search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "association"

    • சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என வதந்தி.
    • அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே விஜய் மக்களை சந்திப்பார் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

    சமூக வலைதளங்களில் கட்சியின் உறுப்பினர் படிவம் என பரவி வந்த நிலையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதிகாரப்பூர் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

    கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் மட்டுமே அறிவிப்புகள் வெளியாகும்.

    யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை கழகத் தோழர்களும், பொது மக்களும் நம்ப வேண்டாம்.

    கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பொதுமக்கள் சந்திப்பு குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
    • எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

    திருப்பூர்,அக்.22-

    ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    ஏற்றுமதி வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நிலையில் ஏற்றுமதியாா்கள் செலுத்தும் வரியின் செலவை ஈடுகட்டும் வகையிலும் டியூட்டி டிராபேக் போன்ற சலுகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏற்றுமதி வா்த்தகத்தில் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும், ஏற்றுமதியான சரக்குக்கு சுங்கத் துறை டியூட்டி டிராபேக் வழங்கி வருகிறது. இந்நிலையில், பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி வழங்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோா் வலியுறுத்தி வந்தனா். இதனிடையே, ஏற்றுமதி செய்யப்படும் காட்டன் டி-சா்ட்டுகளுக்கு 2.1 சதவீதமாக இருந்த டியூட்டி டிராபேக்கை தற்போது 3.1 சதவீதமாகவும், செயற்கை நூலிழை ஆடை டி-சா்ட்டுகளுக்கு 3 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகளுக்கு 2.1 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும் டிராபேக் சலுகையை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் அக்டோபா் 30 -ந்தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு திருப்பூா் ஏற்றுமதியாளா்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. இதன் மூலமாக சா்வதேச சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளிக்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பாக அமையும்.

    இதற்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ஜவுளித் துறை செயலாளா் ரக்ஷனா சா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றாா்.

    • மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
    • ஐ.சி.எம். விரிவுரையாளர் ஜி.கதிரவன் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கூட்டுற–வுத் துறை சார்பில் நடத்தப் பட்ட 77 ஆவது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா மற்றும் கலைஞர் நூற் றாண்டு விழாவை முன் னிட்டு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகம் மதுரை மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இைணந்து நடத்தும் "கூட்டுறவில் இளைஞர்க–ளின் பங்களிப்பை வளர்த் தல்" பற்றிய ஒரு நாள் கருத்த–ரங்கம் நடைபெற்றது.

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலை–மையகம் அழகப்பன் அரங் கில் நடைபெற்ற இக்கருத்த–ரங்கில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி.குரு–மூர்த்தி தலைமை தாங்கி உரையாற்றினார். மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான டாக்டர் அ.ஜீவா சிறப்புரை–யாற்றினார். மேலும், ஐ.சி.எம். இயக்குனர் முனைவர். எஸ்.தர்மராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

    இக்கருத்தரங்கில் மதுரை கல்லூரி பேராசிரியர் முனைவர் ஏ.மயில்முருகன், ஐ.சி.எம். பேராசிரியர்கள் முனைவர் வி.அழகு பாண் டியன், முனைவர் ஜி.ஜெயந்தி, விரிவுரையாளர் எம்.ரேவதி, மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ம.தீனதயாளன்,

    பயிற்சி கூட்டுறவு சங்கங் களின் துணைப்பதிவாளர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள பெரு–வாரியான கல்லூரிகளின் பேராசிரியர்கள், விரிவுரை–யாளர்கள் மற்றும் மாணவர் கள் பங்கு பெற்றனர். ஐ.சி.எம். விரிவுரையாளர் ஜி.கதிரவன் நன்றி கூறினார்.

    • ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வட்டக் கிளை தலைவர் மணி தாங்கினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக் கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர், ஊர் புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7850 வழங்கக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் மணி தாங்கினார்.

    துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், காமாட்சி, இணைச்செயலாளர்கள் ஆறுமுகம், சுந்தர லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டச் செயலாளர் வேல் மயில், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்ட இணைச்செயலாளர் பானு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் வட்ட கிளை பொருளாளர் பாண்டியம்மாள் நன்றி கூறினார்.

    • குடியிருப்போர் நலச்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கவுன்சிலர் நாகநாதன் வாக்குறுதி அளித்தார்.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 67-வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து குடியி ருப்போர் நல சங்கத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்த பகுதியில் உள்ள சாலைகள் சரியில்லாமல் குண்டும், குழியுமாக இருக்கிறது. மேலும் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. பாதாள சாக்கடை வசதி இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சரியான முறையில் இல்லை. குடிநீர் தினசரி வழங்க வேண்டும். பொது சுகாதாரம் சரி இல்லை என வார்டு கவுன்சிலர் நாகநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மனுவை பெற்றுக் கொண்ட நாகநாதன் இன்னும் ஓரிரு மாதங்களில் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப் படும். அதற்கான முன் முயற்சிகளை செய்து வருகிறேன். பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் இதுகுறித்து எடுத்து கூறி இருக்கிறேன்.

    மேலும் மீண்டும் உங்கள் கோரிக்கை மனுவை காண்பித்து உடனடியாக உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற செய்வேன் என்று உறுதி கூறினார்.

    இதில் மாநகராட்சி மத்திய மண்டல உதவி வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் ரகுநாதன், பில் கலெக்டர் அருண்குமார், தொழில் நுட்ப உதவி யாளர்கள் வடிவேல், அருணாசலம், மணிகண்டன், தீபன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நலிவடைந்த நிலையில் உள்ள ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமாகும்.

    ஏ.கே.டி.பலராமராஜா தனது வீட்டையே சங்கத்திற்காக வழங்கி முதல் தலைவரானார். இந்த சங்கத்தில் திறமையான அதிகாரிகள், திறமையான தலைவர்கள் இருந்த காலத்தில் தினமும் 15 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து ராஜ பாளையம் மக்களுக்கு விநியோகித்து வந்தனர்.

    இந்த சங்கம் விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் கூட்டுறவு சங்கமாக தேர்ந்தெடுத்து பல பரிசுகள் வென்றுள்ளது.

    திறமை வாய்ந்த அதிகாரி களுக்கு பின்னர் நிர்வாக திறமையின்மையின் காரணமாகவும், தலைவர்களாக வந்தவர்களும் முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் இல்லாமல் அதிகமான ஊழியர்களை லஞ்சம் பெற்று பணி அமர்த்தினர்.

    பால் உற்பத்தி யாளர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை, போனஸ், கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்தது போன்ற காரணங்களால் தற்போது தினமும் 8 ஆயிரம் லிட்டருக்கும் குறைவாகவேப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தேவிபட்டினம் கிராமத்தில் இருந்து வரவேண்டிய தினமும் 3 ஆயிரம் லிட்டர் பால் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவர்களது கூட்டுறவு சங்கத்தில் இருந்து பெறப்படும் பாலுக்கு சரியான விலை உயர்வு கொடுக்காமல் இருந்ததால் தனியார் பால் நிறுவனங்கள் தேவிபட்டினம் முழுவதும் அதிக விலைக்கு பால் வாங்கி வருவதால் 3 ஆயிரம் லிட்டர் பாலையும் கூட்டுறவு சங்கம் இழந்தது. தற்போது மாடு வளர்ப்ப தற்கான ஆர்வமும் மக்களி டையே இல்லாத நிலையில் பால் உற்பத்தி குறைந்து வருவதும் ஒரு காரணமாகும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பால் ஒரு முக்கியமான உணவு பொருளாக அமைந்து விட்டதால் தரம் வாய்ந்த கூட்டுறவு சங்க பாலுக்கு எப்பவுமே கிராக்கி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் பால் கிடைக்காத நிலையில் தனியார் பால் விற்பனை யாளர்களிடம் பொதுமக்கள் பால் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு கடந்த பல வருட காலமாக தள்ளாடிய நிலையில் ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இருந்து வருகிறது.

    தேவையில்லாத ஊழியர்கள் நியமனம், தேவையில்லாத செலவு, கூட்டுறவுத்துறை மேல திகாரிகளின் அலட்சியப் போக்கு போன்றவைகளால் நிர்வாக திறன் பாதிக்கப்பட்டு பல ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பல ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு படிப்படியாக பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதிகாலை 5.30 மணிக்கு வர வேண்டிய பால் தற்போது 6 மணிக்கு மேல் 7 மணி வரை விநியோகம் செய்யும் நிலையில் இருந்து வருகிறது.

    இதன் காரணமாக மாதந்தோறும் முன்கூட்டியே பணம் செலுத்தி பால் அட்டை வாங்கும் நிலை தற்போது குறைந்து விட்டது. தனியார் விற்பனை யாளர்களிடம் பால் பெறும் நிலை இருந்து வருகிறது.

    எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள பால் வளத்துறை அமைச்சர், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க விஷயத்தில் கவனம் செலுத்தி நலிவடைந்த நிலையில் உள்ள சங்கத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்கள் சங்க ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிக பட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.

    மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சேலம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் தலா 2 இடங்களில் மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 86.0 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் (30.4.2023 வரை) 76.5 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்பெற தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும்,
    • இதற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோபாலன் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கம் சார்பில் ஜாக்டோ ஜியோ மற்றும் 3 அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட வாக்குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தியும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோபாலன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் (ஓய்வுதியர் சங்கம்) கருணாகரன், கூட்டு றவுத்துறை மாநில பொரு ளாளர் பாலகிருஷ்ணன் மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • புதுவை முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.
    • அமைப்பு செயலாளர் இளையதாசன், தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வுக்கு தடை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.

    தலைவர் திருமலை தலைமை வகித்தார். அமைப்பு செயலர் கிரி வரவேற்றார். கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், சுகாதார ஊழியர் சம்மேளன தலைவர் கீதா, அமைப்பு செயலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ஜவகர் பணி மறுகட்டமைப்பு செய்ய தடையாக உள்ள ஒரு நபர் குழு குறித்து விளக்கினார்.

    அமைப்பு செயலாளர் இளையதாசன், தொழில்நுட்ப உதவியாளர் பதவி உயர்வுக்கு தடை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி னார். வரவு, செலவு சங்க செயல்பாடுகள் குறித்து பொருளாளர் முனுசாமி, சங்க போராட்டங்கள் குறித்து செயலாளர் ஜெகநாதன் பேசினர்.

    கூட்டத்தில், பொது சுகாதார சட்டத்தை உடனே தகுந்த மாற்றங்கள் செய்து அமல்படுத்த வேண்டும். சுகாதார ஆய்வாளர்களுக்கு வெள்ளை நிற ஓவர்கோட் அணிந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

    சுகாதாரத்துறை மூலம் பள்ளிகளுக்கு வழங்கும் சான்றிதழ்களை அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட ஆய்வாளர்கள் மேற்பார்வை யிட்டு, மருத்துவ அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. ஈணை செயலாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.

    • முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.
    • ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது.

    மேட்டூர்:

    தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மேட்டூர் கிளை கூட்டம், மேட்டூர் பெரிய பூங்காவில் நடைபெற்றது.

    இதில், மேட்டூர் நகர தலைவர் எஸ்.பி.ராஜா தலைமை வகித்தார். சங்க செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வீட்டுமனை இல்லாத சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் இறந்தால் அவருடைய குடும்பத்தாருக்கு சங்கம் சார்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.3000 உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்குவது. சங்க உறுப்பினர்களின் குடும்ப பெண்கள் பிரசவ செலவிற்கு ரூ.3000, திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ரூ.1500 சங்கத்தின் சார்பாக வழங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

    • மாட்டுவண்டி உரிமையாளர் தலைமைச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாட்டு வண்டி உரிமையா ளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொத்தனூர் சங்க அலுவ லக வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குண சேகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பரமத்திவேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட கனிம வள அலுவ லர் மற்றும் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அலுவலர் ஆகி யோருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது.

    மாட்டுவண்டி உரிமையா ளர் தலைமைச் சங்க உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மாட்டு வண்டி உரிமையாளர்களின் சூழ்நிலை கருதி வங்கி மூலம் வண்டி மற்றும் மாடு வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களை இணைந்து நலவாரிய கார்டு வழங்க வேண்டும்.

    மாட்டுவண்டி உரிமை யாளரின் குழந்தைகளின் படிப்பு செலவினை தமிழக அரசே ஏற்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு குடும்ப பாது காப்பு நிதி மற்றும் இன்சூ ரன்ஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடக்கிறது.
    • வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கீழக்கரை மற்றும் கமுதி வட்டங்களில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்க

    ளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

    நீரினை பயன்படுத் துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து நாளை (24-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை (காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

    இந்த வேட்புமனுக்கள் 28-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூர்ந்தாய்வு செய்து, ஏற்கத்தக்க வேட்பு மனுக்களை சம்மந்தப்பட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். போட்டியில் இருந்து விலகிகொள்ள விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை 28-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் 28-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பார். நீரினை பயன்படுத்துவோர் சங்கங் களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5.2.2023 அன்று மாலை 4 மணி முதல் எண்ணத் தொடங்கி முடிவுகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    ராமநாதபுரம் வட்டம் சார்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவ லகத்திலும், பரமக்குடி வட்டத்திற்கு உதவி ஆட்சியர் அலுவலகத்திலும், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், திருவாடானை வட்டத்தில் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கீழக்கரை வட்டத்தில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலும், கமுதி வட்டத்தில் கமுதி வட்டாட்சியர் அலுவ லகத்தில் பெற்றுக் கொள்ள லாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×