விவசாயிக்கு 4 வாரத்தில் கடன் வழங்க வேண்டும்

விவசாயிக்கு 4 வாரத்தில் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பினராகவும் உள்ளேன்.
விவசாயிக்கு 4 வாரத்தில் கடன் வழங்க வேண்டும்
Published on

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா என்.மங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என்.மங்கலம் வருவாய் கிராமம் மற்றும் ஆக்களூர் வருவாய் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பி னராகவும் உள்ளேன்.

கடந்த டிசம்பர் மாதம் விவசாய கடன் கேட்டு எனது சொத்து அடங்கல் அசல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வங்கியில் சமர்ப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு இதுவரை விவசாய கடன் வழங்கப்பட வில்லை. இதனால் விவசா யம் செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

இதே போல கடந்த 2021-22-ம் ஆண்டும் விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்த போதும் கடன் கிடைக்கவில்லை. என்னை போல ஏராளமான விவசாயிகள் வங்கியால் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி இந்த வங்கியில் நடைபெறாத வண்ணம் தகுதியான விவசாயிகளுக்கு கடன் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் நிலமலகியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் மற்றும் செயலாளர் மீது விசாரணை நடத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் மனுதாரரின் கடன் விண்ணப்பத்தை ஏற்று 4 வாரத்தில் அவருக்கு விவசாய கடனை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com