என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashes series"

    • 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
    • 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்த டெஸ்டில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 1,454 ரன்கள் எடுத்தது. 1948-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் டெஸ்ட் ஒன்றில் மொத்தமாக எடுக்கப்பட்ட அதிக ரன்கள் இது தான்.

    இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 160 ரன்களும், 2-வது இன்னிங்சில் பெத்தேல் 154 ரன்களும் விளாசினர். ஒரு அணியில் இரு வீரர்கள் 150 ரன்களுக்கு மேல் எடுத்தும் அந்த அணி தோல்வியை தழுவுவது இது 8-வது நிகழ்வாகும்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்த தொடரில் 31 விக்கெட் மற்றும் 2 அரைசதம் உள்பட 156 ரன்களும் எடுத்தார். ஆஷஸ் தொடரில் 30-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு அரைசதமும் ஒரு வீரர் அடிப்பது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1985-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் இயான் போத்தம் இத்தகைய சாதனையை படைத்திருந்தார்.

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றார்.
    • ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 88. 2 ஓவரில் 342 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 160 ரன்கள் இலக்காக இருந்தது.

    168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடக்கை பந்துவீச்சாளர் என்ற ரங்கனா ஹெராத்தின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார்.

    93 டெஸ்ட் போட்டிகளில் ஹெராத் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில், ஸ்டார்க் 106 டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில வாசிம் அக்ரம் 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

    • ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • ஆஷஸ் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் வருகை தந்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்தது. 183 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 88. 2 ஓவரில் 342 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 160 ரன்கள் இலக்காக இருந்தது.

    168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே முதல் 3 டெஸ்டில் வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்தது. 4-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேர் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 879 பேர் வருகை தந்துள்ள நிலையில் அந்த வருகை சாதனையை இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் முறியடித்துள்ளது.

    • ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • இந்த தொடருடன் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஓய்வு பெற்றார்.

    5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த தொடரில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். அவரது கடைசி இன்னிங்சிலும் ஏமாற்றத்தை அளித்தார். அவர் இன்று 6 ரன்னில் அவுட் ஆனார்.

    39 வயதான கவாஜா 88 டெஸ்டில் 6229 ரன் எடுத்துள்ளார். சராசரி 42.95 ஆகும். 16 சதமும், 28 அரைசதமும் எடுத்துள்ளார். ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெற்ற 7-வது ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆவார். டான் பிராட்மேன், டேமியனை மார்ட்டின், ஜஸ்டின் லாங்கர், வார்னே, மெக்ராத், மைக்கேல் கிளார்க் ஆகியோரும் ஆஷஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெற்றனர்.

    • இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

    சிட்னி:

    ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 567 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    பின்னர் 183 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். மற்ற வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.119 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. சிறப்பாக விளையாடி வந்த பெத்தேல் 154 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

    168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. இந்த இலக்கை எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டை இழந்தது.

    தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 29 ரன்னிலும், வெதரால்டு 34 ரன்னிலும் ஜோஷ் டங் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள்.

    அடுத்து லபுஷேன் 37 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 12 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 121 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி-கேமரூன் கிரீன் ஜோடி அணிைய வெற்றிக்கு அழைத்து சென்றது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட்டும் தொடர் நாயகனாக ஸ்டார்க்கும் தேர்வு பெற்றனர். அத்துடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    • நடப்பு ஆஷஸ் தொடரில் இதுவரை 3 சதம் உள்பட 600 ரன்களை டிராவிஸ் ஹெட் குவித்துள்ளார்.
    • தொடரின் தொடக்கத்தில் நான் 3 சதங்கள் உள்பட 600 ரன்கள் குவிப்பேன் என்று நினைக்கவில்லை.

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 384 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 567 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக 163 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில் நடப்பு ஆஷஸ் தொடரில் இதுவரை 3 சதம் உள்பட 600 ரன்களை டிராவிஸ் ஹெட் குவித்துள்ளார். மேலும் ஆஷஸ் தொடர் ஒன்றில் 600 ரன்னுக்கு மேல் எடுத்த 9-வது தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எதிர்பார்த்ததை விட அனேகமாக 400 ரன்கள் அதிகம் எடுத்திருப்பதாக நினைக்கிறேன். மிடில் வரிசையில் பேட் செய்யும் எனக்கு இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காராக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் நான் நன்றாக பேட் செய்வதாக உணர்கிறேன். முடிந்த வரை தொடர்ந்து சீராக ரன் எடுக்க முயற்சிக்கிறேன். தொடரின் தொடக்கத்தில் நான் 3 சதங்கள் உள்பட 600 ரன்கள் குவிப்பேன் என்று நினைத்திருக்கமாட்டேன் என்பதில் சந்தேகமில்லை. பெரிய ஸ்கோர் குவித்தது மிகவும் திருப்தி அளிக்கிறது.

    என ஹெட் கூறினார். 

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 166 பந்துகளில் 163 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

    இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 166 பந்துகளில் 163 ரன்கள் குவித்து அவுட்டானார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.

    3 ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்களை குவித்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்மித் 129 ரன்களுடனும் வெப்ஸ்டர் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏற்கனவே கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

    • பென் ஸ்டோக்ஸை இந்திய வீரர் அஸ்வின் 13 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
    • நாதன் லயன் 10 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 160 ரன்களும், ஹாரி ப்ரூக் 84 ரன்கள் அடித்த போதிலும், மற்ற வீரர்கள் சொதப்பினர்.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 11 பந்துகளை சந்தித்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸை ஸ்டார்க் 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

    மேலும், பென் ஸ்டோக்ஸை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக இந்திய வீரர் அஸ்வின் 13 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். தற்போது ஸ்டார்க் 14 முறை ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்து அஸ்வின் சாதனையை முறியடித்துள்ளார்.

    நாதன் லயன் 10 முறையும், ஜடேஜா 8 முறையும் பென் ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.

    • ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட் ஆனார்
    • ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர். ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட்டாக நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

    • ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூதர்கள் நிகழ்ச்சீ நடந்து கொண்டிருந்தது.
    • கடற்கரையில் 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.

    அந்தக் கடற்கரையில் கடந்த மாதம் யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சிட்னி டெஸ்ட் போட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, முன்களப் பணியாளர்களுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

    தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து குண்டடிப்பட்ட அகமது அல் அகமதை நேரில் அழைத்து கவுரவிக்கப்பட்டார்.

    • இங்கிலாந்து அணி 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
    • ஜோ ரூட், ஹாரி ப்ரூக் அரைசதம் அடிக்க இங்கிலாந்து மேலும் விக்கெட்டுகளை இழக்கவில்லை.

    ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

    இங்கிலாந்து அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது, வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஜோ ரூட் 72 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், நேசர், போலண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிந்தது.
    • இந்த போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

    இந்த நிலையில், இரண்டே நாளில் இந்த போட்டி முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியும் 2 நாளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×