என் மலர்
நீங்கள் தேடியது "சானியா மிர்சா"
- இந்த படத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பல்வேறு பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து மணந்தார்.
கபில்தேவ், சச்சின் தெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, மேரிகோம், பி.வி.சிந்து, சாய்னா, மிதாலி ராஜ் போன்ற இந்திய விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் வாழ்க்கை திரைப்படமாகி இருக்கிறது.
அந்தவகையில் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்க்கையும் படமாகிறது. கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த முயற்சிகள் தற்போது மீண்டும் தீவிரமாகி இருக்கிறது.
அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனே, பரினிதி சோப்ரா ஆகியோரை சானியா மிர்சா பரிந்துரைத்திருந்தார். தனது வாழ்க்கை வரலாறு படமாவது குறித்து சானியா மிர்சா மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த படத்தில் அக்ஷய்குமாருடன் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டென்னிஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து மணந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். 2023-ம் ஆண்டில் டென்னிசில் இருந்து அவர் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- "சிறு மாற்றங்கள், பெரிய தாக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
- முதலில் அன்றாட வாழ்க்கை சற்று கடினமாக இருந்ததாக கூறினார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா, Google Pay போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளால் தனது செலவுகள் அதிகரிக்கிறது என்று கூறி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.
எனவே செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்காக தனது மொபைலில் உள்ள அனைத்து UPI அடிப்படையிலான செயலிகளையும் நீக்கியுள்ளார். "சிறு மாற்றங்கள், பெரிய தாக்கம்" என்ற தலைப்பில் "இந்த ஆண்டு, நான் Google Pay பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன்" என்று அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உடனடி பணப் பரிவர்த்தனை வசதி, திட்டமிடப்படாத செலவுகளை (impulse purchases) ஊக்குவிக்கிறது என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
ஆன்லைன் பரிவார்த்தைகளை கைவிட்டதால், ஆரம்பத்தில் நண்பர்களிடம் காபி போன்ற சிறு விஷயங்களுக்கு கூட பணம் கேட்க வேண்டியிருந்ததால், அன்றாட வாழ்க்கை சற்று கடினமாக இருந்ததாகவும், ஆனால் நாளடைவில் அதற்குப் பழகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
அனம் மிர்சாவின் இந்தச் செயல், டிஜிட்டல் பணம் செலுத்தும் பழக்கவழக்கங்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. சிலர் இதை பாராட்டினால், சிலர் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருக்கிறார்கள்.
- சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்போது எல்லை தாண்டிய காதல் கதையை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்கள். இந்த ஜோடி விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010 இல் 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
சானியா மிர்சா கடந்த சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இது நடந்து உள்ளது. அப்போதுதான் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இருப்பினும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருக்கிறார்கள்.
சமீபத்தில், சானியா தனது விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் ஒரு ரகசிய இடுகையைப் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில், "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண!" என குறிப்பிட்டு இருந்தார்.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் கவலைப்படத் தொடங்கினர். சமீபத்தில் இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை ஒன்றாக கொண்டாடினர். சோயிப் இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாலும், சானியா வெளியிடவில்லை.
சோயிப் தனது இன்ஸ்டாவில் "நீங்கள் பிறந்தவுடன், நாங்கள் மிகவும் அடக்கமாகிவிட்டோம், வாழ்க்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருப்பதில்லை, சந்திப்பதில்லை, ஆனால் பாபா உங்களைப் பற்றியும் உங்கள் புன்னகையைப் பற்றியும் ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் கேட்கும் அனைத்தையும் அல்லா உங்களுக்கு வழங்குவார். பாபாவும் அம்மாவும் உன்னை நேசிக்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
- அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும்.
- ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இறுதியில் டென்னிசில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருந்தார். திடீரென அவர் தனது முடிவை மாற்றி கொண்டார்.
இந்த நிலையில் சானியா மிர்சா தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டி அவரது கடைசி ஆட்டமாகும்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டபிள்யூ.டி.ஏ. இறுதி போட்டிக்கு பிறகு டென்னிஸ் ஆடுவதை நிறுத்திக் கொள்ள போகிறேன். துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் பிப்ரவரி மாதம் நடக்கிறது.
இந்த போட்டியோடு நான் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு சானியா மிர்சா கூறியுள்ளார்.
சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். 2011 பிரெஞ்சு ஓபன் இறுதி போட்டியில் தோற்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் அவர் 6 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று உள்ளார்.
வருகிற ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா, கஜகஸ்தான் வீராங்கனை அனாடேனிலாவுடன் இணைந்து ஆடுகிறார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருகிற 16ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு சானியா மிர்சா ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜூவ் ராமுடன் இணைந்து கால் இறுதி வரை முன்னேறி இருந்தார்.
ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா 2007ம் ஆண்டு 27வது வரிசையில் இருந்ததே சிறப்பான நிலையாகும். 2005ல் அமெரிக்க ஓபனில் 4வது சுற்று வரை முன்னேறியதே அவரது சிறந்த நிலையாகும்.
இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா 24-வது வரிசையில் உள்ளார்.
- சானியா மிர்சா அடுத்த மாதத்துடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெறுகிறார்.
- அவர் விளையாடும் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, அன்னா டேனிலினா (கஜகஸ்தான்) ஜோடி, டால்மா கால்பி (ஹங்கேரி)- பெர்னடா பெரா (அமெரிக்கா) இணையுடன் மோதியது.
இதில் சானியா ஜோடி 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
சானியா ஜோடி அடுத்து அன்ஹெலினா கலினினா (உக்ரைன்)- அலிசன் வான் உட்வானிக் (பெல்ஜியம்) இணையை எதிர்த்து விளையாட உள்ளது.
36 வயதான சானியா மிர்சா அடுத்த மாதத்துடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெறுகிறார். அவர் விளையாடும் கடைசி கிராண்ட்சிலாம் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
- செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 4ம் சுற்றுக்கு முன்னேறினார்
- மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பல்கேரியா நாட்டை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 7-6 ,6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றியபோது, காயம் காரணமாக அவதிப்பட்டார். தொடை தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இவ்வாறு இரண்டு முறை சிகிச்சை பெற்ற நிலையிலும், அடுத்தடுத்த 2 செட்களையும் வசமாக்கி வெற்றி பெற்றுள்ளார் ஜோகோவிச். இதனால் அவர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இவர்கள், ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்- லூக் சேவில்லே ஜோடியை 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, 2ம் சுற்றுக்கு முன்னேறினர். இதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, 7-6 (6), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 5ம் தரநிலை ஜோடியான இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியைத் தோற்கடித்தது.
ஜூனியர் பிரிவில், இந்தியாவின் இளம் வீரர் மனாஸ் தாம்னே (வயது 15), ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஜாங்கை 6-3, 6-3 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
- அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் சானியா மிர்சா தோல்வி.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடரை சானியா மிர்சா தோல்வியுடன் நிறைவு செய்தார்.
அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் சானியா தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
- காலிறுதியில் ஆடவிருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- 3-வது தரவரிசையில் உள்ள நீல் ஸ்குப்ஸ்கி-டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
- போட்டிக்கு முன்னதாக இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று சானியா அறிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் 7-6, 6-7 (10-6) என்ற கணக்கில் 3-வது தரவரிசையில் உள்ள கிரேட் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-அமெரிக்காவின் டெசிரே க்ராவ்சிக் ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சானியா இது தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நடந்தது.
இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
"My professional career started in Melbourne… I couldn't think of a better arena to finish my [Grand Slam] career at."
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0
தோல்விக்கு பிறகு சானியா மிர்சா கூறும் போது, எனது டென்னிஸ் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியது. எனது கிராண்ட்சிலாம் வாழ்க்கையை முடிக்க இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.
அப்போது சானியா மிர்சா உணர்ச்சி வசத்தில் கண் கலங்கினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் சிட்சிபாஸ் (கிரீஸ்)-கரன் கச்சனோவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா)-டாமி பால் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதி போட்டியில் சபலென்கா (பெலாரஸ்)-ரைபகினா (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
- கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.
- போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை.
புதுடெல்லி:
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இம்மாதம் நடக்கும் ஒரு போட்டி தொடருக்கு பிறகு டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
சமீபத்தில் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார். அதில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.
போட்டிக்கு பிறகு பேசிய சானியா மிர்சா உணர்ச்சிவசமாக காணப்பட்டார். இந்த நிலையில் சானியா மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஓய்வுக்கு பிறகு அடுத்த தலைமுறை வீரர்-வீராங்கனைகளுக்கு உதவ விரும்புகிறேன். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தவும், என்னால் முடிந்த உதவியை செய்யவும் விரும்புகிறேன்.
போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை. பொதுவாக என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறேன்.
ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு நான் பேசிய போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன். கிராண்ட்சிலாம் போட்டியில் பங்கேற்பது இதுவே கடைசி முறை என்ற வகையில் அரை இறுதி போட்டியுடன் முடித்ததற்கு நன்றியுடன் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அபுதாபி ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவு முதல் சுற்று நேற்று நடந்தது.
- இதில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
துபாய்:
அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது.
இதில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மெட்டக் சாண்டஸ் ஜோடி, பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிலிப்கன்ஸ், ஜெர்மனியின் லாரா செக்மண்ட் ஜோடியுடன் மோதியது.
இதில் சானியா மிர்சா ஜோடி 3-6,4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.






