என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lion"

    • சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கெர்சன் டி மெலோ மச்சாடோ என்ற 19 வயது வாலிபர் சென்றார்.

    அவர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் வேலி மீது ஏறினார். பின்னர் அங்கிருந்த மரம் வழியாக கூண்டுக்குள் இறங்க முயற்சித்தார். இதை பார்த்த சிங்கம் மரத்தை நோக்கி சென்று அந்த வாலிபரை தாக்கி இழுத்து சென்றது. சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நீண்ட காலமாக சிங்கத்தை அடக்கும் நபராக மாற விரும்பி உள்ளார்.

    ஆப்பிரிக்காவுக்கு சென்று சிங்கங்களை பராமரிக்கும் பணியில் சேர வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்காக ஒரு முறை விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்ய முயன்றார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்தார்.

    • அடர்ந்த காட்டில் சிங்கம் அருகே சென்று செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்.
    • திடீரென சிங்கம் அந்த வாலிபரை நோக்கி வந்ததால் அச்சம்.

    குஜராத் மாநிலம் பவ்நகரில் வாலிபர் ஒருவர், சிங்கம் அருகே சென்று சொல்போனில் வீடியோ எடுத்தபோது, சிங்கம் கர்ஜித்து அவரை நோக்கி சீறிப்பாய முயற்சித்த வீடியோ வெளியாகி, அந்த வாலிபர் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் உள்ள பவ்நகரில் உள்ள அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று, தன்னுடைய இரையை மகிழ்ச்சியாக சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்த வாலிபர் ஒருவர் சிங்கத்தை அருகில் சென்று படம் பிடிக்க விரும்பினார்.

    சிங்கம் இரையை சாப்பிட்டு அமர்வதை, அந்த வாலிபர் அருகில் மெல்ல மெல்ல நடந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் சிங்கத்தின் பார்வையில் தென்பட்டார். என்னப்பா இவன் தொல்லை கொடுக்கிறானே, என்று எண்ணிய அந்த சிங்கம் திடீரென கர்ஜித்துக் கொண்டு அவரை நோக்கி வந்தது. ஆனால் அந்த நபர் பயந்து ஓடாமல் ஒவ்வொரு அடியாக பின்வாங்கி வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்.

    சில அடிகள் முன்னேறி வந்த சிங்கம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அப்படியே திரும்பியது. இதனால் அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். ஒருவேளை சீறிப் பாய்ந்திருந்தால் அந்த வாலிபர் நிலை என்னாயிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சம் ஏற்படுகிறது.

    அந்த வாலிபரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது

    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளை வளர்ப்பு சிங்கம் ஒன்று தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவில், ஒரு கட்டடத்தின் சுவர் மீது ஏறி வீதியில் குதித்த சிங்கம் அவ்வழியே வந்து கொண்டிருந்த பெண் மீது பாய்ந்து தாக்கியது பதிவாகியுள்ளது. தனது 2 குழந்தைகளையும் இந்த சிங்கம் தாக்கியதாக தந்தை ஒருவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சிங்கத்தை வளர்த்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். லாகூரில் மக்களைத் தாக்கிய 11 மாத சிங்கம், போலீசாரால் கைப்பற்றப்பட்டு வனவிலங்கு பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சிங்கங்களை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது கவுரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படும்.
    • குஜராத் வனத்துறையால் 5 ஆண்டுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    அகமதாபாத்:

    ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே காணப்படும். தற்போது கிர் தேசிய பூங்காவுக்கு வெளியேயும், காடுகள் அல்லாத மற்றும் கடலோர பகுதிகள் உள்பட குஜராத்தின் 11 மாவட்டங்களிலும் இந்த சிங்கங்கள் பரவி உள்ளன. குஜராத் மாநில வனத்துறையால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    அதன்படி 6-வது ஆசிய சிங்க கணக்கெடுப்பு கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 3 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவியுடன் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இந்நிலையில், கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து வன தலைமை பாதுகாவலர் ஜெய்பால் சிங் கூறியதாவது:

    ஆசிய சிங்கங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 217 அதிகரித்துள்ளன. மொத்த ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது. கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டும் 384 சிங்கங்கள் காணப்பட்டன. எல்லைக்கு வெளியே 507 சிங்கங்கள் காணப்பட்டன. இதில் 196 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 சிங்கக் குட்டிகள் அடங்கும்.

    கடைசியாக 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 674 சிங்கங்கள் இருந்தன. போர்பந்தரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பர்தா சரணாலயத்தில் 17 சிங்கங்கள் உள்ளன. சிங்கங்களை அடையாளம் காண உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் ரேடியோ காலர்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டன என தெரிவித்தார்.

    • சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு சிங்கம் விரட்டப்பட்டது.
    • யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ஒருவரின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வந்த சிங்கத்தால் கிராம மக்கள் தங்களின் தூக்கத்தை தொலைத்த சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது.

    குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கோவாயா கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாய். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களின் வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது. சமையறையின் சுவரின் மேல் அமர்ந்து கொண்டு இருந்த சிங்கத்தை பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்து ஓடினர். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து சிங்கத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு சிங்கம் விரட்டப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • உயிரியல் பூங்காவில் தற்போது 10 சிங்கங்கள் உள்ளன.
    • சிங்கம் சபாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 10 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் இங்கு சிங்கம் சபாரியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    சிங்கம் சபாரிக்கான வாகனங்களை புதுப்பித்தல், சிங்கங்கள் உலவும் பகுதியை சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலி மற்றும் இரும்பு கதவுகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முடிந்துவிட்டன. இதையடுத்து இன்னும் 2 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சபாரி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    • திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
    • 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    சிலிகுரி உயிரியல் பூங்காவில் 'சீதா' என்ற பெண் சிங்கம் மற்றும் 'அக்பர்' என்ற ஆண் சிங்கத்தை ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அம்மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு வருகின்ற 20 தேதி விசாரணைக்கு வருகிறது. 

    • "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல"
    • இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது”

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது" என நீதிபதி இதற்கு பதில் அளித்தார்.

    இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    ரிட் மனுவான இதனை பொதுநல வழக்காக மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவு. மேலும் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்குப் அக்பர், சீதா என பெயர் சூட்டப்பட்டதா இல்லையா என்பது தொடர்பான அறிவுறுத்தல்களைப் பெறுமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அக்பர் என்பது புகழ்பெற்ற முகலாய மன்னரின் பெயராகும். ராமாயணத்தில் ராமனின் மனைவி பெயர் சீதா என்பது குறிப்பிடத்தக்கது.

    • அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வையுங்கள்
    • "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல"

    அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வைக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா என பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது" என நீதிபதி இதற்கு பதில் அளித்தார்.

    இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.

    • 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
    • திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வைக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திரிபுரா மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" - விஷ்வ ஹிந்து பரிஷித்
    • சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    இதனையடுத்து, 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    அன்பினால் பெண் சிங்கத்திற்கு சீதா என பெயரிட்டிருப்பார்கள். துர்கை பூஜையின் போது நாம் சிங்கத்தை வழிபடுகிறோம். இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது" என நீதிபதி இதற்கு பதில் அளித்தார்.

    இப்போது "சிங்கத்திற்கு பெயரை வைப்பார்கள், நாளை ஒரு கழுதைக்கு தெய்வத்தின் பெயர் வைப்பார்கள். எங்களின் மனதை இது புண்படுத்துகிறது" என விஷ்வ ஹிந்து பரிஷத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கு 'சூரஜ்' என்ற பெயரும், சீதா பெண் என்ற சிங்கத்திற்கு 'தனயா' என்று புதிய பெயர்களை மேற்கு வங்காள அரசு மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது

    • கைக்கெடிகாரம் நாக்கில் இருந்தபடியே சிங்கம் கர்ஜித்தது.
    • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பங்களை தெரிவித்து உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலரும், கால்நடை மருத்துவருமான குளோ என்பவர் சிங்கத்தின் நாக்கில் ஸ்மார்ட் கைக்கெடிகாரம் ஒன்றை பொருத்தினார். அப்போது சிங்கத்தின் இதயத்துடிப்பை அந்த கைக்கெடிகாரம் காட்டியது.

    மேலும் கைக்கெடிகாரம் நாக்கில் இருந்தபடியே சிங்கம் கர்ஜித்தது. இந்த நிகழ்வை அவர் வீடியோவாக எடுத்து `இதனைவிட சுவாரசியமானது என்னவென்று எனக்கு தெரியவில்லை' என்ற பின்குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

    இவரது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆயிரக்கணக்கானோர் விருப்பங்களை தெரிவித்து உள்ளனர்.


    ×