என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jannik Sinner"

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    உலகின் நம்பர் 1 வீரரும், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் வுகிக் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் 7-5, 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் கொரன்டின் மவூட்டை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரர் லூகா நார்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2வது சுற்றில் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதுகிறார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இரண்டாவது சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரரும், இத்தாலி வீரருமான ஜானிக் சின்னர் , கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சின்னர் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடிய பப்ளிக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான சின்னர் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஆண்கள் மட்டும் பங்கேற்கும் ஹாலெ ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் யானிக் ஹன்மான் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
    • இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அபார வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் இரு செட்களை 6-4, 7-6 (7-4) என வென்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-3) என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை என 7-6 (10-2) கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.

    இந்தப் போட்டி சுமார் ஐந்தரை மணி நேரம் நடைபெற்றது. கடந்த ஆண்டும் பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சின்னர், அல்காரசுடன் மோதுகிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் சின்னர் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 7-5, 6-0 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) 4-வது சுற்று ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவை (ரஷியா) எதிர் கொண்டார்.

    இதில் சின்னர் 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது. சின்னர் கால் இறுதியில் கஜகஸ்தானை சேர்ந்த அலெக் சாண்டர் பப்ளிக்கை சந்திக்கிறார். அவர் 4-வது சுற்றில் 5-வது வரிசையில் உள்ள ஜேக் டிராபரை (இங்கிலாந்து) 5-7, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) 4-வது சுற்றில் கிரிக்ஸ்பூரை (நெதர்லாந்து) எதிர்கொண்டார். இதில் சுவரேவ் 6-4, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது கிரிக்ஸ்பூர் காயத்தால் விலகினார். இதனால் சுவரேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் டது. ஜோகோவிச்-சுவரேவ் கால் இறுதியில் மோதுகிறார்கள்.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 6-ம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நாரியை 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    • சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் 4-வது சுற்றில் ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.

    மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த பெகுலா அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றினார். இதனால் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டிகளில் அலெக்ஸாண்ட்ரோவா (ரஷ்யா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), டாரியா கசட்கினா (ரஷ்யா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். 

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய டாமி பால் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

    3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜானிக் சின்னர் இறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜாக் டிராபரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • வாடிகன் சிட்டியில் அமெரிக்காவை சேர்ந்த போப் லியோ பதவியேற்றார்.
    • போப் லியோவை சந்திக்க நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் வாடிகன் சென்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதியில் சின்னர் உடன் மோதுகிறார்.

    இந்நிலையில், வாடிகன் சிட்டியில் புதிதாகப் பதவியேற்ற அமெரிக்காவை சேர்ந்த போப் லியோவை, நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் இன்று நேரில் சந்தித்தார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்னர், இது மிகப் பெரிய கவுரவும் என பதிவிட்டுள்ளார்.

    புதிய போப் லியோ டென்னிஸ் ரசிகர் என்பதும், 3 மாத தடைக்குப் பிறகு இத்தாலி ஓபன் தொடரில் சின்னர் களமிறங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×