என் மலர்
நீங்கள் தேடியது "Ben stokes"
- நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் இவர் இந்த ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார்.
2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் இன்று அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில்:-
நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். ஒரு நம்பமுடியாத பயணத்தை நாங்கள் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்களது வெவ்வேறு விதமான திட்டமிடல் எல்லாம் 5 வாரத்துக்கு முன்பு இருந்து தொடங்கியது.
- இது போன்று விளையாடும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன்.
பர்மிங்காம்:
டெஸ்டில் 378 ரன்கள் இலக்கை விரட்டி பிடித்த பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், 'வீரர்கள் இது போன்று விளையாடும் போது எனது பணி எளிதாகி விடுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருந்து விட்டால் இத்தகைய இலக்கை அடைவது எளிது.
5 வாரங்களுக்கு முன்பு 378 ரன்கள் இலக்கு என்பது அச்சத்தை அளித்திருக்கும். ஆனால் இப்போது எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லா பெருமையும் பேர்ஸ்டோ, ஜோ ரூட்டையே சாரும். இங்கிலாந்து மண்ணில் எப்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். எங்களது வெவ்வேறு விதமான திட்டமிடல் எல்லாம் 5 வாரத்துக்கு முன்பு இருந்து தொடங்கியது.
டெஸ்ட் கிரிக்கெட் எப்படி விளையாடப்படுகிறது என்பதை மாற்றி எழுத முயற்சிக்கிறோம். இது போன்று விளையாடும் போது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன் ' என்றார். மேலும் அவர், 'எங்களது அதிரடியான அணுகுமுறையை கண்டு இனி 3-வது இன்னிங்சில் எதிரணியினர் பயப்படுவார்கள். அதாவது எவ்வளவு இலக்கு நிர்ணயித்தால் போதுமானதாக இருக்கும், நாங்கள் 4-வது இன்னிங்சில் எந்த மாதிரி ஆடுவோம் என்பதில் தெளிவு கிடைக்காமல் குழம்புவார்கள்' என்றும் குறிப்பிட்டார்.
- இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும்.
- கேஎல் ராகுல்-ரோகித் சர்மா உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.
இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தொடரை இழந்தது. 2 போட்டிகளில் டிரா ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியில் வெற்றி பெற்றது. இதே மன நிலையில் தான் இந்தியாவுடனான 5-வது டெஸ்ட்டில் விளையாடுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் என இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்திய அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
5-வது டெஸ்ட் போட்டியை கடந்த ஆண்டே முடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் என உணர்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இழப்பதற்கு ஏதும் இல்லை என்று தெரிந்தபிறகு பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவராக மாறி விடுவார்.
இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும். இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய போது புது பந்தில் கேஎல் ராகுல் - ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். தற்போது கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.
இங்கிலாந்து அணி இதற்கு முன்பு ஜோரூட் தலைமையில் 17 டெஸ்ட்டில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் தொடரில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
பென் ஸ்டோக்ஸின் சிறந்த விஷயம் என்னவென்றால் வீரர்கள் இங்கிலாந்துக்காக சிரித்த முகத்துடன் விளையாட வேண்டும் என்று அவர் விரும்புவார். பயப்பட ஒன்றுமில்லை. உங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுங்கள். இந்த வேலை செய்தால் அது அணிக்கு சிறந்ததாகும். ஆனால் எப்படி விளையாட வேண்டும் என்பதை எண்ணி பயப்பட வேண்டாம். கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு உங்களுக்கு இருந்தால் அது பெரிய விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது.
- இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
பர்மிங்காம்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 டெஸ்டுகளிலும் 250 ரன்களுக்கு மேலான இலக்கை தடாலடியாக ரன்மழை பொழிந்து எட்டிப்பிடித்தது. கொரோனா பிரச்சினையால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இதே போல் அதிரடி காட்டுவோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், 'உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. அடுத்து நாங்கள் மற்றொரு அணியை எதிர்கொண்டாலும் கூட அதே மனநிலையில் (ஆக்ரோஷமான ஆட்டம்) தான் விளையாடுவோம். அதில் மாற்றம் இருக்காது.
நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டுகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதை இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தற்போது இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் தீவிரமாக உள்ளனர். கடந்த ஆண்டு மனஅழுத்தம் காரணமாக இந்த தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஒதுங்கி இருந்தது நினைவு கூரத்தக்கது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பேர்ஸ்டோவ்-ஓவர்டேன் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒரு சிக்சர்கள் அடங்கும். இந்த சிக்சர்கள் மூலம் அவர் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் 3-வது இடத்தில் (100 சிக்சர்கள்) உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்கள்) சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் 176 போட்டிகளில் விளையாடி 107 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கில்கிறிஸ்ட் 100 சிக்சர்கள்களுடன் 2-வது இடத்திலும் பென் ஸ்டோக்ஸ் 100 சிக்சர்கள்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 8 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைப்பார்.
- உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.
- முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பென் ஸ்டோக்ஸ் தனிமைத்தப்படுத்தப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் நேற்று வலை பயிற்சியில் ஈடுப்பட்டனர். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைத்தப்படுத்தப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான். இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டு முதல் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஜனவரி 2021-க்குப் பிறகு முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவரது ஆல்ரவுண்டர் பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவால் பென் ஸ்டோக்ஸ் லெவலை எட்ட முடியும் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த லேன்சி குளுஸ்னர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குளுஸ்னர் கூறுகையில் ‘‘சர்வதேச அளவில் உள்ள ஆல்ரவுண்டர்களில், பென் ஸ்டோக்ஸ்தான் முன்னணியில் இருக்கிறார். சமீப காலமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் சிலர் வருகிறார்கள். சிலர் போகிறார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால் சிறந்த ஆல்ரவுண்டராக வருவார்’’ என்றார்.
இந்நிலையில் இலங்கை தொடருக்கான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மோர்கன், 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. ஜோஸ் பட்லர், 5. சாம் குர்ரான், 6. டாம் குர்ரான், 7. லியம் டவ்சன், 8. அலெக்ஸ் ஹேல்ஸ், 9. லியம் பிளங்கெட், 10. அடில் ரஷித், 11. ஜோ ரூட், 12. ஜேசன் ராய், 13. பென் ஸ்டோக்ஸ், 14. கிறிஸ் வோக்ஸ், 15. ஒலி ஸ்டோன், 16. மார்க் வுட்.
இதனால் பென் ஸ்டோக்ஸ் சில தொடர்களில் விளையாடாத நிலை ஏற்பட்டது. அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு வாலிபரை தாக்கியதில் சம்பந்தம் இல்லை என விடுவிக்கப்பட்டார். வாலிபர் தாக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த மாதம் பென் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றம் விடுவித்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தனி அதிகாரம் படைத்த ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரனை நடத்திய, இருவரும் கிரிக்கெட்டிற்கு இழுக்கு சேர்த்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து டிசம்பர் 5-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த இருக்கிறது.
இதற்கு இன்னும் ஒருவாரம் உள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்று டி20 போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஆட்டத்தில் துர்காம் அணி சசக்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அடுத்த டெஸ்டிற்கு தயாராக வேண்டியதால் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டடுள்ளது. ஆனால் லங்காஷைர் அணிக்காக ஜோஸ் பட்லர், ஜென்னிங்ஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
