என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "competition"
- பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
- பாமினியில் பழங்குடியினர் கவுரவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவிப்பு தினம் நவம்பர் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக நிறுவன தலைவர் கவுசல்யா தலைமையில் மன்னார்குடி அடுத்த பாமினியில் பழங்குடியினர் கவுரவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பால கணேஷ், ஸ்கார்டு செயலாளர் பாபு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஸ்கார்டு தொண்டு நிறுவனம் சார்பில் அனைத்து குடும்பத்தினருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவில் கூட்டமைப்பு தலைவர் சின்னதுரை, மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் விஜயராகவன், கனகதுர்க்கா, திலகவதி, ஸ்கார்டு கள பணியாளர் சிந்துகவி, பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. மாணவரணி சார்பில் கட்டுரை , பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது
- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடந்தது. போட்டியினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
மேலும் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டத்திட்ட திருத்தக் குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன், நேஷனல் கல்லூரி தாளாளர் சிலம்புச்செல்வன், நகர செயலாளர் வெ கொ. கருணாநிதி,மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன் மற்றும் பல்வேறு கல்லூரி மற்றும் அரசு பள்ளியில் இருந்து மாணவி மாணவிகள் திரளாக வளர கலந்து கொண்டனர்.
- 2 அணிகளுக்கு இடையே போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது.
- வெற்றி பெறும் அணியானது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.
தஞ்சாவூர்:
புதுக்கோட்டையில் இன்று கிழக்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கி நாளை வரை நடக்கிறது.
இதில் தஞ்சை ,நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலங்களை சேர்ந்த மாவட்ட கழகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
முன்னதாக இந்த மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது.
இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
அதிலிருந்து தஞ்சாவூர் நண்பர்கள் கைப்பந்து கழக அணி, பிள்ளையார்பட்டி சோழன் கைப்பந்து கழக அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில்
நேற்று இரவு விளையாடின.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியை தஞ்சாவூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 2 அணிகளுக்கு இடையே போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியை மாவட்ட கைப்பந்து கழக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் டி. ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், தமிழ்ச்செல்வன், இளங்கோவன், ரமேஷ் மற்றும் பலர் பார்த்தனர்.
இதையடுத்து இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் கிழக்கு மண்டல அளவிலான பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் பிள்ளையார்பட்டி சோழன் கைப்பந்து கழக அணி, தஞ்சாவூர் நண்பர்கள் கைப்பந்து கழக அணிகள் விளையாட உள்ளன.
இதேபோல் கிழக்கு மண்டலங்களில் பதிவு செய்யப்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
நாளை வரை நடைபெறும்
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியானது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.
- அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
- 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப் படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் சமூக நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது. போட்டியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஜோதியை விளையாட்டு வீரர்களிடம் வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
விழாவில் சமூக நலத்துறை செயலர் பங்கஜ் குமார் ஜா, இயக்குனர் குமரன், துணை இயக்குனர்கள் ஆறுமுகம், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப் படுத்தி வருகின்றனர்.
இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வருகிற 3-ந் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.போட்டிக்கான ஏற்பாடுகளை சமூக நலத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வர வேற்புரை வழங்க பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமையுரை ஆற்றினார்.
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மொழி நல்லிணக்க நாளை கொண்டாடும் வகையில் அரசு பள்ளி களுக்கு இடையே பல்வேறு இந்திய மொழிகளில் கட்டுரை பேச்சு மற்றும் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வர வேற்புரை வழங்க பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமையுரை ஆற்றினார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இறுதியாக பள்ளியின் பொறுப்பாசிரியர் செம்பியன் நன்றி கூறினார்.இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மனையியல் விரிவுரையாளர் தெய்வக் குமாரி மற்றும் தாவரவியல் விரிவு ரையாளர் அன்பு மொழி செய்திருந்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி விளையாட்டு அரங்கில் நடந்த போட்டிக்கு பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டு போட்டிகள் 14, 17, 19 ஆகிய வயது பிரிவின் கீழ் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, பிரேம்நாத் ஆகியோர் பொறுப்பு அலுவலராக செயலாற்றினர். இப்போட்டிகளில் 30 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி களில் முதலிடம் பெறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.
- அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
- பஞ்சாயத்து தலைவி ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.
உடுமலை:
உடுமலை வட்டார அளவில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 25 பேர் இசை, நடனம், ஓவியம், வில்லுப்பாட்டு மற்றும் ஆங்கிலம், தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் சிற்பம் உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
பின்னர் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற 13 மாணவர்களில் ஆர் ஹரிசுதன் (நவீன ஓவியம்), எஸ்.விஜய்கிருஷ்ணா ( எதிர்கால கனவு), எம். ஆசியா சுஹனா ( ஆங்கில பேச்சு போட்டி) ஆகிய மூன்று மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி, பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் கஸ்தூரி பானு, சிவசுப்பிரமணியன், மகேந்திரன், மகேஸ்வரி ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் சதீஷ்குமார், பஞ்சாயத்து தலைவி ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
- குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
அருவங்காடு,
அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் உள்ள அங்கூர் வித்யாமந்திர் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், ப்ரீ-கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கையெழுத்து போட்டி, உச்சரிப்பு போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக தலைவர் ஸ்ரீமதி ராஷிகோயல், துணைத் தலைவர் மெளஸ்மி மல்லிக் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
- சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). சாப்ட்வேர் என்ஜினீயரான ஜோதி குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா இடையான உலக கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு வருவதை கண்டு சோர்ந்து போனார். கடைசியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள் ஜோதி குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர் இழந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாகையில் நடந்தது.
- பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் 70 வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியல் கல்லூரி கூட்டரங்கில் நடைப்பெற்றது.
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலமையில் நடைப்பெற்ற விழாவில் கூட்டுறவு வார உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல், கீழையூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 2870 பயணாளி களுக்கு 12 கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.