என் மலர்
நீங்கள் தேடியது "Sumit Nagal"
- ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது.
- 2வது தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
செங்டு:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல்,
சீனாவின் யுங்சாகேட் பு உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சீன வீரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது.
- முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
செங்டு:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜாங் மிங்குல் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த சுமித் நாகல் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-0, 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சீனாவின் செங்டு மாகாணத்தில் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.
- இந்தியாவின் சுமித் நாகலுக்கு சீனா செல்ல விசா மறுக்கப்பட்டது.
புதுடெல்லி:
சீனாவின் செங்டு மாகாணத்தில் செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் சுமித் நாகல் விசாவுக்கு அப்ளை செய்தார். ஆனால் அவருக்கு எந்த காரணமும் சொல்லாமல் சீனா தூதரகம் விசா வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், சுமித் நாகல் எக்ஸ் வலைதளத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செங்டு ஓபனில் அவசியம் பங்கேற்க வேண்டும். அதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கும் செல்ல முடியும். எனவே தூதரக அதிகாரிகள் இதுதொடர்பாக உடனே விரைந்து உதவி செய்ய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ.34 கோடியை பரிசுத்தொகையாக பெறுவார்கள்.
இந்நிலையில், விம்பிள்டன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் ஜிபேரி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ஜிபேரி 6-2 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுமித் நாகல் 2வது செட்டை 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இத்தாலி வீரர் 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- தகுதி சுற்று ஆட்டத்தின் முதல் சுற்றில் சுமித் நாகல் அமெரிக்க வீரரை எளிதில் வீழ்த்தினார்.
- இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஆஸ்திரியா வீரரை சுமித் நாகல் எதிர் கொண்டார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது.
இதன் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 170-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் மிட்செல் குருகரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னும் 2 வெற்றி பெற்றால் அவர் பிரதான சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் இன்று ஜூரிச் ரோடியானோவை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் 2-6, 4-6 என்ற கணக்கில் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மிட்செல் க்ரூகர் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த தகுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை அடுத்த தகுதிச்சுற்றில் சுமித் நாகல், ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவுடன் மோதுகிறார்.
- கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சென்னை ஓபன் அரையிறுதியில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேறி உள்ளார். இன்று ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் உடன் சுமித் நாகல் மோதினார். இதில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற சுமித் நாகல், அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
நாகல் கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். அதன்பின்னர் நவம்பர் மாதம் அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் தற்போது பார்முக்கு திரும்பி, 16 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அடுத்து சனிக்கிழமை நடைபெற உளள் அரையிறுதி ஆட்டத்தில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.
- டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.
பீஜிங்:
ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.
இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.
இதில் நாகல் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் மோதினார்.
- சுமித் நாகல் தனது இரண்டாவது சுற்றின் முதல் செட்டை வென்றார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் ஜுன்செங் ஷாங்கிடம் மோதினார்.
சுமித் நாகல் தனது இரண்டாவது சுற்றின் முதல் செட்டை வென்றார். இதனையடுத்து நடந்த 3 செட்டையும் சீன வீரர் அதிரடியாக வீழ்த்தினார். சுமித் நாகல் 2-6, 6-3, 7-5, 6-4 என தோல்வியடைந்தார். இந்த போட்டி இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் நடந்தது.
ஆண்கள் பிரிவில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் அவர் 6-4, 3-6, 6-4 என்ற கணக்கில் கோலின்சை (அமெரிக்கா) தோற்கடித்தார்.
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், தென் கொரியாவின் ஹாங் சியோங் சானுடன் மோதினார்.
இதில் ஸ்மித் நாகல் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட சியோங் சான் அடுத்த இரு செட்களை 6-2, 7-6 (7-4) என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி அடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், கனடாவின் மிலியோஸ் ரவ்னிக்குடன் மோதினார்.
இதில் மிலியோஸ் 6-3, 6-3 என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர் ரபேல் நடால் போட்டியில் இருந்து விலகியதால் ஸ்மித் நாகலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.






