search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adjourned"

    • தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது.
    • வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.

    தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்ததற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவின் மேல்முறையீடு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. 

    அப்போது, தலைமை நீதிபதி முன் அனுமதி இல்லாமல் தனி நீதிபதி வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டதாக, தலைமை பதிவாளர் ஜோதிராமன் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    மேலும், தனி நீதிபதி தானாக வந்து வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும், நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்யும் வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியின் ஒப்புதலை தனி நீதிபதி பெற்றுள்ளார் என பதிவாளர் ஜோதிராமன் தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்குகள் இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள சூழலில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    மேலும், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பலாமா?

    அமைச்சர்களுக்கு எதிராக தானாக, தனி நீதிபதி முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு முன் தலைமை நீதிபதியிடம் கேட்டிருக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது.

    தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    • பணவீக்க உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர்.
    • அவைத்தலைவரின் முறையீட்டையும் மீறி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால் நடவடிக்கை.

    விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 4 தினங்களாக முடக்கி இருந்தன. விலைவாசி உயர்வு உள்பட நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இன்று மதியம் 12 மணக்கு சபை கூடியதும், எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டனர்.

    அவைத்தலைவரின் முறையீட்டையும் மீறி எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சி திடீரென பல்டி அடித்துள்ளதால் சோனியா -மாயாவதி சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் உத்தரபிரதேசம் சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

    இதைத் தொடர்ந்து மாயாவதி இன்று (திங்கட்கிழமை) சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. 8 கருத்து கணிப்புகளில் 7-ல் பாரதீய ஜனதாதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாயாவதி மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை அவர் டெல்லிக்கு செல்லும் முடிவை தவிர்த்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேவைப்பட்டால் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கலாம் என்று அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. இதனால் சோனியா- மாயாவதி சந்திப்பு தள்ளி போய் உள்ளது.

    இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர் சத்தீஸ் சந்திரமிஸ்ரா கூறுகையில், “டெல்லியில் இன்று எங்கள் கட்சி தலைவர் மாயாவதிக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை. டெல்லியில் யாரையும் சந்தித்து பேசும் திட்டமும் இல்லை. அவர் லக்னோவில்தான் இருக்கிறார்” என்றார்.

    மாயாவதி திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டதால் சந்திரபாபு நாயுடு முயற்சிகளில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாயாவதியை போனில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரிய வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே காங்கிரஸ் கட்சியை மாயாவதி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக ராகுலின் செயல்பாடுகளில் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். என்றாலும் உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தனக்கு ஆதரவாக மாற்ற முடியும் என்று நினைத்தார்.

    ஆனால் கருத்து கணிப்புகளில் அவருக்கு சாதகமான வகையில் அதிக வெற்றி கிடைக்கும் என்று கூறப்படவில்லை. எனவே 23-ந்தேதி வரை காத்திருக்க அவர் தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ந்தேதி மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வருமாறு சோனியா அழைப்பு விடுத்து இருந்தார். அந்த அழைப்பை ஏற்று டெல்லி செல்ல போவதாக பல்வேறு கட்சி தலைவர்களும் அறிவித்து இருந்தனர்.


    பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஓரணியாக ஜனாதிபதியை 23-ந்தேதி இரவே சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளால் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    எனவே 23-ந்தேதி சோனியா கூட்டியுள்ள கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க தடை கோரிய வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ந்தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில், வறுமை கோட்டிற்குகீழ் உள்ள 60 லட்சம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் எனவும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

    மேலும் இந்த திட்டத்திற்காக ரூ.1,200 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த மாதம் 24-ந்தேதி (அதாவது நேற்று) தொடங்கும் இந்த திட்டம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    4 நாட்களில் உரிய பயனாளிகளைக் கண்டறிந்து இந்த திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்தை வழங்குவது என்பது சாத்தியமல்ல. மேலும் கஜா பாதிப்பு தமிழகம் முழுவதும் ஏற்படாத நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் கஜா புயல் பாதிப்பை காரணம் காட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த சூழ்நிலையில் வாக்காளர்களை கவரும் விதமாகவும், அவர்களின் கவனத்தை அ.தி.மு.க.வை நோக்கி திசை திருப்பும் விதமாகவும் இந்த அறிவிப்பு உள்ளது.

    நிதிநிலை அறிக்கையில், தமிழகம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி கடனில் உள்ளது என்றும், இதற்கு ரூ.29 ஆயிரத்து 624 கோடி வட்டியாக செலுத்தப்பட்டு வருகிறது எனவும், அரசின் நிதிப்பற்றாகுறை ரூ.44 ஆயிரத்து 176 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் அறிவித்து வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பான கோர்ட்டு உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த சிறப்பு நிதி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. உண்மையான பயனாளிகளை கணக்கெடுப்பதில் சிக்கலும், முறைகேடுகளும் நடக்கும். எனவே கணக்கிடுவதில் உள்ள முரண்களைக் களைந்து தேர்தல் முடிந்த பின் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து சிறப்பு நிதியை வழங்க வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #MaduraiHC

    ஜி.எஸ்.டி. துணை கமிட்டி கூட்டம் 23-ந் தேதியும், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 24-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. #GSTCouncilMeeting
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 33-வது கூட்டம் நேற்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் தொடங்கியது. காணொலிகாட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் கேரளா, டெல்லி, பஞ்சாப் உள்பட 6 மாநில நிதி மந்திரிகள் ரியல் எஸ்டேட், லாட்டரி சீட்டு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அருண்ஜெட்லியிடம் கூறினார்கள். இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. துணை கமிட்டி கூட்டம் 23-ந் தேதியும், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 24-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அருண்ஜெட்லியும், ‘இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்ட விவாதம் இன்னும் நிறைவுபெறவில்லை’ என்று தெரிவித்தார். ஜனவரி மாத ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் தேதியும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்றும், காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #Doubleleafsymbol
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் மற்றும் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆகியோர் தங்கள் இறுதி சுற்று வாதங்களை முன்வைத்தனர்.

    அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு எழுத்துபூர்வ வாதங்களை வரும் திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

    டி.டி.வி.தினகரன் தரப்பில் குக்கர் சின்னம் கோரும் வழக்கின் மீது நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #Doubleleafsymbol

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் போலீஸ் கமிஷனரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யச் சென்ற விவகாரம் தொடர்பான அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. #LokSabhaadjourned #RajyaSabhaadjourned #TMCmembers #CBIissue
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.
     
    அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.

    மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மிரட்டி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நேற்றிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இன்று காலை பாராளுமன்றம் கூடியதும் இவ்விவகாரத்தை மையப்படுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். மத்திய அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து அவர்கள் பேசினர்.



    இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை கண்டிக்கும் வகையில் பேசினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு மேல் பாராளுமன்றம் கூடியபோதும் இந்த பிரச்சனையை மையப்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

    மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்ததால் நாளைவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #LokSabhaadjourned #RajyaSabhaadjourned #TMCmembers #CBIissue
     
    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #LokSabhaadjourned #oppositionuproar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், 2012-2016 ஆண்டுகளுக்கு இடையில் அம்மாநிலத்தின் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலத்தில் சபரிமலை கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வினரால் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கூறிய சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காததால் அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

    2 மணிக்கு பின்னர் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.


    மக்களவையிலும் இன்று ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். அதற்கு  பின்னர் அவை கூடியபோது அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் ஒரு தெலுங்கு தேசம் உறுப்பினரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து  அமளி நீடித்ததால் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த அமளிகளுக்கு இடையில், விவாகரத்துக்கான காரணத்தில் இருந்து தொழுநோயை நீக்கும் தனிநபர் சட்டதிருத்த மசோதா நிறைவேறியது.

    இதன் பின்னரும் அவையில் கூச்சல் நீடித்ததால் மக்களவையை நாளைவரை ஒத்திவைப்பதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.  #RajyaSabhaadjourned #LokSabhaadjourned #oppositionuproar
    முத்தலாக் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்களும், காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று  முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது பாராளுமன்ற தேர்வு குழுவின் (செலக்ட் கமிட்டி) பரிசீலனைக்கு அனுப்பி வைக்காமல் முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார்.

    இந்த மசோதா பல கோடி முஸ்லிம்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதே கருத்தை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரெக் ஓ பிரியனும் பேசினார்.



    அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனால், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

    அதன்பின்னரும், பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஜனவரி இரண்டாம் தேதிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார். #RajyaSabha #RajyaSabhaadjourned #tripletalaq #tripletalaqbill 
    பாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #AIADMKmembers #Cauveryissue
    புதுடெல்லி:

    கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
     
    மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா  31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

    இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் அனைத்து எம்.பிக்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த மசோதாவை ஆதரிக்க மாட்டோம் என அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

    இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முத்தலாக் மசோதாவை தடுப்பது தொடர்பாக விவாதித்தனர்.



    இதேபோல், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆளும்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் காவிரி விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனை எழுப்பினர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ரபேல் விவகாரம், விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக எம்.பி.க்கள் ஒரே நேரத்தில் கூச்சலிட்டனர்.

    இதனால் அவையில் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் நீடித்ததால் பிற்பகல் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned  #AIADMKmembers #Cauveryissue 
    மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 31-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று கூடியது.

    பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

    இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது அ.தி.மு.க., காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் எழுந்து தங்கள் மாநில பிரச்சனைகளை எழுப்பினார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தெலுங்குதேசம் எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும் கோ‌ஷம் எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்கள் ரபேல் போர் விமான பிரச்சனை பற்றி பேசினார்கள்.

    இதனால் அமளி ஏற்பட்டதைத்தொடர்ந்து பாராளுமன்றம் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல் மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. #WinterSession #RajyaSabha #TripleTalaq
    எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து 27ம் தேதி பாராளுமன்றம் கூடும். #LokSabhaAdjourned #ChristmasHolidays
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    12 மணிக்கு அவை கூடியபோதும் அதிமுக, தெலுங்குதேசம் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இந்த அமளிக்கு மத்தியிலும் ஜீரோ அவர் பணிகள் நடைபெற்றன. இதில் 5 உறுப்பினர்கள் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இதுதுவிர பொது கணக்கு குழு மற்றும் இரண்டு நிலைக் குழு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

    ஜீரோ அவர் முடிந்த பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் பேசினார். அப்போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய நாட்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெரும்பாலான எம்பிக்கள் கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார். இது தொடர்பாக தானும் கடிதம் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.



    இக்கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய நாட்கள் மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார்.

    அதன்பின்னர் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 5 நாட்கள் மக்களவை செயல்படாது. இனி டிசம்பர் 27-ம் தேதி மக்களவை கூடும். இதேபோல் மாநிலங்களவைக்கும் நாளை முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaAdjourned #ChristmasHolidays
    ×