search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொத்தனூரில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்க கூட்டம்
    X

    பொத்தனூரில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்க கூட்டம்

    • மாட்டுவண்டி உரிமையாளர் தலைமைச் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாட்டு வண்டி உரிமையா ளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொத்தனூர் சங்க அலுவ லக வளாகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குண சேகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பரமத்திவேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், மாவட்ட கனிம வள அலுவ லர் மற்றும் பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அலுவலர் ஆகி யோருக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வது.

    மாட்டுவண்டி உரிமையா ளர் தலைமைச் சங்க உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மாட்டு வண்டி உரிமையாளர்களின் சூழ்நிலை கருதி வங்கி மூலம் வண்டி மற்றும் மாடு வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நல வாரியத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களை இணைந்து நலவாரிய கார்டு வழங்க வேண்டும்.

    மாட்டுவண்டி உரிமை யாளரின் குழந்தைகளின் படிப்பு செலவினை தமிழக அரசே ஏற்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு குடும்ப பாது காப்பு நிதி மற்றும் இன்சூ ரன்ஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×