என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australia open"

    • இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கார்லோஸ் அல்காரஸ் வென்று சாதனை
    • 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் தோல்வியடைந்தார்

    ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் செர்பிய வீரர் ஜோகோவிச் விளையாடினார்.

    இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடிது கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற புதிய சாதனையை கார்லோஸ் அல்காரஸ் படைத்துள்ளார்

    25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அல்காரஸ் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அதிக நேரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிக்கு சொந்தக்காரர் என்ற சாதனை படைத்தார்.

    இந்தத் தொடரின் இறுதிப்போட்டிக்கு நுழைந்ததன் மூலம் அனைத்து கிராண்ட்சிலாம் போட்டிகளின் இறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    இதற்கு முன் 33 ஆண்டுக்கு முன் ஜிம் கொரியர் படைத்திருந்த சாதனையை அல்காரஸ் தகர்த்தார்.

    அனைத்து கிராண்ட்சிலாம் போட்டிகளின் இறுதிக்குள் நுழைந்த இளம் வீரர் என கடந்த ஆண்டு சின்னர் படைத்த சாதனையையும் அல்காரஸ் முறியடித்துள்ளார்.

    • முதல் மற்றும் 3-வது செட்டை சின்னர் கைப்பற்றினார்.
    • கடைசி இரண்டு செட்டுகளையும் ஜோகோவிச் எளிதாக கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா ஓபனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதியில் ஸ்வெரேவை கடும் போராட்டத்திற்குப் பின் 5.30 மணி நேரம் தாக்குப்பிடித்து அல்காரஸ் வீழ்த்தினார்.

    2-வது அரையிறுதி போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்- இத்தாலி வீரரும் 2025 சாம்பியனுமான சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    இதில் ஜோகோவிச் முதல் செட்டை 3-6 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

    3-வது செட்டில் சின்னர் கை ஓங்கியது. அவர் 6-4 என 3-வது செட்டை கைப்பற்றினார். ஆனால 4-வது செட்டை 6-4 எனவும், 5-வது செட்டை 6-4 எனவும் ஜோகோவிச் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த வெற்றியை பெற ஜோகோவிச்சுக்கு 4 மணி நேரமும் 9 நிமிடங்களும் தேவைப்பட்டது.

    • அமெரிக்க வீரரா 3-0 என நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.
    • அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி ஒன்றில் 2-ம் நிலை வீரரான இத்தாலியின் சின்னர், 8-ம் நிலை வீரரான பெஞ்சமின் ஷெல்டனை எதிர்கொண்டார்.

    இதில் சின்னர் 6-3, 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் 4-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு அரையிறுதியில் 1-ம் நிலை வீரரான அல்காரஸ், 3-ம் நிலை வீரரான ஸ்வெரேவை எதிர்கொள்கிறார். அரையிறுதில் முதல் 4 இடங்களில் உள்ள வீரர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் சுற்றில் வென்றார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, சுலோவேனியாவின் கஜா ஜுவன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் குரோசியாவின் அண்டோனியோ ரூஜியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், பிரான்சின் ஹியூகோ காஸ்டன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது பிரான்ஸ் வீரர் போட்டியில் இருந்து விலகியதால் சின்னர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 7-6 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் பிரான்சி ஹியூகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றினார்.
    • ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை இழந்து தோல்வியடைந்தார்.

    2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு மூலம் முதன்மை சுற்றில் விளையாடிய அனுமதி பெற்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் ஒல்கா டானிலோவிச்சை எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் இருவரும் மல்லுக்கட்டினர். இதனால் முதல் செட்டை டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் 7(7)-6(5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றார். ஆனால், இதே உத்வேகத்துடன் 2-வது மற்றும் 3-வது செட்டில் அவரால் விளையாட முடியவில்லை.

    2-வது செட்டை 3-6 என இழந்த நிலையில், 3-வது செட்டை 4-6 இழந்து தோல்வியடைந்தார். இதனால் முதல் சுற்றோடு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறியுள்ளார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
    • ஆஸ்திரேலிய ஓபனில் ரோஜர் பெடரர் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    சிட்னி:

    நடப்பு ஆண்டில் டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.

    இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கண்காட்சி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விளையாடுகிறார்.

    ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்ததுடன், கடந்த 2022-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

    சிட்னி:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ். இந்த டென்னிஸ் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

    நடப்பு ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது.

    கடும் சவால் அளிக்கும் இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான பரிசுத்தொகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 111.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.675 கோடியாகும்.

    இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 96.15 மில்லயன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தது.

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது.
    • 2வது தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    செங்டு:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல்,

    சீனாவின் யுங்சாகேட் பு உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சீன வீரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அரையிறுதியில் தவான் வீரரை 17-21, 24-22, 21-15 என வீழ்த்தியிருந்தார்.
    • இறுதிப் போட்டியில் 21-15, 21-11 என ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று மதியம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் யூஷி டனகாவை எதிர்கொண்டார்.

    இதில் லக்ஷயா சென் 21-15, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    லக்ஷயா சென் அரையிறுதியில் தைவானின் சூ டின்-சென்னை 17-21, 24-22, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.

    இதில் நாகல் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×