என் மலர்
நீங்கள் தேடியது "Paris masters"
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் 7-6 (7-3) 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் 6-7 (5-7), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரென்சோ சொனேகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சொனேகா முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - கேப்ரியல் டியாலோ (கனடா) மோதினர்.
- டி மினார் 3-வது சுற்றில் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - கேப்ரியல் டியாலோ (கனடா) மோதினர்.
இதில் தொடக்கம் முதலே இருவரும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை டி மினார் போராடி கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை டியாலோ கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை டி மினார் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தில் டி மினார் 7-6, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் 3-வது சுற்றில் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.
- பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
- இதன் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் ஜேம் முனார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- போபண்ணா- எப்டன் இணை காலிறுதிக்கு முன்னேறியது.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, பிரேசிலின் மார்செலோ மெலோ - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா- எப்டன் இணை 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பிரேசிலின் மார்செலோ மெலோ - ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
- 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டேனில் மெத்வதேவ், அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
- இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-4, 2-6 , 7 (7), 6 (4 ) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 2 வீரரும் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் ஹம்பர்ட் 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 3 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை 6-7 (1-7), 6-4, 6-2 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடக்கும் காலிறுதியில் சிட்சிபாஸ், ஸ்வரேவ் உடன் மோதுகிறார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பாரீஸ்:
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி, குரோசியாவின் நிகோலா மெக்டிக்- நெதர்லாந்தின் வெஸ்லி கூலுப் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-7 (13-15), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.
கடந்த அக்டோபரில் நடந்த வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரிலும் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரும் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் கரன் கச்சனாவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.






