ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டக் கிளை தலைவர் மணி தாங்கினார்.
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டக் கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர், ஊர் புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7850 வழங்கக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் மணி தாங்கினார்.

துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், காமாட்சி, இணைச்செயலாளர்கள் ஆறுமுகம், சுந்தர லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டச் செயலாளர் வேல் மயில், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், மாவட்ட இணைச்செயலாளர் பானு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் வட்ட கிளை பொருளாளர் பாண்டியம்மாள் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com