என் மலர்
நீங்கள் தேடியது "Civil Aviation Minister"
- விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
- 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்த 242 பேரின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் முதல்வர் மற்றும் போலீஸ் துறை அமைச்சரிடம் பேசியுள்ளார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்தைப் பார்வையிட மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
விபத்து தொடர்பாக நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன். மேலும் அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு நிறுவனங்களும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விமானத்தில் இருந்த அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு டெல்லி விமான நிலையத்தின் விபத்து நடந்த அப்பகுதியை பார்வாயிட்டார்.
- விபத்து நடந்துள்ள டலிலி விமான நிலையத்தில் டெர்மினல் 1 பகுதி 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று ராம் மோகன் தெரிவித்தார்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 27) காலை முதலே மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலில் மேற்கூரை இன்று [ஜூன் 28] அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.
பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்கள் மீது மேற்கூரை விழுந்ததால் அவை பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு டெல்லி விமான நிலையத்தின் விபத்து நடந்த பகுதியை பார்வாயிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்து இரங்கல் தெரிவித்தார்.
மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, டெல்லி விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு சோதனை நடத்தப்படும். அரசுக்கு இந்த சோதனை குறித்த முழு அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் இந்த பிரச்சனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் மட்டுமின்றி நாட்டில் இதே கட்டமைப்பைக் கொண்ட அனைத்து விமான நிலைய கட்டடங்களிலும் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். விபத்து நடந்துள்ள டெல்லி விமான நிலையத்தில் டெர்மினல் 1 பகுதி 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று ராம் மோகன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.






