என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital money transfer"

    • குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
    • நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யு.பி.ஐ. என்கிற (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.

    மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையாக யு.பி.ஐ. உள்ளது. இந்தநிலையில் கண் பாா்வையற்ற மற்றும் கல்வியறிவில் குறைந்த வாடிக்கையாளர்களுக்காக குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.

    இதற்காக நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    • டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN (இரகசிய எண்) மூலம் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக PIN பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.

    இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்படுகிறது.

    பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்

    இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இந்த புதிய முறை இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. 

    • "சிறு மாற்றங்கள், பெரிய தாக்கம்" என்று தெரிவித்துள்ளார்.
    • முதலில் அன்றாட வாழ்க்கை சற்று கடினமாக இருந்ததாக கூறினார்.

    டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா, Google Pay போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளால் தனது செலவுகள் அதிகரிக்கிறது என்று கூறி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    எனவே செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்காக தனது மொபைலில் உள்ள அனைத்து UPI அடிப்படையிலான செயலிகளையும் நீக்கியுள்ளார். "சிறு மாற்றங்கள், பெரிய தாக்கம்" என்ற தலைப்பில் "இந்த ஆண்டு, நான் Google Pay பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன்" என்று அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    உடனடி பணப் பரிவர்த்தனை வசதி, திட்டமிடப்படாத செலவுகளை (impulse purchases) ஊக்குவிக்கிறது என்பதால், அதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

    ஆன்லைன் பரிவார்த்தைகளை கைவிட்டதால், ஆரம்பத்தில் நண்பர்களிடம் காபி போன்ற சிறு விஷயங்களுக்கு கூட பணம் கேட்க வேண்டியிருந்ததால், அன்றாட வாழ்க்கை சற்று கடினமாக இருந்ததாகவும், ஆனால் நாளடைவில் அதற்குப் பழகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

    அனம் மிர்சாவின் இந்தச் செயல், டிஜிட்டல் பணம் செலுத்தும் பழக்கவழக்கங்கள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது. சிலர் இதை பாராட்டினால், சிலர் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    • சமீப காலங்களில் யூ.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது குறைந்து வருகிறது.
    • பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக மாற்றி விட்டன.

    யூ.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையாகிவிட்டன. சமீப காலங்களில் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் முறையில் பலவித புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி அதனை இன்னும் மிகவும் எளிமையாக்க பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பண மதிப்பு இழப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்றின் விளைவால் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்யப்படுவது பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

    டிஜிட்டல் வாலட்டுகள், நெப்ட்/ ஆர்.டி.ஜி.எஸ் (NEFT/RTGS), யூ.பி.ஐ, பேடிஎம், கூகுள் பே, பிம் ஆப், போன் பே மற்றும் பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிகவும் எளிமையாக மாற்றி விட்டன. இந்த சேவைகளின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. ஆனால் எந்த அளவிற்கு எளிமையாக மாறினாலும், அதே அளவிற்கு சில பிரச்சினைகளும் உருவாகின்றன. முக்கியமாக சமீப காலங்களில் யூ.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது குறைந்து வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம் இந்த யூ.பி.ஐ. முறையில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனையின்போது நமக்கே தெரியாமல் தவறான யூ.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் அதனை திரும்ப பெறுவது என்பது இயலாத காரியம். எனவே ஒரு வேளை நீங்கள் தவறுதலாக வேறொரு யூ.பி.ஐ. கணக்கிற்கு உங்களது பணத்தை அனுப்பி விட்டால் அதனை எந்த வழிகளில் திரும்ப பெற முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

    யூ.பி.ஐ. செயலியின் உதவிக் குழுவை அழைத்து பிரச்சினையை கூறலாம்:

    நீங்கள் எந்த செயலி மூலம் பணத்தை அனுப்பினீர்களோ அந்த செயலியின் உதவி குழுவை தொடர்பு கொண்டு நடந்த தவறை தெரிவிக்க வேண்டும். அனைத்து செயலிகளும் இது போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்காக தங்களுக்கென தனி வாடிக்கையாளர் சேவை குழுவை நிர்வகித்து வருகின்றன.

    * பிம் (BHIM) உதவி எண்

    இரண்டாவதாக பிம் (BHIM) எனப்படும் பாரத் இன்டர்பேஸ் பார் மணி என்ற செயலியின் இலவச வாடிக்கையாளர் உதவி எண்ணான 18001201740 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி கேட்கலாம். இது பிரத்யேகமாக வாடிக்கையாளர்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு என்று உருவாக்கப்பட்ட எண். அந்த எண்ணை தொடர்பு கொண்டு தவறாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான முழு விவரங்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    * வங்கி உதவி

    பணம் தவறுதலாக அனுப்பப்பட்டதை உணர்ந்து கொண்ட மறுகணமே, அந்த யூ.பி.ஐ. ஐ.டி. மற்றும் அனுப்பிய பணத்தின் மதிப்பு ஆகிய விவரங்களை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து நீங்கள் எந்த கணக்கில் இருந்து பணத்தை அனுப்பினீர்களோ அந்த வங்கியின் ஈ-மெயில் அல்லது தொலைபேசி வழியாக இந்த தகவல்களை அனுப்பி அவர்களிடம் உதவி கேட்கலாம். முடிந்தால் அந்த வங்கியின் மேலாளரை சந்தித்தும் உதவி கேட்கலாம். இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரே இடம் வங்கியாக மட்டுமே இருக்க முடியும். முடிந்த அளவு விரைவாக இதை நீங்கள் செய்ய வேண்டும்.

    இதில் இன்னொரு பிரச்சினையும் ஏற்படுவது உண்டு. சில நேரங்களில் தவறான யூ.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது நீங்கள் தவறாக பதிவிட்ட யூ.பி.ஐ. ஐ.டி. செயல்பாட்டில் இல்லையென்றால், உங்களது பணம் உடனடியாக உங்களது கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். எனவே உங்கள் பணம் உடனடியாக திரும்பவில்லை எனில் நீங்கள் தவறுதலாக பதிவு செய்த யூ.பி.ஐ. கணக்கு வேறு ஒருவருடையது என்பதையும், அந்த பணம் அவர்களுக்கு சென்றுவிட்டது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

    • டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
    • சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

    சண்டிகார் :

    பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகாரில், ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில், ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய்குமார் சவுத்ரி பேசியதாவது:-

    ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை மொத்த பயன்பாட்டுக்கும், சில்லரை பயன்பாட்டுக்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது.

    பணத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல்கல். சோதனை முறை முடிந்து, டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.

    தற்போது, 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி வெளியிட பரிசீலித்து வருகின்றன. ஜி20 அமைப்பை சேர்ந்த 18 நாடுகள் பரிசீலித்து வருகின்றன.

    டிஜிட்டல் கரன்சி என்பது சாதாரண பணத்தின் டிஜிட்டல் வடிவம் மட்டுமே. அதை சாதாரண பணத்துக்கான மாற்றுவழியாக கருதக்கூடாது. சாதாரண பணத்துக்கான அனைத்து மதிப்பும் டிஜிட்டல் கரன்சிக்கு உள்ளது. சாதாரண பணத்தைப்போல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

    ஆனால், சாதாரண பணத்துக்கு அளிப்பதுபோல், டிஜிட்டல் கரன்சிக்கு வட்டி அளிக்கப்படாது. டிஜிட்டல் கரன்சி, மின்னணு பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். பணம் செலுத்தும் முறையை மேலும் திறம்பட மாற்றும். சாதாரண பணத்தை கையாள்வதில் உள்ள செலவை குறைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உள்நாட்டு விளையாட்டு முதல் ஒலிம்பிக் போட்டி வரை மகளிர் சக்தியை நாடு கண்டது.
    • பகவான் ராமர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.

    குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது.

    தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    நாங்கள் திட்டமிட்ட இலக்குகளை 2வது ஆட்சி காலத்தில் நிறைவேற்றினோம். பொரும்பான்மை மக்களின் நம்பிக்கையால் அரசியல் சட்டம் 370வது பிரிவை நீக்கியுள்ளோம்.

    வழக்கத்தில் இல்லாத வழக்கொழிந்த பல காலனியாதிக்கச் சட்டங்களை நாங்கள் நீக்கி உள்ளோம்.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்கள் தண்டனை வழங்குவதையே நோக்கமாக உள்ளது.

    உள்நாட்டு விளையாட்டு முதல் ஒலிம்பிக் போட்டி வரை மகளிர் சக்தியை நாடு கண்டது.

    நாட்டில் உள்ள கிராமங்கள் தோறும் வளர்ச்சி அடைந்த பாரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

    அரசின் திட்டங்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதை அந்த யாத்திரை நோக்கமாக கொண்டுள்ளது.

    பகவான் ராமர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.

    வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும். பாஜகவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும். எங்களது மூன்றாவது முறை அரசுக்கான காலமும் வெகு தொலைவில் இல்லை.

    ஒட்டு மொத்த நாடு மட்டுமல்ல, கார்கே கூட சொல்கிறார் இந்த முறை மோடி அரசுதான் என்று. எங்களது மூன்றாவது முறை ஆட்சி காலம் மிகப் பெரும் முடிவுகளுக்கான ஆட்சியாக இருக்கும்.

    ஏழைகளுக்கு மரியாதை, சலுகை, வேலைகளை கொடுத்துள்ளோம். நாட்டின் அடுத்த ஆயிரம் ஆண்டு கால எதிர்காலத்திற்கு வரும் நாட்டின் அடித்தளம் அமைக்கும்.

    மக்களுக்கு நோய் வந்தால் அதற்கு தற்போது இலவச மருத்துவம் கிடைக்கிறது. இந்த நாட்டின் 140 கோடி மக்களின் மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். சாயையோர வியாபாரிகளுக்கு வங்கி கணக்கில் பணம் வழங்கப்படுகிறது.

    இதன்மூலம் வட்டி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு அதற்கான பயிற்சி நிதி உதவி என அனைத்தும் வழங்கப்படுகிறது.

    உலகம் முழுவதும் சென்று சிறுதானியங்களை பற்றி நான் தொடர்ந்து பேசி வருகிறேன். ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்ற போது கூட சிறு தானியங்களை பற்றி நான் தொடர்ந்து பேசினேன்.

    ஏழைகளின் கவலைகளை போக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஓபிசி மக்களுக்காக பல்வேறு பணிகளை முன்னாள் பீகார் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் செய்துள்ளார்.

    ஜனநாயகத்திற்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கர்ப்பூரி தாக்கூர். ஆனால், காங்கிரஸ் அவரை அவமானப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டது.

    நாட்டின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தில் பெண்கள் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    இன்று பெண்கள் நமது போர் விமானங்களையும் இயக்குகின்றனர், நாட்டையும் பாதுகாக்கின்றனர். முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்ததால், அதற்கு எப்படி செலவு செய்ய போகிறோம் என்ற விவாதம் தான் முதலில் எழும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. இளைஞர்களிடம் ஒரு புதிய உற்சாகத்தை காண முடிகிறது.

    டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×