என் மலர்
நீங்கள் தேடியது "கடன்"
- கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
- தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
சென்னை:
ஒரு வங்கியின் இயக்குனர்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது உறவினர்களுக்கு அதேவங்கியில் அதிகளவில் கடன் வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த கடன் பெரும்பாலும் வாராக்கடன் ஆகி பொதுமக்களின் பணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி ஒரு வரைவு அறிக்கையை, நேற்று வெளியிட்டுள்ளது. இது அடுத்தாண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி வங்கியின் இயக்குனர்கள், புரமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வங்கியில் 5 சதவீத பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆகியோர் தங்களின் உறவினர்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு தங்கள் வங்கியில் கடன் வழங்கக்கூடாது. அப்படியே கடன் வழங்கினாலும், சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தால் அது தொடர்பான முடிவெடுக்கும் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. மேலும் ஜாமீன், கடன் தள்ளுபடி, மீட்பு, வாராக்கடன் தீர்வு போன்ற எந்தப் பணிகளிலும் பங்கேற்கக்கூடாது.
அவர்களுக்கு கடன் வழங்குவதற்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.50 கோடி வரை மட்டுமே கடன் தரலாம். ஒன்று முதல் ரூ.10 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள நடுத்தர வங்கிகள் அதிகபட்சமாக ரூ.10 கோடியும். ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள சிறிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.5 கோடியும். உள்ளூர் வங்கிகள் மற்றும் மத்திய-மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடியும், என்பிஎப்சிகள் ரூ.10 கோடி வரையும் மற்ற அனைத்து நிதி நிறுவனங்கள் ஆகியவை ரூ.50 கோடி வரையும் கடன் கொடுக்கலாம்.
இப்படி வழங்கப்படும் கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்கு கடன் விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும். வங்கிகள் ஆண்டுதோறும் தங்களது நிதி அறிக்கைகளில் எவ்வளவு கடன் தொடர்புடையவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அவற்றில் எவ்வளவு கடன் வாராக்கடன் நிலைக்கு சென்றது என்பதனை வெளிப்படையாக குறிப்பிட்ட வேண்டும். இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுத்தொகையை ஒதுக்கீடாக வைத்திருப்பதை கட்டாயப்படுத்தும். மேலும் கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடன் ஜாமீன் வழங்கக்கூடாது.
இந்த கட்டுப்பாடுகள் வங்கியின் நிர்வாகிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மட்டும் பொருந்தும். பொதுமக்கள் எடுக்கும் வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கு இந்த வரம்புகள் எதுவும் பொருந்தாது.
- மாதம் ரூ.4,200 சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கினேன்.
- வங்கியில் இருந்து FD மூலம் மாதம் 60,000 வட்டி கிடைக்கிறது.
பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் 10ம் வகுப்பு வரை தான் படித்திருந்தாலும், தனக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் சிறுக சிறுக சேமித்து 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி இருக்கிறார்.
ரூ.1 கோடி சேர்த்ததாக ரெட்டிட் தளத்தில் நபர் ஒருவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அந்த பதிவில், "2000களில் மாதம் ரூ.4,200 சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கினேன். 20 வருடங்களுக்கு பிறகு ஓய்வு பெறும் போது ரூ.63,000 சம்பளம் வாங்கினேன். இப்போது வங்கியில் ரூ.1.01 கோடி சேர்த்துள்ளேன். அதில் இருந்து எனக்கு வங்கியில் இருந்து FD மூலம் மாதம் 60,000 வட்டி கிடைக்கிறது. சரியான நிதி திட்டமிடலே இதற்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.
கடன் எதுவும் இல்லாமல் ரூ.1 கோடி சேர்த்த நபரின் பதிவு இணையத்தில் பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.
- பித்ரு தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார் இந்த ருண விமோசன கணபதி.
- விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு, பின்னர் தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும்.
அருகம்புல் வழிபாடு ஆன்மிக வழிபாட்டில் தனிச் சிறப்பு பெற்றது. அதுவும் விநாயகரையும் அருகம்புல்லையும் பிரிக்கவே முடியாது எனலாம். அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமானின் 54 அவதாரங்களில் 27 வது அவதாரமாக விளங்கும் 'ருண விமோசன கணபதி' தனிச் சிறப்பு பெற்றவர். ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடைபெறுவது. அதாவது நம்முடைய கடன்களிலிருந்து விடுவித்து காக்கும் கணபதி என்று பொருள்.
கடன் என்றால் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மட்டும் கிடையாது. நம் முன்னோர்களுக்கு நாம் செய்யத் தவறிய கடமைகளும் கடன் தான். அத்தகைய பித்ரு தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார் இந்த ருண விமோசன கணபதி.
ருண விமோசன கணபதி எல்லா ஆலயங்களிலும் இருக்க மாட்டார். இவரை வழிபடுவதற்காக இவர் இருக்கும் ஆலயத்தை தேடிச் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை. உங்கள் வீட்டில் உள்ள விநாயகரையே வழிபடலாம் அல்லது அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றும் வழிபடலாம்.
கடன்சுமை தீர்க்கும் அருகம்புல் வழிபாடு:

விநாயகர் வழிபாடு செய்வதற்கு முதல் நாள் இரவு 16 அருகம்புல் எடுத்து அதுவும் நுனி உடையாமல் எடுத்து தயிரில் போட வேண்டும். அருகம்புல் கிடைக்காத சூழ்நிலையில் குறைந்தது 3 ஆவது இருக்க வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்ததும் குளித்து முடித்து பூஜை அறையை அலங்காரம் செய்ய வேண்டும். விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு, பின்னர் தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும். பிறகு ஒவ்வொரு அருகம்புல்லாக எடுத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி அர்ச்சனை செய்யும் போது, "ஓம் ருண விமோசன கணபதியே போற்றி" என பாராயணம் செய்ய வேண்டும். நீங்கள் ஆலயத்திற்கு செல்ல விரும்பினால் விநாயகரை 3 முறை சுற்றி வலம் வந்து பின்னர் செல்லலாம். இந்த வழிபாட்டை தொடர்ந்து 27 நாட்கள் செய்துவர உங்களை கடன் சுமையிலிருந்து ருண விமோசன கணபதி காத்தருள்வார் என்பது ஐதீகம்.
- உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மூடிஸ் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
- இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்கை 'AAA'-வில் இருந்து 'Aa1' ஆக மூடிஸ் நிறுவனம் குறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மூடிஸ் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
இந்நிறுவனம் அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'AAA' (outlook)-ல் இருந்து 'Aa1' (Stable) ஆக குறைத்தது அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'Aa1' ஆக மூடிஸ் நிறுவனம் குறைத்ததால் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
- 80 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், 209 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
- 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடிக்கான கடன் உதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிறுவன தின விழாவில் ஒரு பகுதியாக வங்கி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்திய வங்கியின் நிறுவனர்களுக்கு தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப் பட்டது.
வங்கியின் 'மேன்ட் இ-லாபி'-யை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியு மான எஸ்.கிருஷ்ணன், செயின்ட் மேரிஸ் கல்லூரி பேராசிரியர் ஷிபானா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 80 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், பல்வேறு இடங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 209 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி யில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
முகாமை நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் (கடன் பிரிவு) நாராயணன் வரவேற்றார். இதில் மருத்துவ கல்லூரி டீன் சிவகுமார், தொழில திபர்கள் தங்கவேல் நாடார், டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கடனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினர்.
வங்கியின் கடன் பிரிவு துணை பொது மேலாளர் விஜயன் நன்றி கூறினார். இந்த கடன் வழங்கும் முகாம் வங்கியின் 12 மண்டலங் களிலும் நடைபெற்றது. இதில் மொத்தமாக 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடிக்கான கடன் உதவி வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலையில் 101-வது நிறுவன தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள், வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியால் கவுரவிக்கப்பட்டனர்.
பொது மேலாளர் (இயக்கம் மற்றும் சேவைகள் பிரிவு)சூரியராஜ் வரவேற்றார். அப்போது வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த வங்கியின் முன்னாள் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தியை வரவேற்று கவுரவித்தார். தொடர்ந்து இருவரும் சிறப்புரை ஆற்றினர்.
முன்னாள் இயக்குனர் சி.எஸ்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் வங்கியின் கால் சென்டரை சிறப்பு விருந் தினர் கே.வி.ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.
நிறுவன தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முடிவில் கடன் மீட்பு துறை பொது மேலாளர் இன்பமணி நன்றி கூறினார்.
- கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.
பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.
பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.
ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.
- 23-ந்தேதி முதல் நடக்கிறது
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ( டேப்செட்கோ ) மூலம் தனி நபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டங்களை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.
அதன்படி கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதியும், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் 24-ந் தேதியும், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் 25-ந் தேதியும் , கல் குளம் தாலுகா அலுவலகத்தில் 28-ந் தேதியும் , தோவாளை தாலுகா அலுவலகத்தில் 29- ந் தேதியும், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் 30-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் . இந்த சிறப்பு முகாம்களில் சிறுபான்மையினர் கடன்பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
தனிநபர் கடனுக்கு விண் ணப்பிக்கும்போது சாதிச் சான்று, வருமானச்சான்று, இருப் பிடச் சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
- ஆதி திராவிடர்-பழங்குடியினர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆதி திராவிடர் மற்றும் 1 பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி, திட்டத் தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும் அல்லது விவசாய கூலி தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும். தொழில் மற்றும் விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின் கீழ் நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். வாங்கப்படும் நிலத்தினை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம்தொடர்பு கொள்ளலாம்.
மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட தாட்கோ, மேலாளர் அலுவலகத்தை அணுகி, உரிய விவரத்தினை பெற்று புகைப்படம், சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, ஆதார் அட்டை, ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328 - 276317, 9445029470 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
- பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் தஞ்சாவூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள். சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப்பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
- கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சீமாட்டி (33), இவர் திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனை செல்வக்குமார் பலமுறை திருப்பி கேட்டுள்ளார். அதில் ஒரு சில நேரங்களில் அசிங்கமாக திட்டியும் கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 9- ந் தேதி சீமாட்டியை அசிங்கமாக திட்டி வேப்பூர் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வழைத்து செல்வக்குமாரும் அவரது மனைவி விஷ்ணு பிரியாவும் சீமாட்டியை மிரட்டி கையால் அடித்து அவரது சொத்தை எழுதி வாங்கிவிட்டதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் சீமாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு பேசியதாவது,
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி, நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.
விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு பயிர் கடன் ரூ.4961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1238.07 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, இதர விவசாய கடன்கள் ரூ.136.90 கோடி, விவசாயத்துக்கான கடன் மொத்த மதிப்பீடு ரூ.6452.27 கோடியாகவும், சிறுகுறு நடுத்தர தொழில் கடன் ரூ.3657.75 கோடி, ஏற்றுமதி கல்வி மற்றும் கடன் வசதிக்கான கடன் மதிப்பீடு ரூ.294.79 கோடி ஆகும்.
அடிப்படை கட்டுமான வசதிக்கான கடன் ரூ.66 கோடி ஆகும். மகளிர் சுய உதவி குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் ரூ.757.80 கோடி என அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து அதற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப் படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.
வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவில் முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் ரமேஷ், முன்னாடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- மனைவி வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட வேண்டும்.
- ஆண்டு அதிகமாக இருந்தால் மாதத் தவணை குறைவாக இருக்கும்.
வீடு கட்ட வேண்டும் என்று ஒரு குடும்பத்தில் முடிவு செய்தால் முதலில் என்ன செய்வார்கள்? வங்கிக்கடன் எவ்வளவு கிடைக்கும் என்றுதான் கணக்கு போடுவார்கள். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கவில்லை என்றால் எஞ்சிய தொகைக்கு என்ன செய்யலாம் என்று மனதை குழப்பிக்கொள்வார்கள். ஆனால், வீட்டில் கணவன், மனைவி என இரண்டு பேருமே வேலைக்குப் போனால் இப்படியெல்லாம் குழப்பிக்கொள்ள தேவையில்லை.
இருவரின் சம்பளத்தையும் கணக்கில் காட்டி அதிகமான தொகையை வீட்டுக்கடனாக வாங்கிவிடலாம். வீட்டுக்கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது முதலில் கடன் கேட்பவரின் வருவாயைத்தான் வங்கிகள் பரிசீலிக்கும். ஈட்டும் வருவாய், வயது எனச் சில விஷயங்களை கருத்தில்கொண்டுதான் வீட்டுக் கடனை நிர்ணயிப்பார்கள். கணவன் மட்டுமே ஈட்டும் வருவாயைக் கொண்டு வழங்கப்படும் வீட்டுக்கடன் போதுமானதாக இல்லை என்று கருதினால், மனைவியை இணைத்துக்கொண்டும் கூடுதல் வீட்டுக்கடன் கேட்கலாம்.
ஆனால், அதற்கு மனைவி வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட வேண்டும். ஒரு வேளை மகன் வேலைக்குச் சென்றால் தந்தை-மகன் வருவாயைக் காட்டி கூடுதல் வீட்டுக்கடன் கேட்கலாம். வங்கிகளில் கேட்ட கடனைக் கொடுக்காமல் இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. கடன் வாங்குபவருக்கு அதைத் திருப்பி செலுத்தும் அளவுக்கு பொருளாதார வசதி இருக்க வேண்டும் அல்லவா? கூடுதலாகக் கொடுத்துவிட்டு பிறகு கட்ட முடியாமல் போனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே வங்கிகள், அவ்வாறு செயல்படுகின்றன.
அதே சமயம் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்குக் குடும்பத்தில் வருவாய் இருக்கிறது என ஆதாரம் காட்டினால் கூடுதலாகக் கேட்கப்படும் கடன் கிடைத்துவிடும். கணவன்-மனைவி அல்லது தந்தை-மகன் எனக் கூட்டாகச் சேர்ந்து கடன் வாங்கினால் விரைவாகத் தவணையைச் செலுத்த வேண்டும் என்றில்லை. கூட்டு வீட்டுக் கடனை தவணையாகச் செலுத்த 5 முதல் 25 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுப்பதற்கான வசதிகள் இருக்கின்றன.
வயது, பொருளாதார நிலைமை, வேலையிலிருந்து ஓய்வு பெறும் வருடம் என இதையும் கணக்கில் கொண்டு தவணையைச் செலுத்த கால அவகாசம் வழங்குவார்கள். 25 வயதில் கடன் வாங்கினால் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை கூட கால அவகாசம் கிடைக்கும். ஆனால், 50 வயதில் கடன் வாங்கினால், அதை வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே இந்தச் சூழ்நிலையில் செலுத்தும் மாதத் தவணை தொகை அதிகமாகிவிடும்.
ஆண்டு அதிகமாக இருந்தால் மாதத் தவணை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சாவகாசமாகத் தவணையைச் செலுத்த நினைக்கக் கூடாது. தவணைத் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இதில் மொத்தமாகச் செலுத்தும் தவணைத் தொகையைச் சேர்த்துப் பார்த்தால் அதிகத் தொகை கட்ட வேண்டிய நிலை வந்துவிடும். அதனால் தேவையில்லாமல் நீண்ட காலத் தவணையைத் தேர்வு செய்யாமல், பொருளாதார நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுப்பது நல்லது.






