search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "duty"

    • ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
    • எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

    திருப்பூர்,அக்.22-

    ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    ஏற்றுமதி வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு நிலையில் ஏற்றுமதியாா்கள் செலுத்தும் வரியின் செலவை ஈடுகட்டும் வகையிலும் டியூட்டி டிராபேக் போன்ற சலுகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏற்றுமதி வா்த்தகத்தில் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்ததும், ஏற்றுமதியான சரக்குக்கு சுங்கத் துறை டியூட்டி டிராபேக் வழங்கி வருகிறது. இந்நிலையில், பின்னலாடைகளுக்கான டியூட்டி டிராபேக்கை உயா்த்தி வழங்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியோா் வலியுறுத்தி வந்தனா். இதனிடையே, ஏற்றுமதி செய்யப்படும் காட்டன் டி-சா்ட்டுகளுக்கு 2.1 சதவீதமாக இருந்த டியூட்டி டிராபேக்கை தற்போது 3.1 சதவீதமாகவும், செயற்கை நூலிழை ஆடை டி-சா்ட்டுகளுக்கு 3 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகளுக்கு 2.1 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாகவும் டிராபேக் சலுகையை உயா்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் அக்டோபா் 30 -ந்தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    எங்களது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு டிராபேக் சலுகையை உயா்த்தி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பு திருப்பூா் ஏற்றுமதியாளா்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. இதன் மூலமாக சா்வதேச சந்தையில் நிலவும் போட்டிகளை சமாளிக்க திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு வாய்ப்பாக அமையும்.

    இதற்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ஜவுளித் துறை செயலாளா் ரக்ஷனா சா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளோம் என்றாா்.

    • குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி
    • நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம் பங்கேற்பு

    அருவங்காடு,

    குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு- ஜெகதளா இடைேயேயான ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அங்கு அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்தன.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருவங்காடு- ஜெகதளா ரோட்டை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அந்த சாலையை சீரமைக்க தற்போது ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அருவங்காடு- ஜெகதளா ரோட்டில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது.

    இதற்கான நிகழ்ச்சியில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், செயற்பொறியாளர் வின்சென்ட், பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணைத்தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.
    • பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்

    திருச்சி

    திருச்சி கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதல் அணி மைதானத்தில் பயிற்சி காவலர்களின் 7 மாத பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் மு.ஆனந்தன் விழாவை ஒருங்கிணைத்தார். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த 274 பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் பேசுகையில், பயிற்சி முடித்த நீங்கள் காவல்துறையின் மாண்பையும், பெருமையையும் பேணிக்காக்கும் வகையில் உங்கள் பணியை அமைத்துக் கொள்ள வேண்டும். காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. காவல் பணி என்பது பொதுமக்களிடம் கனிவையும், அன்பையும் காட்ட வேண்டும். கயவர்களையும், சமூக விரோதிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க துணிய வேண்டும். பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானம் மற்றும் திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பெண் காவலர்கள் உள்ளிட்ட 622 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாக்களும் நடைபெற்றன. மேற்கண்ட விழாக்களில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க தலைவராக இருக்க முடியும்.
    • சத்துணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு மக்களின் பசியை போக்கியவர்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் காந்தி சாலையில் அறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது‌. கூட்டத்திற்கு நகரச் செயலாளர் மூர்த்தி தலைமை வைத்தார்.

    மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கலியபெருமாள், ரயில் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பெரியார் சிலைக்கு சென்னையில் மாலை அணிவித்து விட்டு ஓ.பி.எஸ் வரும்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடப்பது அரசு தன் கடமையை செய்கிறது என்று கூறுகிறார்.

    இதை அவர் கூறலாமா?.

    அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு இருக்கிறார்.

    அதேபோன்று நிர்வாகிகள் நாங்களும் எங்கள் கடமையை செய்திருக்கிறோம். சரியான தலைவரை அ.தி.மு.க.விற்கு தலைமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

    காலை உணவு திட்டத்தை எடப்பாடியார் தனது ஆட்சி முடியும் தருவாயில் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    ஆட்சிக்கு வந்திருந்தால் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும்.

    இப்போது ஸ்டாலின் ஐரோப்பாவை பார்த்து ஆஸ்திரேலியாவை பார்த்து நான் ஆரம்பித்தேன் என்று கூறுகிறார்.

    பசியை போக்குவது தான் எனது வாழ்வின் லட்சியம் என்கிறார்.

    உண்மையில் பசியை போக்கியது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான்.சத்துணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு மக்களின் பசியை போக்கியவர்கள் இவர்கள் தான்.

    அதில் அவர் பங்கு போட்டுக் கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலாளர் ஆசைமணி, தலைமைக் பேச்சாளர் நெத்தியடி நாகையன், மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.

    முடிவில் ஒன்றியச் செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    • 2-ம் நிலை காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov.in

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 47 வயதுக்கு மிகாமல் உள்ள முன்னாள் ராணுவத்தினர் ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் பணியில் உள்ள ராணுவத்தினர் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், www.tnusrb.tn.gov. என்ற இணையதள முகவரியில் 7.7.2022 முதல் 15.8.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒழுங்காக பணியாற்றாத அரசு ஊழியர்களை 50 வயதில் கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. #UPGovt
    லக்னோ:

    அரசு அதிகாரிகள் முறையாக பணியாற்றுவது இல்லை என்பது அனைத்து தரப்பினரும் சொல்லும் பொதுவான குற்றச்சாட்டு ஆகும். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 31-ம் தேதியில் இருந்து இந்த வயது வரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் இது பின்பற்றப்படவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  #UPGovt
    ×