search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "credit"

    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியாக பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிதாக கறவை மாடு வாங்குவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி கிளையில் முதல் கட்டமாக சுமார் பத்து நபர்களை தேர்வு செய்து நபர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கும் கடன் முயற்சியை ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்டு வந்தார்.

    அதன் அடிப்படையில் இங்குள்ள சமுதாயக் கூடத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர் அஞ்சு, துணைத் தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி,வார்டு உறுப்பினர்கள்,பொன்னமராவதி வி. என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திரமோகன் என்பவர் வேலை செய்து வந்தார்.
    • வங்கி அதிகாரிகள் புரோட்டூர் போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டூர் மைதுகுரு சாலையில் பாரத ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக சந்திரமோகன் என்பவர் வேலை செய்து வந்தார்.

    இவர் அதே ஊரில் உள்ள 39 நபர்களின் பெயரில் கவரிங் நகைகளை தங்கமுலாம் பூசி வங்கியில் அடகு வைத்து ஒரு ஆண்டில் 3.17 கோடி கடன் பெற்று உள்ளார்.

    வங்கி அதிகாரிகள் அடகு வைத்த நகைகளை சரி பார்த்தபோது 39 பேர் பெயரில் வைக்கப்பட்ட நகைகள் முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பதை கண்டுபிடித்தனர்.

    இது குறித்து வங்கி அதிகாரிகள் புரோட்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சந்திரமோகன் 3 வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி போலீசார் ஷமீர் அகமது வை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நான் உயர் ரக கார்களை வாங்குகிறேன் என்று முதலீடு செய்ய வருபவர்களிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார் பாளையத்தை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் ரூ.1 லட்சத்திற்கு ரூ.12 ஆயிரம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தார். இதற்காக தனி அலுவலகம், ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடமிருந்து 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளை பெற்றார். இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பாக தலைமறை வானார். சென்னையில் பதுங்கியிருந்த ஷமீர் அகமதுவை கண்டறிந்த ஏஜெண்டுகள், அவரிடம் லாவகமாக பேசி மூரார்பா ளையத்திற்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஓப்ப டைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் ஷமீர் அகமது வை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்க ளிடம் இருந்து முதலீடு களை பெற ஷமீர் அகமது கையாண்ட யுக்திகள் குறித்த தகவல்கள், அவரது ஏஜெண்டுகள் மூலமாக வெளியாகியுள்ளது. பொது மக்களிடம் இருந்து பெற்ற பணத்தை கட்டு கட்டாக அடுக்கி வைத்து அதனுடன் ஷமீர் அகமது வீடியோ எடுத்துக் கொள்ளார்.

    தன்னை நம்பி எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது பாருங்கள் என முதலீடு செய்ய வருபவர்களிடம் காண்பித்துள்ளார். உயர்ரக கார்களான ஆடி, வோல்ஸ் வேகன், பி.எம்.டபள்யு, ஜாகுவார் போன்ற வாகனங்களை வாங்கி அதில் பயணம் செய்வது. இதனை வீடியோ எடுக்கும் ஷமீர் அகமது, நீங்கள் அளிக்கும் பணத்தை சினிமா தொடர்புடையவர்களுக்கு வட்டிக்கு அளிக்கிறேன். அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு பாதி தருகிறேன். மீதியை வைத்துதான் நான் உயர்ரக கார்களை வாங்குகிறேன் என்று முதலீடு செய்ய வரு பவர்களிடம் கூறியுள்ளார். மேலும், உயர்ரக கார்கள், மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்று வருவதால் முதுகு வலி ஏற்படு வதாகவும், விரைவில் ஹெலி காப்டர் வாங்க உள்ளதாகவும் கூறி யுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த மொத்தபண மான ரூ.70 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். மேலும், விரைவில் நடை பெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடனாக பணம் கேட்பதாகவும், நிறைய முதலீடுகளை பெற வேண்டுமென்று ஏஜெண்டு களிடம் கூறியுள்ளார். இவை யனைத்தையும் நம்பிய பொதுமக்கள் பல கோடி ரூபாயினை ஷமீர் அகமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வழியாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும் அளிக்கப்படும். விற்பனை செய்ய வாங்கும்பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென் பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501(ம) 503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641604 என்ற முகவரியையும், 94450 29552 ,0421-297112 என்ற செல்போன், தொலை பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் தொழில்துறை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார். தொழில் முதலீட்டு கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் பழனிவேல், தொழில் முதலீட்டு கழக மறைமலைநகர் கிளை மேலாளர் சுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் சிப்காட் திட்ட அலுவலர் நளினி குறு சிறு தொழில் முதலீட்டு அசோசியேஷன் செயலாளர் தனசேகரன், கருங்குழி அரிசி ஆலை செயலாளர் குமார் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    இதில் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகையாக ரூ.30 கோடி வழங்கப்பட்டது.

    • ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார்.
    • கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த நபர் ரூ.200 நோட்டுகள் 3 கொடுத்து இறைச்சி வாங்கினார்.

    ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்த உபைஸ் அலி (24) என்பதும், இவர் மேட்டூர் சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் (40) என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து சம்பந் தப்பட்ட பேன்சி ஸ்டோரில் மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய செல்போன, கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

    மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது அலீபா மகனான காஜாமைதீன் (40) மேட்டூரில் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இவருக்கு ரூ.20 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக திட்டமிட்ட அவர் தனது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மஜீத் தெருவை சேர்ந்த முகமது பாபு மகன் அப்துல் அகீம் (24), தனது கடையில் வேலை பார்த்த உபைஸ் அலி (24) என்பவரையும் மேட்டூருக்கு அழைத்து வந்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் மேட்டூர் சதுரங்காடியில் பேன்ஸி ஸ்டோரில் கலர் பிரிண்டர் ஒன்றை வைத்து, அதில் 200 ரூபாய் நோட்டுகளை செல்போன் செயலி மூலமாக நகலெடுத்து, மேட்டூர் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    நேற்று காஜாமைதீன் நகல் எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து நாட்டுக் கோழி வாங்கி வரும்படி அனுப்பி வைத்தார்.

    இந்த நோட்டுகள் போலியானவை என இறைச்சிக் கடைக்காரர் கண்டுபிடித்து விட்டதால் இந்த கும்பல் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து கடை உரிமையாளர் காஜா மைதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும், எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது -

    படித்த வேலைவா ய்ப்பற்ற இளைஞர்கள் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெற்று சுயதொழில் தொடங்கிட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் தமிழக அரசு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் ரூ.5 கோடி வரையிலான வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்து தொழில் முனைவேர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் வங்கி கடன் பெற்று பயனடையும் பொருட்டு கீழ்குறிப்பிட்ட நாட்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திட்ட விளக்கவுரை மற்றும் அனைத்து திட்டங்களின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கமும், கூட்டம் நடைபெறும் இடத்தி லேயே விண்ணப்பி க்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

    இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4-ந்தேதி காலை பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், மாலை குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம், 11-ந்தேதி காலை வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்டுமன்னார்கோவில், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், குமராட்சி, 18-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், புவனகிரி, மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கீரப்பாளையம், 25-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லூர், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மங்களூர் பகுதியில் கூட்டம் நடைபெறுகிறது. 

    கூட்டத்தின் போது கீழ்குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்கள் எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. கல்வித்தகுதி சான்றிதழ் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். எனவே, மகளிர் இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர், ஆதிதி ராவிடர், மாற்றுதிறனாளிகள் ஆகிய அனைவரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிக பட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.

    மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சேலம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் தலா 2 இடங்களில் மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 86.0 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் (30.4.2023 வரை) 76.5 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்பெற தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கித்தான் வீடு கட்டுகிறார்கள்.
    • டாப் அப் லோன் பற்றி தெரிந்து கொள்வோம்.

    பெரும்பான்மை மக்களுக்கு வீடு வாங்குவது வாழ்வின் நோக்கமாக உள்ளது. வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. திட்டமிட்ட பட்ஜெட்டில் வீட்டை கட்டி முடிப்பது எல்லோராலும் இயலாது காரியம். பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கித்தான் வீடு கட்டுகிறார்கள். வாங்கிய கடனை விட கூடுதல் பணம் தேவை பட்டால் என்ன செய்வது? யாரிடம் கேட்பது என்ற கவலை வேண்டாம். இப்படி ஒரு இக்கட்டான சூழல் உருவாகும் போது உதவ ஏற்கனவே கடன் கொடுத்து உதவிய அதே வங்கி இன்னொரு திட்டம் வைத்துள்ளது.

    அதற்கு பெயர் டாப் அப் லோன். இந்த டாப் அப் லோன் பற்றி தெரிந்து கொள்வோம். டாப் அப் லோன் என்றால் நீங்கள் வீடு வாங்க ஒரு வங்கியில் கடன் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது உங்களுக்கு கூடுதல் கடன் தேவைப்படுகிறது. அதே வங்கியில் ஏற்கனவே உள்ள கடன் கணக்கில் கூடுதலாக கடன் வாங்கலாம். . நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருக்கும் வீட்டைப் புதுப்பிக்க விரும்பினால் அல்லது உங்கள் மனதை மாற்றிக் கொண்டு, இன்னும் கொஞ்சம் விலையுள்ள வீட்டை வாங்க முடிவு செய்தால், நீங்கள் வீட்டுக் கடன் டாப்-அப்பைப் பெறலாம்.

    வீட்டுக் கடன் டாப்-அப், வீட்டுப் பதிவுக் கட்டணம், புரோக்கரேஜ் அல்லது பராமரிப்புக் கட்டணம் போன்ற செலவுகளைக் கவனித்துக்கொள்ள உதவும். உங்கள் வீட்டுக் கடனில் டாப்-அப் செய்வதற்குப் பல நன்மைகள் உள்ளன.

    வீட்டுக் கடன் டாப் அப் நன்மைகள்

    நீங்கள் வீட்டுக் கடனாகப் பெற்ற பணத்தை, உங்கள் வீட்டைப் புதுப்பிப்பதில் இருந்து பதிவு/பரிவர்த்தனைக் கட்டணங்களைக் கவனிப்பது வரை பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்.

    நீங்கள் எடுக்கும் வங்கியைப் பொறுத்து, டாப் அப் பணத்தை தனிப்பட்ட மற்றும் வணிகச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.

    கட்டுமானம் அல்லது புதுப்பித்தல் நோக்கங்களுக்காக நீங்கள் டாப் அப் பணத்தை கண்டிப்பாகப் பயன்படுத்தினால், 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம். டாப்-அப்பிற்காக நீங்கள் அதே கடன் வழங்குபவரைக் கையாள்வீர்கள் என்பதால், ஒப்பீட்டளவில் விரைவாகவும் எளிதாகவும் உங்கள் ஒப்புதல் கிடைக்கும்.

    டாப்-அப் வீட்டுக் கடன் தகுதி

    எந்தவொரு கடனாளியும் தங்களுடைய வீட்டுக் கடனில் இருப்பு பரிமாற்ற வசதியைப் பெற விரும்பும் ஒரு டாப்-அப் கடன் வசதியைப் பெறலாம். சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் இருவரும் டாப்-அப் கடன் பெரும் தகுதிகளை பெற்றிருந்தால் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

    வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள் 6 மாதங்களுக்கு தடங்கல் இல்லாமல் தவணை செலுத்தி இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 1 தவணை தவறி இருந்தால் நெகிழ்வுத்தன்மை வழங்கப்படும்).

    • பெண் முன்னேற்றத்திற்கு முதல்-அமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
    • புதிய கடனுதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தள்ளுபடிச் சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் 476 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 4497 பயனாளிகளுக்கு ரூ.7.9 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 40 மகளிர் சுய உதவி குழுக்க ளில் உள்ள 450 பயனாளி களுக்கு ரூ.2.35 கோடி மதிப்பிலான புதிய கடனு தவிகளையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஓரு காலத்தில் பெண் பிள்ளைகள் பெறுவது சுமை என்ற நினைத்த காலம் மாறி தற்போது பெண்கள் சம உரிமை பெற்று ஆண்களைவிட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    இதற்கு காரணம் பெரி யார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தான். பெண்களுக்கான உரிமை, கல்வி, விதவை மறுமணம், சொத்துரிமை, பெண்களுக்கான சமத்துவம் கிடைக்க பல்வேறு சமுதாய சீர்திருந்தங்களை செய்வதால் தான் அவர்கள் வழிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்கும், சமத்துவதிற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன், தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், ஸ்ரீவில்லி புத்தூர் நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன், ராஜபாளை யம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ஸ்ரீவில்லி புத்தூர் ஊராட்சிய ஒன்றியக்குழுத் தலைவர் ஆறுமுகம், ராஜபாளைமய் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், வத்திரா யிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிந்துமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிக்கு 4 வாரத்தில் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பினராகவும் உள்ளேன்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா என்.மங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    என்.மங்கலம் வருவாய் கிராமம் மற்றும் ஆக்களூர் வருவாய் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பி னராகவும் உள்ளேன்.

    கடந்த டிசம்பர் மாதம் விவசாய கடன் கேட்டு எனது சொத்து அடங்கல் அசல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வங்கியில் சமர்ப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு இதுவரை விவசாய கடன் வழங்கப்பட வில்லை. இதனால் விவசா யம் செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

    இதே போல கடந்த 2021-22-ம் ஆண்டும் விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்த போதும் கடன் கிடைக்கவில்லை. என்னை போல ஏராளமான விவசாயிகள் வங்கியால் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி இந்த வங்கியில் நடைபெறாத வண்ணம் தகுதியான விவசாயிகளுக்கு கடன் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் நிலமலகியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் மற்றும் செயலாளர் மீது விசாரணை நடத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் மனுதாரரின் கடன் விண்ணப்பத்தை ஏற்று 4 வாரத்தில் அவருக்கு விவசாய கடனை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    • யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்க முடியாது.
    • பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள்.

    நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையே சொந்த வீடு வாங்குவதுதான். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மேலும், யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்க முடியாது. பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கும் நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீதத்தொகை நம்மிடம் இருக்க வேண்டும். இதை டவுன்பேமென்ட் என்று சொல்லுவார்கள்.

    உதாரணத்துக்கு 50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள் கடன் தரும். வீடு வாங்கும்போதே இத்தனை வருடத்துக்குள் வாங்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப முதலீட்டை செய்துகொள்ளலாம். மூன்று வருடங்களுக்கு பிறகு எனும்பட்சத்தில் கொஞ்சம் மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம்.

    வங்கி மற்றும் தபால்நிலைய சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் (இதில் நாம் முதலீடு செய்யும் தொகையை பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தையில் முதலீடு செய்வார்கள்) முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம். இதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு மாதம் 10,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பொருளாதாரா நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    ஒரு வேளை மூன்று வருடத்துக்கும் குறைவாகவே வாங்கத் திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களை தவிர்த்துவிட்டு வங்கி, தபால்நிலைய சேமிப்பு அல்லது கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடு மட்டுமே போதும்.

    குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது. இந்த தொகையை சேமிப்பதற்கு முன்பாக உங்களுக்கு வேறு எதாவது கடன் இருந்தால், அந்த கடனை அடைத்தபிறகு வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம்.

    டவுன்பேமென்ட் தொகையைத் திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட வகைகளில் பணத்தைத் திரட்ட வேண்டாம். இந்த வகைகளில் வட்டி அதிகம். மேலும் இந்த வகையில் பணத்தை திரட்டி பணம் கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனை திருப்பி அடைப்பதற்குப் போய்விடும். பொதுவாக ஒருவரது மாத வருமானத்தில் 40 சதவீதத்துக்கு மேல் கடனுக்கு செல்வது ஆரோக்கியமானது கிடையாது.

    திடீரென வருமானம் பாதிக்கப்பட்டால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும். ஆனால், அதேநேரம் பெற்றோர் மற்றும் நண்பர்களிடமிருந்து வட்டி இல்லாமல் கடனைத் திரட்ட முடிந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏற்கனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எப். தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திகொள்ளலாம். வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வரிச்சலுகை வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனை வாங்கவேண்டாம் என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்தாகும்.

    ×