search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tilak Varma"

    • இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
    • தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 15 ஓவரில் 152 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை 13.5 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தொடக்கத்தில் 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினர். 3-வது வீரராக களம் இறங்கிய திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் விளாசினார். இவர் ஆட்மிழக்கும்போது 5.5 ஓவரில் 55 ரன்கள் சேர்த்திருந்தது.

    வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான ஷம்சி, மார்க்கிராம் பந்து வீச்சில் சற்று திணறினர். ஷம்சி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மார்க்கிராம் 3 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினர்.

    மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. புதுப்பந்து சற்று கூடுதலாக சீமிங்-கிற்கு ஒத்துழைத்தது. மார்க்கிராம் மற்றும் ஷம்சி ஆகியோர் பந்து வீசும்போது ஆடுகளம் க்ரிப் (grip) ஆக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஷம்சி, மார்கிராம் ஸ்பெல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இல்லையெனில் நாங்கள் 200 ரன்களை கடந்திருப்போம்.

    நாங்கள் பவர்பிளேயில் சற்று கூடுதலாக ரன்கள் கொடுத்து விட்டோம். அதன்பின் நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது.

    இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
    • விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    திருவனந்தபுரம்:

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

    மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இந்தப் போட்டி குறித்து இந்திய வீரர் திலக்வர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ரிங்கு சிங் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருவதால் அவரிடம் இருந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது எப்படி என்று கற்று வருகிறேன். இனி வரும் போட்டிகளில் நானும் அதை செய்ய விரும்புகிறேன். அதை செய்வேன் என்று நம்புகிறேன்.

    எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ஆட்டத்தை நிறைவு செய்ய நினைக்கிறேன். 5-வது வரிசையில் ஆடும் நான் எனது பங்களிப்பை முடிந்தவரை செயல்படுத்துவேன் என தெரிவித்தார்.

    இடதுகை பேட்ஸ்மேன் ஆன திலக் வர்மா, 11 டி20 போட்டியில் விளையாடி 243 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதம் அடங்கும்.

    • இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    பீஜிங்:

    சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்னும், கெயிக்வாட் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில் இந்தியா 97 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.

    இந்நிலையில், திலக் வர்மா தான் அடித்த அரை சதத்தை தாய்க்கு சமர்ப்பிக்கும் வகையில், தனது உடம்பில் வரைந்திருந்த தாயின் டாட்டூ படத்தை குறிப்பிட்டுக் காட்டினார்.

    • இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது.
    • எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஒரு அரை சதம் 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால், இது மிகவும் பெரியது. அடுத்தடுத்த மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு நான் தயாராகிக் கொண்டுள்ளேன்.


    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது மாநில அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி உள்ளேன். அந்த நம்பிக்கையை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் காட்டுவேன்.

    என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

    மேற்கிந்திய தீவுகளில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற செய்தது என அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்,

    • ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
    • ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் திலக் வர்மாவை தவிர மற்ற இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20-யில் தனது முதல் அரை சதம் அடித்தார்.

    இந்நிலையில் எனது உத்வேகம் சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா என்று திலக் வர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா எனது உத்வேகம். ரோகித் பாயுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். என்னுடைய முதல் ஐபிஎல் தொடரில், திலக் நீங்கள் ஒரு அனைத்து வடிவ கிரிக்கெட் வீரர் என்று அவர் என்னிடம் கூறினார். அது என் நம்பிக்கையை அதிகரித்தது. அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகப்பெரியதாக இருந்தது.

    ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். எப்போதும் என்னிடம் பேசி விளையாட்டை ரசிக்கச் சொல்வார். ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவுக்காக விளையாட எனக்கு இந்த சிறப்பான ஆட்டம் உதவியது. முன்னோக்கி செல்லும் நான் அதை தொடர விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தது.

    கயானா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 51 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள்.
    • ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும்.

    மும்பை:

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் 15 பேர் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது.

    இந்த அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:-

    இந்திய அணியின் நடு வரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்யலாம். நிச்சயம் திலக் வர்மாவை மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வைக்கும் யோசனை அணிக்கு இருக்காது. அவர் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு பேட் செய்ய வருகிறார் என்றால் அதற்கு ரிங்கு சிங் தான் சிறந்த தேர்வாக நிச்சயம் இருப்பார்.

    டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள். அது தான் அவர்கள் பேட் செய்ய ஏற்ற இடமும் கூட. சூர்யகுமார் யாதவ் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளையாடுவார்.

    ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும். அந்த இடத்திற்கு திலக் வர்மா, சரி வருவாரா என்பது தான் எனது கேள்வி. அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். இதை கடந்த ஐபிஎல் சீசனில் நாம் பார்த்திருந்தோம். அதே சீசனில் கேமரூன் கிரீன் டாப் ஆர்டரில் ஆடி இருந்தார். அதனால் திலக் பின்வரிசையில் ஆடினார். ஆனால், இந்திய அணியில் அவர் பின்வரிசையில் ஆடுவதற்காக தேர்வாகி இருந்தால் நிச்சயம் அதற்கு ரிங்கு தான் சரியான நபர்.

    என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள்.
    • இளம் வீரர்களான திலக் வர்மா, வதேரா ஆகியோர் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.

    டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இம்பெக்ட் பிளேயராக களமிறங்கிய நெகல் வதேரா 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் இவர் அடித்த ரன் மும்பை அணிக்கு கூடுதல் பலமாக இருந்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்த ஐபில் சீசனில் சில அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே மும்பை அணியில் உள்ளனர். பும்ரா, ஆர்ச்சர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலே மும்பை அணி இளம் வீரர்கள் உதவியுடன் பிளே ஆப் சுற்று வரை வந்துள்ளது மிக பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களான திலக் வர்மா, வதேரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ரோகித் சர்மா பேசும்போது பும்ரா, பாண்ட்யா சென்ற உயரம் திலக் மற்றும் வதேரா செல்வார்கள் என கூறினார்.

    இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்ட்யா போன்ற வீரர்களுடைய முன்னேற்றம் எப்படி இருந்ததோ, அதே போன்ற கதைதான் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா இருவருக்கும் இருக்கப்போகிறது.

    இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள். ஒருநாள் எங்களுடைய இந்த மும்பை அணியையும் சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணி என்று கூறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதில் 2 விக்கெட்டில் 2 ஸ்டெம்புகளை உடைத்தார்.

    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் டக் அவுட்டில் ரோகித் சர்மா வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 15 முறை டக் அவுட் ஆன தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் நரேன் ஆகியோரின் மோசமான சாதனையுடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கி உள்ளார். அவர் 3.5 ஓவரில் 66 ரன்கள் விட்டுகொடுத்துள்ளார். ஒரு வீரர் 4 ஓவர்களை முழுவதுமாக வீசாமல் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 2 விக்கெட்டில் 2 ஸ்டெம்புகளை உடைத்தார். இதில் திலக் வர்மா விக்கெட்டும் அடங்கும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் அவர் பந்து வீச்சை விளாசினார். குறிப்பாக கடைசியாக அடித்த சிக்சர் 102 மீட்டர் தூரம் சென்றது.


    இதனை மும்பை அணி ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமின்றி விக்கெட் எடுத்த வீடியோவையும் சிக்சர் அடித்த வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

    • மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானது.
    • ஐ.பி.எல்.லில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

    ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு 193 ரன் இலக்காக இருந்தது.

    கேமரூன் கிரீன் 40 பந்தில் 64 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 17 பந்தில் 37 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர், கேப்டன் ரோகித்சர்மா 18 பந்தில் 28 ரன்னும் 16 பவுண்டரி) எடுத்தனர். மார்கோ வின்ஜான் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், டி நடராஜன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மயங்க் அகர்வால் 41 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கிளாசன் 16 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜேசன் பெஹரன் டார்ப், ரிலே மெர்டிக் பியூஸ் சாவலா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    தெண்டுல்கரின் மகனான அர்ஜூன் தெண்டுல்கர் இந்த போட்டியில் புவனேஷ்வர் குமாரை அவுட் செய்தார். அவர் கைப்பற்றிய முதல் ஐ.பி.எல். விக்கெட் ஆகும். தனது 2-வது ஐ.பி.எல். போட்டியில் அவர் முதல் விக்கெட்டை எடுத்தார்.

    மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்றது.

    இந்த வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஐதராபாத் மைதானம் எனக்கு ஏராளமான நினைவை ஏற்படுத்தியது. அந்த அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி ஒரு கோப்பையை வென்றோம். இங்கு மீண்டும் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானது. ஐ.பி.எல்.லில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றியே பெற்று கொடுப்பார்கள்.

    மும்பை அணியின் திலக் வர்மாவை கடந்த சீசனிலேயே அனைவரும் பார்த்தோம். அவரால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். பேட்டிங்கில் அவரது அணுகுமுறை என்னை பிரமிக்க வைக்கிறது.

    "அவர் எந்த பந்து வீச்சாளர்களையும் பார்த்து பயப்படாமல் அவர்கள் வீசும் பந்துகளில் மட்டுமே கவனம் கொடுத்து ஆடுகிறார். எதிர்காலத்தில் பல்வேறு அணிகளுக்காக திலக் வர்மா நிச்சயமாக விளையாடுவார்.

    அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஆண்டுகள் எங்கள் அணியோடு இருக்கிறார். அவர் திறமை மீதும், பந்து வீச்சு மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்வதோடு, டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர்களை வீசுகிறார். அவரின் திட்டமும் சிறப்பாக உள்ளது. அணிக்கு ஏற்றவாறு அவர் தன்னை செயல்படுத்துகிறார்.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.

    மும்பை அணி 6-வது போட்டியில் பஞ்சாப்பை 22-ந்தேதி சந்திக்கிறது. ஐதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 21-ந் தேதி எதிர்கொள்கிறது.

    ×