என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அமைச்சர்கள்"

    • இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
    • தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி இன்று காலை தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

    சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிய வடிவமைப்பு ரகங்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உலகப் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் பட்டு வேட்டிகள், படுக்கை விரிப் புகள், மற்றும் பருத்தி ஆடைகள், நீலகிரி மாவட்டத்தில் தோடர் இனத்தவர் பயன்படுத்தும் ஆடைகள் என விதவிதமான ஆடைகள் கண்காட்சியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சீபுரம், திருபுவனம், ஆரணி, சேலம், ராசிபுரம், திருப்பூர் என கைத்தறி மற்றும் பட்டுக்கு பெயர் பெற்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் விதவிதமான சேலைகள் பட்டு வேட்டிகள் படுக்கை விரிப்புகள், விரிப் புகள் என விதவித மான அனைத்து வகையான ஆடைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

    கைத்தறி நெசவாளர்களால் வடிவமைக்கப்பட்ட பூம்பட்டு புதுமணப்பட்டு மாங்கல்ய பட்டு, பருத்தி நூலால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள், தாய் மார்கள் பயன்படுத்தக்கூடிய தாய்-சேய் பெட்டகம் என்று அழைக்கப்படும் சிறப்பு பை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    தாய்-சேய் பெட்டகப்பையில் குழந்தைகளுக்கு தேவையான பால் பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவர்களை வைப்பதற்கு தனித்தனியாக உள்பகுதியில் பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.

    பூம்புகார் நிறுவனத்தின் மூலமாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி ரகங்கள் அனைத்துக்கும் 30 சதவீதம் முதல் 50 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதன்மூலம் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான ஒரிஜினல் பட்டு சேலைகளை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிஜினல் பட்டுச்சேலைகள் ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் ஆயிரம் ரூபாயில் இருந்தும் சேலைகள் கிடைக்கிறது.

    பூம்புகார் நிறுவனம் சார்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரங்கில் ரூ.250-லிருந்து ரூ.12 லட்சம் வரையில் கலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திருவள்ளுவர் சிலை, கலைஞர் கருணாநிதி சிலை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    ஐம்பொன் லட்சுமி சிலை ஒன்று ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் கையில் விளக்குடன் கூடிய ஒரு ஜோடி பாவை விளக்கு ஒன்று ரூ.12 லட்சத்துக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அரியானா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கைத்தறி துணி வகைகளும் கண்காட்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். கண்காட்சியின் முகப்பில் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்த எந்த வகையான சேலைகள் கண்காட்சியில் உள்ளன என்பது பற்றிய தகவல்களும் விரிவாக விளக்கி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை, ஜெயங்கொண்டம், மதுரை, பரமக்குடி, அருப்புக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, வேலூர், கோவை, சேலம் ஆகிய ஊர்களில் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் துணி வகைகள் ஆகியவைகள் பற்றி விரிவான விளக்கங்களுடன் கண்காட்சி பலகை வைத்திருப்பதும் பொது மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.

    தீபாவளியை கருத்தில் கொண்டு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதால் வரும் நாட்களில் மக்கள் அதிக அளவில் கண்காட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக வார இறுதி விடுமுறை நாட்களான நாளையும் மறுநாளும் கண்காட்சியை பார்வையிட்டு பெண்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
    • தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான்.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது மட்டுமின்றி, சொல்லப்படாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். திமுகவின் அகராதியில் பொய் என்ற சொல்லுக்கு பெருமிதம் என்று புதிதாக பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள் போலும். அதனால் முதலமைச்சர் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி விட்டு, அதை பெருமிதம் என்று நினைத்துக் கொள்கிறார்.

    திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டும் தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதாகக் கூறி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு செய்தியாளர்கள் சந்திப்பு நீடித்தது; ஆனால், அதில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர்கள் விளக்கியது அரை நிமிடம் தான். இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான். இதைத் தான் விரிவான தரவுகளுடன் அமைச்சர் விளக்கியதாக முதலமைச்சர் கூறுகிறார்.

    திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். இதைத் தான் பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேர்மையான அரசாக இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிடாமல் அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்?

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் குறையே நாட்டிலும், அவரது அரசிலும் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாது என்பது தான். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன கூறுகிறார்களோ, அவை அனைத்தையும் உண்மை என்று நம்பி அவர் பேசிக் கொண்டுருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். அவர்கள் மு.க.ஸ்டாலின் சொல்லும் பொய்களை எல்லாம் உண்மை என்று நம்ப மாட்டார்கள். பொய்யுரைப்போருக்கு வழங்க வேண்டிய தண்டனையை வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள் என கூறியுள்ளார். 

    • அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
    • அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள், பேச்சு இருக்கக்கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வருகிற 24-ந்தேதி ஆலோசனை நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில், "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்த சட்ட முன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்து, தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்து இருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டு உள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்த திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மதியம் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமை செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர்.
    • விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இன்று அதிகாலை வரையில் 13 பேர் பலியாகினர். 39-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பலியான குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேராக சென்றனர். அங்கு அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மரக்காணம் யூனியன் சேர்மன் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.ஒரு கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டது.

    • உளவுத்துறையும் உன்னிப்பாக கவனித்து நடந்த விஷயங்களை அறிக்கையாக தயார் செய்து முதலமைச்சர் வந்ததும் சமர்ப்பித்து இருக்கிறது.
    • 4 அமைச்சர்களை தவிர யாரும் கோட்டை பக்கம் வந்து பணிகளை கவனிக்கவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.

    வெளிநாட்டுக்கு சென்றாலும் இங்கும் ஒரு 'கண்' வைக்க வேண்டுமல்லவா? அதனால் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பு உளவுத்துறைக்கு ஒரு ரகசிய உத்தரவு போட்டுள்ளார். அதாவது தான் இல்லாத நாட்களில் அமைச்சர்களின் செயல்பாட்டை கவனித்து கொள்ளுங்கள் என்பது தான் அந்த உத்தரவு.

    உளவுத்துறையும் உன்னிப்பாக கவனித்து நடந்த விஷயங்களை அறிக்கையாக தயார் செய்து முதலமைச்சர் வந்ததும் சமர்ப்பித்து இருக்கிறது.

    அதில் 4 அமைச்சர்களை தவிர யாரும் கோட்டை பக்கம் வந்து பணிகளை கவனிக்கவில்லை. சிலர் கோடையை கொண்டாட கோட்டை நினைப்பை மறந்து கோடை வாசஸ்தலங்களுக்கு சென்றிருந்தார்களாம். அதை பார்த்ததும் துணிந்து இப்படியெல்லாம் நடந்து கொண்டார்களா என்று முதலமைச்சரின் முகம் மாறியதாம்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தி.மு.க. எதிர் கொள்ளும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடமனதோடு அனைத்தையும் எதிர்கொள்வார்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஐ.சி.யு. வார்டில் படுத்திருக்கிறார். அவரை பார்த்தேன். அனைத்து மருத்துவர்களும் அங்கிருக்கிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் இருக்கிறார்.

    செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை. நெஞ்சு வலியால் சிரமமாக உள்ளார். அவர் அமலாக்கத்துறையால் தாக்கப்பட்டாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அவரை பார்த்தேன். அவரால் பேச முடியவில்லை. அதனால் தட்டிக் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.

    கே:-அவரை பார்க்க உள்ளே அனுமதிக்கிறார்களா?

    ப:-நான் அவரை பார்க்க 1 மணிநேரம் காத்திருந்தேன். முதலில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றனர். அதன் பிறகு பார்க்க அனுமதித்தனர்.

    நான் அனுமதி வாங்கி தான் செந்தில்பாலாஜியை பார்த்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தி.மு.க. எதிர் கொள்ளும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடமனதோடு அனைத்தையும் எதிர்கொள்வார்.

    செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.

    நாங்கள் 2-3 முறை அவரை அழைத்துப் பார்த்தோம். ஆனால் அவர் கண் விழித்து பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்.

    கே:- அவரது வீட்டில் என்ன நடந்தது?

    ப:-அது எனக்கு தெரியாது. நாங்கள் மருத்துவமனைக்கு வந்து பார்த்த நிலையை தான் கூற இயலும்.

    அவர் பேச ஆரம்பித்தால் தான் என்ன நடந்தது என்பதை சொல்ல முடியும். அவர் சுய நினைவில் இல்லை. காது பக்கம் வீக்கம் உள்ளது. கண்டிப்பாக துன்புறுத்தப்பட்டிருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி விரைவில் குணம் அடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    முதலமைச்சர் நேற்று கூறியது போல ஒன்றிய அரசு பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் உள்ள அமைச்சர்களையும், கட்சிகாரர்களையும் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது.

    டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கியது போல் தமிழகத்திலும் அரங்கேற்றி உள்ளது. இதற்கெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சுபவர் அல்ல.

    எந்த பழிவாங்கும் நடவடிக்கைகளையும் எதிர் கொள்ளக்கூடிய ஆற்றலும் திறமையும் தி.மு.க.வுக்கு நீண்டகாலமாக இருந்திருக்கிறது.

    மிசா காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே பழிவாங்கியவர்கள் உண்டு. எதுவாக இருந்தாலும் அவைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு.

    ஒன்றிய அரசு அரசியலுக்காக செய்கிற இந்த நிகழ்வுகளை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் ரகுபதி கூறிய தாவது:-

    நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாதாரண ஒரு மனிதனுக்கு கூட கேள்வி கேட்கிற உரிமையை அரசியல் அமைப்பு சட்டம் தந்துள்ளது.

    அப்படி இருக்கும் போது எல்லா விஷயத்திலும் மத்திய அரசு அத்துமீறி அதிகாரத்தோடு செயல்படுகிறது. அந்த அதிகாரம் பறிக்கப்பட கூடியதுதான். அதை மக்கள் பறிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்துவிட்டு சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
    • தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

    'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதே போல் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.

    இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் எவ்வளவு பேர் பயன் அடைந்துள்ளனர் என்பதை பட்டியலிட்டார். இன்னும் எவ்வளவு பேருக்கு திட்டம் மூலம் பலன் கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கா.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன் மெய்ய நாதன், மதிவேந்தன் பங்கேற்றனர்.

    இவர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசுத்துறை முதன்மைச் செயலாளர்கள், துறை வாரியான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அரசின் முன்னெடுப்பின் மூலம் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
    • அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

    'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' என்ற பெயரில் ஏற்கனவே இதுபோன்ற கூட்டம் 3 முறை நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள திட்டங்களை முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    2ம் கட்டமாக மேலும் சில திட்டங்களை இணைத்து இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பல நல்ல திட்டங்களை அறிவித்து அவற்றின் செயலாக்கத்தை அரசு கண்காணித்து வருகிறது.

    அரசின் முன்னெடுப்பின் மூலம் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திட்டத்தின் வெற்றிக்கு பல துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம்.

    சில திட்டங்களில் நிலவும் தொய்வு குறித்தும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதித்தோம். அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து 20-ந்தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.
    • தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அதற்கு மத்திய அரசு இதுவரை சம்மதிக்கவில்லை.

    இதற்கான கோப்பு ஜனாதிபதியிடம் உள்ளது. தமிழக அரசு பலமுறை வற்புறுத்தியும் மத்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளதாக தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது.

    அதுமட்டுமின்றி சமீபத்தில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவில் கையெழுத்து போடமாட்டேன் என்று கூறினார்.

    நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன்.

    இந்த விவகாரம் பொதுப்பட்டியலில் இருப்பதால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை பயிற்சி மையங்களுக்கு சென்றுதான் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பாக பேசி இருந்தார்.

    இந்த நிலையில் மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து 20-ந்தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.

    தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் இந்த உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல் அந்தந்த மாவட்டங்களின் தலைநகரங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்து உள்ளது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து உள்ளனர்.

    • அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் உட்பட 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஸ்ரீவைகுண்டம் - அமைச்சர் எ.வ. வேலு,

    காயல்பட்டினம் - அமைச்சர் பி.மூர்த்தி

    தூத்துக்குடி மாநகராட்சி - அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது.
    • வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.

    தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்ததற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவின் மேல்முறையீடு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. 

    அப்போது, தலைமை நீதிபதி முன் அனுமதி இல்லாமல் தனி நீதிபதி வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டதாக, தலைமை பதிவாளர் ஜோதிராமன் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    மேலும், தனி நீதிபதி தானாக வந்து வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும், நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்யும் வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியின் ஒப்புதலை தனி நீதிபதி பெற்றுள்ளார் என பதிவாளர் ஜோதிராமன் தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்குகள் இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள சூழலில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    மேலும், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பலாமா?

    அமைச்சர்களுக்கு எதிராக தானாக, தனி நீதிபதி முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு முன் தலைமை நீதிபதியிடம் கேட்டிருக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது.

    தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    ×