ஒடிசாவின் பெருமையும், கண்ணியமும் அழிக்கப்பட்டு வருகிறது- பிரதமர் மோடி

ஒடிசாவுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.ஒடிசா மற்றும் ஒடியா மொழியின் பெருமை ஆபத்தில் உள்ளது.
ஒடிசாவின் பெருமையும், கண்ணியமும் அழிக்கப்பட்டு வருகிறது- பிரதமர் மோடி
Published on

ஒடிசா மாநிலத்தில், வரும் மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும்.

இந்நிலையில், ஒடிசாவுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஒடிசாவின் பெருமையும் கண்ணியமும் அழிக்கப்பட்டு வருவதாகவும், மாநிலத்திற்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியிடம், ஒடிசாவில் பிஜேடி உடனான பாஜகவின் உறவு குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரச்சினைகளின் அடிப்படையின் மத்தியில் பிஜேடி எங்களுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும் பல கட்சிகளும் எங்களுக்கு ஆதரவை வழங்கியுள்ளன.

ஒடிசா மற்றும் ஒடியா மொழியின் பெருமை ஆபத்தில் உள்ளது. ஒடியா மக்கள் இதை நீண்ட காலம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒடிசாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. அது இன்று நாட்டின் பணக்கார மாநிலமாக மாறியிருக்கலாம்.

ஒடிசாவை பணக்கார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு ஒடியாவிற்கும் உள்ளது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com