என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோப்ரா ஆர்ச்சர்"

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
    • இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகிறார்கள்.

    இந்நிலையில் 5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை ஒல்லி போப் வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சரும் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமானது.

    5-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (இ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (வாரம்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.

    • இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டங் கழற்றி விடப்பட்டார்.

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இதனை தொடர்ந்து இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டங்குக்கு பதிலாக ஆர்ச்சர் அணியில் இடம் பிடித்துள்ளார். 

    இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கீப்பர்), ஜேமி ஸ்மித் (WK), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.

    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ந் தேதி தொடங்குகிறது.
    • ஆர்ச்சர் அந்த அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் விலகியுள்ளார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் விளையாடிய வீரர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

    அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் அந்த அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் விலகியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (வார), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

    • காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்தார்.
    • டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் 2 -வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

    நீண்ட காலமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி இருக்கிறார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால், இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி ஆடும் லெவன்:-

    ஸ்டோக்ஸ் , ஆர்ச்சர், ஜோ ரூட், டக்கெட், பஷீர், பெத்தேல், ஹாரி புரூக், கார்ஸ், சாம் குக், கிராலி, ஓவர்டன், ஆலி போப், ஸ்மித், ஜோஷ் டங் , வோக்ஸ்.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    சண்டிகர்:

    ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ரியான் பராக் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

    நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 30 ரன்னில் அவுட்டானார். 5வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்களைக் குவித்தது.

    சண்டிகர்:

    ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது அந்த அணியின் டிரஸ்சிங் ரூமில் ஜோப்ரா ஆர்ச்சர் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

    ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. முதல் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் விசினார்.

    முதல் ஓவரின் முதல் பந்தில் பிரியான்ஷு ஆர்யாவை டக் அவுட்டாக்கினார். தொடர்ந்து கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை 10 ரன்னில் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதைக் கண்ட நெட்டிசன்கள், தூக்கம் முக்கியமுங்கோ... ஜோப்ரா ஆர்ச்சர் இதற்காகத்தான் குட்டித்தூக்கம் போட்டாரோ என இந்தப்ப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

    • ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்களை வாரி வழங்கினார்.
    • இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி

    நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) ரன் வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்தார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய மொகித் ஷர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் (டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக) விட்டுக்கொடுத்ததே மோசமான பந்து வீச்சாக இருந்தது.

    அந்த போட்டியை வர்ணனை செய்த ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், "லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது என ஹர்பஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    லண்டன் கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டுப் பேசியது 'இனவாத கருத்து' என வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 

    • ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார்.
    • தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    ஐதராபாத்:

    18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்து அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார். டிராவிஸ் ஹெட் 67 ரன்னில் அவுட் ஆனார். இஷான் கிஷன் 106 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 76 ரன்கள் கொடுத்தார்.

    இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஜோப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார்.

    ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள்:

    ஜோப்ரா ஆர்ச்சர்: 4-0-76-0

    மொஹித் சர்மா: 4-073-0

    பாசில் தம்பி: 4-0-70-0

    • ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    கிம்பர்லி:

    தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் மலான், கேப்டன் ஜோஸ் பட்லர் சதம் அடித்தனர்.

    மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 43-ஓவர்களில் 287 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் 2 போட்டியிலும் தோற்ற இங்கிலாந்து ஏற்கனவே தொடரை இழந்து இருந்தது.

    இதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

    ஹென்ரிச் கிளாசன் 62 பந்தில் 80 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்னும் 6 பவுண்டரி) எடுத்தனர்.

    ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஆதில் ரஷூதுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

    3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. உங்களைப் போன்ற நபர்கள் தான் எனக்கு பிரச்சனையே தருகிறீர்கள்.
    • குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி, இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    ஜோப்ரா ஆச்சர் காயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பை அணிக்காக வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு காயம் இன்னும் குணமடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய பெல்ஜியம் வரை செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகி மீண்டும் ஒரு வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.

    எனினும் இந்த தகவலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளரை கடுமையாக சாடி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மை என்னவென்று தெரியாமல் என்னை பற்றியும், என் அனுமதி இல்லாமலும் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இது சுத்த பைத்தியக்காரத்தனம். இந்த செய்தியை வெளியிட்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.

    ஏற்கனவே ஒரு வீரருக்கு காயம் அடைந்த தருணம் கவலையும் சிக்கல்களையும் கொடுக்கக்கூடிய நேரம் ஆகும். இந்த நேரத்தில் கூட உங்களுடைய சொந்த நலனுக்காக என்னை பயன்படுத்திக் கொள்வது கேவலமான விஷயம். எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. உங்களைப் போன்ற நபர்கள் தான் எனக்கு பிரச்சனையே தருகிறீர்கள்.

    என்று ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

    இதனால் ஜோப்ரா ஆர்ச்சருக்கு காயம் ஏற்பட்டது உண்மையா? இல்லையா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2வது டி20 போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
    • இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார்.

    சென்னை:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் 3-வது வரிசையில் இறங்கிய திலக் வர்மா நிலைத்து நின்று இந்திய அணியை கரைசேர்த்தார். திலக் வர்மா 72 ரன்கள் அடித்து தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

    இந்தப் போட்டியில் திலக் வர்மா இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரின் பந்துவீச்சில் மட்டும் 4 சிக்சரை பறக்க விட்டார். இதில் 4 ஓவர் வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்களை வாரி வழங்கி, டி20 கிரிக்கெட்டில் மோசமான பந்துவீச்சையும் பதிவு செய்தார்.

    இந்நிலையில், இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் ஓவரை அடித்து நொறுக்கியது ஏன் என திலக் வர்மா கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக, திலக் வர்மா கூறுகையில், அவர்களின் சிறந்த பவுலரை நான் டார்கெட் செய்ய விரும்பினேன். அவர்களுடைய சிறந்த பவுலரை அட்டாக் செய்தால் மற்ற பவுலர்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார்கள். எனவே மறுபுறம் விக்கெட் விழும்போது நான் எதிரணியின் சிறந்த பவுலரை எதிர்கொள்ள விரும்பினேன்.

    அதனால் ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சித்தேன். அவருக்கு எதிராக நான் வெளிப்படுத்திய ஷாட்டுகள் வலைப் பயிற்சியில் வேலை செய்ததாகும். அதற்கு நான் மனதளவில் தயாராக இருந்தேன். அவ்வாறு செய்தது எனக்கு நல்ல முடிவை கொடுத்தது. எது நடந்தாலும் களத்தில் கடைசி வரை நின்று போட்டியை முடிக்கவேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 325 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. லாகூரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 325 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்ட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் மாபெரும் சாதனை ஒன்றை ஜோப்ரா ஆர்ச்சர் தகர்த்துள்ளார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் ஆடி 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற ஆண்டர்சனின் சாதனையை ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தற்போது ஆர்ச்சர் 30 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

    ×