search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "airports"

    • கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன
    • தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    கோவை,

    கொரோனா பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    கோவை சர்வதேச விமான நிலையம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. சென்ைன, பெங்க ளூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. மாதந்தோறும் பயணிகள் எண்ணிக்கை 3 லட்சமாக பதிவு செய்யப்பட்டது.

    கொரோனா பரவலால் விமான இயக்கம் கோவையில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில மாதங்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. சரக்கக அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

    ஆக்சிஜன் கருவிகள், முகக்கவசம், 'பிபிஇ' என்று சொல்லக்கூடிய பாது காப்புக் கவச உடைகள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர், மருந்துகள் உள்ளிட்ட அத்திவாசிய மருத்துவ பொருட்கள் சரக்கு விமானங்களில் கையாளப்பட்டு வந்தன. கொரோனா பரவல் தாக்கத்தில் இருந்து விமான நிலையம் மீண்டு வரத்தொடங்கியது.

    தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களில் 27 அல்லது 28 விமானங்கள் கூட இயக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன் 3 லட்சம் என்ற அளவில் இருந்தது.

    தற்ேபாது மூன்றாண்டுகளுக்கு பின் கடந்த மே மாதத்தில் உள்நாட்டு பிரிவில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 105 பேர், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 19 ஆயிரத்து 178 பேர் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 283-ஆக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "கொரோனா பரவலால் விமானங்கள் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டன.

    தொற்று பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

    இதற்கேற்ப விமான நிறுவனங்களும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன. இலங்கை நாட்டுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சேவை மற்றும் உள்நாட்டின் சில நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

    விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    குரங்கு அம்மை பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, அமெரிக்கா , லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அவ்வாறு அறிகுறிகள் உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட பயணி 21 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம்: ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்- 17 பேர் கைது
    அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 5 விமான நிலையங்களின் நிர்வாகம், பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றது. #Adanigroup #Adanigroupwins #fiveairportsbids
    புதுடெல்லி:

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்திய விமானப்போக்குவரத்து முகமையிடம் இருந்த இந்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு உலகத்தரமான சேவைகளை வழங்கும் வகையில் பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

    மேற்கண்ட விமான நிலையங்களை பராமரிப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடன் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அகமதாபாத், ஜெய்ப்பூர் விமான நிலையங்களை பராமரிக்க தலா 7 நிறுவனங்களும், லக்னோ, கவுகாத்தி விமான நிலையங்களை பராமரிக்க தலா 6 நிறுவனங்களும், திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களை பராமரிக்க தலா 3 நிறுவனங்களும் முன்வந்து டெண்டரில் பங்கேற்றன. மொத்தம் 10 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை பெற போட்டியிட்டன.

    இவற்றில் அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் கோரி இருந்த பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 5 விமானங்களை பராமரித்து நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

    கவுகாத்தி விமான நிலையம் தொடர்பான தகவல் ஏதும் இன்றுவரை வெளியாகவில்லை. #Adanigroup #Adanigroupwins #fiveairportsbids 
    அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்திய அல் கொய்தா பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கி பிரிட்டன் நாட்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். #alqaeda #alqaedaplan #blowupairports #blowupairliners #UKminister #BenWallace
    லண்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது 11-9-2001 அன்று விமானங்களை மோதவிட்டு அல் கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மோதிய நான்கு விமானங்களில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். 

    இதில் 246 பேர் பொதுமக்கள். 19 பேர் பயங்கரவாதிகள், உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் தீப்பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. 

    இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். இதற்கு பழிக்குப்பழியாய் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் நுழைந்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.

    அவரை கொன்ற பின்னர் அல் கொய்தாவின் ஆதிக்கம் அழிந்து விட்டதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்து வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், முன்னர் பலமிழந்தும் உதிரிகளாகவும் இருந்த அல் கொய்தா பயங்கரவாதிகள் மீண்டுன் பலம்பெற்று மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக பிரிட்டன் நாட்டு உள்துறை மந்திரி பென் வேல்லஸ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

    குறிப்பாக, பிரிட்டன் நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களை தாக்கி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்த அவர்கள் ஆயத்தமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    நவீன ஆயுதங்கள் மூலம் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் தொழில்நுட்பத்தில் அவர்கள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். புதிய யுக்திகள் மற்றும் முறைகளை பயன்படுத்தி ஐரோப்பிய கண்டத்தில் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் தயாரிப்பில் அல் கொய்தா பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிநவீன ரசாயனங்கள் மூலம் நடத்தப்படவுள்ள இந்த தாக்குதல்களில் இருந்து விமானங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்து தடுப்பு நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்காக பிரிட்டன் அரசு இதுவரை இரண்டரை கோடி பவுண்டுகளை செலவிட்டுள்ளது எனவும் அந்த பேட்டியில் பென் வேல்லஸ் தெரிவித்துள்ளார். #alqaeda #alqaedaplan #blowupairports #blowupairliners #UKminister #BenWallace 
    இந்தியாவில் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் எனவும், அதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். #SureshPrabhu
    புதுடெல்லி:

    இந்தியாவின் விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு கூறுகையில், உலகின் மிக அதிக விமான போக்குவரத்து வசதி கொண்ட 3-வது நாடாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வருவதற்காக முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    இதற்காக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், (இந்திய மதிப்பில் 4.2 லட்சம் கோடி ரூபாய்) நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கட்டுமானத்தில் அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். #SureshPrabhu 
    ×