என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "airports"
- கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன
- தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
கோவை,
கொரோனா பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. சென்ைன, பெங்க ளூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. மாதந்தோறும் பயணிகள் எண்ணிக்கை 3 லட்சமாக பதிவு செய்யப்பட்டது.
கொரோனா பரவலால் விமான இயக்கம் கோவையில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில மாதங்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. சரக்கக அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
ஆக்சிஜன் கருவிகள், முகக்கவசம், 'பிபிஇ' என்று சொல்லக்கூடிய பாது காப்புக் கவச உடைகள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர், மருந்துகள் உள்ளிட்ட அத்திவாசிய மருத்துவ பொருட்கள் சரக்கு விமானங்களில் கையாளப்பட்டு வந்தன. கொரோனா பரவல் தாக்கத்தில் இருந்து விமான நிலையம் மீண்டு வரத்தொடங்கியது.
தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களில் 27 அல்லது 28 விமானங்கள் கூட இயக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன் 3 லட்சம் என்ற அளவில் இருந்தது.
தற்ேபாது மூன்றாண்டுகளுக்கு பின் கடந்த மே மாதத்தில் உள்நாட்டு பிரிவில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 105 பேர், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 19 ஆயிரத்து 178 பேர் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 283-ஆக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "கொரோனா பரவலால் விமானங்கள் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டன.
தொற்று பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இதற்கேற்ப விமான நிறுவனங்களும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன. இலங்கை நாட்டுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சேவை மற்றும் உள்நாட்டின் சில நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.
அதன்படி, அமெரிக்கா , லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நாடுகளில் இருந்து சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு அறிகுறிகள் உறுதியான நிலையில் சம்பந்தப்பட்ட பயணி 21 நாட்கள் வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குட்பட்ட பகுதிகளை தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து தொடர்ந்து அவர்களது உடல்நிலை குறித்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.. ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம்: ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்- 17 பேர் கைது
இந்தியாவின் விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு கூறுகையில், உலகின் மிக அதிக விமான போக்குவரத்து வசதி கொண்ட 3-வது நாடாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வருவதற்காக முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், (இந்திய மதிப்பில் 4.2 லட்சம் கோடி ரூபாய்) நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கட்டுமானத்தில் அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். #SureshPrabhu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்