என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "RBI"
- உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
- 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1. ரிசர்வ் வங்கியின் பயணம் இந்தியப் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது.
2. எங்களின் பல பொறுப்புகளை நிறைவேற்றும்போது கற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுகிறோம்.
3. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டியை 6.5 சதவீதமாக நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
4. வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் கொள்கை பணவீக்கத்தை 4 சதவீத இலக்கை கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்கான இடத்தை வழங்குகிறது.
5. உணவுப் பணவீக்க அழுத்தங்கள் பிப்ரவரியில் அதிகரித்தன; பணவீக்கத்தின் தலைகீழ் ஆபத்தில் எம்.பி.சி. விழிப்புடன் உள்ளது.
6. உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
7. கிராமப்புற தேவை மற்றும் நுகர்வு2025 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8. 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.
9. உலகளாவிய வளர்ச்சி மீள்தன்மையுடன் உள்ளது. சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டி நிலை உள்ளது.
10. தொடரும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் பொருட்களின் விலைகளில் தலைகீழான அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
11. அறையில் இருந்த யானை (பணவீக்கம்) நடைபயிற்சிக்கு வெளியே சென்றதுபோல் தெரிகிறது. அது மீண்டும் காட்டில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
12. விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே எங்கள் முயற்சி
13. வங்கிகள், என்.பி.எஃப்.சி-க்கள், பிற நிதி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்வாகத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்
14. ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரச் சந்தையில் சில்லறை வணிக பங்களிப்பை எளிதாக்க மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
15. இந்தியாவின் அந்நிய செலாவணி இது வரை இல்லாத அளவிற்கு மார்ச் 29-ல் உயர்வு.
- 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
- 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று 2000 ரூபாய் நோட்டுகளில் கிட்டத்தட்ட 97.69 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும் மற்றும் 8,202 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்ட மே 19, 2023 அன்று வணிகம் முடிவடையும்போது ரூ.3.56 லட்சம் கோடியாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் மாத வணிக முடிவில் ரூ.8,202 கோடியாகக் குறைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இதனால், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 97.69 சதவீதம் திரும்பி வந்துவிட்டன. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது
- தங்க நகைகளின் தூய்மையை பரிசோதிப்பதில் தவறுகள் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்தது
1995ல் நிர்மல் ஜெயின் (Nirmal Jain) என்பவர் தொடங்கிய நிதி வர்த்தக சேவை நிறுவனம்,"ஐஐஎஃப்எல்" (India Infoline Finance Limited).
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஐஎஃப்எல் (IIFL), இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் நிதி வர்த்தக சேவை ஆற்றி வருகிறது.
பல்வேறு நிதி சேவைகளில் ஈடுபட்டு வரும் ஐஐஎஃப்எல், தங்க நகைக்கடன் வழங்குவதிலும் முன்னணியில் உள்ள வங்கி-சாரா நிதி நிறுவனமாக (NBFC) உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் வங்கி சேவைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை கண்காணிக்கும் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), ஐஐஎஃப்எல் தங்க நகைக்கடன் வழங்குவதை தடை செய்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
இதுவரை வினியோகிக்கப்பட்ட தங்க நகைக்கடன் தொடர்பான வசூல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடர தடையேதுமில்லை.
ஆர் பி ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
தங்க நகைக்கடன் வழங்குவதில் பல முறைகேடுகள் இருந்தது.
தங்க ஆபரணங்களின் தூய்மையை (purity) பரிசோதிப்பதில் கடன் வழங்கும் போது ஒரு நடைமுறையையும், தவணைகளை கட்ட தவறியவர்களின் நகைகளை ஏலம் விடும் போது வேறொரு நடைமுறையையும் கடைபிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கி-சாரா நிதி நிறுவனங்களுக்கு உள்ள கடன் வழங்கும் எல்லையை கடந்து கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படவில்லை.
வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பிடித்தம் செய்யப்படும் சேவைக்கட்டணங்களில் சீரான கட்டண அமைப்போ வெளிப்படைத்தன்மையோ இல்லை.
நிறுவனத்தின் கணக்குகளை ஆர்பிஐ-யின் சிறப்பு தணிக்கை குழு தணிக்கை செய்து முடித்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"ஆர்பிஐ விதித்துள்ள சட்டதிட்டங்களின்படி தங்க நகைக்கடன் வழங்க அனைத்து நிர்வாக மற்றும் செயலாக்க நடைமுறைகளும் மாற்றி அமைக்கப்படுகிறது" என நிறுவனர் நிர்மல் ஜெயின் தெரிவித்தார்.
- 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
- கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை.
மும்பை:
2,000 ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வேறு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. பிறகு இந்த கால அவகாசம் அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை. அதாவது, 97.62 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன. .
அந்த நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். அல்லது, எந்த தபால் நிலையத்திலும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி, தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.
- பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.
பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் யு.பி.ஐ. தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழங்குநராக செயல்பட விடுத்துள்ள கோரிக்கையை ஆய்வு செய்ய தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 15, 2024-க்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி தனது அக்கவுண்ட்கள் மற்றும் வாலெட்களில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்த ஜனவரி 31-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
பண பரிமாற்றங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் பேடிஎம் வாடிக்கையாளர்களின் பணத்தை தற்காலிகமாக வைத்துக் கொள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு பயனர்கள் கியூ.ஆர். கோடுகள், சவுண்ட்பாக்ஸ் மற்றும் கார்டு மெஷின்களில் பரிமாற்றம் செய்யலாம்.
தற்போது ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டால், பேடிஎம்-இன் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் இருந்து புதிய வங்கிகளுக்கு மாறிவிடும். எனினும், இது தொடர்பான உத்தரவுகள் வெளியாகும் வரை புதிய பயனர்கள் இந்த சேவையில் இணைக்கப்பட மாட்டார்கள்.
- ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும்.
- 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. பின்னர் கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும். நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தகம் பலவீனமாக இருந்தாலும் அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பணவீக்கம் இலக்கை நெருங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெப்போ வட்டி விகிதம் 6-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வீடு, வாகனம். மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை.
- புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிப்பு.
- தொடர்ந்து விதிமுறைகளை மீறியதால் தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலரும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர். அந்த வகையில், நாடு முழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.
வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது, கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது, பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.
வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்.
- வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
- எந்த தபால் நிலையத்தில் இருந்தும் ‘இந்தியா போஸ்ட்’ மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
மும்பை:
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த மே 19-ந் தேதி, அந்த நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று அறிவித்தது. பின்னர், இந்த கால அவகாசம், அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, 97.38 சதவீத நோட்டுகள், வங்கிக்கு திரும்பி விட்டன.
மீதி ரூ.9 ஆயிரத்து 330 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அவை தொடர்ந்து செல்லுபடி ஆகும்.அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது எந்த தபால் நிலையத்தில் இருந்தும் 'இந்தியா போஸ்ட்' மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்.
ரிசர்வ் வங்கி, எச்.எடி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி. வங்கிகளுக்கு நேற்று (டிசம்பர் 26) காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான மின்னஞ்சலில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தாஸ், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மிரட்டல் தொடர்பாக குஜராத் மாநிலத்தை அடுத்த வதோதராவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வங்கிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் ஏமாற்று வேலை என்று தெரியவந்தது.
- ரிசர்வ் வங்கி உள்பட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்:
மும்பை:
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.
இதேபோல் மும்பையில் மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்:
- என்.டி.ஏ. அரசு 2004ல் பழைய பென்சன் திட்டத்தை நிறுத்தி விட்டது
- தொடக்கம் முதலே அரசு ஊழியர்கள் புது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
அரசு ஊழியர்களின் பணிக்காலம் நிறைவடைந்ததும் அவர்கள் இறுதியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படை தொகையை கணக்கிட்டு மாதாமாதம் நிலையாகவும் நிரந்தரமாகவும் ஒரு தொகையை அரசாங்கம் வழங்கி வந்தது. இது மாதாமாதம் முதல் வாரத்தில் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதால், நிலையான நிரந்தரமான வருமானமாக அவர்களுக்கு இருந்தது. இத்திட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) எனப்படும்.
2004ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதில் மாற்றம் கொண்டு வந்தது. இதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தாங்களாக முன்வந்து ஒரு தொகையை மாதாமாதம் செலுத்த வேண்டும். இத்துடன் பணியாளர்களின் அடிப்படை தொகையின் 14 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தன் பங்காக அரசாங்கம் ஒரு தொகையை செலுத்தும். இதுவே ஓய்வூதியமாக வழங்கப்படும். இத்திட்டம் புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) எனப்படும்.
2009 வருடத்திலிருந்து 18 வயதிலிருந்து 60 வயது வரை எந்த துறையில் பணியாற்றுபவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேரலாம் என இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.
அரசின் செலவினங்களை குறைக்கும் முயற்சியாகவும், பல துறைகளை சேர்ந்தவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில் அமைந்ததாலும், இத்திட்டத்தை பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பின்பற்றி வந்தன.
ஆனால், நிரந்தரமாக மாதாமாதம் ஊழியர்களுக்கு கிடைத்து வந்த நிலையான வருமானம் நின்று போனதால், அரசு ஊழியர்கள் என்.பி.எஸ். திட்டத்தை எதிர்த்து வந்தனர்.
சமீபத்திய சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வென்றுள்ள பா.ஜ.க. அங்கு முன்னர் இருந்த அரசுகள் அமல்படுத்தி வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர போவதாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் வென்றுள்ள தெலுங்கானாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (RBI) "மாநில நிதிநிலைமை: 2023-24க்கான பட்ஜெட் குறித்த ஆய்வு" எனும் அறிக்கையை வெளியிட்டது. அதில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:
"சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மீண்டும் திரும்பி உள்ளதும், சில மாநில அரசுகள் திரும்ப உத்தேசித்திருப்பதும் தவறான முடிவு. இது மாநில அரசுகளின் நிதி ஆதாரத்திற்கு பெரும் சுமையாக மாறி விடும். மாநிலத்தில் ஒரு அரசு செயல்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான பெரும் திட்டங்களுக்கான செலவினங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும். இது ஒரு பிற்போக்கான முடிவு. இதன் மூலம் சுமார் 4.5 மடங்கு வரை நிதிச்சுமை அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எதிர்கட்சிகள் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்துவோம் என பிரசாரம் செய்வதும், அதற்கு ஒரு சில அரசு ஊழிய தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு அளிப்பதும் அதிகரித்து வரும் நிலையில், ஆர்.பி.ஐ.-யின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
- 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- ரெப்போ வட்டி தொடர்ந்து 6.5 சதவீதமாக இருக்கும். எந்த மாற்றமும் இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.5 சதவீதமாக தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகக் பொருளாதாரம் தொடர்ந்து உடையக் கூடியதாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி முந்தைய 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கி- கார்பரேட் ஆகியவற்றின் ஆரோக்கியமான இரட்டை சமநிலைக்கு தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.
உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன.
முக்கிய பணவீக்கத்தில் பரந்த அடிப்படையிலான தளர்வு உணவு பணவீக்கத்திற்கு ஆபத்தானது. 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்