search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ben stokes"

    • ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சனுக்கு உலகம் முழுவதும் இருந்து முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தனது சக அணி வீரர்களுடன் ஆண்டர்சன் நேரம் செலவிட்டார். அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மகளுக்கு ஆண்டர்சன் மிதமான வேகத்தில் பந்துவீசி விளையாடியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய பென் ஸ்டோக்ஸ் எனது மகள் பேட்டிங் செய்ய எனது மகன் பீல்டிங் செய்ய ஆண்டர்சன் பந்துவீசினார் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களும் 2-வது இன்னிங்சில் 136 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் முதல் இன்னிங்சில் 7 விக்கெடும் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோசுவா டா சில்வா- அல்சாரி ஜோசப் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஜோசுவா டா சில்வா 9 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அல்சாரி ஜோசப் 8 ரன்னிலும் சமர் ஜோசப் 3 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

    • 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    • இதில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஆறு ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். மேலும் ஆறு ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ் உள்ளார். அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8032 ரன்களும் 235 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் கல்லீஸ் உள்ளார். அவர் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13289 ரன்களும் 292 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    • எனது பந்து வீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்.
    • இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களை தியாகம் செய்கிறேன்.

    2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    நான் கடினமாக உழைத்து வருகிறேன். மேலும் எனது பந்து வீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன். இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களை தியாகம் செய்கிறேன்.

    சமீபத்திய இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், எனது முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பந்துவீச்சில் நான் எவ்வளவு பின்தங்கியிருந்தேன் என்பதை எடுத்துக்காட்டியது.

    கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டர்ஹாமிற்காக விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜோஸ் [பட்லர்], மோட்டி [மேத்யூ மோட்] மற்றும் அனைத்து அணியினருக்கும் எங்கள் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு எனது வாழ்த்துகள்.

    என தெரிவித்துள்ளார்.

    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
    • ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நான் இப்படி ஒரு பிட்சை பார்த்ததில்லை என ராஞ்சி மைதானம் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது. இந்த மைதானத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

    ஏனென்றால் பிட்சின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதற்கு முன் இந்தியாவில் எங்குமே நான் இப்படி ஒரு பிச்ட்சை பார்த்ததில்லை. ஏனெனில் ஓய்வறையில் இருந்து பார்த்த போது, இந்த பிட்சின் ஒரு பக்கம் அதிகளவிலான புற்களுடன் இருப்பது போன்றும், சற்று வெளியே வந்து பார்த்தால் சுழலுக்கு சாதகமானதாகவும் இருப்பது போன்று உள்ளது.

    என ஸ்டோக்ஸ் கூறினார்.

    • 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
    • விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளஇங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் நான்காம் நாளில் வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 399 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் கூட்டணி பொறுமையாக ரன்களை சேர்த்து வந்தது.

    ஸ்டோக்ஸ் மற்றும் ஃபோக்ஸ் ஜோடி இந்திய அணி வெற்றிக்கு எந்த நிலையிலும் பாதகமாக இருக்கும் என்ற இக்கட்டான நிலையில், பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்க முயன்ற போது தனது விக்கெட்டை ஷ்ரேயாஸ் அய்யரிடம் பறிக்கொடுத்தார். ரன்களுக்கு இடையில் வேகமாக ஓட வேண்டிய ஸ்டோக்ஸ் சற்றே வேகம் குறைவாக ஓடியது, அவர் பெவிலியன் திரும்ப காரணமாக அமைந்தது.

     


    இதைத் தொடர்ந்து தனது விக்கெட்டை வீழ்த்திய பிறகு, பென் ஸ்டோக்ஸ் செய்த செய்கையை இன்று ஷ்ரேயாஸ் அய்யர் அப்படியே செய்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ரன் எடுக்க முயன்ற போது வேகமாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்ற பந்தை வேகமாக ஸ்டம்ப்களை நோக்கி வீசினார்.

    இவர் வீசிய பந்து ஸ்டம்ப்களை பதம் பார்க்க, பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது தான் ஷ்ரேயாஸ் அய்யர், பென் ஸ்டோக்ஸ் போன்றே கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். 

    • காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
    • பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

    பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.

    இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.

    பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

    டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

    இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி, அனுபம் வாய்ந்த ஜாக் லீச் மற்றும் சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி என இரண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர்களையும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கும் ரெஹான் அஹ்மத் ஆகியோரையும் தேர்வு செய்தது.

    இதில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர். 20 வயதான சோயப் பஷீர்-க்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் நாட்டினர் மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பிற நாட்டினர் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் கடினமான விசா நடைமுறை உள்ளது. குறைந்தது ஏழு நாட்கள் கழித்தே அவர்களுக்கு விசா வழங்கப்படும்.

    இந்த நடைமுறையில்தான் இங்கிலாந்து அணி தவறு செய்து விட்டது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்தியா வர இங்கிலாந்து திட்டமிட்டு இருந்தது. அதனால் விசாவுக்கு விண்ணப்பம் செய்வதிலும் அந்த அணி தாமதம் செய்து இருக்கிறது. அதில் தான் சோயப் பஷீர் சிக்கிக் கொண்டார்.

    இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவரை பயன்படுத்தலாம் என திட்டமிட்டு இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விரக்தியில் உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் மனமுடைந்து போயிருக்கிறேன். அந்த இளம் வீரருக்கு இது விரக்தியான சூழ்நிலை" எனக் கூறி இருக்கிறார்.

    • ஜனவரி 25 அன்று முதல் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது
    • இந்திய-இங்கிலாந்து அணியினர் 131 முறை மோதியுள்ளனர்

    இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெறுகிறது.

    இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

    முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

    இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்:

    ஜேம்ஸ் ஆண்டர்சன் (வேகப்பந்து வீச்சாளர்)

    ஆட்டங்கள் - 35 விக்கெட்டுகள் - 139 சராசரி - 24.89 சிறப்பு - 5/20

    பகவத் சந்திரசேகர் (லெக் ஸ்பின்னர்)

    ஆட்டங்கள் - 23 விக்கெட்டுகள் - 95 சராசரி - 27.27 சிறப்பு - 8/79

    அனில் கும்ப்ளே (லெக் பிரேக்)

    ஆட்டங்கள்- 19 விக்கெட்டுகள் - 92 சராசரி - 30.59 சிறப்பு - 7/115

    ஆர். அஸ்வின் (ஆஃப் ஸ்பின்னர்)

    ஆட்டங்கள் - 19 விக்கெட்டுகள் - 88 சராசரி - 28.59 சிறப்பு - 6/55


    பிஷன் சிங் பேடி (இடக்கர ஸ்பின்)

    ஆட்டங்கள் - 22 விக்கெட்டுகள் - 85 சராசரி - 6/71 சிறப்பு - 29.87

    கபில் தேவ் (வேகப்பந்து வீச்சாளர்)

    ஆட்டங்கள் - 27 விக்கெட்டுகள் - 85 சராசரி - 37.34 சிறப்பு - 6/91

    பிஎஸ் பேடி மற்றும் கபில் தேவ் இருவரும் தலா 85 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.

    • முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை நடைபெற உள்ளது
    • 2022 டிசம்பரில் பாகிஸ்தானை 3-0 என இங்கிலாந்து வென்றது

    இம்மாதம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.

    இந்திய அணிக்கு ரோஹித்தும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்சும் கேப்டனாக உள்ளனர்.

    முதல் போட்டி ஜனவரி 25 தொடங்கி 29 வரை ஐதராபாத் நகரின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

    பிற போட்டிகள் விசாகப்பட்டினம் (பிப்ரவரி 2-6), ராஜ்கோட் (பிப்ரவரி 15-19), ராஞ்சி (பிப்ரவரி 23-27) மற்றும் தரம்சாலா (மார்ச் 7-11) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள்:

    சச்சின் டெண்டுல்கர்

    2535 ரன்கள் - 32 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 51.73 சராசரி

    ஜோ ரூட்

    2526 ரன்கள் - 25 ஆட்டங்கள் - 9 நூறுகள் - 63.15 சராசரி

    சுனில் கவாஸ்கர்

    2483 ரன்கள் - 38 ஆட்டங்கள் - 4 நூறுகள் - 38.20 சராசரி

    அலஸ்டர் குக்

    2431 ரன்கள் - 30 ஆட்டங்கள் - 7 நூறுகள் - 47.66 சராசரி

    விராட் கோலி

    1991 ரன்கள் - 28 ஆட்டங்கள் - 5 நூறுகள் - 42.36 சராசரி

    கடந்த 2022 டிசம்பர் மாதம், பாகிஸ்தானுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்திய-இங்கிலாந்து அணியினர் இதுவரை 131 முறை மோதியுள்ளனர். அதில் இங்கிலாந்து 50 ஆட்டங்களில் வென்றது; இந்தியா 31 ஆட்டங்களில் வென்றது. 50 ஆட்டங்கள் சமன் (draw) ஆகியுள்ளது.

    • இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
    • இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023-ல் பங்கேற்பதற்காக திரும்ப வந்தார். மேலும் இந்த தொடரில் சிறப்பாகவும் விளையாடினார்.

    இந்த தொடரில் அவர் ஆறு போட்டிகளில் விளையாடி, 50.66 சராசரியில் 304 ரன்களையும், ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 89-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டையும் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 108 ஆகும். அவரது முழங்காலில் உள்ள பிரச்சனையால் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்து வீசவில்லை.


    இந்நிலையில் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தற்போது அவருக்கு மறுவாழ்வு அளிக்கும் நேரம் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தகக்து.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 368 ரன்கள் சேர்த்தது.
    • அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 182 ரன்கள் குவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 2-2 என சமனிலை ஆனது.

    அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி 124 பந்தில் 182 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 96 ரன்னில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 38 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட்டும், பென் லிஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கிளென் பிலிப்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 72 ரன் சேர்த்தார். ரச்சின் ரவீந்திரா 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், நியூசிலாந்து 39 ஓவரில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. பென் ஸ்டோக்சுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    ×