என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujrat"

    • குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
    • ஆற்றில் விழுந்து மாயமானவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்

    குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் விழுந்து மாயமானவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு அதன் 'பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்' என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதன் எதிரொலியாக குஜராத் மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    • பாலம் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் பல ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன.
    • மாயமான 4 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது. வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், மாஹி ஆற்றில் இருந்து மேலும்7 சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது. இதையடுத்து, பாலம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், மாயமான 4 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

    பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் தெரிவித்தனர்.
    • விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைந்துள்ளது.

    வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது.

    பாலம் இடிந்து விழுந்ததால் அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடம் சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என முதல் மந்திரி பூபேந்திர படேல் அறிவித்தார்.

    • குஜராத் பாலம் இடிந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
    • பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணியளவில் யாருமே எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாஹி ஆற்றில் விழுந்தன.

    இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பால விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் துயரமானது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் என தெரிவித்தார்.

    • குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • முன்னெச்சரிக்கையாக குஜராத்தின் பவ் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் இந்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஜுனாகட், துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட், பவநகர், கட்ச், காந்தி நகர், சூரத் மற்றும் படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு மீட்புப்படையினர் உதவி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் பவ் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    பாதிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படும்.
    • குஜராத் வனத்துறையால் 5 ஆண்டுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    அகமதாபாத்:

    ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படும். தற்போது கிர் தேசிய பூங்காவுக்கு வெளியேயும், காடுகள் அல்லாத மற்றும் கடலோர பகுதிகள் உள்பட குஜராத்தின் 11 மாவட்டங்களிலும் இந்த சிங்கங்கள் பரவி உள்ளன. குஜராத் மாநில வனத்துறையால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    அதன்படி 6-வது ஆசிய சிங்க கணக்கெடுப்பு கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 3 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவியுடன் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இந்நிலையில், கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து வன தலைமை பாதுகாவலர் ஜெய்பால் சிங் கூறியதாவது:

    ஆசிய சிங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 217 அதிகரித்துள்ளன. மொத்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது. கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டும் 384 சிங்கங்கள் காணப்பட்டன. எல்லைக்கு வெளியே 507 சிங்கங்கள் காணப்பட்டன. இதில் 196 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 சிங்கக் குட்டிகள் அடங்கும்.

    கடைசியாக 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 674 சிங்கங்கள் இருந்தன. போர்பந்தரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பர்தா சரணாலயத்தில் 17 சிங்கங்கள் உள்ளன. சிங்கங்களை அடையாளம் காண உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ரேடியோ காலர்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டன என தெரிவித்தார்.

    • குஜராத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் கடந்த சில தினங்களாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    அடுத்த சில நாட்களுக்கு குஜராத்தில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. கேடா, காந்தி நகர், மெஹ்சானா மற்றும் வதோதரா மாவட்டங்களில் 25 முதல் 40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    மின்னல், மின்சாரம் பாய்தல், மரங்கள், வீடுகள் மற்றும் விளம்பர பலகைகள் இடிந்து விழுந்தது போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

    கேடா மாவட்டத்தில் 4 பேர், வதோதராவில் 3 பேர், அகமதாபாத், தாஹோத் மற்றும் ஆரவல்லியில் தலா 2 பேர் மற்றும் ஆனந்த் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்தனர்.

    • குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கேமிங் சென்டர்கள் எந்தவித பாதுகாப்பு சான்றிதழும் பெறாமல் 2 வ வருடங்களாக இயங்கிவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் குஜராத் உயர்நீதிமன்றம், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று (மே 27) நடந்த விசாரணையின்போது, கேமிங் சென்டரில் சில காலங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்திய புகைப்படங்களை நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்தது.

    புகைப்படங்களை வாங்கி பார்த்த நீதிபதி, "யார் இந்த அதிகாரிகள்? அவர்கள் அங்கு விளையாட சென்றார்களா? என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், விபத்துக்குள்ளான இந்த கேமிங் சென்டர்கள் எந்த அனுமதியும் இன்றி 2 வருடமாக இயங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாநில அரசும் இவ்வளவு காலமும் தூங்கிக்கொண்டிருந்ததா என கேள்வியெழுப்பிய அவர், இனியும் இந்த அரசை நம்பப்போவதில்லை என்று காட்டமாக தெரிவித்தார். அரசு இயந்திரங்கள் வேலை செய்யாதது காரணமாகவே மக்கள் இறக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 

     

    • பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக குஜராத் அரசு 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
    • இந்தக் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமை தாங்குகிறார்.

    அகமதாபாத்:

    நாட்டின் அனைத்து மத, மொழி, இன மக்களுக்கும் ஒரே மாதிரியான, பொதுவான உரிமைகளை வழங்கும் விதத்தில் பொது சிவில் சட்டம் ஒன்றை இயற்றுவதை மத்திய பா.ஜ.க. அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

    உத்தரகாண்டை தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநில அரசும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    பொது சிவில் சட்டத்துக்கான வரைவைத் தயாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

    இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 4 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இந்தக் குழு தனது அறிக்கையை 45 நாளில் தயாரித்து அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்தக் குழுவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சி.எல்.மீனா, வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர், முன்னாள் துணைவேந்தர் தக்ஷேஷ் தாக்கர், சமூக ஆர்வலர் கீதா ஷ்ராப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    சர்தார் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் படேல் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். #SardarVallabhbhaiPatel
    இந்தியாவின் ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள படேல் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வல்லபாய் படேல் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 



    நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. 



    படேல் சுதந்திர இந்தியாவின் முதலாவது துணைப் பிரதம அமைச்சராகவும், முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் படேல் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SardarVallabhbhaiPatel #StatueOfUnity

    ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தால் தாம் கட்சியை விட்டு விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான எச்.எஸ் புல்கா தெரிவித்துள்ளார். #Congress #AamAadmiParty
    சண்டிகர்:

    2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக செயல்படுகின்றன. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய முயற்சி செய்து வருகின்றன.

    இந்த ஒன்றிணையும் திட்டத்துக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தாம் கட்சியை வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.எஸ்.புல்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புல்கா, காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கைக்கோர்த்தால் தாம் கட்சியில் இருந்து விலகும் முதல் நபராக நான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். #Congress #AamAadmiParty
    ×