என் மலர்
நீங்கள் தேடியது "airports"
- இந்திய எல்லை மாநிலங்களில் உள்ள 32 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டது.
- இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இதனால் இந்திய எல்லை மாநிலங்களில் உள்ள 32 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டது. இதில், சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்சால்மர், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர், தரம்சாலா, பதிண்டா, ஜோத்பூர், ஜாம் நகர், பூஜ், ஆதம்பூர், அம்பாலா, ஹல்வாரா, ஹிண்டன் காசியாபாத், கண்ட்லா, கங்ரா, கேசோட், குலுமணாலி, முந்த்ரா உள்ளிட்ட விமான நிலையங்கள் அடங்கும்.
இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- எல்லையில் இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது.
- பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
புதுடெல்லி:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்போது திருப்பி பதிலடி கொடுக்க இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்திய எல்லை மாநிலங்களில் உள்ள 24 முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் 14-ம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மேலும் 8 விமான நிலையங்களை வரும் 15-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்சால்மர், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர், தரம்சாலா, பதிண்டா, ஜோத்பூர், ஜாம் நகர், பூஜ், ஆதம்பூர், அம்பாலா, ஹல்வாரா, ஹிண்டன் காசியாபாத், கண்ட்லா, கங்ரா, கேசோட், குலுமணாலி, முந்த்ரா உள்ளிட்ட விமான நிலையங்கள் அடங்கும்.
- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்.
- பாதுகாப்பு நடவடிக்கையாக 24 விமான நிலையங்கள் மூடல்.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும்போது திருப்பி பதிலடி கொடுக்க இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்கான இந்தியா, எல்லை மாநிலங்களில் உள்ள முக்கியமான 24 விமான நிலையங்களை மூடியது. நாளை வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என முதலில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் 14ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பந்தர், கிஷன்கர், பாட்டியாலா, ஷிம்லா, ஜெய்கல்மேர், பதன்கோனட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர் உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
நேற்றிரவு இந்தியாவின் முக்கிய நகரங்கள், மக்கள் வசிக்கும் கட்டமைப்புகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் சுமார் 400 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்தியா தாக்குதல் நடத்துவதை தடுக்க பயணிகள் விமானத்தை கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்தியது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன
- தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை,
கொரோனா பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. சென்ைன, பெங்க ளூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. மாதந்தோறும் பயணிகள் எண்ணிக்கை 3 லட்சமாக பதிவு செய்யப்பட்டது.
கொரோனா பரவலால் விமான இயக்கம் கோவையில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில மாதங்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. சரக்கக அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
ஆக்சிஜன் கருவிகள், முகக்கவசம், 'பிபிஇ' என்று சொல்லக்கூடிய பாது காப்புக் கவச உடைகள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர், மருந்துகள் உள்ளிட்ட அத்திவாசிய மருத்துவ பொருட்கள் சரக்கு விமானங்களில் கையாளப்பட்டு வந்தன. கொரோனா பரவல் தாக்கத்தில் இருந்து விமான நிலையம் மீண்டு வரத்தொடங்கியது.
தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களில் 27 அல்லது 28 விமானங்கள் கூட இயக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன் 3 லட்சம் என்ற அளவில் இருந்தது.
தற்ேபாது மூன்றாண்டுகளுக்கு பின் கடந்த மே மாதத்தில் உள்நாட்டு பிரிவில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 105 பேர், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 19 ஆயிரத்து 178 பேர் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 283-ஆக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "கொரோனா பரவலால் விமானங்கள் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டன.
தொற்று பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இதற்கேற்ப விமான நிறுவனங்களும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன. இலங்கை நாட்டுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சேவை மற்றும் உள்நாட்டின் சில நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.
- தமிழகத்தில் பல மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
- ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனைகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று அந்த மிரட்டலில் கூறப்பட்டு இருந்தது. மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் வெளியாகி இருந்தது.
தமிழகத்தில் பல மருத்துவமனைகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மருத்துவமனைகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.
ஓசூர் மாருதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு மிரட்டல் காாரணமாக நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
அதுபோல நாடு முழுவதும் 30 விமான நிலையங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
- தற்போது 1.7 கோடி பயணிகள் ஓமன் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
- விமான நிலையங்கள் முசந்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும்.
மஸ்கட்:
ஓமன் நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் நைப் அல் அப்ரி கூறியதாவது:-
ஓமன் நாட்டில் தற்போது மஸ்கட், சலாலா, சுகர் மற்றும் துகும் உள்ளிட்ட இடங்களில் 4 விமான நிலையங்கள் உள்ளன. ஓமன் நாட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. தற்போது 1.7 கோடி பயணிகள் ஓமன் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். வருகிற 2040-ம் ஆண்டில் இந்த பயணிகள் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
வருகிற 2028-29-ம் ஆண்டில் மட்டும் புதிதாக 6 விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த விமான நிலையங்கள் முசந்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும். இதனை தொடர்ந்து ஓமன் நாட்டில் மேலும் புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கும். முசந்தம் நகரில் அமைக்கப்பட்டு வரும் புதிய விமான நிலையத்தின் பணிகள் நிறைவடைந்து வருகிற 2028-ம் ஆண்டு இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
இதனை தொடர்ந்து ஓமன் நாட்டின் பிற இடங்களில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கும். இந்த புதிய விமான நிலையங்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
- சோதனையில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று காலை 8.50 மணியளவில் வந்த இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
வாகனங்கள் நிறுத்தும் இடம், எரிபொருள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது புரளி என தெரிய வந்துள்ளது.
இதேபோல் கோயமுத்தூர், ஜெய்ப்பூர், பாட்னா, குஜராத் மாநிலத்தின் வதோதரா விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சோதனையில் அனைத்தும் புரளி என தெரிய வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் விமான சேவைகள் தாமதமாகின.
#WATCH | Gujarat: Security heightened at Vadodara Airport after a bomb threat email was received by the airport authorities. pic.twitter.com/5aTkZy1tEj
— ANI (@ANI) June 18, 2024
- முந்தைய குரங்கு அம்மை வைரஸிலிருந்து இது வேறுபட்டது.
- குரங்கு அம்மை இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு குறைவு.
மத்திய ஆப்பிரிக்காவில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் மங்கி பாக்ஸ் பரவ தொடங்கியது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் மங்கி பாக்ஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருவதால், விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் எல்லை அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளை கண்காணிக்க அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.
மத்திய மருத்துவமனைகளான சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவமனைகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,
மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வைரஸ் குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது. முந்தைய குரங்கு அம்மை வைரஸிலிருந்து இது வேறுபட்டது.
மாநிலங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்துடன் (NCDC) ஆலோசனை நடத்தினோம். கொரோனா வைரசுடன் குரங்கு அம்மைக்கு எந்த தொடர்பும் இல்லை.
நோடல் அதிகாரிகள் ஏற்கனவே மருத்துவமனைகளில் உள்ளனர். சோதனை 32 ICMR மையங்களில் குரங்கு அம்மையின் அறிகுறிகள் சிக்கன் பாக்ஸை போன்றது.
இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் அவை இந்தியாவை பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று தெரிவித்தனர்.
அதன்படி, அமெரிக்கா , லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு அறிகுறிகள் உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட பயணி 21 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம்: ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்- 17 பேர் கைது

இந்தியாவின் விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு கூறுகையில், உலகின் மிக அதிக விமான போக்குவரத்து வசதி கொண்ட 3-வது நாடாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வருவதற்காக முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், (இந்திய மதிப்பில் 4.2 லட்சம் கோடி ரூபாய்) நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கட்டுமானத்தில் அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். #SureshPrabhu