என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tilak Varma"

    • ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
    • ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 147 இலக்கை எதிர்நோக்கி களம் இறங்கியது. 3 விக்கெட் விரைவாக இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இறுதிப் போட்டி மற்றும் வெற்றி பெற்றது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    முதலில் பிரதமர் மோடி இதை ஆபரேஷன் சிந்தூர் என அழைத்தார். ஆனால், ஆபரேஷன் திலக் என்று அழைப்பது மிகப்பெரிய விசயம். விளையாட்டில், நாங்கள் நம்முடைய நாட்டிற்காக விளையாடுகிறோம். சரியான தருணத்தில், சரியான நேரத்தில் நான் வாய்ப்பை பெற்றேன். எனது நாட்டிற்காக வெற்றி தேடிக்கொடுத்ததை சிறந்ததாக உணர்கிறேன்.

    இறுதிப் போட்டியில் பதட்டம் நிலவியது. நாம் 3 விக்கெட்டை முன்னதாகவே இழந்தபோது, பாகிஸ்தான் வீரர் இன்னும் தீவிரமாக முயற்சி செய்தனர். நான் களத்தில் நின்றிருந்தேன். நாள் முன்னதாக சொன்னது போன்று, நான் அதற்குள் சிக்கி ஷாட் ஆட முயற்சி செய்திருந்தால், எனது நாட்டை தோல்வி பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பேன். நான் எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். போட்டியில் வெற்றி பெற தேவை என்னது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

    போட்டியின்போது ஏராளமான விசயங்கள் நடந்தன. மீடியா முன் அனைத்தையும் சொல்ல முடியாது. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது நடைபெற்றது. போட்டிதான் உண்மையான பதிலடி. நான் அதை செய்ய விரும்பினேன். அதைச் செய்தேன்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை. 2011 உலகக் கோப்பையை பார்க்கும்போது, நான் கிரிக்கெட்டை விரும்ப தொடங்கினேன். அதன்பின் தொழில்முறை கிரிக்கெட்டை தொடங்கினேன்.

    அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் ஒரு பகுதியாக இருந்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்னுடைய அல்டிமேட் கோல்.

    இவ்வாறு திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

    • ஆட்டத்தில் மிகுந்த அழுத்தம் இருந்தது.
    • எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருந்தேன்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திலக் வர்மாவின் அதிரடியான ஆட்டம் ஆசிய கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது. 53 பந்தில் 69 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த அவர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.

    இது குறித்து திலக்வர்மா கூறியதாவது:-

    எனது வாழ்க்கையில் மிக சிறந்த இன்னிங்ஸ். ஆட்டத்தில் மிகுந்த அழுத்தம் இருந்தது. எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருந்தேன். பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். சஞ்சு சாம்சனின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. நெருக்கடியான நிலையிலும் ஷிவம் துபே பேட்டிங் செய்த விதம் நாட்டுக்கு முக்கியமானது.

    இவ்வாறு திலக்வர்மா கூறியுள்ளார்.

    • ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
    • கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.

    இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.

    இதனிடையே, இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.

    இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 150 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றது.

    துபாய்:

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பர்ஹான் 57 ரன்னிலும், பகர் சமான் 47 ரன்னிலும் வெளியேறினர்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 20 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தது.

    4வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 57 ரன்களை சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 24 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஷிவம் துபே திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து அசத்தினார்.

    இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. திலக் வர்மா 69 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.

    திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 59 ரன்னில் வெளியேறினார். ரியான் ரிக்கல்டன் 41 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ரோகித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய நமன் தீர் 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ஜாக் பிரேசர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து, அபிஷேக் பொரேலுடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கருண் நாயர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில் பொரேல் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியைத் தொடர்ந்த கருண் நாயர் 40 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கே எல் ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    • திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார்.
    • போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார்.

    ஐ.பி.எல். தொடரின் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இப்போட்டியில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.

    இந்நிலையில் திலக் வர்மா சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    திலக் வர்மா சூர்யகுமாருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார். போட்டியை அவரே முடிக்க வேண்டும் என்றே நினைத்தார். அதற்காக இறுதி ஓவர் வரை விளையாட முற்பட்டார். ஆனால் அவர் சிரமத்திற்குள்ளாகும் போது, வேறு ஒருவர் புதிதாக விளையாட வேண்டும் என எனக்கு தோன்றியது.

    கிரிக்கெட்டில் இது எப்போதும் நிகழ்வதுதான். அவரை வெளியேற்றுவது சரியானதல்ல. ஆனால் அதை நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. அப்போது அது சமயோஜிதமாக தோன்றியது.

    இவ்வாறு திலக் கூறினார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி போட்டியில் விளையாடியது.
    • திலக் பந்து வீச்சில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

    ஒவ்வொரு அணியினரும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பயிற்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் திலக் வர்மா பந்து வீச்சில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    அவரது விக்கெட்டை வீழ்த்தி மகிழ்ச்சியில் திலக் வர்மா கொண்டாடினார். மேலும் சூர்யகுமார் யாதவிடமும் சென்று கிண்டலாக வம்பிழுத்தார். இருவரும் சிரித்தப்படியே நகர்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • மும்பை அணி முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இன்னும் சில தினங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் பயிற்சியை துவங்கியுள்ளன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மைதானத்தில் ஷா பூ த்ரீ விளையாடினர்.

    பயிற்சின் போது மூவரும் ஒன்றுகூடிய நிலையில், தீவிரமாக ஆலோசனை செய்து பிறகு சா பூ த்ரீ விளையாடினர். உள்ளூர் கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுகளின் போது யார் முதலில் தொடங்குவது என்பதை முடிவு செய்ய சா பூ த்ரீ போடுவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி வீரர்களும் இதை விளையாடியது கவனம் பெற்றுள்ளது.

    பலரும் இந்த வீடியோவில் கமென்ட் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர். விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வருகிற 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.


    • மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானது.
    • ஐ.பி.எல்.லில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

    ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு 193 ரன் இலக்காக இருந்தது.

    கேமரூன் கிரீன் 40 பந்தில் 64 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 17 பந்தில் 37 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர், கேப்டன் ரோகித்சர்மா 18 பந்தில் 28 ரன்னும் 16 பவுண்டரி) எடுத்தனர். மார்கோ வின்ஜான் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், டி நடராஜன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மயங்க் அகர்வால் 41 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கிளாசன் 16 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜேசன் பெஹரன் டார்ப், ரிலே மெர்டிக் பியூஸ் சாவலா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    தெண்டுல்கரின் மகனான அர்ஜூன் தெண்டுல்கர் இந்த போட்டியில் புவனேஷ்வர் குமாரை அவுட் செய்தார். அவர் கைப்பற்றிய முதல் ஐ.பி.எல். விக்கெட் ஆகும். தனது 2-வது ஐ.பி.எல். போட்டியில் அவர் முதல் விக்கெட்டை எடுத்தார்.

    மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்றது.

    இந்த வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஐதராபாத் மைதானம் எனக்கு ஏராளமான நினைவை ஏற்படுத்தியது. அந்த அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி ஒரு கோப்பையை வென்றோம். இங்கு மீண்டும் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானது. ஐ.பி.எல்.லில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றியே பெற்று கொடுப்பார்கள்.

    மும்பை அணியின் திலக் வர்மாவை கடந்த சீசனிலேயே அனைவரும் பார்த்தோம். அவரால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். பேட்டிங்கில் அவரது அணுகுமுறை என்னை பிரமிக்க வைக்கிறது.

    "அவர் எந்த பந்து வீச்சாளர்களையும் பார்த்து பயப்படாமல் அவர்கள் வீசும் பந்துகளில் மட்டுமே கவனம் கொடுத்து ஆடுகிறார். எதிர்காலத்தில் பல்வேறு அணிகளுக்காக திலக் வர்மா நிச்சயமாக விளையாடுவார்.

    அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஆண்டுகள் எங்கள் அணியோடு இருக்கிறார். அவர் திறமை மீதும், பந்து வீச்சு மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்வதோடு, டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர்களை வீசுகிறார். அவரின் திட்டமும் சிறப்பாக உள்ளது. அணிக்கு ஏற்றவாறு அவர் தன்னை செயல்படுத்துகிறார்.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.

    மும்பை அணி 6-வது போட்டியில் பஞ்சாப்பை 22-ந்தேதி சந்திக்கிறது. ஐதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 21-ந் தேதி எதிர்கொள்கிறது.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதில் 2 விக்கெட்டில் 2 ஸ்டெம்புகளை உடைத்தார்.

    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் டக் அவுட்டில் ரோகித் சர்மா வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 15 முறை டக் அவுட் ஆன தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் நரேன் ஆகியோரின் மோசமான சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கி உள்ளார். அவர் 3.5 ஓவரில் 66 ரன்கள் விட்டுகொடுத்துள்ளார். ஒரு வீரர் 4 ஓவர்களை முழுவதுமாக வீசாமல் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 2 விக்கெட்டில் 2 ஸ்டெம்புகளை உடைத்தார். இதில் திலக் வர்மா விக்கெட்டும் அடங்கும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் அவர் பந்து வீச்சை விளாசினார். குறிப்பாக கடைசியாக அடித்த சிக்சர் 102 மீட்டர் தூரம் சென்றது.


    இதனை மும்பை அணி ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமின்றி விக்கெட் எடுத்த வீடியோவையும் சிக்சர் அடித்த வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

    • இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள்.
    • இளம் வீரர்களான திலக் வர்மா, வதேரா ஆகியோர் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.

    டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இம்பெக்ட் பிளேயராக களமிறங்கிய நெகல் வதேரா 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் இவர் அடித்த ரன் மும்பை அணிக்கு கூடுதல் பலமாக இருந்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்த ஐபில் சீசனில் சில அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே மும்பை அணியில் உள்ளனர். பும்ரா, ஆர்ச்சர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலே மும்பை அணி இளம் வீரர்கள் உதவியுடன் பிளே ஆப் சுற்று வரை வந்துள்ளது மிக பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களான திலக் வர்மா, வதேரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ரோகித் சர்மா பேசும்போது பும்ரா, பாண்ட்யா சென்ற உயரம் திலக் மற்றும் வதேரா செல்வார்கள் என கூறினார்.

    இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்ட்யா போன்ற வீரர்களுடைய முன்னேற்றம் எப்படி இருந்ததோ, அதே போன்ற கதைதான் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா இருவருக்கும் இருக்கப்போகிறது.

    இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள். ஒருநாள் எங்களுடைய இந்த மும்பை அணியையும் சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணி என்று கூறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள்.
    • ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும்.

    மும்பை:

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் 15 பேர் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்த அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியின் நடு வரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்யலாம். நிச்சயம் திலக் வர்மாவை மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வைக்கும் யோசனை அணிக்கு இருக்காது. அவர் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு பேட் செய்ய வருகிறார் என்றால் அதற்கு ரிங்கு சிங் தான் சிறந்த தேர்வாக நிச்சயம் இருப்பார்.

    டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள். அது தான் அவர்கள் பேட் செய்ய ஏற்ற இடமும் கூட. சூர்யகுமார் யாதவ் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளையாடுவார்.

    ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும். அந்த இடத்திற்கு திலக் வர்மா, சரி வருவாரா என்பது தான் எனது கேள்வி. அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். இதை கடந்த ஐபிஎல் சீசனில் நாம் பார்த்திருந்தோம். அதே சீசனில் கேமரூன் கிரீன் டாப் ஆர்டரில் ஆடி இருந்தார். அதனால் திலக் பின்வரிசையில் ஆடினார். ஆனால், இந்திய அணியில் அவர் பின்வரிசையில் ஆடுவதற்காக தேர்வாகி இருந்தால் நிச்சயம் அதற்கு ரிங்கு தான் சரியான நபர்.

    என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    ×