என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிடல்ஸ்"
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் எடுத்தது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரின் 66-வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஸ்டோய்னிஸ் 16 பந்தில்44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கருண் நாயர் 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சமீர் ரிஸ்வி 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது.
குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.
- மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
சிட்னி:
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி அணி நிர்வாகத்திற்கு அவர் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் முன்னணி வீரரான இவரது விலகல் டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது.
- பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது.
தரம்சாலா:
ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்றது. மழை காரணமாக டாஸ் போட தாமதமானது.
டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்னில் அவுட்டானார்.
பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 204 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது. ரகுவன்ஷி 44 ரன்னும், ரிங்கு சிங் 36 ரன்னும், சுனில் நரைன் 27 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், அக்சர் படேல், விப்ரஜ் நிகாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டூ பிளசிஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார். கேப்டன் அக்சர் படேல் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் விபராஜ் நிகம் போராடி 19 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கொல்கத்தா அணிக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். டெல்லி அணிக்கு கிடைத்த 4வது தோல்வி இதுவாகும்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனை வீரரான ரிஷப்பண்ட் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
- லக்னோ அணியின் கேப்டனான அவர் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 7-வது வீரராக களம் இறங்கினார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாதனை வீரரான ரிஷப்பண்ட் தொடர்ந்து சொதப்பி வருகிறார். லக்னோ அணியின் கேப்டனான அவர் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 7-வது வீரராக களம் இறங்கினார். 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அடைந்தார்.
தனது பேட்டிங் மோசமாக இருப்பதால் ரிஷப் பண்ட் வழக்கமான 4-வது வரிசையில் ஆடாமல் 7-வது வரிசையில் கடைசியாக வந்தார். இது அவரை மேலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருந்தது.
தோல்வி தொடர்பாகவும், 7-வது வீரராக ஆடியது பற்றியும் ரிஷப்பண்ட் கூறியதாவது:-
நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்தோம். டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ஆடுகளம் எப்போதுமே 2-வது களம் இறங்குபவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. லக்னோ பிட்சில முதலில் பேட்டிங் செய்யும் போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், 2-வது இன்னிங்சின் போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது.
இந்த ஆட்டத்திலும் அதே நிலைதான் ஏற்பட்டது. இதற்காக நாம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது. ஆனால் அதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
7-வது வரிசையில் நான் ஆடுவதற்கு காரணம் இருக்கிறது. அப்துல் சமத்தை முன்கூட்டியே களம் இறக்க முடிவு செய்தோம். அதன் பிறகு மில்லர் வந்தார். அதனால்தான் 7-வது இடத்தில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் சிறந்த லெவனை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறினார்.
5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளியுடன் 5-வது இடத்தில் இருக்கும் லக்னோ அணி தனது 10-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 27-ந் தேதி சந்திக் கிறது.
- சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்.
- 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்களை கடந்து வார்னரின் சாதனையை கே.எல். ராகுல் முறியடித்துள்ளார். 130 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 5000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் :
1. கே.எல். ராகுல் - 130 இன்னிங்ஸ்
2. டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்
3. விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
4. ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
5. ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- டெல்லி அணியில் ராகுல் மற்றும் அபிஷேக் போரல் அரை சதம் அடித்தனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அபிஷேக் போரல் 51 ரன்களும், கருண் நாயர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் மற்றும் படேல் சிறப்பாக ஆடினர்.

ராகுல் 42 பந்துகளில் 57 ரன்களும், படேல் 20 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.
இறுதியில் டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
- அதிரடியாக விளையாடிய மார்க்ரம் அரை சதம் விளாசினார்.
- டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். அதிரடியாக விளையாடிய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து வந்த பூரன் 9 ரன்னிலும் சமத் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 45 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து டேவிட் மில்லர் மற்றும் பதோனி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஐபிஎல் தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
- இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து விச்சை தேர்வு செய்துள்ளது.
- நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- சூப்பர் ஓவரில் டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் சார்பில் ஹெட்மயர், பராக், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பேசிய நிதிஷ் ராணா, " சூப்பர் ஓவரில் யாரை அனுப்ப வேண்டும் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல. ஹெட்மயர் மற்றும் பராக்கை அனுப்பியது நல்ல முடிவு தான். ஹெட்மயர் எங்கள் அணியின் ஃபினிஷர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
- டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார்.
- அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.
இதற்கு முன்னதாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசியுள்ளனர்.






