என் மலர்
நீங்கள் தேடியது "Lok Sabha"
- விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
- நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா மீதான விவாதம் நேற்றிரவு மக்களவையில் நடைபெற்றது.
மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று மசோதாவைத் தாக்கல் செய்தார்.
திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே பேரணியாக நடந்து சென்று காங்கிரசின் கார்கே, கேசி வேணுகோபால், பா. சிதம்பரம், திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி, மற்ற பிற கட்சிகளின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
- பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
- 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கீர்த்தி ஆசாத் மக்களவையில் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பயன்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் அந்த உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அனுராக் தாக்கூர் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.
குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.
இந்நிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கைக்குள் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் புகைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவையின் சிசிடிவி பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை ரத்துசெய்து வருகிறது.
- பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று இண்டிகோ விமான நிறுவன பிரச்சனை எழுப்பப்பட்டது.
புதுடெல்லி:
மத்திய அரசின் புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்காத இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடி சிக்கித் தவிக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை ரத்துசெய்து வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்றன் மக்களவையில் இன்று இண்டிகோ பிரச்சனை எழுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு பதிலளித்துப் பேசியதாவது:
எந்த விமான நிறுவனமும் சரி, அது எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும் சரி. பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது.
கடுமையான, தகுந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்.
இதுவரை ரூ.750 கோடி பயணிகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகளின் உடமைகள் உரிய முறையில் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டு இருக்கிறதா என்பதையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்தார்.
பெங்களூருவில் 121, ஐதராபாத்தில் 58, சென்னை 41, கேரளா 4 என இன்றும் 200க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்தாகின. தொடர்ந்து ரத்து அறிவிப்பு வெளியாகிக் கொண்டே வருவதால் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகளை குறைக்கலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
- அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் SIR குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை அவை தொடங்கும் முன் நடைபெற உள்ளது.
காலை 9. 30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது விவாதத்தில் என்ன பதிலளிப்பது என்பது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
- ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்
- சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' குறித்து நாடாளுமன்றத்தில் இன்று 10 மணி நேரம் நடைபெற்ற விவாதம், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இப்போது வந்தே மாதரத்தை நாட்டில் பிளவை ஏற்படுத்த ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதன்போது வந்தே மாதரம் தேசிய கீதம் ஆகாததற்கு நேருவே காரணம் என மக்களவையில் மோடி வசை பாடினார்.
இதற்கிடையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரும் எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், பிளவுபடுத்தும் சக்திகள் வந்தே மாதரத்தை பிரிவினையை உருவாக்கப் பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த நபர்கள் இன்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய அதே பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்றும் பாஜகவை விமர்சித்தார்.
மேலும் "சுதந்திர போராட்டத்தால் பங்கேற்காதவர்கள் இன்று வந்தே மாதரம் பற்றி பேசுகிறார்கள். ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதார் பேசுகையில், வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடல் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துசக்தி அளித்த மில்லியன் கணக்கான மக்களால் பாடப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து.
உதாரணமாக, சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.
இளம் வயதில் குதிராம் போஸ் தன் உயிரைத் தியாகம் செய்தபோது, இன்று உள்ள ஆளும் கட்சியின் மூதாதையர்கள் கருணை மனுக்களை எழுதுவதில் மும்முரமாக இருந்தனர்" என்று விமர்சித்தார்.
இந்த விவாதத்தை அரசு நடத்துவதற்கு மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள தேர்தலே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
- ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
- இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரை போன்ற போலியான உருவத்தை உருவாக்குவதே deep fake. இவற்றின் மூலம் ஒருவரை ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நடிகைகள், பிரபலங்கள் இதற்கு இரையாகி உள்ளனர். மேலும் பெண்களை தவறாக சித்தரித்து பிளாக் மெயில் செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சிவசேனா எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே Deep fake ஒழுங்குமுறை மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் deep fake களை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான சட்ட கட்டமைப்பை நிறுவ இந்த முன்மொழியப்பட்ட மசோதா முயல்கிறது என்று அவர் கூறினார்.
இந்த மசோதா, தேசிய பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும், deep fake தனியுரிமை, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் தேர்தல்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கும் ஒரு deep fake பணிக்குழுவை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஷிண்டே கூறினார்.
- ஜம்மு-காஷ்மீரில் UAPA-வின் கீழ் அதிகபட்சமாக 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
- இரண்டாவதாக உத்தரப் பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன.
2019-23 க்கு இடையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் மொத்தம் 10,440 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் 335 பேர் மட்டுமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் சமர்ப்பித்த தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜம்மு-காஷ்மீரில் UAPA-வின் கீழ் அதிகபட்சமாக 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் இரண்டாவதாக உத்தரப் பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன. இவற்றில் 222 வழக்குகளில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடைபெறும் பிற மாநிலங்களில் அசாம், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை அடங்கும்.
1967 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட UAPA, மத்திய அரசை ஒரு நபர் அல்லது அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவிக்க அனுமதிக்கிறது மற்றும் பயங்கரவாதம் என்ற வரையறையின் கீழ் பாவிக்கப்படுகிறது. இது மற்ற வழக்குகளை போலல்லாமல் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக உரிமையை குறைக்கிறது.
UAPA-வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் பெறுவதும் கடினமானதாகும். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது அதிகரித்து வரும் UAPA வழக்குகள் குறித்து சமூக ஆர்வலர்களும் ஜனநாயக சக்திகளும் கவலை தெரிவித்துவரும் சூழலில் அரசின் இந்த தரவு வந்துள்ளது.
- விபத்து எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் அதிகம்
- விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடம்
2024-ல் இந்தியாவில் சாலைவிபத்தில் 1.77 லட்சம் பேர் இறந்ததாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மக்களவையில் தெரிவித்தார். அதாவது ஒரு நாளைகு 485 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 2.31 சதவீதம் அதிகமாகும்.
2024-ல் நாட்டில் பதிவான மொத்த சாலை விபத்து இறப்புகளின் எண்ணிக்கை 1,77,177 ஆகும். இதில் eDAR போர்ட்டலில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கு வங்கம் தொடர்பான தரவுகளும் அடங்கும். 2023 ஆம் ஆண்டு மொத்தம் 4,80,583 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,72,890 பேர் உயிரிழந்துள்ளனர். 4,62,825 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இங்கு 23,652 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,118 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டில் 18,347 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18,449 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இறப்பு எண்ணிக்கை 15,366 லிருந்து 15,715 ஆக அதிகரித்துள்ளது. இவற்றிற்கு மாறாக கேரளா குறைந்த அளவு விபத்து சதவிகித்தை பதிவு செய்துள்ளது.
- தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12மணிவரை ஒத்திவைப்பட்டது.
- திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது - டி.ஆர்.பாலு
பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியுள்ளது.
இதனிடையே, இன்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி இருஅவைகளிலும், ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் இவ்விவகாரம் அரசு சார்ந்த விவகாரம் கிடையாது எனக்கூறி விவாதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12மணிவரை ஒத்திவைப்பட்டது. இதன்பின் மக்களவை கூடியதும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே பேசிய டி.ஆர்.பாலு, திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த கவலை அளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். தனிநீதிபதி அளித்த தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்றார்.
டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நீதிபதி சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதற்கு மத்திய அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே நீதிபதி சாமிநாதன் குறித்த டி.ஆர்.பாலுவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.- பா.ஜ.க. எம்.பி.க்கள் மாறிமாறி கோஷமிட்டனர்.
- பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின.
- மேல்சபை எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.
பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை கூடிய ஒரு நிமிடத்திலேயே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல மேல்சபையிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
- சர்வதேச விண்வெளி மையம் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது.
- சுபான்ஷு சுக்லா தனது குடும்பத்தினருடன் நேற்று காலை இந்தியா வந்தடைந்தார்.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, 3 பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த ஜூலை 15-ல் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தப் பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. நேற்று காலை இந்தியா வந்தடைந்த அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்
இந்நிலையில், வளர்ச்சியடைந்த இந்தியாவில் விண்வெளி திட்டங்களில் முக்கியமான ஒன்றான சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல் முறையாக இந்தியர் சென்றது தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.
- பீகார் SIR தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்.
- ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. இன்று தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இதனால் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மக்களவையில் விளையாட்டுத்துறை தொடர்பான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெறும்போது, பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல் காந்த உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், உறுப்பினர்கள் அவைக்கு திரும்பிய போதிலும், முழக்கமிட்டனர். இதற்கிடையே சுருக்கமான விவாத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா
இந்த மசோதா விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான தயாரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இந்திய விளையாட்டு வீரர்களின் பங்களிப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய இலக்குகளாகும்.
தேசிய விளையாட்டு வாரியம் (NSB):
விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், விதிமுறைகளை வகுக்கவும் ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும்.
மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கு, அனைத்து சம்மேளனங்களும் இந்த வாரியத்தில் அங்கீகாரம் பெற வேண்டும்.
தேர்தல் முறைகேடு, நிதி தவறாகப் பயன்படுத்துதல், அல்லது ஆண்டு தணிக்கைக் கணக்கு வெளியிடத் தவறினால், சம்மேளனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த வாரியத்திற்கு உள்ளது.






