search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Sabha"

    • மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணைய இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

    பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார்.

    இதையடுத்து இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி தேர்வு செய்தது.

    இதில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் கமிஷனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர்சிங் சந்து நேற்று காலை பதவியேற்று கொண்டனர். முன்னதாக அவர்களை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வரவேற்றார்.

    இதையடுத்து பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு எடுத்துவிட்ட நிலையில் அது தொடர்பாக புதிய இரு தேர்தல் கமிஷனர்களுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற தேர்தல் இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

    அத்துடன், அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று மதியம் 3 மணியளவில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அதில், மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்டத்திலேயே ஒரே கட்டமாக தமிழ்நாடில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஏப்ரல் 19ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    2ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும்.

    3ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் அனைத்தும் மேம் 7ம் தேதி நடைபெறுகிறது.

    4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெறுகிறது.

    5ம் கட்ட தேர்தல் மே 20ம் தேதி நடைபெறுகிறது.

    6ம் கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெறுகிறது.

    மக்களவை தேர்தல் முடிவு ஜூன் 4ம் அறிவிக்கப்படுகிறது.

    மேலும், தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 20ம் தேதி முதல் தொடங்குகிறது.

    வேட்புமனு கடைசி நாள் மார்ச் 27ம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி அன்று நடைபெறுகிறது.

    வேட்பு மனு வாபஸ் மார்ச் 30ம் தேதி நடைபெறுகிறது.

    • 2 ஆண்டுகளில் 11 மாநில தேர்தல்களை நடத்தியுள்ளோம்.
    • மக்களவை தேர்தலுக்கு 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் தேர்தலை உலகமே கவனித்து கொண்டிருக்கிறது. தேர்தலை நேர்மையாக நடத்துவோம்.

    மக்களவை தேர்தலை நடத்த குழு அளவில் தயாராக உள்ளோம். ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு தேர்வு போன்று தான்.

    அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மக்கள் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தோம்.

    அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்தலுக்கான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவது என்பது மிகப் பெரிய சவால்.

    மக்களவை தேர்தலுக்கு 10.5 லட்சம் வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1.82 கோடி முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 20.5 கோடி இளம் வாக்காளர்கள் உள்ளனர்.

    16 குடியரசு தலைவர், துணை தலைவர் தேர்தல்களை நடத்தி உள்ளோம். 2 ஆண்டுகளில் 11 மாநில தேர்தல்களை நடத்தியுள்ளோம்.

    வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் ஒவ்வொரு நிலையிலும் அரசியல் கட்சியினரிடமும் ஆலோசனை நடத்தினோம்.

    1000 ஆண் வாக்காளர்களுக்கு, 947 பெண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. 49.7 கோடி ஆண் வாக்களர்கள் உள்ளனர்.

    100 வயதைக் கடந்த 2.18 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    மக்களவை தேர்தலில் 55 லட்சம் மன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தேர்தல் தொடர்பான விவரங்களை வாக்காளர்கள் செயலி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

    2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தங்களின் வேட்பாளர் குறித்து விபரங்களை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் தெரியப்படுத்த வேண்டும்.

    KYC செயலியில் வேட்பாளர் பற்றிய பிரமாண பத்திரங்கள கிடைக்கும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்படும்.

    எல்லைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். புகார் அளிக்க மக்கள் செயலிகளை பயன்படுத்தலாம்.

    தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. சட்டவிரோத ஆன்லைன் பணப் பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

    அண்மையில் நடைபெற்ற பல்வேறு மாநில தேர்தல்களில் 3,400 கோடி பணம் சிக்கியது.

    சூரிய மறைவுக்கு பிறகு வங்கி வாகனங்களில் பண நடமாட்டம் கூடாது. தேர்தலில் வெறுப்பு பிரசாரம் இருக்க கூடாது.

    தனி நபர் வாழ்க்கை குறித்து எந்த விமர்சனமும் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
    • கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இருந்த போதிலும் சில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    இந்நிலையில், அரியானா மாநில பாஜக தலைவராகவும், குருக்ஷேத்ரா தொகுதி எம்.பி ஆகவும் இருக்கும் நயாப் சைனி ஹரியானா முதல்வராக பதவியேற்றார்

    இன்று மாலை 5 மணியளவில் நயப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • ஜனநாயக ஜனதா கட்சி உடன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பாஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    இருந்த போதிலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    2019 மக்களவை தேர்தலில் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஜேஜேபி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஏழு இடங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பின் சட்டமன்ற தேர்தலின்போது ஜேஜேபி கட்சியுடன் கூட்டணி வைத்தது.

    90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அரியானாவில் பா.ஜனதாவுக்கு 41 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். 5 சுயேட்சை எம்எல்ஏ-க்கள் மற்றும் ஹெச்.எல்.பி எம்.எல்.ஏ. கோபால் கண்டா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழுவை அறிவித்துள்ளார்.
    • தேமுதிக, அதிமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

    நடைபெறவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அறிவித்துள்ளார்.

    இக்குழுவில், தேமுதிக கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே. சுதீஷ், அவைத்தலைவர் டாக்டர்.வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம்.R. மோகன்ராஜ் மற்றும் துணைச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தேமுதிக, அதிமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அதிமுக - தேமுதிக இடையே 2ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    • பலதரப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பதிலும் உதவுவதிலும் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது.
    • எனது அறக்கட்டளை YOUWECAN மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாஜகவில் இணைந்து, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக தான் யுவராஜ் சிங், அண்மையில் மாநில பாஜக தலைவர் சோம்தேவ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இது தொடர்பான செய்திகளுக்கு தற்போது யுவராஜ் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்று கூறி, வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "பலதரப்பட்ட மக்களுக்கு ஆதரவு கொடுப்பதிலும் உதவுவதிலும் மட்டுமே எனது ஆர்வம் உள்ளது. எனது அறக்கட்டளை YOUWECAN மூலம் அதைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறேன். எங்களின் சிறந்த திறன்களை ஒன்றாக வெளிப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவோம்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
    • இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

    இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.
    • மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர்.

     'மதுரை தொகுதி MP-யை காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் பல்வறு தொகுதிகளிளும் எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.

    சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் கரூர் தொகுதிகளிலும் இதே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    இந்நிலையில் நேற்று மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் பக்கத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது
    • பிரதமர் மோடி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்

    வரும் ஏப்ரல்-மே மாத இடையில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    கடந்த ஜனவரி 31 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

    கடந்த பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இக்கூட்டத்தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தொடரின் கடைசி அமர்வு இன்று நடைபெற்றது.


    இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "இந்த அமர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன" என தெரிவித்தார்.

    இதையடுத்து, பட்ஜெட் தொடர் நிறைவடைந்து, முதலில் மக்களவையும், பிறகு மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

    இத்துடன் 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரும் நிறைவுக்கு வந்தது.

    மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், 17-வது அவையில், கடந்த 5 வருட காலங்களில், 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நடைபெற்றது.
    • கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தியுள்ளார்.

    17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் பிரமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் போன்றவை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தியுள்ளார். ஒருபோதும் அதன் பணியை தடை படவிட்டதில்லை."

    "கொரோனா காலக்கட்டத்தில் எம்.பி.க்கள் தங்கள் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைத்துக் கொண்டனர். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. உலகத்தின் முன்பு, நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் அடையாளம், திறன்களை பறைசாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது."

    "ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜி20 மாநாட்டை போல, ஜி20 நாடுகளின் சபாநாயகர்களின் மாநாடும் நடைபெற்றது. ஜி20 மாநாட்டின் வெற்றிக்கு அனைத்து மாநிலங்களும் பங்களிப்பை வழங்கின."

    "17-வது மக்களவையில் செயல்திறன் 97 சதவீதமாக உள்ளது. 18-வது மக்களவையில், அவையின் செயல்திறன் 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என உறுதி ஏற்போம். 17-வது மக்களவையில் பல்வேறு முத்திரைகளை பதித்துள்ளோம். அனைத்து கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களுக்கும் நன்றி."

    "ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு நீண்ட காலமாக காத்திருக்கப்பட்டது. புதிய அவையில் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் மூலம் இஸ்லாமிய பெண்கள் துயரங்களை அனுபவித்தனர். முத்தலாக் தடை சட்டமும் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டது. மகளிருக்கு மரியாதை அளிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவும் 17-வது மக்களவையில் தான் எடுக்கப்பட்டது."

    "வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்குவோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கான பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்து இளைஞர்கள் பெரும் கவலை கொண்டனர். அதற்கான சட்டத்தை கொண்டு வந்து கவலைகளை நாம் அகற்றியுள்ளோம்."

    "தேசிய ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான சட்டம் இந்த அவையில் தான் இயற்றப்பட்டது. தேசத்தின் இளைஞர் சக்தியின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்தியா விரைவில் ஆராய்ச்சிக்கான மையமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.

    • உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • கடந்த மாதம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்தார்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.3,000 கோடி செலவில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி அந்த ஆலயத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி விழாவில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் வடமாநிலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் சத்யபால்சிங், பிரதாப் சந்திரா சாரங்கி, சிந்தோர் பாண்டே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் மேல்-சபையில் எம்.பி.க்கள் கே.லட்சுமணன், சுதன்ஷூ திவேதி, ராகேஷ் சின்கா ஆகியோரும் தீர்மானம் கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே இன்று பாராளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், இரு அவைகளிலும் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் ஆஜராகுமாறும் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்ற மக்களவையில் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான தீர்மானம் மீது விவாதம் நடந்தது.

    அப்போது பேசிய பா.ஜ.க. எம்.பி. சத்யபால் சிங், இந்த விவாதத்தில் பங்கேற்று பேசுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்த்தது, கடவுள் ராமரை தரிசனம் செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ராமர், இந்துக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் சொந்தமானவர். ராமரை காங்கிரஸ் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லையே ஏன்?
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாராளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் கேள்வி எழுப்பினார்.

    2019-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லையே ஏன்?

    இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதம் மற்றும் கொரோனா பெரும் தொற்று காரணமாகவும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×