என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matthew Hayden"

    • இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
    • ஹேடனின் மகள், எங்கள் கண்கள் தப்பித்தது என பதிவிட்டார்.

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்றுநடந்தது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்து. தொடர்ந்து 3ம் நாள் முடிவில் நியூசிலாந்து 417/4 என்ற அளவில் உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

    இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்தார்.

    முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.

    இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு தற்போது வர்ணனையாளராக உள்ள ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி எக்ஸ்-இல் பகிர்ந்த வீடியோவில், ஹேடன் நிம்மதியை வெளிப்படுத்தினார்.

    ரூட்டின் முயற்சியைப் பாராட்டிய அவர், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

    முன்னதாக ஹேடனின் மகள், "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
    • ஆஸ்திரேலியாவில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

    இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து சாதித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சத்தத்தை ரூட் பதிவு செய்துள்ளார்.

    முன்னதாக ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் ஹைடன் தப்பித்தார்.

    இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • விராட், ரோகித் 2027 உலகக் கோப்பையை தங்களுடைய மனதில் வைத்திருப்பார்கள்.
    • விராட், ரோகித் இந்திய அணியில் இருப்பது தங்கத்தைப் போன்றது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் 3 ஒருநாள் போட்டி 5 போடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஒரு தொடரில் சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்குகிறது.

    கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அடுத்தடுத்த 2 கோப்பைகளை வென்று இந்தியா சாதனை படைத்தது.

    இதனால் 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது அவரால் 40 வயதில் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவது சந்தேகமாக மாறியுள்ளது.

    இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்பும் ரோகித் சர்மாவை இந்திய அணி கழற்றி விட்டதை நம்ப முடியவில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட், ரோகித் 2027 உலக கோப்பையை தங்களுடைய மனதில் வைத்திருப்பார்கள். உண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்பும் இந்தியா ரோகித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விடுவித்தது ஏனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    அதே சமயம் சுப்மன் கில் கேப்டனாக வளர்க்கப்பட வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நல்ல தலைவர் உருவாவதற்கு நேரம் எடுக்கும். விராட், ரோகித் இந்திய அணியில் இருப்பது தங்கத்தைப் போன்றது.

    ஏனெனில் அவர்கள் வீரர்களாக மட்டுமல்லாமல் அணியில் நல்ல ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். இது அவர்களுடைய கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக உங்களால் காலத்திற்கும் விளையாட முடியாது.

    என்று கூறினார். 

    • ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.
    • இந்த முறை ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் மேத்யூ ஹைடன் நிர்வாணமாக நடப்பதாக கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 39 சதங்கள் அடித்த போதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

    இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    அவரது கருத்து வைரலானதை தொடர்ந்து, ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 39 சதங்கள் விளாசியுள்ளார்.
    • ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை.

    இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 73 முறை மோதியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 34 போட்டிகளிலும், இங்கிலாந்து 32 போட்டிகளிலும் 7 போட்டிகள் டிராவில் முடிந்தது.

    சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதுடன், பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறார்.

    அவர் பல சாதனைகளை படைத்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் இதுநாள் வரையிலும் சதமடிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 9 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஜோ ரூட்டின் அதிகபட்ச ஸ்கோர் 89 ரன்களாகும்.

    இந்நிலையில் இந்த முறை ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இங்கிலாந்து அணிக்காக இதுவரை 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், அதில் 39 சதங்கள், 66 சதங்களை விளாசி 13,543 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதுதவிர, பந்துவீச்சில் அவர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும்.
    • இந்த இளைஞர்கள் குழு உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் குறித்து பெருமைப்படுவதாக அந்த அணியின் ஆலோசகர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் ட்விட்டரில் பதிவேற்றிய வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

    ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர்கள் தங்களால் இயன்றதை முயற்சித்தனர். அது கைதட்டலுக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரில் நாங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது, நீங்கள் காயப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அது வலிக்கிறது, ஆனால் உண்மை என்னவென்றால் நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

    உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தொடரில் 100% உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியதற்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி செல்லும் நேரத்தில், முடிவுகள் மிகவும் சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இளைஞர்கள் குழு உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • சரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எந்த நேரத்திலும் நான் உதவத் தயார்.
    • ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியையும், அறிவுரையையும் வழங்க தயாராக இருக்கிறேன்.

    பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான 4 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3 நாட்களுக்குள் சுருண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தையும் ஏறத்தாழ இந்தியா உறுதி செய்துள்ளது. முதல் 2 போட்டிகளும் முதல் 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சரிவில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எந்த நேரத்திலும் நான் உதவத் தயார். எப்போது என்னிடம் இதுபற்றி கேட்டாலும் சம்மதம் என்றுதான் கூறியுள்ளேன்.

    சிறந்த அறிவுரை வேண்டும் என்றால் முன்னாள் வீரர்களை கிரிக்கெட் நிர்வாகம் தனிமைப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய வீரர்களுக்குபயிற்சியையும், அறிவுரையையும் வழங்க நான் தயார். மேலும் இந்திய ஆடுகளங்களில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும் நான் அவர்களுக்கு பயிற்சி தருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.
    • தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல அதிரடி தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-

    இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார்.

    அவர் சமீபத்தில் டெஸ்ட்டில் 2 சதமும் ஒரு நாள் போட்டியில் 4 சதமும், 20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரு சதத்தையும் அடித்தார். தற்போது ஐ.பி.எல். போட்டியிலும் அபாரமாக ஆடி வருகிறார். அடுத்த 10 ஆண்டுகள் வரை அவர் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.
    • 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம்.

    டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது.

    எனவே பொதுவான அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடப் போகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறேன். ஒருவேளை இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.

    மேலும் 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம். அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 708 ரன்களை குவித்துள்ளார்.
    • ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்பட்டாரோ அதே ஃபார்மை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்ந்து வருகிறார்.

    17-வது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளது. அதன்பைன் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கொத்தா மற்றும் ஐதராபாத் அணிகளும், எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி முடிவின் போது புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, அதன்பின் அடுத்தடுத்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    குறிப்பாக அணியின் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 708 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் தனது சொந்த சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய சாதனை நிகழ்த்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி தனது இரண்டாவது சிறந்த ஐபிஎல் சீசனைக் கொண்டாடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஏனெனில் கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்பட்டாரோ அதே ஃபார்மை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்ந்து வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது அவர் இந்த விளையாட்டின் மீது வைத்துள்ள ஆர்வம், அர்பணிப்பு மற்றும் காதலை இது வெளிக்காட்டுகிறது.

    இவ்வாறு ஹைடன் கூறினார்.

    முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய கோலி, 973 ரன்களைக் குவித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும்.

    இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 2024 -25 பார்டர் -கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. அத்தொடரில் இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெற்றிகளை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இம்முறை என்ன தான் இந்தியா போராடினாலும் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கணித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் சொல்வேன். அதே சமயம் வெற்றிக்காக இந்திய அணி சவால் கொடுக்கும் என்றும் நான் சொல்வேன். தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக பதியப்பட்ட பிட்ச்கள் (ட்ராப் இன்) இருக்கின்றன. அது முந்தைய இயற்கையான பிட்ச்களை விட சவாலாக இருக்கும்.

    ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும். அங்கே 3, 5-வது போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கே வித்தியாசமான கலவையுடன் விளையாட நேரிடலாம். அப்படி மாறுபட்ட பிட்ச் சூழ்நிலைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் அதிக சாதகம் இருக்கும் என்று நான் கருதவில்லை.

    என ஹைடன் கூறினார். 

    ஹர்திக் பாண்டியாவை விட மார்கஸ் ஸ்டோனிஸ் சிறந்த ஆல் ரவுண்டர் என ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். #INDvAUS #MarcusStoinis #HardikPandya #MatthewHayden
    மும்பை:

    இந்தியா- ஆஸ்திரேலிய தொடர் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது:-



    இந்திய தொடக்க வீரர் தவானுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கும்மின்ஸ் நெருக்கடியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். யுசுவேந்திர சாஹால் மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

    ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் உலகின் சிறந்த ஆல் ரவுண்டராக மேம்பட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியாவை விட அவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #INDvAUS #MarcusStoinis #HardikPandya #MatthewHayden
    ×