search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tennis"

    • வீடியோவில், தம்பதியினர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரீம் சுவைத்தவாறு திருமண நாளை கொண்டாடினர்.
    • கொண்டாட்ட வீடியோ விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

    சில தம்பதிகள் தங்களது திருமண நாளை வித்தியாசமாக கொண்டாட ஆசைபடுவார்கள். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் ரசிகர்களாக இருக்கும் ஒரு தம்பதி தங்களது 36-வது திருமண நாளை லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மைதானத்தில் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலானது.

    அந்த தம்பதியினர் டென்னிஸ் போட்டிகளை நேரில் பார்த்தவாறு தங்களது கனவை நிறைவேற்றி கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அந்த வீடியோவில், தம்பதியினர் ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரீம் சுவைத்தவாறு திருமண நாளை கொண்டாடினர். அவர்களின் இந்த கொண்டாட்ட வீடியோ விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

    இதைப்பார்த்த பயனர்கள் அந்த தம்பதியினரை வாழ்த்தி பதிவிட்டனர். அந்த தம்பதியினர் கூறுகையில், 1970-களில் இருந்து டென்னிஸ் ரசிகராக இருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. ஏனெனில் இது எங்கள் இருவரின் கனவாகும் என்று குறிப்பிட்டனர். மேலும் இந்திய டென்னிஸ் வீரர்கள் விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா மற்றும் சானியா மிர்சா ஆகியோர் தங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் எனவும் தம்பதிகள் தெரிவித்தனர்.

    • சானியா மிர்சா பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார்
    • 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிக்கு செல்ல காரணமானவர் ஷமி.

    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானை விவாகரத்து செய்துள்ளார். இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த தகவல் வைரலானது.

    இதுதொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. இதுவரை முகமது ஷமியை சானியா மிர்சா சந்தித்ததுகூட கிடையாது என தெரிவித்தார்.

    டென்னிசில் இருந்து ஓய்வுபெற்ற சானியா மிர்சா மதிப்புமிக்க பிரெஞ்ச் ஓபன் தொடருக்கு தூதராக பணிபுரிந்தார் என்பதும், முகமது ஷமி 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி செல்ல முக்கிய காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
    • அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பிரெஞ்சு ஓபனை 4 வது முறையாக வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார். அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபனில் இறுதிசுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்திய இத்தாலி வீராங்கனை பாவ்லினி 15 ல் இருந்து 7 வது இடத்துக்கு வந்துள்ளார். அவர் டாப் 10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி இளம் வீரர் ஜானிக் சினெர் ஒரு இடம் அதிகரித்து முதல்முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் முதல் இத்தாலி நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் காயத்தால் 4 வது சுற்றுடன் வெளியேறியதால் நம்பர் ஒன் இடத்தை பறிகொடுத்ததுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 428 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல்முறையாக சொந்தமாக்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் சுமித் நாகல் கிடுகிடுவென 18 இடங்கள் எகிறி 713 புள்ளிகளுடன் 77 வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

    ஒற்றையர் தரவரிசையில் முதல் 56 இடங்களை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும் ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் ஒலிம்பிக்குக்கு செல்ல அனுமதி கிடையாது.

    உதாரணமாக ஆண்கள் பிரிவில் முதல் 56 இடத்திற்குள் 7 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும். அடுத்த இடங்கள் தரவரிசையில் பின்தங்கி உள்ள வேறு நாட்டு வீரர்களுக்கும் செல்லும். அந்த வகையில் நாகல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு டென்னிசில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முதல் இந்தியர் என்ற சிறப்பை பெறுகிறார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார்.
    • புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன்.

    இந்திய மகளிர் டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தார்.

    பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சா கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார்.


    இதன் மூலம் மனதளவில் சானியா மிர்சா பெருமளவில் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய குழந்தைகள் பார்த்துக் கொள்வது தமது பணி என்று சானியா மிர்சா கூறியிருந்தார். இந்த நிலையில் சானியா மிர்சா எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    அதில் என்னை விரும்பும் நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்ல நான் ஆசைப்படுகின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன். இந்தத் தருணத்தில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் உங்கள் மனது பாதிக்கும்படி ஏதேனும் செய்திருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ஆன்மீகப் பயணத்தை நான் மீண்டும் கொண்டு வர முயற்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு என் இதயம் நன்றி உணர்வுடன் இருக்கின்றது. என்னுடைய பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் செவி சாய்த்து என்னை ஆசிர்வதிக்கப்பட்ட பாதையில் வழிநடத்த வேண்டுகின்றேன். இந்தப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.
    • இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இதில் முன்னணி வீரர்களின் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

    பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்து விளையாடினார்கள். ஆனாலும் கார்லஸ் அல்காரஸ் கடைசி இரு செட்களில் முன்னிலை வகித்தார்.

    இறுதியில் அவர் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பிரெஞ்ச் ஓபன் போட்டியில் 21 வயதில் க்ளே, கிராஸ் அண்ட் ஹார்ட் எனற மூன்று தளத்திலும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் நபர் கார்லோஸ் அல்காரஸ் ஆவார். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டில் விம்பில்டன் ஃபைனல் பட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு யூ.எஸ் ஓபன் ஃபைனல் பட்டத்தையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
    • காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.

    முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.

    இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

    • ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்களை கொண்டிருக்கும்.
    • எதிர் பிரிவில் உள்ள 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

    சென்னை:

    இந்தியன் பிரீமியர் டேபிள் டென்னிஸ் லீக் என்று அழைக்கப்படும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

    இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டன. 5-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யு.யு.டி.) லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 7 வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இந்த சீசனில் புதிதாக 2 அணிகள் பங்கேற்கின்றன.இதன் மூலம் முதன்முறையாக 8 அணிகளுடன் டேபிள் டென்னிஸ் லீக் நடத்தப்படுகிறது.

    இதில் கோவா சேலஞ்சர்ஸ், சென்னை லயன்ஸ் , தபாங் டெல்லி, யு மும்பா , புனேரி பல்தான், பெங்களூரு ஸ்மாஷர்ஸ் மற்றும் இரண்டு புதிய அணிகளான அகமதாபாத் எஸ்.ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

    ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்களை கொண்டிருக்கும்.

    8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் 5 ஆட்டங்களில் விளையாடும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறைமோத வேண்டும். மேலும் எதிர் பிரிவில் உள்ள 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இந்த 2 அணிகளும் குலுக்கல் முறையில் தீர்மானிக்கப்படும்.

    • டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது.
    • பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்.

    பிரெஞ்சு ஓபன் மற்றும் இதர டென்னிஸ் போட்டி தொடர்கள் நடத்தப்படும் விதம் சரியாக இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை கோகோ கௌஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    டென்னிஸ் போட்டிகள் பொதுவாக நடத்தப்படும் விதம், பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் அட்டவணை என ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளின் திட்டமிடல்களை கோகோ கௌஃப் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக நடைபெற்ற டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது, உடல்நலத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.

    "அதிகாலை 3 மணிக்கு போட்டிகளை முடிப்பது, பல சமயங்களில் நீங்கள் போட்டி முடிந்ததாக நினைக்கலாம். ஆனால் அதன் பிறகு, உங்களுக்கென சில கடமைகள் இருக்கும்- அவற்றை செய்து முடிக்க வேண்டும். இந்த பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்."

    "இது உடல்நலனுக்கு நல்லது இல்லை என்றே நினைக்கிறேன். போட்டியில் தாமதமாக விளையாட வேண்டும் என்போருக்கு இது சரியாக இருக்காது, ஆனால் இது உங்களது அட்டவணையை அடியோடு மாற்றிவிடும். அதிக நேரம் கால தாமதத்துடன் போட்டியை நான் இதுவரை முடித்ததில்லை என்ற வகையில், நான் அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன்," என்று கோகோ கௌஃப் தெரிவித்தார். 

    • போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார்.
    • ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.

    அமெரிக்காவின் அர்கன்சாசில் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்ட் டொமிக் மற்றும் ஜப்பானை சேர்ந்த யுடா ஷிமிசு மோதினர். சர்வதேச தரவரிசையில் இவர்கள் முறையே 247 மற்றும் 265 இடங்களில் உள்ளனர்.

    இத்தகைய போட்டிகளில் விளையாடி தனது தரவரிசையை முன்னேற்றி, போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார். எனினும், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.

    போட்டியின் போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பலமுறை கூறிய டொமிக், மருத்துவர்கள் உதவியை நாடினார். எனினும், களத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறி போட்டி நடுவர் அவரை விளையாடுமாறு கூறியுள்ளார்.

    இதனிடையே இந்த போட்டியை காண டொமிக்-இன் காதலி கீலி ஹண்ணா வந்திருந்தார். போட்டியின் போது டொமிக் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விளையாடிய அவர் போட்டியில் கவனம் செலுத்த முடியாதவராக காணப்பட்டார்.

    இரண்டாவது செட்-இல் 5 புள்ளிகளை மட்டும் பெற்ற டொமிக் அதன்பிறகு போட்டியில் இருந்து வெளியேறினார். உடல்நிலை மோசமாவதால், தொடர்ந்து விளையாட முடியாது என்று கூறி டொமிக் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து டொமிக்-இன் காதலியும் களத்தில் இருந்து வெளியேறினார்.

    • ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத்தொடரின் உச்சிக்கு ஏறியுள்ளனர்.
    • மக்கள் எங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்துடன் பிரபல டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் - ரஃபேல் நடால் ஆகியோர் இணைந்து ரசிகர்களுடன் உரையாடுவதற்காக புதிய விளம்பர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத்தொடரின் உச்சிக்கு ஏறியுள்ளனர். அந்த இடத்தில் இருந்து இது தொடர்பாக அவர்கள் இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில் பேசிய ரஃபேல் நடால், "இறுதியில் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். போட்டியின் இயக்குநர்கள், போட்டிகளில் பணிபுரிபவர்கள், ஊழியர்கள் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் என எல்லாரும் ஒரு டென்னிஸ் வீரரை விட நான் யார் என்பதை பற்றிய நல்ல விஷயங்களை சொல்லுங்கள்.ஏனென்றால், டென்னிஸ் வீரராக, பட்டங்கள், சாதனைகள் என்னிடம் உள்ளது. நான் கனவு கண்டதை விட அதிகமாக சாதித்தேன்" என்று பேசியுள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய ரோஜர் பெடரர், "நான் ஒரு டென்னிஸ் வீரராக மட்டும் நினைவில் கொள்ளப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டிற்கு என்ன கொடுத்தேன் மற்றும் விளையாட்டிற்கு பின்னால் ஒரு நபராக நினைவுகூரப்பட்டால், அது எனது விம்பிள்டன் வெற்றிகள் அல்லது அது எதுவாக இருந்தாலும், அது குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    நான் ஒரு டென்னிஸ் வீரராக இருப்பதை விட ஆளுமையாக நினைவில் கொள்ள முடிந்தால், அது நன்றாக இருக்கும். நான் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தால், அது எனக்கும் மகிழ்ச்சியைத் தரும். மக்கள் எங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    • நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது.
    • 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அறிமுக தொடரில் இருந்து விளையாடி வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. அந்த அணி நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 287 ரன்களை வாரி வழங்கி 25 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பந்து வீச்சு படுமோசமாக இருப்பதால் பெங்களூரு அணி வீரர்கள் தேர்வு விஷயத்தில் தவறு இழைத்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.

    இந்த நிலையில் பிரபல இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும், பெங்களூரு அணி நிர்வாகத்தை சாடியிருக்கிறார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், 'விளையாட்டின், ஐ.பி.எல். கிரிக்கெட்டின், ரசிகர்களின், வீரர்களின் நலன் கருதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வேறு உரிமையாளரிடம் விற்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். மற்ற அணி நிர்வாகங்கள் எப்படி அணியை சிறப்பாக கட்டமைத்து செயல்படுகிறதோ? அதேபோல் பெங்களூரு அணியையும் சிறப்பானதாக உருவாக்கும் அக்கறை கொண்ட புதிய உரிமையாளரிடம் விற்று விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.

    இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    ×