search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI issue"

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MamataDharna #CBI #CBIvsMamata #KolkataCommissioner
    புதுடெல்லி:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தச் சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கமிஷனருக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.



    இந்நிலையில், இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவி கண்ணா, தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த மோசடியில் மூத்த அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

    ‘மேற்கு வங்க அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. ராஜீவ் குமாருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி,  மோசடி தொடர்பான ஆதாரங்களை குற்றவாளிகளிடமே கொடுத்துள்ளார். மேலும் வழக்கு தொடர்பான நிறைய விவரங்கள் காணாமல் போய் விட்டன’ என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

    ஆனால், நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக எந்த எப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை என்று மேற்கு வங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கு வங்க தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  #MamataDharna #CBI #CBIvsMamata #KolkataCommissioner

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் போலீஸ் கமிஷனரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யச் சென்ற விவகாரம் தொடர்பான அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது. #LokSabhaadjourned #RajyaSabhaadjourned #TMCmembers #CBIissue
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.
     
    அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.

    மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மிரட்டி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நேற்றிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இன்று காலை பாராளுமன்றம் கூடியதும் இவ்விவகாரத்தை மையப்படுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். மத்திய அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து அவர்கள் பேசினர்.



    இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை கண்டிக்கும் வகையில் பேசினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு மேல் பாராளுமன்றம் கூடியபோதும் இந்த பிரச்சனையை மையப்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

    மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்ததால் நாளைவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #LokSabhaadjourned #RajyaSabhaadjourned #TMCmembers #CBIissue
     
    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஏ.கே. சிக்ரியும் விலகியுள்ளார். #JusticeSikri #CBI
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

    அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

    அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த வழக்கு கடந்த 21-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகினார்.


    புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இடம் பெற்று இருப்பதால் இந்த வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது என்று கூறி அதில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்தார்.

    இந்த வழக்கை நீதிபதி சிக்ரி தலைமையிலான வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஏ.கே. சிக்ரியும் விலகியுள்ளார். ஏற்கனவே தலைமை நீதிபதி விலகி இருந்த நிலையில் மற்றொரு நீதிபதியும் விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து வேறு ஒரு அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சி.பி.ஐ. புதிய இயக்குனரை இன்று மாலை தேர்வு செய்கிறது. இதற்கான இறுதிப்பட்டியலில் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். #JusticeSikri #CBI
    சிபிஐ அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில், பிரதமரின் ஊழல் நிறுத்தப்படும் வரையில், மக்களும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.#RahulGandhi #PMModi #Rafale #CBI #Congress #BJP
    புதுடெல்லி:

    சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு இடையேயான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எடுத்த முடிவாய், இருவருக்கும் தற்காலிக விடுப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், பொறுப்பு இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமனம் செய்தது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரபேல் விவகாரத்தில் பிரதமரின் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு இடங்களில் சிபிஐ அலுவலகங்களை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.



    இந்நிலையில், இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஊழலுக்கு எதிராகவும், ரபேல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க தடுப்பதை எதிர்த்தும், அநீதிக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குரல் கொடுக்க ஒன்றிணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமரின் ஊழல்கள் நிறுத்தப்படும் வரையில் எதிர்க்கட்சிகளும், மக்களும் காங்கிரஸ் உடன் இணைந்து போராட வேண்டும் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #Rafale #CBI #Congress #BJP
    ×