என் மலர்

    நீங்கள் தேடியது "RBI"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.
    • கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும்.

    மும்பை:

    வங்கிகளில் கடன் வாங்கி வீடு, நிலம், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துகளை வாங்குவோரிடம் சொத்துப் பத்திரத்தை வங்கிகள் அல்லது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் வைத்துக் கொள்வது வழக்கமாகும். கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகு அந்த சொத்துப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் திருப்பி அளிப்பது, கடனில் இருந்து மீட்டுவிட்டதற்கான தடையில்லாச் சான்று பெறுவது, அடமானப் பத்திரத்தை ரத்து செய்வது ஆகியவற்றுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதிக காலம் எடுத்துக்கொள்வதாக புகாா்கள் தொடா்கின்றன.

    இந்நிலையில், இது தொடா்பாக ஆர்.பி.ஐ. வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளா் ஒருவா் கடனை முழுமையாக அடைத்த 30 நாட்களுக்குள் அவரிடம் இருந்து அடமானமாகப் பெற்ற சொத்துப் பத்திரங்களை திருப்பி அளித்துவிட வேண்டும். மேலும், அந்த சொத்து தொடா்பான அடமானப் பத்திரம் உள்ளிட்டவை இருந்தால் அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அந்தக் கடன் தொடா்பான அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும்.

    இதைச் செய்யாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தினசரி ரூ.5,000 தாமதக் கட்டணமாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும்.

    மேலும், வாடிக்கையாளா் கடன் பெற்ற குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் கிளையில் மட்டும் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறாமல், அவா் விரும்பும் கிளை மூலம் ஆவணங்களைத் திருப்பி அளிக்கவும் வசதி செய்து தர வேண்டும். இது தொடா்பான விவரங்களைக் கடன் பெறும்போது அளிக்கும் கடிதத்திலேயே வங்கிகள் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.

    கடன் பெற்றவா் இறந்துவிட்டால், அவரது சட்டப்படியான வாரிசுகளிடம் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும். இது தொடா்பான நடைமுறைகளையும் முன்னதாகவே வாடிக்கையாளருக்கு கூறிவிட வேண்டும்.

    எதிா்பாராதவிதமாக சொத்து ஆவணங்கள் சேதமடைதல், தொலைந்து போவது போன்ற நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கிகள், அந்த வாடிக்கையாளா் மாற்று ஆவணம் பெறுவதற்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும். இதற்கு 60 நாள்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார்.
    • சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சர்லாந்து மத்திய வங்கி ஆளுநர், வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அமெரிக்காவைச் சேர்ந்த 'குளோபல் ஃபைனான்ஸ்' என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில், தங்களது உத்திகளின் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இப்பட்டியலில், மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார்.

    சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சர்லாந்து மத்திய வங்கி ஆளுநர், வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 93 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    • கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது.

    2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கிக்கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    கிட்டத்தட்ட 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், பலர் இன்னும் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் தற்போது வரை 93 சதவீத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திரும்ப பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 76 சதவீத வைப்புத் தொகையாகவும் 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரிப்பு
    • விலைவாசி உயர்வு பணவீக்க எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன

    இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு காய்கறி விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணம்.

    பருவமழை மற்றும் புவிசார் பதற்றம் போன்ற காரணிகளும் முக்கிய காரணம். சில்லறை பணவீக்கம் காரணமாக மக்கள் அதிக அளவில் பணம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து பண்டிகை காலங்கள் வருவதால் இந்த பணவீக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    ஆனால், அடுத்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து காய்கறிகளின் விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சக்திகாந்த தாஸ் கூறுகையில் ''நாங்கள் காய்கறி பணவீக்கம் செப்டம்பரில் இருந்து குறையும் என எதிர்பார்க்கிறோம். புவிசார் பதற்றங்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்ற போதிலும், தானிய வகைகளின் விலை குறைய பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

    முக்கிய பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், கடந்த சில மாதங்களாக அதில் காணப்படும் நிலையான தளர்வு பணவியல் கொள்கை பரிமாற்றத்தின் அறிகுறியாகும்.

    தொடர்ந்து வரும் விலைவாசி உயர்வு, கடந்த வரும் செப்டம்பரில் இருந்து வருடம் பணவீக்க எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய விதிமுறைகளின் படி வாடிக்கையாளர்கள் மாறுபட்ட வட்டியில் இருந்து நிலையான வட்டி விகிதத்துக்கு மாறும் போது வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும்.
    • இ.எம்.ஐ உயர்த்துவது குறித்து முன்னமே வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    சொந்த வீடு என்பது அனைவரது கனவாக உள்ளது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு வருமானத்தை பொறுத்து லட்சக்கணக்கில் வீடு மற்றும் தனிநபர், வர்த்தக கடன்களை வழங்கி வருகிறது.

    கடனுக்கான விதிமுறைகள் தெரியாமலேயே பலர் கண்ணை மூடிக்கொண்டு வீட்டுக்கடன்களை வாங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5 முறை அதிகரித்தது. மொத்தம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கியவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    சுலப மாத தவணை (இ.எம்.ஐ.)அடிப்படையில் மாறுபடும் வட்டி விகித்ததை கொண்ட வீட்டு கடன்களை பொறுத்தவரை வட்டி உயர்த்தப்படும் போதெல்லாம் மாத தவணையும் அதிகரிப்பது வழக்கம். ஆனால் நிலையான வட்டிவிகிதம் என்பது மாறாமல் இருக்கும்.

    பெரும்பாலான வட்டி விகிதம் உயரும் போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் மாத தவணையை உயர்த்தியும், கடன் கால அளவை நீட்டித்தும் வருகிறது.

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிவித்து உள்ளது. தற்போது கடன்களுக்கான விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் முறையாக பின்பற்றாவிட்டால் அந்த கடன் தொகை மீது அபராத வட்டி விதித்து அதை வட்டியோடு சேர்த்து விடுகிறது.

    இதனை தடுக்க புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அடிக்கடி கடன் வட்டி அதிகரித்து வருவதால் கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் நிலையான வட்டி விகித்துக்கு மாற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், இ.எம்.ஐ உயர்த்துவது குறித்து முன்னமே வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சிலவகை கடன்களுக்கு மாத தவணை தொகையை (இ.எம்.ஐ.) உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

    மேலும் புதிய விதிமுறைகளின் படி வாடிக்கையாளர்கள் மாறுபட்ட வட்டியில் இருந்து நிலையான வட்டி விகிதத்துக்கு மாறும் போது வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும். பொதுவாக மாறுபடும் வட்டி விகிதத்தை விட நிலையான வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் நிலையான வட்டிக்கு மாறும் போது மாதாந்திர தவணை தொகை (இ.எம்.ஐ.) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது
    • உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும்

    இந்தியாவில் உள்ள வங்கிகளின் கையிருப்பில் போதிய அளவு பணம் இல்லையென்றால் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனாக பணத்தை பெறலாம்.

    இதற்காக அவ்வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளிக்க வேண்டிய வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட பல காரணிகளை கொண்டு தீர்மானிக்க படுக்கிறது. இதனை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியின் (Monetary Policy Committee) வல்லுனர்கள் முடிவெடுத்து ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள்.

    ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்த கமிட்டியின் சந்திப்பு ஆகஸ்ட் 8 முதல் 10 வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின்படி ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை (Repo rate) எந்த மாற்றமுமில்லாமல் 6.5 சதவீதத்திலேயே வைத்துள்ளது.

    சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவிலேயே வைத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

    இதனை அறிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-

    விவசாய கடன்களில் உயர்வு வளர்ச்சியை குறிக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தின் வேகம் நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது.

    உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும். ஆனால், உலகளவில் வளர்ச்சி என்பது குறைவதற்கான ஆபத்தும் அதிகம். பணவீக்கத்தின் போக்கை கூர்மையாக கவனித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.

    முன்னர் அதிகரித்திருந்த ரெப்போ வட்டி விகிதத்தின் தாக்கம் இப்போது பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியா விரைவில் மாறும். உலகின் பொருளாதார வளர்ச்சியில் 15 சதவீதம் இந்தியா வழங்குகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடந்த பிப்ரவரியில், அதற்கு முன்பு வரை 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் என உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.
    • தற்போது வரை 2000 ரூபாய் நோட்டுகளில் 88 சதவீதம் திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தது. மே மாதம் 23-ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    இதற்கிடையே, அறிவிப்பு வெளியான நாளில் இருந்து புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 75 சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 88 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    ஜூலை 31-ம் தேதி வரை ரூ.3.14 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.
    • அடுத்த மூன்று மாதங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி அறிவித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது:-

    ஜூன் 30ம் தேதி வரை 2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதில் 87 சதவீதம் டெபாசிட் மூலமாகவும், 13 சதவீதம் மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டதன் மூலமாகவும் திரும்ப பெறப்பட்டுள்ளன. மொத்தம் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதங்களை பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதுடன், கடைசிநேர பரபரப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர்.
    • ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

    சென்னை:

    ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள மக்களின் வங்கி பணவர்த்தனை நடவடிக்கைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இதனை இணைக்க வலியுறுத்தியது.

    சாமான்ய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களின் புள்ளி விவரங்களை சேகரிக்கும் வகையில் பான்-ஆதார் இணைப்பு கருதப்படுகிறது. கடந்த 2 வருடத்திற்கு மேலாக பொதுமக்களை வலியுறுத்தி வந்த நிலையில் 3 முறை நீட்டிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

    முதலில் ஒரு வருடத்திற்குள் இணைக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூ.500 அபராதத்துடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்பின்னர் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30-ந்தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்க இறுதி கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அவை முடிந்தது.

    நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர். கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பிட்ட அளவில் இணைக்கவில்லை. வங்கி நடைமுறையை பின்பற்றாதவர்கள் தான் அதிகளவில் இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் வெளியிட வேண்டும். இன்னும் குறிப்பிட்ட அளவிலான சதவிகிதத்தினர் இணைக்காததால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் கூறும்போது, பானுடன் ஆதார் எண்ணை இன்னும் பலர் இணைக்காமல் உள்ளனர். இது முழுக்க முழுக்க வங்கி பணியை சார்ந்ததாகும். ஒருவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. புதிதாக வாங்குவது போன்ற விவரங்கள் ஆதார் மூலம் தெரியவந்து விடும். வங்கியில் பணம், காசோலை பரிவர்த்தனை விவரங்கள் பான் கார்டு மூலம் தெரியும். இந்த இரண்டையும் இணைத்து விட்டால் ஒட்டுமொத்த ஒருவரது சொத்து, பண பரிவர்த்தனை தெரிந்து விடும்.

    அதனால் சிலர் இணைக்காமல் உள்ளனர். ஒருசிலர் அறியாமையால் இணைக்கவில்லை. இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்யும். இதுபற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிகிறது.
    • டெல்லி, அகமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் ரூ.2000 நோட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. கடந்த 23-ந் தேதி முதல் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    தொடக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது. தற்போது அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிகிறது.

    வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.

    கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2000 ரூபாய் நோட்டு பரிவர்தனைகள் அதிகரித்துள்ளதாக தனியார் வங்கி ஒன்று தெரிவித்துள்ளது.

    மே 23 முதல் ஜூன் 5 வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட் மற்றும் பரிமாற்றம் மூலம் ரூ.1,950 கோடி மதிப்பிலான 97 லட்சம் யூனிட் 2,000 நோட்டுகளை பரிவர்த்தனை செய்துள்ளது.

    இதில் சுமார் 78 லட்சம் பிங்க் நோட்டுகள் ரூ.1,600 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, அகமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் ரூ.2000 நோட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print