என் மலர்tooltip icon

    ஆஸ்திரேலியா

    • இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஸ்டார்க் இந்தத் தொடரில் இதுவரை 22 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.

    இதில் இங்கிலாந்து அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அத்துடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரையும் மீண்டும் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்தத் தொடரில் இதுவரை 22 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட் வீழ்த்திய 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 424 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 79 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    இந்தப் பட்டியலில் ஷேன் வார்ன் 999 விக்கெட்டும், கிளென் மெக்ராத் 948 விக்கெட்டுகளும் வீழ்த்தி முதல் இரு இடங்களில் உள்ளனர்.

    மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் அடிலெய்டில் நடந்து வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் தனி ஆளாகப் போராடி 83 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அவர் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் கடைசியாக ஆடிய 4 டெஸ்ட்களிலும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 175 ரன், 119 ரன், இந்தியாவுக்கு எதிராக 140 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 142 ரன்) சதம் அடித்துள்ளார்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதம் கண்ட 5-வது வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பெற்றார்.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட்மேன் (மெல்போர்ன் மைதானம்), மைக்கேல் கிளார்க் (அடிலெய்டு), ஸ்டீவன்சுமித் (மெல்போர்ன்), இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் (சிட்னி) ஆகியோர் ஆஸ்திரேலிய மைதானத்தில் தொடர்ச்சியாக தலா 4 சதம் அடித்துள்ளனர். அந்த சாதனை பட்டியலில் டிராவிஸ் ஹெட் இணைந்தார்.

    • சிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிறு அன்று துப்பாக்கிச்சூடு நடந்தது.
    • இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.

    அந்தக் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் பலியாகினர்.

    முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த சாஜித் அக்ரம், நவீத் அக்ரம் (24) என்பதும், தந்தை, மகனான அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.

    இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அகமது (40) என தெரியவந்தது.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அகமதுவை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    இதுகுறித்து, அல்பானீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், அகமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்களின் சார்பாகவும் நன்றி கூறுகிறேன் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், துணிச்சலாக செயல்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய கதாநாயகன் அல் அகமதுவின் சிகிச்சைக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வசூலித்த ஒரு மில்லியன் டாலர் நன்கொடையை அவரிடம் வழங்கினர்.

    • டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 257 ரன்கள் குவித்தது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது.

    பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் பின் ஆலன் 79 ரன்னும், கூப்பட் கனோலில் 77 ரன்னும் அடித்தனர்.

    பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன காலின் முன்ரோ கோல்டன் டக் அவுட்டானார்.

    அடுத்து இணைந்த ஜாக் வைல்டர்முத்-மேட் ரென்ஷா ஜோடி அதிரடியாக ஆடியது.

    பெர்த் அணியின் பந்துவீச்சை இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 212 ரன் சேர்த்த நிலையில் ரென்ஷா 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் பிரையண்ட் தனது பங்குக்கு 28 ரன்கள் அடித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.

    இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 19.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஜாக் வைல்டர்முத் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதன்மூலம் பிக் பாஷ் லீக் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பிரிஸ்பேன் படைத்துள்ளது.

    • இங்கிலாந்து 2-ம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது.
    • ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற

    ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    அடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய நாதன் லயன் மொத்தம் 564 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தை (563) பின்னுக்குத் தள்ளி நாதன் லயன் 2வது இடம் பிடித்தார்.

    ஷேன் வார்னுக்குப் பிறகு டெஸ்ட்டில் அதிக விக்கெட் எடுத்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    • ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினார்.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற

    ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்புடன் ஆடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 106 ரன்னும், கவாஜா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் ஸ்டார்க் 33 ரன்னும், நாதன் லயன் ரன் ஏதுமின்றியும் அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், வில் ஜாக்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் டக்கெட் 29 ரன்னும் எடுத்து அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-ஹாரி புரூக் ஜோடி அணியைக் காப்பாற்ற போராடியது. 56 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஹாரி புரூக் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசியில் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் கேப்டன் ஸ்டோக்சுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியதால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.

    இறுதியில், 2வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 45 ரன்னும், ஆர்ச்சர் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 158 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிறு அன்று துப்பாக்கிச்சூடு நடந்தது.
    • இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.

    அந்தக் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அகமது (40), என தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அகமதுவை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    இதுதொடர்பாக, அல்பானீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அகமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்களின் சார்பாகவும் நன்றி கூறுகிறேன் என தெரிவித்தார்.

    • கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.
    • பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு கண்டித்திருந்தார்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் தந்தை - மகன் என்றும் அவர்கள் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக இருந்தது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.

    தேசிய ஊடகங்களுக்கு அல்பனீஸ் அளித்த பேட்டியில், அந்த அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர் நம்புகிறாரா என்று செய்தியாளர் கேட்டபோது, அல்பானீஸ், "இல்லை, நான் அதை சந்தேகிறேன். உலகின் பெரும்பகுதியினர் இரு நாடு தீர்வை மத்திய கிழக்கில் முன்னோக்கிச் செல்லும் வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இது தேசிய ஒற்றுமைக்கான தருணம். நாம் ஒன்றுபட வேண்டும். அசாதாரணமான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.

    இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதே எனது வேலை" என்று கூறினார்.

    பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு முன்னதாக கண்டித்திருந்தார். 

    • ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூதர்கள் நிகழ்ச்சீ நடந்து கொண்டிருந்தது.
    • கடற்கரையில் 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் யூதர்கள் நிகழ்ச்சீ நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனான 24 வயது மகன் நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்

    இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்நிலையில், யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அகமத் அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதுகுறித்து பேசிய அகமதுவின் உறவினர் முஸ்தஃபா, "அகமத் ஒரு ஹிரோ என்றும், இரு இடங்களில் குண்டடிப்பட்ட அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும்.
    • 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனான 24 வயது மகன் நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்

    இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    • ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும்.
    • விடுமுறை நாளில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என நியூ சவுத் வேல்ஸ் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

    • தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டான்.
    • யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    தாக்குதல் நடந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன் சம்படவ இத்திலேயே கொல்லப்பட்டான்.

    மற்றொருவன் சுடப்பட்டு காவல்துறையினரின் பிடியில் உள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    போண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கிடையே சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவில், பொதுமக்களில் ஒருவர் தாக்குதல் நடத்தியவர்களின் ஒருவனை நோக்கி சென்று அவனது துப்பாக்கியைப் பிடுங்கி, அவனையே சுட முயற்சிப்பது பதிவாகி உள்ளது.

    அதே சமயம், இரண்டாமவன் பாலத்தில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதும் பதிவாகியுள்ளது.

    தாக்குதல் நடத்தியயவர்கள் வெடிபொருள்களை கொண்ட பெல்ட்களை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். 

    ×