என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Byமாலை மலர்31 Dec 2018 9:40 AM GMT (Updated: 31 Dec 2018 9:40 AM GMT)
முத்தலாக் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்களும், காவிரி பிரச்சனையை முன்வைத்து தமிழக எம்.பி.க்களும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha #RajyaSabhaadjourned
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது பாராளுமன்ற தேர்வு குழுவின் (செலக்ட் கமிட்டி) பரிசீலனைக்கு அனுப்பி வைக்காமல் முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார்.
அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனால், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அதன்பின்னரும், பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஜனவரி இரண்டாம் தேதிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார். #RajyaSabha #RajyaSabhaadjourned #tripletalaq #tripletalaqbill
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் காலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு பின்னர் அவை கூடியபோது பாராளுமன்ற தேர்வு குழுவின் (செலக்ட் கமிட்டி) பரிசீலனைக்கு அனுப்பி வைக்காமல் முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார்.
இந்த மசோதா பல கோடி முஸ்லிம்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதே கருத்தை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரெக் ஓ பிரியனும் பேசினார்.
அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதனால், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அதன்பின்னரும், பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஜனவரி இரண்டாம் தேதிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார். #RajyaSabha #RajyaSabhaadjourned #tripletalaq #tripletalaqbill
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X