என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok Sabha"

    • பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின.
    • மேல்சபை எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

    பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. அமளிக்கு இடையே பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை கூடிய ஒரு நிமிடத்திலேயே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல மேல்சபையிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.

    • சர்வதேச விண்வெளி மையம் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது.
    • சுபான்ஷு சுக்லா தனது குடும்பத்தினருடன் நேற்று காலை இந்தியா வந்தடைந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர், நாசா மற்றும் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனம் சார்பில் 'ஆக்சியம்- - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, 3 பேருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடந்த ஜூன் 25ல் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை மறுநாள் அடைந்தனர். கடந்த ஜூலை 15-ல் பூமிக்கு திரும்பினர். சர்வதேச விண்வெளி மையத்தில் விவசாயம் உட்பட பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இந்தப் பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்தது. நேற்று காலை இந்தியா வந்தடைந்த அவரை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்

    இந்நிலையில், வளர்ச்சியடைந்த இந்தியாவில் விண்வெளி திட்டங்களில் முக்கியமான ஒன்றான சர்வதேச விண்வெளி மையத்துக்கு முதல் முறையாக இந்தியர் சென்றது தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.

    • பீகார் SIR தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்.
    • ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. இன்று தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இதனால் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே, மக்களவையில் விளையாட்டுத்துறை தொடர்பான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெறும்போது, பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல் காந்த உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர், உறுப்பினர்கள் அவைக்கு திரும்பிய போதிலும், முழக்கமிட்டனர். இதற்கிடையே சுருக்கமான விவாத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

    தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா

    இந்த மசோதா விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான தயாரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இந்திய விளையாட்டு வீரர்களின் பங்களிப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய இலக்குகளாகும்.

    தேசிய விளையாட்டு வாரியம் (NSB):

    விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், விதிமுறைகளை வகுக்கவும் ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும்.

    மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கு, அனைத்து சம்மேளனங்களும் இந்த வாரியத்தில் அங்கீகாரம் பெற வேண்டும்.

    தேர்தல் முறைகேடு, நிதி தவறாகப் பயன்படுத்துதல், அல்லது ஆண்டு தணிக்கைக் கணக்கு வெளியிடத் தவறினால், சம்மேளனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த வாரியத்திற்கு உள்ளது.

    • சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
    • இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான நிதியை மந்திரி சபை ஒதுக்கீடு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான நிதியை மந்திரி சபை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இந்நிலையில், 2026-27 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி சோலார் பேனல்கள் அமைக்க திட்டமிட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என எரிசக்தி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

    2026-27-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சூரிய மின்சக்தியை நிறுவுவதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

    ஜூன் 30 அன்று, மத்தியப் பிரதேசத்தில் சூரிய சக்தி (5,570 மெகாவாட்), காற்றாலை (3,195.15 மெகாவாட்), உயிரி மின்சாரம் (155.46 மெகாவாட்) மற்றும் நீர் மின்சாரம் (2358.71 மெகாவாட்) போன்ற பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மொத்தம் 11,279.39 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.

    சூரிய பூங்காக்கள் மற்றும் அல்ட்ரா-மெகா சூரிய மின் திட்டங்களின் மேம்பாடு திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 4248 மெகாவாட் திறன் கொண்ட 8 சூரிய மின்சக்தி பூங்காக்களை அமைக்க அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.

    • 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.
    • அவர்களுக்கான உதவிகளை இந்திய தூதரகங்கள் மூலம் செய்து வருகிறோம் என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சவுதி அரேபியாவில் 2,379 பேர், நேபாளத்தில் 1,357 பேர், கத்தாரில் 795 பேர், மலேசியாவில் 380 பேர், குவைத்தில் 342 பேர், பிரிட்டனில் 323 பேர், பஹ்ரைனில் 261 பேர் மற்றும் பாகிஸ்தானில் 246 இந்தியர்களும் சிறைகளில் உள்ளனர்.

    மேலும், 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 21 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் பொது மன்னிப்பு கேட்பதற்கான உதவிகளை இந்திய தூதரகங்கள் மூலம் செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேச கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு ஏற்கவில்லை.
    • திர்க்கட்சி தலைவரை முடக்க பார்க்கிறார்கள். அவரை பேச அனுமதிக்க வேண்டும்

    பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அரசு நேற்று வேண்டு கோள் விடுத்து இருந்தது.

    ஆனால் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தான் போர், டிரம்ப் கருத்து, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவை குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து அனைத்து விவாதத்துக்கும் தயார் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    இதையடுத்து 10.45 மணிக்கு எம்.பி.க்கள் வரத் தொடங்கினார்கள். 11 மணிக்கு பாராளுமன்றம் தொடங்கியது. முதலில் அகமதாபாத் விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு வழக்கமான அலுவல்கள் நடைபெற்றன.

    அப்போது எதிர்க்கட்சி கள் எழுந்து பகல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களை சபைக்கு தருமாறு கூறினார்கள்.

    ஆனால் சபாநாயகர் அதை ஏற்கவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நிகழ்ச்சி தொடங்கிய 20 நிமிடங்களில் ஒத்தி வைக்கப் பட்டது. 12 மணிக்கு மீண்டும் சபை கூடும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

    12 மணிக்கு மீண்டும் சபை கூடியதும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. சபாநாயகர் கோரிக்கைகளை எதிர்க் கட்சி எம்.பி.க்கள் ஏற்க வில்லை.

    இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வெளியில் வந்த ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேச கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் பேச அனு மதி கேட்டேன்.

    ஆனால் எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. திட்டமிட்டு நான் பேச அனுமதி மறுக்கிறார்கள். நான் தொடர்ந்து மக்களுக் காக குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது பிரியங்கா நிருபர்களிடம் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவரை முடக்க பார்க்கிறார்கள். அவரை பேச அனுமதிக்க வேண்டும்" என்றார்.

    • முதல் மக்களவை முதல்16-வது மக்களவை வரை, ஒவ்வொரு அவைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார்.
    • பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து துணை சபாநாயகரை நியமிப்பது ஒரு மரபு.

    பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், முதல் மக்களவை முதல்16-வது மக்களவை வரை, ஒவ்வொரு அவைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து துணை சபாநாயகரை நியமிப்பது ஒரு மரபு. ஆனால் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறை யாக, இந்தப் பதவி தொடர்ச்சியாக இரண்டு மக்களவை யிலும் காலியாகவே உள்ளது.

    17-வது மக்களவையின் போது துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது தற்போது நடைபெற்று வரும் மக்களவையிலும் தொடர்கிறது. இது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல, மேலும் அரசியலமைப்பின் நன்கு வகுக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும். எனவே மக்களவையின் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையை மேலும் தாமதமின்றி தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார். 

    • சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்
    • ஒரு மூத்த தலைவர் அவையின் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதா நிறைவேறியது.

    இதற்கிடையே நேற்று நடந்த காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி வக்பு மசோதா குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    அவர் பேசியதாவது, வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சோனியா காந்தியின் பேச்சு இன்று மக்களவை கூட்டத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது. சோனியா காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஓம் பிர்லா, "இவ்வளவு விரிவான விவாதம் மற்றும் விதிகளின்படி முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டபோதிலும், ஒரு மூத்த தலைவர் அவையின் நடைமுறையை கேள்விக்குள்ளாக்கியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படுவது இல்லை" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே சோனியா காந்தி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாக வேண்டும் என பாஜக எம்.பிக்கள் இன்று மக்களவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதன்பின் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவையும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

    • பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது.
    • பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நிறைவடைந்த நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மக்களவையை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லா இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவையின் வேலை நேரம் 118% க்கும் அதிகமாக இருந்ததாகவும் கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், வக்ஃபு திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற சோனியா காந்தியின் கூற்று துரதிர்ஷ்டவசமானது மற்றும் அவையின் கண்ணியத்திற்கு எதிரானது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    • மணிப்பூர் தீர்மானம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார்
    • இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இதனையடுத்து நள்ளிரவு 2.30 மணிக்கு மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

    இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மணிப்பூர் விவகாரம் விரிவாக விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த தீர்மானம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
    • முஸ்லிம் மற்றும் சிறுபான்மை நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவைப் பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசினார். இந்த திருத்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    அக்கட்சியை சேர்ந்த எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி இன்று பாராளுமன்ற விவாதத்தின்போது பேசியதாவது, "இந்த மசோதாவை வடிவமைப்பதில் தெலுங்கு தேசம் கட்சியின் பங்கு, முஸ்லிம்களமற்றும் சிறுபான்மையினரின்  நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

    எங்கள் கட்சி உருவானதிலிருந்து சிறுபான்மையினரின் நலனை உறுதி செய்வது எப்போதும் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது" என்று மசோதாவை ஆதரித்துப் பேசினார். 

    • 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றசாட்டு
    • ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது.

    மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என்று மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார். சபாநாயகர் இந்தக் கருத்தைச் எதற்காக கூறினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

    சபாநாயகர் கூறியது குறித்து பேசிய ராகுல் காந்தி, "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சபாநாயகரிடம் என்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் என்னைப் பேச விடவில்லை. அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற தகவலை கூறினார். பின்னர் தனக்கு பேச வாய்ப்பளிக்காமல் அவையை ஒத்திவைத்தார்.

    மக்களவையில் நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை. அன்று, பிரதமர் மோடி, கும்பமேளா பற்றிப் பேசினார். நான் அதில் கூடுதல் தகவல்களை கூற விரும்பினேன். வேலையின்மை பற்றிப் பேச விரும்பினேன், ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், சபாநாயகரைச் சந்தித்து இது குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×