என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australia open"

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது.
    • 2வது தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    செங்டு:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல்,

    சீனாவின் யுங்சாகேட் பு உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய சீன வீரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அரையிறுதியில் தவான் வீரரை 17-21, 24-22, 21-15 என வீழ்த்தியிருந்தார்.
    • இறுதிப் போட்டியில் 21-15, 21-11 என ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று மதியம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் யூஷி டனகாவை எதிர்கொண்டார்.

    இதில் லக்ஷயா சென் 21-15, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    லக்ஷயா சென் அரையிறுதியில் தைவானின் சூ டின்-சென்னை 17-21, 24-22, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.

    இதில் நாகல் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- ஆஸ்திரேலியாவின் டக்வொர்த், பால்மன்ஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-5), 4-6, 7-6 (10-2) என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- அர்ஜெண்டினாவின் மால்டெனி, கோன்சலேஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து ருமேனியா முன்னணி வீராங்கனை விலகியுள்ளார்.

    சிட்னி:

    அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று ஜனவரி 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரிலிருந்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    கால்முட்டி மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படும் அவர் அதிலிருந்து முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் இன்று விளையாட உள்ளார்.

    சிட்னி:

    டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.

    அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதுகிறார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் லூகாஸ் பவுலே உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் 6-3, 1-6, 7-5, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் முனாரை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • போபண்ணா ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது.
    • 2-வது செட்டை 6(5)-7(7) என இழந்து ஏமாற்றம் அடைந்தது.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கொலம்பியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் பேரியன்டஸ் ஜோடி ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்ட்டினஸ்- ஜாம் முனார் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-7(5) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. முதல் செட்டின் தொடக்கத்தில் போபண்ணா ஜோடி சிறப்பாக விளைாடினாலும், அதன்பின் ஸ்பெயின் ஜோடி உத்வேகம் பெற்று முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.

    2-வது செட்டில் இரு ஜோடிகளும் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் ஸ்பெயின் ஜோடி 5-3 என முன்னிலை பெற்றிருந்தது.

    அதன்பின் போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி 5-5 என சமநிலை பெற்றது. என்றாலும் ஸ்பெயின் ஜோடி அடுத்த இரண்டு கேம்களையும் வென்று டை-பிரேக்கரை 7-5 என முறியடித்து 7-5, 7(5)-6(5) என வெற்றி பெற்றது.

    இதனால் முதல் சுற்றோடு போபண்ணா ஜோடி ஏமாற்றம் அடைந்தது.

    • ஜப்பான் வீரருக்கு எதிராக முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றினார்.
    • 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றினார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் தரநிலை பெறாத ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷியோகாவை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-0, 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதில் முதல் செட்டை 6-0 என எளிதான அல்காரஸ் கைப்பற்றினார். அல்காரஸின் ஒரு சர்வீசை முறியடித்து ஒரு கேமை கூட நிஷியோகாவால் வெல்ல முடியவில்லை.

    2-வது செட்டிலும் அல்காரஸ் அபாரமாக விளையாடினார். இதனால் 2-வது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார்.

    3-வது செட்டில் மட்டும் நிஷியோகா சற்று நெருக்கடி கொடுத்தால். என்றாலும் அல்காரஸ் 6-4 எனக்கை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்-டிரிஸ்டன் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆஸ்திரேலிய ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்றது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது.

    • கோகோ கவூப்- ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பவுலா படோசா மோதினர்.
    • முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்த கோகோ கவூப்- ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பவுலா படோசா மோதினர்.

    இந்த போட்டியில் கவூப் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 11-வது வரிசையில் உள்ள படோசா 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கவூப்பை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    27 வயதான பவுலா படோசா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு இவர் காலிறுதி வரை முன்னேறி இருக்கிறார். அரையிறுதி சுற்றில் படோசா சபலெங்கா அல்லது பாவ்லிசென்கோவாவுடன் மோதுவார்.

    ×