரிக்கி பாண்டிங் (34 வருடம் 210 நாட்கள்), ஜேக் காலிஸ் (34 வருடம் 245 நாட்கள்) உள்ளனர்.

    இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 10,000 அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஏற்கனவே முறியடித்துள்ளார். அவருக்கு தற்போது 32 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (15921) அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை உடைக்க அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஜோ ரூட் இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார்.
    • டெஸ்டில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் (19 முறை) சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும் எடுத்தன.

    இதனால் 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3ம் நாள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

    இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (18 முறை), பிரையன் லாரா (18), ரிக்கி பாண்டிங் (17), அலெஸ்டர் குக் : 17 முறை

    • 17-வது ஐ.பி.எல். தொடர் 2024, மார்ச் 23-ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டது. 17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்கு முன்னதாக இன்றுக்குள் இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

    மேலும் டிரேடிங் முறையில் வீரர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (ரூ.15 கோடி), மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் ஆவேஷ் கான் (ரூ.10 கோடி), ராஜஸ்தான் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேவ்தத் படிக்கல் (ரூ.7.75 கோடி) லக்னோ அணிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சபாஷ் அகமது ரூ.2.4 கோடிக்கு ஐதராபாத் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார்.

    முன்னாள் கேப்டனான அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில்தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஜோ ரூட்டின் இந்த முடிவை மரியாதையுடன் வரவேற்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும் 2-வது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆவார். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.

    ஐதராபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். ஜோ ரூட் இதுவரை 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2,535 ரன்னும், சுனில் கவாஸ்கர் 2,483 ரன்னும் எடுத்துள்ளனர்.

    • இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 6-வது விக்கெட்டுக்கு ரூட்- போக்ஸ் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் களம் இறங்கினர். டக்கெட் 11 ரன்கள் எடுத்த போது ஆகாஷ் தீப் பந்து வீச்சில ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார்.

    இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமலும் அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்களிலும் ஆகாஷ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து கெளவுரமான ஸ்கோரை எட்டியது. சிறப்பாக ஆடிய போக்ஸ் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்ட்லி 13 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    இதனை தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் ராபின்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் அவ்வபோது பவுண்டரி சிக்சர்களை படைக்கவிட்டார்.

    இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
    • 4-வது டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302 ரன்கள் குவித்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்களில் ரூட் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக அவர் 10 சதங்களை விளாசியுள்ளார்.

    இந்திய அணிக்கு எதிராக அதிக விளாசி வீரர்களில் 2 முதல் 5 இடங்கள் முறையே ஸ்டீவ் ஸ்மித் (9 சதம்), கேரி சோபர்ஸ் (8 சதம்), வில் ரிச்சார்ட் (8 சதம்), ரிக்கி பாண்டிங் (8 சதம்) ஆகியோர் உள்ளார்.

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
    • டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார்.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கோலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் திகழ்கிறார்கள்.
    • அம்ப்ரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கர்ட்லி அம்ப்ரோஸ். 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அம்ப்ரோஸ் பந்து வீசுவதற்கு ஓடி வந்தால் பேட்ஸ்மேன்கள் தானாகவே நடுங்குவார்கள். இவர் சச்சின், ஸ்டீவ் வாக் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கூட திணற வைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஸ்பெல்லில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் சாய்த்ததை யாராலும் மறக்க முடியாது. 1990-களில் கொடிகட்டி பறந்தார். தற்போது டி20, லீக் போட்டிகள் கிரிக்கெட் விரிவடைந்துள்ளது. மாடர்ன் கிரிக்கெட்டாகி விட்டது.

    இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோருக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்ப்ரோஸ் கூறுகையில் "நான் விளையாடும்போது சவால்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அணியிலும் சில சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தனர். புகழ் பெற்றவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். என்னை பொறுத்தவரையில், நான் விளையாடும்போது என்னிடம் இருந்து சிறந்த பந்து வீச்சை வெளியில் கொண்டு வர உதவினார்கள்.

    கடைநிலை பேட்ஸ்மேன்களை விட அவர்களை அவுட்டாக்குவது எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.

    தற்போதைய வீரர்கள் பற்றி பேசும்போது, விராட் கோலி, ரூட், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ஆனால், என்னுடைய காலத்தில் சில சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன்" என்றார்.

    அம்ப்ரோஸ் 1988 முதல் 2000 வரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×