search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DIGNITY"

    • ஒடிசாவுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
    • ஒடிசா மற்றும் ஒடியா மொழியின் பெருமை ஆபத்தில் உள்ளது.

    ஒடிசா மாநிலத்தில், வரும் மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும்.

    இந்நிலையில், ஒடிசாவுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

    ஒடிசாவின் பெருமையும் கண்ணியமும் அழிக்கப்பட்டு வருவதாகவும், மாநிலத்திற்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியிடம், ஒடிசாவில் பிஜேடி உடனான பாஜகவின் உறவு குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரச்சினைகளின் அடிப்படையின் மத்தியில் பிஜேடி எங்களுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும் பல கட்சிகளும் எங்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளன.

    ஒடிசா மற்றும் ஒடியா மொழியின் பெருமை ஆபத்தில் உள்ளது. ஒடியா மக்கள் இதை நீண்ட காலம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒடிசாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. அது இன்று நாட்டின் பணக்கார மாநிலமாக மாறியிருக்கலாம்.

    ஒடிசாவை பணக்கார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு ஒடியாவிற்கும் உள்ளது" என்றார்.

    • காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.
    • பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்

    திருச்சி

    திருச்சி கிராப்பட்டியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதல் அணி மைதானத்தில் பயிற்சி காவலர்களின் 7 மாத பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பு காவல் படை முதல் அணி கமாண்டன்ட் மு.ஆனந்தன் விழாவை ஒருங்கிணைத்தார். இதில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த 274 பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் பேசுகையில், பயிற்சி முடித்த நீங்கள் காவல்துறையின் மாண்பையும், பெருமையையும் பேணிக்காக்கும் வகையில் உங்கள் பணியை அமைத்துக் கொள்ள வேண்டும். காவல்துறையினருக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் அவசியமானது. காவல் பணி என்பது பொதுமக்களிடம் கனிவையும், அன்பையும் காட்ட வேண்டும். கயவர்களையும், சமூக விரோதிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க துணிய வேண்டும். பொது அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டியது காவல்துறையினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என கூறினார்.

    நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர்கள் சுரேஷ்குமார், அன்பு, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானம் மற்றும் திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பெண் காவலர்கள் உள்ளிட்ட 622 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாக்களும் நடைபெற்றன. மேற்கண்ட விழாக்களில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார், கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×