என் மலர்
ஆஸ்திரேலியா
- 205 ரன்களை இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
- தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 32.5 ஓவரில் 172 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 132 ரன்களில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
40 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 34.4 ஓவரில் 164 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் பிரெண்டன் டாகெட் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
205 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் 28. 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதமடித்து 123 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்சில் சேசிங்கின்போது அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சூ டின்-சென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 17-21 என இழந்த லக்ஷயா சென் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 24-22, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் லக்ஷயா சென், ஜப்பானின் யூஷி டனகா உடன் மோதுகிறார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான் - பிக்ரி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதனால் சாத்விக்-சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
கான்பெரா:
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தங்களது தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள சிறுவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் வூ குவான் சன்-சிங் ஹெங் சூ
ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சீ யூ ஜென் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோடாய் நரோகாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, தைவானின் லீ சியா ஹோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சூ லீ-யாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 6-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் மார்சிலினோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஜாலி- காயத்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, இந்தோனேசியாவின் குசுமா- பிஸ்பிதா சாரி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-10, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இதன்மூலம் ஜாலி-கோபிசந்த் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீன தைபேயின் சாங்-கோ சீ-போ-லீ வெய் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 25-23, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
சிட்னி:
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
- கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- இன்றைய போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
பிரிஸ்பேன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






