search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள்"

    மயிலாடுதுறையில் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    தரங்கம்பாடி:

    தஞ்சை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் கண்காணிப்பு என்ஜினீயர் சீனிவாசராகவன் தலைமையிலான என்ஜினீயர்கள் குழுவினர் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். 

    மயிலாடுதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி சாலையில் பட்டமங்கலம் அருகே சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு இரு வழித்தடத்தில் இருந்து பலவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்ட பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து என்ஜினீயர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

    சாலையின் நீளம், அகலம், கட்டுமானத்தின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
    அதிகாரிகள்-ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம் என சி.பி.ஐ. அறிவிப்பால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை

    மதுரையில் இயங்கி வரும் மத்திய புலனாய்வுத்துறையின் (சி.பி.ஐ.) ஊழல் ஒழிப்பு பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- 

    மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், தனிப்பட்ட ஆதாயத்துக்காக தன்னுடைய அலுவலகப்பதவியை தவறாக பயன்படுத்தினால், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியிருந்தால் மதுரையில் இயங்கி வரும் மத்திய புலனாய்வுத்துறையின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம். 

    இதுதொடர்பாக புகார்கள் மற்றும் தகவல்களை 89034-83900 என்ற கைபேசி எண், 0452-2562258 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் cbimdu.complaint@cbi.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம். “ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க முன்வாருங்கள்”. 

    ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி லஞ்சம் வாங்கு பவர்களுக்கும், லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மத்திய புலனாய்வுத் துறையின் இந்த திடீர் அறிவிப்பு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×